search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முடிவு"

    • வைரமுத்து கவிதைகளை படித்து வியந்த பாரதிராஜா இளையராஜாவிடம் வைரமுத்துவை அறிமுகம் செய்து வைத்தார்.
    • இருவரது கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

    பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து கூட்டணி ஒரு காலத்தில் வெற்றிக் கூட்டணி. ஒரு கட்டத்தில் வைரமுத்துவும், இளையராஜாவும் ஏராளமான பாடல்களை ரசிகர்களுக்காக அர்ப்பணித்துள்ளனர்.

    இருவரும் ஒரு அதிசயமான ராக பந்தம் என்று கூட கூறலாம். தமிழின் உச்சத்தை தொட வைரமுத்து ஓயாது இயக்கி கொண்டிருந்தார். ஏற்கனவே கவிதை எழுதுவதில் திறுமை வாய்ந்த வைரமுத்து சினிமாவின் மூலம் அதை வலுப்படுத்த முடிவு செய்தார். அப்போது தான் எழுதிய 'திருத்தி எழுதிய தீர்ப்புகள்' என்ற கவிதை புத்தகத்தை பாராதிராஜாவிடம் கொடுத்து முடிந்தால் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.


    வைரமுத்து கவிதைகளை படித்து வியந்த பாரதிராஜா இளையராஜாவிடம் வைரமுத்துவை அறிமுகம் செய்து வைத்தார். மெட்டுக்கு எழுதுவீர்களா? என்று கவிஞரிடம் இளையராஜா கேட்க, மெட்டை சொல்லுங்க முயற்சி செய்கிறேன் என்றார் வைரமுத்து. உடனே மெட்டை வாசிக்கப்பட்டது... வைரமுத்துவோ பல்லவியை சொல்லவா... பாடவா என்று கேட்டார். பாடுங்கள் என்றார் இளையராஜா அப்போது உருவானது தான் 'பொன்மாலை பொழுது'... இதை கேட்ட இளையராஜா வைரமுத்துவை கட்டியணைத்த இவர் சினிமாவில் பல யானைகளை சாய்ப்பார் என்று நம்பிக்கையோடு கூறியதாக பாரதிராஜா சொல்லியிருக்கிறார்.

    அப்போது தொடங்கிய இவர்கள் இருவரின் சினிமா பயணம் தொட்ட படங்கள் மற்றும் பாடல்கள் எல்லா வெற்றி. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. பட்டி தொட்டி எங்கும் இவர்கள் பாடல்கள் தான் ஒலித்துக் கொண்டிருந்தது.

    1980களில் தொடங்கி தொடர்ந்து 7 ஆண்டுகள் இவர்கள் பயணம் எந்தவித மனக்கசப்பு இல்லாமல் சென்று கொண்டிருந்தது.


    இதையடுத்து பாடல் வரிகள் மூலம் அனைவரையும் கவர்ந்த வைரமுத்துவிற்கு சினிமாவில் பல்வேறு வாய்ப்புகள் வர தொடங்கியது. எப்போது ஒளிப்பதிவின் போது சரியான நேரத்திற்கு வரும் வைரமுத்துவால் உரித்த நேரத்தில் சில பணிகளை செய்ய முடியாமல் போனது. இதுவே இளையராஜா, வைரமுத்துவின் மன கசப்பிற்கு முதல் காரணமாக அமைந்தது.

    சில பாடல் வரிகளில் இளைராஜா தலையிட்டு மாற்றம் செய்ய சொல்வது அந்த விரிசலிற்கு மேலும் வலு சேர்த்தது. பொது இடங்களில் நண்பர்களை சந்திக்கும் போதும் ஒர் மீது ஒரு குறைகூறி பேசியதாகவும் கூறப்படுகிறது. இப்படி சென்ற இடத்தில் எல்லாம் பிரச்சனை முற்றியுள்ளது. எப்போதும் வைரமுத்து ஒரு படத்தில் இருக்கும் அனைத்து பாடல்களையும் தானே எழுந்த வேண்டும் என்று ஆசைப்படுவார்.

