search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமேசுவரம்"

    • எடப்பாடி முதல்-அமைச்சராக வேண்டி ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் முன்னாள் எம்.எல்.ஏ. ஜல பிரதட்சனம் செய்தார்.
    • தீய சக்தி கூடாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

    மதுரை

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதலமைச்சராக வேண்டி ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் சோழவந்தான் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.வி. கருப்பையா ஜல பிரதட்சணம் செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், கடை கோடி தொண்டனுக்கும் தொண்டு செய்ய வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம் அ.தி.மு.க. நல்லாட்சி செய்த எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதலமைச்சராக மக்கள் பணி ஆற்ற வேண்டும் என்பதற்காக இந்த வேண்டுதலை நிறைவேற்றினேன்.

    மதுரையில் நடைபெற உள்ள அ.தி.மு.க. மாநாடு கட்டுப்படுத்த முடியாத விலைவாசி ஏற்றம், கள்ளச்சாராயம், சாதிக் கலவரம், வழிப்பறி, கொலை, கொள்ளை, சட்ட ஒழுங்கு சீர்கேடு என்று ஒட்டுமொத்த தீய சக்தி கூடாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும். எம்.ஜி.ஆர். அம்மா அருளாசியோடும் மீண்டும் முதலமைச்சராக ஆவார் என்றார்.

    • ராமேசுவரம் பகுதியில் 2 நாட்கள் மின்தடை ஏற்படும்.
    • மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட மின்வாரியம் தெரிவித்துள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் துணை மின் நிலையத்தில் அரியமான் முதல் ராமேசுவரம் வரை சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை (7-ந்தேதி) மற்றும் மறுநாள் (8-ந்தேதி) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்காணும் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.

    மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் வருமாறு:-

    அரியமான், சுந்தரமுடையான், வேதாளை, மரைக்கா யர் பட்டினம், மண்டபம், பாம்பன், அக்காள்மடம், ராமேஸ்வரம் பேருந்து நிலையம் , நீதிமன்றம், திட்டக்குடி, கோவில், வேர்க்கோடு, புதுரோடு தங்கச்சிமடம், ஆத்திக்காடு, சத்யா நகர், செம்ம மடம், மெய்யம்புளி.

    பொந்தபுளி, ராமர் தீர்த்தம் வடக்கு மற்றும் தெற்கு, மார்க்கெட் தெரு, பருவதம், பாரதி நகர், முருங்கை வாடி, எம் ஆர் டி நகர், கரையூர், மல்லிகை நகர், ெரயில்வே பீடர் ரோடு, பேக்கரும்பு , அரி யான் குண்டு, பகுதி மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.

    இதேபோல் பட்டினம் காத்தன் துணை மின் நிலையத்தில் உள்ள ராமநாதபுரம் உயர் மின் அழுத்த பீடரில் மாதாந்திர பராமரிப்பு பணி நடை பெறுவதால் நாளை (7-ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காவனூர் சுற்றியுள்ள பகுதிகள், தொருவளூர், வயலூர், பனையூர், குளத்தூர், தேர்த்தாங்கல், கிளியூர், முதலூர், கடம்பூர், இல்லுமுள்ளி, வைரவ னேந்தல், வீரவனூர், பாப்பாகுடி, வண்ணிவயல், கவரங்குளம். தேவிபட்டினம் சுற்றியுள்ள பகுதிகள், கழனிக்குடி, சித்தார்கோட்டை, பெருவயல் ,சிறுவயல் , நரியனேந்தல்,மரப்பாலம், இலந்தை கூட்டம்.

    திருப்பாலைக்குடி சுற்றியுள்ள பகுதிகள், பொட்டகவயல், கருப்பூர், சம்பை,வெண்ணத்தூர், வைகை, பத்தனேந்தல், மாதவனூர், பாப்பனேந்தல், பூத்தோண்டி, அரசனூர், நாரணமங்கலம், எருமைப்பட்டி, வளமானூர், சோழந்தூர். காட்டூரணி சுற்றியுள்ள பகுதிகள், ஆர்.கே. நகர், எம்.ஜி.ஆர் நகர், ரமலான் நகர், மேலக்கோட்டை, மாடக் கோட்டான், இளமனூர், பேராவூர்.