    இந்த சூழ்நிலையில் தான் 'தாய்கொரு தாலாட்டு' என்ற படத்தில் வைரமுத்து எல்லா பாடல்களையும் எழுதியிருந்தார். அப்போது இளையராஜா கோர்ப்பின் போது மேலும் ஒரு பாடலை வாலியை வைத்து எழுதி வாங்கி இருந்தார். இதனால் இருவருக்கும் மனக்கசப்பு இன்னும் அதிகரித்தது. கடைசியா இவை அனைத்து ஒன்று சேர்ந்து இசைப்பாடும் தென்றல் என்ற படத்தின் பாடல் உருவாக்கத்தின் போது மோதலாக உருவாகிறது. 'எந்த கைக்குட்டையை யார் எடுத்தது' என்ற பாடல் வரி எழுதி வைரமுத்து இளையராஜாவிடம் காட்ட, அந்த பாடல் எனக்கு பிடிக்கவில்லை நானே எழுதிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் இளையராஜா. இதன் காரணமாக வைரமுத்து அங்கிருந்து கோபத்துடன் வெளியேறியதாக கூறப்படுகிறது.

    பாலசந்தரின் புன்னகை மன்னன் படத்திற்கு பிறகு வைரமுத்துவும் இளையராஜாவும் நிரந்தரமாக பிரிந்தனர்.


    தொடர்ந்து இன்னும் சில மனக்கசப்புகள் ஏற்பட்டு, சினிமா துறை சார்ந்த பிரபலங்கள் சில பேர் சமாதானம் செய்தும் எந்த பயனும் இல்லாமல் போனது. இளையராஜாவை பிரிந்த நேரத்தில் வைரமுத்துவிற்கு பாடல் வாய்ப்பு குறைய தொடங்கியது.

    தான் தொடர்ந்து சினிமாவில் தொடர்ந்து பயணம் செய்ய இசையமைப்பாளர்கள் துணை தேவை என்பதை உணர்ந்த வைரமுத்து ஏராளமான இசையமைப்பாளர்களை தமிழில் திரைப்பட இயக்குனர்களிடம் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.

    அப்படியாக வைரமுத்து அறிமுகம் செய்தவர் தான் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்.

    ஏ.ஆர். ரஹ்மானும், வைரமுத்து இணைந்து பல்வேறு பாடல்களை உருவாக்கினர். இவர்கள் இருவரது கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

    1992ல் ஏஆர் ரஹ்மான் அறிமுகமானபோதும் இளையராஜா அவரது வளர்ச்சியை விரும்பவில்லை என்றே சொல்லப்படுகிறது. ஒருமுறை ஏஆர் ரஹ்மான் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த ஒரு இசைக்கருவியை இளையராஜா தனது செல்வாக்கை பயன்படுத்தி கஸ்டம்ஸில் சிக்க வைத்ததாகவும் செய்திகள் வெளியாகின.

    வைரமுத்து, ஏஆர் ரஹ்மான் இவர்களின் தொடர் வெற்றியால் இளையராஜாவிற்கு பாடல் வாய்ப்புகள் குறைய தொடங்கியதாக அப்போது கூறப்பட்டது. இதன் காரணமாக பிரபலங்கள் சிலர் இவர்களை இணைக்க முடிவு செய்தனர். ஆனால் அந்த முயற்சியும் தோல்வி அடைந்தது.


    இந்நிலையில் இளையராஜாவுக்கும், வைரமுத்துவும் இருந்த இடைவெளி யுவன் சங்கர் ராஜாவுக்கும், வைரமுத்துவுக்கும் இடையே இல்லை. யுவனுடன் இணைந்து பணியாற்றி அதற்கு தேசிய விருது பெற்று விட்டார் வைரமுத்து. பின்னர் யுவனுடன் இணைந்து மாமனிதன் படத்திற்கு பாடல் வரிகள் எழுத முடிவுசெய்த நிலையில் அதை இளையராஜா மறுத்திருக்கிறார். பின்னர் மாமனிதன் படத்திற்கு பா. விஜய் பாடல் எழுதினார்.

    இளையராஜாவை பிரிந்தது குறித்து வைரமுத்து ஒரு பாடல் வரியில் கூறியிருப்பதாவது:

    "மனைவியின் பிரிவுக்கு பிறகு அவள் புடவையை தலைக்கு வைத்து படுத்திருக்கும் காதல் உள்ள கணவனை போல, நினைவுகளோடு நான் மித்திரை கொள்கிறேன். திரையுலகில் நான் அதிகம் செலவிட்டது உன்னிடம் தான். மனதில் மிச்சமில்லாமல் பேசி சிரித்தது உன்னோடுதான். பெண்கள் தவிர என் கனவில் வரும் ஒரே ஆண் நீதான்." என்று அழகாக கூறியிருந்தார் வைரமுத்து.

    இந்நிலையில் சென்னையில் கடந்த 27ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து, ஒரு பாடலில் இசை பெரியதா, மொழி பெரியதா என்பது ஒரு பெரிய சிக்கலாகப் பேசப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். இசையும், மொழியும் பரஸ்பரம் செய்துகொள்ளும் போதுதான் கலை வெற்றி பெறுகிறது எனவும் வைரமுத்து கூறினார்.


    இதற்கு பதிலளித்துள்ள இளையராஜாவின் சகோதரரும், பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளருமான கங்கை அமரன்:

    எங்களால் மேலே வந்தவர், வந்த இடத்தையே காலில் போட்டு மிதிப்பது போன்று பேட்டி கொடுத்துள்ளார் வைரமுத்து என தெரிவித்துள்ளார். மனிதனுக்கு நன்றி வேண்டும். அவரது பாடலுக்கு அதிகமான புகழ் வந்ததால் வைரமுத்துவுக்கு கர்வம் தலைக்கேறிவிட்டது. அடக்கி வைக்க ஆள் இல்லாததால் துள்ளிக் கொண்டிருக்கிறார் வைரமுத்து. இளையராஜாவும், வைரமுத்துவும் நண்பர்களாக இருந்தவர்கள்., அப்படியே இருந்த நட்பை கொச்சைப்படுத்துகிறார் வைரமுத்து. வைரமுத்துவை வாழவைத்த இளையராஜாவின் போட்டோ வைத்து தினம் வணங்க வேண்டும். அவர் இல்லை என்றால் வைரமுத்துவின் பெயரே இருந்திருக்காது. நான் அவருக்குச் சவால் விடுகிறேன், இளையராஜா இசையில் நீங்கள் எழுதிய பாடல்களை வேறு ஒரு இசையமைப்பாளரிடம் கொடுத்துப் பாருங்கள், அது முடியாது. இசையில்லாமல் பாடல்கள் இல்லை. தன்னைத் தானே புகழ்ந்து பேசிக்கொண்டு இருக்கக்கூடிய கவிஞர்கள் யார் இருக்கிறார்கள்? இளையராஜா குறித்து குற்றமோ, குறைகளோ சொல்வதாக இருந்தால் அதற்குரிய விளைவுகளை வைரமுத்து சந்தித்தே ஆக வேண்டும். வைரமுத்து இனிமேல் வாயை மூடிக் கொண்டு வேலையை பார்த்தால் அவருக்கு நல்லது எனவும் எச்சரித்துள்ளார் கங்கை அமரன்.

    வைரமுத்து - கங்கை அமரன் வார்த்தைப் போரால், இனி வரும் காலங்களில் இளையராஜாவும், வைரமுத்துவும் இணைய வாய்ப்பே இல்லை எனலாம்.

    • டெல்லியில் அனைத்து மாநில தலைவர்கள், சட்ட மன்ற கட்சி தலைவர்கள், மாநில பொறுப்பாளர்களுடன் மேலிட தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.
    • தேவைப்பட்டால், மாநிலங்களுக்குச் சென்று கூட்டணி கட்சி தலைவர்களையும் காங்கிரஸ் குழு சந்திக்கும்.

    சென்னை:

    காங்கிரஸ் கட்சிக்கு நாடு முழுவதும் தொண்டர்களி டம் நிதி திரட்டப்படுகிறது. நிதி வசூலில் சில மாநிலங்களில் மந்தமான நிலையே உள்ளது.

    காங்கிரசின் வயதை குறிக்கும் ரூ.138, ரூ.338, ரூ.1338 என்ற அளவில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை ஆன்லைனில் செலுத்த வேண்டும். பெரும்பாலானவர்கள் ரூ.138 மட்டுமே கட்டி இருக்கிறார்கள்.

    இந்நிலையில் நேற்று டெல்லியில் அனைத்து மாநில தலைவர்கள், சட்ட மன்ற கட்சி தலைவர்கள், மாநில பொறுப்பாளர்களுடன் மேலிட தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். பாராளுமன்ற தேர்தல் தொடர்பான இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சிக்கு நிதி திரட்டுவது மற்றும் ராகுல்காந்தி தொடங்கவிருக்கும் ஒற்றுமை யாத்திரை தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்கள் ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் நிதி செலுத்த வேண்டும்.

    அதேபோல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மனு செய்பவர்களும் ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் ஆன்லைனில் செலுத்தி அதற்கான அத்தாட்சி ரசீதையும் இணைத்து மனு செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் உறுதி செய்தார்.

    இந்த கூட்டம் முடிந்ததும் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் தனியாக கூட்டம் நடந்தது.

    நாடு முழுவதும் தொகுதிப் பங்கீடு மற்றும் சுமூகமான முடிவுகளுக்காக கூட்டணி கட்சிகளை அணுகி வருவதாக மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக் தெரிவித்தார். தேவைப்பட்டால், மாநிலங்களுக்குச் சென்று கூட்டணி கட்சி தலைவர்களையும் காங்கிரஸ் குழு சந்திக்கும் என்றார்.