    தில்லைநாயகி புரம், பழங்குளம், திருப்புல்லானி, அம்மன் கோவில், தெற்கு தரவ, கருங்குளம், மஞ்சன மாரியம்மன் கோவில், லாந்தை, புத்தனேந்தல், தெற்குதரவை, பசும்பொன் நகர், கூரியூர், பொக்க னேந்தல், பால்கரை, நாக நாதபுரம், இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட மின்வாரியம் தெரிவித்துள்ளது.

    • தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளதாக ராமேசுவரம் கூட்டத்தில் அமித்ஷா கூறியுள்ளார்.
    • உதயநிதியை முதல்வராக்க ஸ்டாலின் விரும்புகிறார்.

    ராமேசுவரம்

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' நடைபயணத்தை ராமேசுவரத்தில் நேற்று தொடங்கினார். இதன் தொடக்க விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழகத்தின் பாரம்பரி யத்தையும், பெருமையையும் பதிய வைக்கும் பயணமாக அண்ணாமலையின் நடைபயணம் அமையும். இது வெறும் அரசியல் சார்ந்த பயணம் அல்ல. தமிழகத்தில் குடும்ப ஆட்சியை ஒழிக்கும் பயணமாக இருக்கும்.

    ஏழைகளில் நலன் கருதி முன்னாள் முதல்- அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்தி உள்ளது. அதனை மீண்டும் செயல்படுத்த இந்த நடைபயணம் வழிவகுக்கும். தமிழ் மொழியின் பெருமை யை பிரதமர் மோடி உலகெங்கும் பறை சாற்றி வருகிறார்.

    ஐக்கிய நாடுகள் சபை, ஜி20 மாநாடு என உலக ளவிலான நிகழ்வுகளில் தமிழ் மொழி பெருமை குறித்து பிரதமர் மோடி பேசியுள்ளார். தமிழர்களின் பாரம்பரி யத்தை பாதுகாக்க இலங்கை யில் ரூ.120 கோடி மதிப்பில் கலாச்சார மையம் அமைக் கப்பட்டுள்ளது.

    பாரதியாரின் பிறந்தநாள் இந்திய தேசிய மொழிகள் தினமாக அறிவிக்கப் பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழகத்தின் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது என எண்ணற்ற தமிழ் பணிகளை பிரதமர் மோடி செய்துள்ளார்.

    நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசாக தமிழகத்தின் தி.மு.க. அரசு உள்ளது. தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. அமலாக்கத் துறையால் ஊழல் வழக்கில் அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்ப டுகிறார். அவரை பதவியில் இருந்து நீக்காமல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மவுனம் சாதிக்கிறார். அதற்கு அவர் வெட்கப்பட வேண்டும்.

    மத்தியில் 10 ஆண்டுகளாக கூட்டணி ஆட்சி செய்த காங்கிரஸ் மற்றும் தி.மு.க. மக்களிடம் வாக்கு கேட்க செல்லும் போது 2ஜி, காமன்வெல்த், ஹெலிகாப்டர், இஸ்ரோவில் செய்த ஊழல்கள் தான் நினைவுக்கு வரும். இலங்கை தமிழர்களை அழிக்க கார ணமாக இருந்தது தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி.

    உதயநிதியை முதல்வராக்க ஸ்டாலின் விரும்புகிறார். அவரை போல் அவரது கூட்டணி தலைவர்களும் தங்களது குடும்ப உறுப்பினர்களை முன்னிலைப் படுத்து கின்றனர். அண்ணா மலையின் இந்த நடை பயணம் முடியும் போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடக்கும். வரும் மக்களவை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் அதிக எம்.பிக்களை வெற்றி பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் ஆர். சி. பால் கனகராஜ், வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் வி. வணங்காமுடி, மாநிலத் துணைத் தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சஞ்சய் ராமசாமி, மற்றும் மாநில செயலாளர்கள், ஆர். பரமசிவம், பா. வஜ்ரவேலு, எஸ். திவாகர், ஆர். சி. கார்த்திகேயன், சி. எம். சஜு,

    ராமநாதபுரம் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் தரணி ஆர்.முருகேஷன், மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.பி.எஸ். நாகேந்திரன், ஓ.பி.சி அணி மாநில செயலாளர் கவுன்சிலர் முருகன், பட்டியணி முன்னாள் மாவட்ட தலைவர் ரமேஷ் கண்ணன், உள்ளபட பலர்.