    • ஸ்ரீதர் வாட்ஸ்-அப் கால் மூலமே போதைப்பொருள் கும்பலுடன் பேசி இருக்கிறார்.
    • இந்தநிலையில் நேற்று ஸ்ரீதர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    கோவை,

    கோவையில் கஞ்சா, போதை மாத்திரரை, மருந்து சப்ளையில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தேடி வந்தனர். அந்த கும்பல் பெங்களூருவில் பதுங்கி இருந்தது. இதையடுத்து கோவை போலீசார் பெங்களூர் சென்று சுஜிமோகன் (26) உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.

    இந்த போதைப்பொருள் விற்பனை கும்பலுக்கு ரேஸ்கோர்ஸ் போலீஸ்நிலையத்தில் கான்ஸ்டபிளாக வேலை பார்த்த ஸ்ரீதர் (29) என்பவர் பல்வேறு வகையில் உதவி செய்தது விசாரணையில் தெரியவந்தது. சுந்தராபுரம் அஷ்டலட்சுமி நகரைச் சேர்ந்த ஸ்ரீதர் பண ஆசையில் போதைப்பொருளை எப்படி கடத்துவது, எந்த பகுதியில் போலீஸ் சோதனை செய்கிறார்கள்? என்பது போன்ற பல்வேறு தகவல்களை அந்த கும்பலுக்கு அவ்வப்போது அளித்துள்ளார்.

    ஸ்ரீதர் ஆலோசனையின் பேரில் போதைப்பொருள் கடத்தல் கும்பலும் போலீசாரிடம் சிக்காமல் கோவையில் சமூக விரோத செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    ஸ்ரீதர் தான் எந்தவகையிலும் பிரச்சினையில் சிக்கி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்துள்ளார். இதனால் வாட்ஸ்-அப் கால் மூலமே போதைப்பொருள் கும்பலுடன் பேசி இருக்கிறார். ஆனால் ஸ்ரீதர் பேசுவதை அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் பதிவு செய்து வைத்திருந்துள்ளனர்.

    போலீசாரிடம் அந்த கும்பல் சிக்கியதும் அவர்களின் செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது செல்போனில் போலீஸ்காரர் ஸ்ரீதர், அவர்களுடன் பேசிய ஆடியோக்கள் ஏராளமான இருந்தன. அந்த உரையாடல்களை கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு உதவியதாக வழக்குப்பதிவு செய்து ஸ்ரீதரை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் நேற்று ஸ்ரீதர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். துறை ரீதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் ஸ்ரீதரை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக போலீசார் கோவை கோர்ட்டில் நாளை மனுத் தாக்கல் செய்ய உள்ளனர்.

    • விவசாயிகளின் விலை பொருள்களை விற்பனை செய்ய சுங்கம் வசூலிக்கக் கூடாது என கோரிக்கை விடுத்தனர்.
    • அடுத்த வெள்ளிக்கிழமை முதல் விவசாயிகளுக்கு தனி இடம்.

    சூலூர்,

    சூலூர் வாரச்சந்தையில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் தலைவர் சண்முகம் தலைமையில் ஒன்று கூடினர்.

    அப்போது வாரச்சந்தையில் விவசாயிகள் தனி இடம் ஒதுக்கப்பட வேண்டும். விவசாயிகளின் விலை பொருள்களை விற்பனை செய்ய சுங்கம் வசூலிக்கக் கூடாது என கோரிக்கை விடுத்தனர்.

    வாரச்சந்தை சுங்க கட்டண வசூலிப்பாளர், விவசாயிகளுக்கு வார சந்தையில் தனி இடம் ஒதுக்கி தர வேண்டிய அதிகாரம் பேரூராட்சிககு உட்பட்டது.

    சந்தையில் விற்பனை செய்யும் பொருள்களுக்கு சுங்கம் வசூலிக்கவே தான் இந்த சந்தையில் ஏலம் எடுத்துள்ளதாகவும் விவசாயிகளுக்கு குறைவான கட்டணத்தை வசூலிப்பதாகவும் தெரிவித்தார்.

    அப்போது விவசாயிகள் தங்களது விளைபொருளுக்கு மூட்டைக்கு 50 ரூபாய் சுங்க கட்டணமாக வசூலிப்பது கூடாது என தெரிவித்தனர்.

    மேலும் வாரச்சந்தையில் விவசாயிகளிடம் வாங்கி விற்கும் விற்பனையாளர்களுக்கு இதனால் எவ்வித இட யூறும் ஏற்படாது என்றார்.

    சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாரச்சந்தையில் கூடியதால் அப்பகுதிக்கு சூலூர் தெற்கு ஒன்றிய திமுக ஒன்றிய செயலாளர் மன்னவன், சூலூர் பேரூராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் மதிமுக கோவை மாவட்ட துணைத்தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் நேரில் சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதனையடுத்து அடுத்த வெள்ளிக்கிழமை முதல் விவசாயிகளுக்கு என சூலூர் வாரச்சந்தையில் தனியிடம் ஒதுக்கி தரப்படும் என தெரிவித்தர். இதனை அடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நாடு முழுவதும் மத்திய அரசால் திறக்கப்பட்டுள்ள 9,000-க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் மூலம் அனைத்து மக்களுக்கும் சுகாதார வசதிகள் கிடைப்பதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.
    • இந்த மருந்தகங்களில் கிடைக்கும் 800-க்கும் மேற்பட்ட மருந்துகள் பிரபல நிறுவனங்க ளின் விலையைவிட 50 முதல் 90 சதவீதம் வரை குறைவாக இருக்கின்றன.

    சேலம்:

    மக்களுக்கு குறைவான விலையில் மருந்துகள் கிடைக்க வேண்டும் என்பதை நோக்க மாகக் கொண்டு, நாடு முழுவ தும் மக்கள் நல மருந்தகங்கள் எனும் மலிவு விலை மருந்தகங்களை மத்திய அரசு திறந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நாடு முழுவதும் மத்திய அரசால் திறக்கப்பட்டுள்ள 9,000-க்கும் மேற்பட்ட மக்கள் மருந்த கங்கள் மூலம் அனைத்து மக்க ளுக்கும் சுகாதார வசதிகள் கிடைப்பதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.இந்த மருந்தகங்களில் கிடைக்கும் 800-க்கும் மேற்பட்ட மருந்துகள் பிரபல நிறுவனங்க ளின் விலையைவிட 50 முதல் 90 சதவீதம் வரை குறைவாக இருக்கின்றன. குறைவான விலையில் மருந்து கிடைப்பதால், அதிக விலையுடைய மருந்துகளை வாங்கும் நெருக்கடியில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கிறது.

    சேலத்தில்...

    தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. கோவையில் 56, ஈரோட்டில் 29, சேலத்தில் 27, திருப்பூரில் 13, நாமக்கல்- 13, மக்கள் நல மருந்த கங்கள் செயல்படுகின்றன.

    இந்த நிலையில் மத்திய அரசு இவற்றின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவ தும் மக்கள் மருந்த கங்களின் எண்ணிக்கையை 10,000-ஆக அதிகரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் மத்திய அரசு மும்முரமாக பணியாற்றி வருகிறது.

    • தேவகோட்டையில் இரட்டைக்கொலை சம்பவம் தொடர்பாக 48 இடங்களில் 140 கண்காணிப்பு கேமரா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • அதன்படி காமிரா அமைக்கும் பணியை நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தொடங்கி வைத்தார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டை கிராமத்தில் கடந்த மாதம் 11-ந் தேதி அதிகாலையில் தாய்-மகளை கொலை செய்து 60 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இந்த கொலையில் இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை.

    இந்த நிலையில் தேவ கோட்டையில் பாதுகாப்பை பலப்படுத்தவும், குற்றவாளி களை கண்காணிக்கவும் போலீசார் கண்காணிப்பு காமிராக்கள் அமைக்கும்படி வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கினர்.

    இதைத்தொடர்ந்து தேவகோட்டையில் 48 இட ங்களில் 140 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க அறிவுறுத்தப் பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பத்தூர் சாலையில் அடுத்தடுத்து 3 கடைகளில் பூட்டை உடைத்து கொ ள்ளை சம்பவம் நடந்தது. இந்த திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின்பேரில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் ஆலோசனைபடி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் துணைத்தலைவர் ரமேஷ் முன்னிலையில், வர்த்தக சங்க தலைவர் காஜா ஏற்பாட்டில் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்த கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் தற்போது நகரில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதல் போலீசார் நியமிக்கப்பட வில்லை. இதனால் குற்ற சம்பவங்களை தடுக்க முடியவில்லை என்றும், எனவே நகர் பகுதிகளில் முதல் கட்டமாக 41 இடங்களில் 140 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று இன்ஸ்பெ க்டர் சரவணன் கேட்டுக் கொண்டார். அதன்படி காமிரா அமைக்கும் பணியை நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தொடங்கி வைத்தார்.