    முதுகுளத்தூர் அ.தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் செந்தில்குமார், மாநில இளைஞர் அணி செயலாளர் டாக்டர் ராம்குமார், பா.ஜ.க. மாநில ராணுவ அணி செயலாளர் எம்.சி. ரமேஷ்,

    மாநில பொதுச் செய லாளர் ராம.சீனிவாசன், மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் மகா.சுசீந்திரன், மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு, பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், மாவட்ட பொதுச் செயலாளர் ராஜ்குமார், மாவட்ட செயலாளர்கள் சுப்பா நாகலு, ஓம்சக்தி தனலட்சுமி, கோவில் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் காந்திகுமாரி, மாவட்ட ஓ.பி.சி. அணி தலைவர் சரவணகுமார், விருந்தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் கிருஷ்ணன், மதுரை காளவாசல் மண்டல பொதுச்செயலாளர் ஸ்ரீராம், ஊடக பிரிவு மாவட்டத்தலைவர் ரவிச்சந்திரபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ராமேசுவரத்தில் பக்தர்கள் வெள்ளத்தில் ஆடித்தேரோட்டம் நடந்தது.
    • பர்வதவர்தினி அம்பாள் வெள்ளி ரதத்தில் வீதிஉலா வந்தார்.

    ராமேசுவரம்

    ராமேசுவரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராமநாத சுவாமி கோவிலில் கடந்த 13-ந் தேதி ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 17 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை, இரவில் சுவாமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சியளித்து வருகின்றனர்.

    கடந்த 17-ந் தேதி ஆடி அமாசாசையன்று ராமர் தங்ககருட வாகனத்தில் அக்னி தீர்த்த கடலில் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. 19-ந் தேதி பர்வதவர்தினி அம்பாள் வெள்ளி ரதத்தில் வீதிஉலா வந்தார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சி யான ஆடித்தேரோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) விமரிசையாக நடந்தது. முன்னதாக ராமநாத சுவாமி-பர்வதவர்தினிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கா ரங்கள் நடைபெற்றன. காலை 9.30 மணியளவில் அம்பாள் திருத்தேரில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்த பின் தேரோட்டம் தொடங்கியது. பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    • தொடர் விடுமுறையையொட்டி ராமேசுவரத்தில் இன்று குவிந்த சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
    • புனித தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    ராமேசுவரம்

    ெதன்தமிழகத்தின் பிர சித்தி பெற்ற புண்ணிய ஸ்தலமாக விளங்கும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்ேதாறும் ஆயி ரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    இங்குள்ள அக்னி தீர்த்தகடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது இந்துக்களின் கடமையாக கருதப்படுகிறது.

    இதன் காரணமாக ராமே சுவரத்தில் நாள்தோறும் பக்தர்கள் கூட்டம் காணப் படும். குறிப்பாக அமா வாசை, விடுமுறை நாட்களில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகரித்து காணப்படும்.

    இந்த நிலையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமையான இன்று வழக்கத்தைவிட பக்தர்கள், சுற்றுலா பயணி களின் கூட்டம் அதிக அளவில் இருந்தது.

    அதிகாலை முதலே அக்னி தீர்த்தகடலில் பெண்கள் உள்பட ஏராள மானோர் புனித நீராடி பின்னர் கோவிலில் உள்ள புனித தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    அதேபோல் ராமேசு வரத்தில் உள்ள தனுஷ் கோடி, அரிச்சல் முனை, அப்துல்கலாம் நினைவு மண்டபம் போன்ற பகுதி களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.

    • ராமேசுவரம் மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய டீசலுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும்.

    ராமேசுவரம்

    ராமேசுவரம் பகுதியில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதாக கூறி கைது செய்யும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

    இதேபோல் கடந்த 20-ந்தேதி ராமேசுவரத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் விசைப்படகுகளில் சென்று மீன்பிடித்து கொண்டிருந்தனர். சில மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்தனர்.