    • ரூ.8 கோடி செலவில் தாமிரபரணி, திருவள்ளுவர் என்ற அதிநவீன சொகுசு படகுகளை சுற்றுலா துறை வாங்கி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு வழங்கியது.
    • இவை இயக்கப்படாமல் கடல் உப்பு காற்றினால் துருப்பிடித்து பாழாகும் நிலையில் படகு துறையில் கடந்த 2 ஆண்டுகளாக முடங்கி கிடக்கிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல்நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது.

    இவற்றை சுற்றுலா பயணிகள் பார்வையிட தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது. இதற்கிடையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.8 கோடி செலவில் தாமிரபரணி, திருவள்ளுவர் ஆகிய பெயர்களை தாங்கிய அதிநவீன சொகுசு படகுகளை சுற்றுலா துறை வாங்கி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு வழங்கியது.

    இந்த 2 அதிநவீன படகுகளும் விவேகானந்த மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படாமல் கடல் உப்பு காற்றினால் துருப்பிடித்து பாழாகும் நிலையில் படகு துறையில் கடந்த 2 ஆண்டுகளாக முடங்கி கிடக்கிறது.

    சொகுசு படகுகளை கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டை வரை கடலில் சுற்றுலா பயணிகள் உல்லாச பயணம் சென்று வர பயன்படுத்த வேண்டும் என்று தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அதன் பயனாக இந்த 2 அதிநவீனசொகுசு படகுகளையும் வருகிற 17-ந்தேதி முதல் படகு சவாரி நடத்த பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    • பகல் 1 மணி, மாலை 4 மணி, இரவு 7 மணிக்கு சர்க்கஸ் காட்சிகள் நடக்கின்றன.
    • 100-க்கும் மேற்பட்ட சர்க்கஸ் கலைஞர்கள் பங்கேற்று பல்வேறு சாகசங்களை நிகழ்த்தினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் - காங்கயம் சாலை பத்மினி கார்டனில், 'தி கிரேட் இந்தியன் சர்க்கஸ்' தொடங்கி நடைபெற்று வந்தது.இந்தநிலையில் வருகிற 14-ந்தேதியுடன் சர்க்கஸ் முடிவடைகிறது. கடந்த 30 ஆண்டுகளில் மலேசியா, சிங்கப்பூர் உட்பட 30-க்கும் மேற்பட்ட வெளி நாடுகளில் நடத்தப்பட்டு புகழ் பெற்ற தி கிரேட் இந்தியன் சர்க்கசில் சீனா, ஆப்பிரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளின் வல்லுநர்களால் பயிற்சி பெற்ற 100-க்கும் மேற்பட்ட சர்க்கஸ் கலைஞர்கள் பங்கேற்று பல்வேறு சாகசங்களை நிகழ்த்தினர்.

    குறிப்பாக அந்தரத்தில் பறக்கும் ரஷ்யன் அக்ரோ பெட், 60 அடி உயரத்தில் அழகிய பெண் நடனமாடும் ரஷ்யன் ரிங் பேலன்ஸ், பல வளையங்களை கால்களால் விளையாடும் விளையாட்டு, பெண்கள் கயிற்றை கொண்டு சாகசம் புரியும் விளையாட்டு, எந்த சர்க்கஸிலும் இடம்பெறாத உலக புகழ்பெற்ற கலைஞர்களின் ஜிம்னாஸ்டிக் ஆகியவை பெரியவர்கள், சிறுவர்களை வெகுவாக கவர்ந்தது.

    பின்புறம் உள்ள பொருளை திரும்பி பார்க்காமல், முகம் பார்க்கும் கண்ணாடியின் உதவியுடன் குறி தவறாமல் துப்பாக்கி சுடுதல், மரணக் கூண்டில் கலைஞர்கள் செய்யும் சாகச நிகழ்ச்சி, உயிரை பணயம் வைத்து அந்தரத்தில் தலைகீழாக அழகி நடக்கும் ஸ்கைவாக், பிடிமானம் ஏதும் இல்லாமல் அந்தரத்தில் தொங்கும் பேலன்ஸிங் டிரிபிஸ், குதிரையின் மீது அமர்ந்து கொண்டு அழகி செய்யும் சாகசம், பிரேக் இல்லாத சைக்கிளில் முன் சக்கரம் தரையில் படாமல் தூக்கிக்கொண்டு ஓட்டுதல் உள்ளிட்ட சாகசங்கள் இடம்பெற்றன. இந்த சர்க்கஸ் வருகிற 14-ந்தேதி (திங்கட்கிழமை) முடிவடைகிறது.