    அப்போது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் அங்கு மீன் பிடித்து கொண்டிருந்த ராமேசுவரத்ைத சேர்ந்த அந்தோணி, மடகு பிச்சை, பாலமுருகன், தங்க பாண்டி, அர்ஜூனன், ராஜா ஆகிய 6 மீனவர்களையும், அவர்கள் சென்ற விசைப்படகையும் சிறைபிடித்தனர்.எல்லை தாண்டி மீன்பிடித்த தாக கூறி கைது செய்யப்பட்ட மீனவர்கள் 6 பேரும், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அந்த மீனவர்கள் 6 பேரையும், அவர்களது விசைப்படகையும் விடுவிக்கக்கோரி ராமேசுவரம் மீனவர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டம் நடத்தினர்.

    இதை தொடர்ந்து இன்று ராமேசுவரம் பஸ் நிலையம் முன்பு மீனவர் சங்கங்கள் சார்பில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரையும் உடனே விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கைது செய்யப்பட்ட 6 மீன வர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மீனவர் சங்க தலைவர் சகாயம் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டு இலங்கை கடற்படையை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர் சங்கத்தினர் கூறும்போது, இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை விடுதலை செய்ய மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இலங்ைக கடற்படை பறிமுதல் செய்த விசைப்படகுகளையும் மீட்டு தர வேண்டும்,

    இலங்கை கடற்படை தாக்குதலில் சேதமான படகுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய டீசலுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • ராமேசுவரம் - செகந்திராபாத் ரெயில் சேவை அடுத்த மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.

    மதுரை

    ராமேசுவரம் - செகந்திராபாத் சிறப்பு ரெயில் ஜூலை மாதம் வரை இயக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அதன் சேவை ஆகஸ்டு மாதம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி ராமேசுவரத்தில் இருந்து அடுத்த மாதம் 4, 11, 18 ஆகிய தேதிகளில் இரவு 11.55 மணிக்கு புறப்படும் ரெயில், சனிக்கிழமை காலை 7.10 மணிக்கு செகந்திராபாத் செல்லும்.

    மறுமார்க்கத்தில் செகந்திராபாத்தில் இருந்து அடுத்த மாதம் 2, 9, 16 ஆகிய நாட்களில் இரவு 9.25 மணிக்கு புறப்படும் ரெயில், வியாழக்கிழமை அதிகாலை 3.10 மணிக்கு ராமேசுவரம் வந்து சேரும். இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.

    • ராமேசுவரம்- கன்னியாகுமரி சிறப்பு எக்ஸ்பிரஸ் ெரயில் 27-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது.
    • இந்த ரெயில் மதுரை, மானாமதுரை, விருதுநகர் வழியாக நின்று செல்லும்.

    மதுரை

    மதுரை- ராமேசுவரம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. அந்த ரெயில்கள் கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு அந்த ரெயில்கள் இயக்கப்படவில்லை.

    இந்த நிலையில் ராமேசுவரம்- கன்னியாகுமரி இடையே வருகிற 27-ந் தேதி முதல் மீண்டும் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்குவது என்று தென்னக ரெயில்வே முடிவு செய்துள்ளது.

    இது ராமேசுவரத்தில் இருந்து திங்கள், புதன், சனிக்கிழமைகளிலும், கன்னியாகுமரியில் இருந்து செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளிலும் இயக்கப்பட உள்ளது.

    ராமேசுவரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் ராமநாதபுரம் (9.54 மணி) பரமக்குடி (10.19) மானாமதுரை (10.48), மதுரை (11.45), விருதுநகர் (நள்ளிரவு 12.23), நெல்லை (அதிகாலை 2.22), நாகர்கோவில் (3.32) வழியாக கன்னியாகுமரிக்கு 4.15 மணிக்கு செல்லும்.

    கன்னியாகுமரியில் இருந்து நள்ளிரவு 10.15 மணிக்கு புறப்படும் ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் (10.27), வள்ளியூர் (11.01), நெல்லை (11.52), விருதுநகர் (அதிகாலை 1.28), மதுரை (2.25), மானாமதுரை (3.13), ராமநாதபுரம் (3.58) வழியாக ராமேசுவரத்துக்கு அதிகாலை 5.38 மணிக்கு செல்லும். ராமேசுவரத்தில் இருந்து புறப்படும் ரெயில்கள் வருகிற 27-ந் தேதி முதலும், கன்னியா குமரியில் இருந்து புறப்படும் ரெயில்கள் வருகிற 28-ந் தேதி முதலும் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது.

    ×