    பகல் 1 மணி, மாலை 4 மணி, இரவு 7 மணிக்கு சர்க்கஸ் காட்சிகள் நடக்கின்றன. கட்டணம் ரூ.100, ரூ.150, ரூ.200. முன்பதிவு ரூ.150, ரூ.200 ஆகும். சர்க்கஸ் வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மேற்கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 9364193939 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என 'தி கிரேட் இந்தியன் சர்க்கஸ்' மேலாளர்கள் நாசர், பத்மநாபன் தெரிவித்தனர்.   

    • மின்துறை அமைச்சரை நேரில் சந்தித்து விசைத்தறிக்கான மின் கட்டணத்தை ரத்து செய்ய க்கோரி மனு அளிக்கப்பட்டது.
    • திருப்பூர் வருகை தந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தும் கோரிக்கை வைக்கப்பட்டது.

    ஈரோடு:

    தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாடு மின்சார த்துறை மற்றும் ஒழுங்கு முறை ஆணையம் மூலம் விசைத்தறிக்கான மின்சார கட்டணத்தை உயர்த்துவது என்றும், மேலும் நிலை கட்டணத்தை உயர்த்துவது என்றும் முடிவு செய்த போது தமிழ்நாடுமின்சார துறை ஒழுங்குமுறை ஆணைய தலைவரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

    அதைத் தொடர்ந்து மின்துறை அமைச்சரையும் நேரில் சந்தித்து விசைத்தறிக்கான மின் கட்டணத்தை ரத்து செய்ய க்கோரி மனு அளிக்கப்ப ட்டது.

    தமிழ்நாடு மின்சா ரத்துறை ஒழுங்குமுறை ஆணையம் மூலமாக சென்னை, கோவை மற்றும் மதுரை கருத்து க்கேட்புக் கூட்டத்தில் கூட்டமைப்பின் சார்பில் நிர்வாகிகள் பங்கேற்று விசைத்தறி க்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

    அதைத் தொடர்ந்து திருப்பூர் வருகை தந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், தற்போது நிலை கட்டணம் மட்டும் குறைக்கப்பட்டு மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.1.47 உயர்த்த ப்பட்டுள்ள து.

    இதன் காரணமாக தற்போது 31 சதவீதம் கட்டண உயர்வு ஏற்பட்டு ள்ளது. இதனால், விசை த்தறி தொழிலை நடத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டு, மேலும் இதனை சார்ந்த ஜவுளித் தொழில்கள் அனைத்தும் வேறு மாநிலங்களுக்கு செல்லக்கூடிய அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    இதனால் விசைத்தறி தொழிலை நடத்த முடியாத சூழல் ஏற்படலாம். ஏற்கனவே நூல் விலை ஏற்றம் காரணமாக ஜவுளி மற்றும் அதைச் சார்ந்து உள்ள விசைத்தறி தொழில் மிகவும் பாதிப்படைந்து அழியும் நிலையில் உள்ளது.

    இந்த நிலையில் இந்த மின்கட்டண உயர்வு என்பது விசைத்தறித் தொழிலை முற்றிலும் அழிக்கும் நிலையை ஏற்படுத்தும்.

    எனவே முதல்-அமை ச்சரை நேரில் சந்தித்து விசைத்தறி மின் கட்டண உயர்வால் ஏற்படும் பாதிப்பு களை எடுத்துக் கூறி அதை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்ப டவுள்ளது.

    இவ்வாறு அந்த செய்தி குறி ப்பில் கூறப்பட்டு ள்ளது. 

    • நாளை சேலம் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்திருந்தார்.
    • 13-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஈரோடு மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன்.

    தஞ்சாவூர்:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா என்ற பெயரில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    தஞ்சையில் உள்ள வீட்டில் சசிகலா தற்போது தங்கியுள்ளார். கடந்த நான்கு நாட்களாக அவர் தஞ்சையில் இருந்தபடி திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    இந்த நிலையில் அவர் நாளை சேலம் மாவட்ட த்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்திருந்தார்.

    ஆனால் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவை அடுத்து நாளை துக்க நாளாக அனு சரிக்கப்படுகிறது.

    இதனால் நாளை சேலம் மாவட்ட சுற்றுப்பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    அதற்கு பதிலாக நாளை மறுநாள் அதாவது 12-ந் தேதி திங்கள் கிழமை அன்று சேலம் மாவட்டத்திற்கும், 13-ந் தேதி செவ்வாய்க்கிழமை அன்று ஈரோடு மாவட்டத்திற்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • செப்டம்பர் 30-ந் தேதி வரை பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும்.
    • செப்டம்பர் மாதத்தில் ஒவ்வொரு வாரமும் மெகா தடுப்பூசி முகாம் நடத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

    திருப்பூர் :

    தமிழகத்தில் கடந்த 21ந் தேதி 34ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. செப்டம்பர் 30-ந் தேதி வரை பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய செப்டம்பர் மாதத்தில் ஒவ்வொரு வாரமும் ஒரு மெகா முகாம் வீதம் 4 முகாம்கள் நடத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் கிடங்கில் கைவசம் உள்ள தடுப்பூசி குறித்து துணை இயக்குனர்களிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.

    சுகாதாரத்துறையினர் கூறுகையில், மாவட்டத்துக்கு தலா ஒரு லட்சம் முதல் 3 லட்சம் வீதம் 60 லட்சத்துக்கு அதிகமான தடுப்பூசி தமிழகம் முழுவதும் கையிருப்பில் உள்ளது. கடந்தாண்டில் தடுப்பூசி செலுத்தாமல் நடப்பாண்டு துவக்கத்தில் தடுப்பூசி செலுத்தியிருந்தால் கூட இந்நேரம் பெரும்பாலானோர் பூஸ்டர் செலுத்தியிருக்க முடியும்.ஆனால் காலக்கெடு வந்த பின்பும் குறுஞ்செய்தி கிடைத்த பின்பும் பலர் பூஸ்டர் செலுத்தாமல் உள்ளதால் அதனால் மாதம் இரு மெகா முகாம் என்பது மாற்றப்பட்டு செப்டம்பரில் நான்கு முகாம் நடத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது என்றனர்.

    • மத்திய அரசு பணிக்கான தேர்வில் சேலம், நாமக்கல் பட்டதாரிகள் தேர்ச்சி.
    • பல்வேறு அரசு துறைகளில் பட்டப்படிப்பு தரத்திலான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பேஸ்-9 தேர்வு 2021 அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியிட்டது.

    சேலம்:

    இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு அரசு துறைகளில் பட்டப்படிப்பு தரத்திலான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பேஸ்-9 தேர்வு 2021 அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியிட்டது.

    பட்டதாரிகளுக்கான கணினி அடிப்படையிலான இந்த தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி முதல் 10-ந்தேதி வரையும் மற்றும் மார்ச் மாதம் 14-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையும் நடைபெற்றது.

    4 லட்சம் பேர் இந்தியா முழுவதும் 4 லட்சத்து 27 ஆயிரத்து 536 பேர் இந்த தேர்வை எழுதினர். குறிப்பாக சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வசித்து வரும் பட்டதாரிகள், முதுநிைல பட்டதாரிகள் என ஏராளமானோர் எழுதினர்.

    இந்த நிலையில் பேஸ்-9 தேர்வு முடிவு வெளியாகி உள்ளது. அதில் கட் ஆப் மதிப்பெண் மற்றும் தகுதியான தேர்வர்கள் மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. ெமாத்தம் 14 ஆயிரத்து 345 பேர் அடுத்த கட்ட நேர்முக தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    குறிப்பாக பட்டியலி னத்தவர் -2306 பேர், பழங்குடியினர் -1140 , இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - 3165 , பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் -1014, பொதுப்பிரிவு- 6424, இ.எஸ்.எம்.-174, ஓ.எச்-68, எச்.எச்-19, வி.எச்-29, இதர மாற்றுத்திறனாளிகள் -6 என 14 ஆயிரத்து 345 பேர் தேர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில் சேலம், நாமக்கல் மற்றும் பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த பட்டதாரிகள் பலர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அனைத்து துணை ஆவணங்களின் நகலை கையோப்பம் போட்டு சமர்ப்பிக்க வேண்டும். கல்வித் தகுதி, அனுபவம், வகை, வயது, வயது தளர்வு, முதலியவற்றை ஆன்லைன் விண்ணப்பபடிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து அந்தந்த பிராந்திய அலுவலகங்களுக்கு வருகிற 22-ந்தேதி விரைவு தபால் வழியாக மட்டுேம அனுப்ப வேண்டும்.

    உறையின் மேல் பகுதியில் "பட்டதாரி மற்றும் அதற்கு மேல் நிலை" மற்றும் வகை எண் எழுத வேண்டும். ஒரு விண்ணப்பதார் 3 வகை பதவிகளுக்கு விண்ணப்பித்திருந்தால், ஒவ்வொரு பதவிகளுக்கு தனித்தனியாக சமர்ப்பிக்க வேண்டும் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

    ×