search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 233921"

    • ஈரோடு மாவட்டம் ஒருங்கிணைந்த தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் இன்று கலெக்டர் அலுவலகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சாதியினருக்கும் அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ப கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க மத்திய- மாநில நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல். ஏ. அறிவித்திருந்தார்.

    அதன்படி இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஈரோடு மாவட்டம் ஒருங்கிணைந்த தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் இன்று கலெக்டர் அலுவலகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் கோபு முன்னிலை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன், வடக்கு மாவட்ட துணைத் தலைவர் வினோத்குமார், மாணவர் மாவட்ட பொறுப்பாளர் செந்தில்குமார், மேற்கு மாவட்ட தலைவர் கலை வாசம் ஆகியோர் வரவேற்றனர்.

    மாவட்ட ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் குமரவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரி கண்டன கோஷம் எழுப்பினர்.

    • மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்தது.
    • மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மின்சார பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது

    பொள்ளாச்சி:

    மத்திய அரசு நாடாளுமன்றத்தில் இன்று மின்சார சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்ய உள்ளது. இந்த மசோதாவிற்கு நாடு முழுவதும் உள்ள மின்வாரிய ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    மத்திய அரசின் இந்த செயலை கண்டித்து இன்று பொள்ளாச்சி உதவி மின் பொறியாளர் அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

    அப்போது நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள மின்சார சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது

    இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் மின்வாரிய ஊழியர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் மாநில அரசுகளின் உரிமையை அடியோடு பறிக்கப்படும் நிலை ஏற்படும்.

    தமிழகத்தில் விவசாயிகள், நெசவாளர்கள், மற்றும் ஏழை மக்களுக்கு வழங்கப்படும்100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் பறிபோகும் நிலை ஏற்படும்.

    எனவே இந்த மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும். இல்லை என்றால் தொடர்ந்து நாடு முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர்.

    மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மின்சார பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது

    • தேனி மாவட்ட தே.மு.தி.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மின் கட்டணம் உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.

    தேனி:

    தேனி மாவட்ட தே.மு.தி.க சார்பில் தமிழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வு மற்றும் உணவுப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி விதிப்பை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    தேனி நகர செயலாளர் முருகராஜ் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் மாயி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தே.மு.தி.க தேர்தல் பணிக்குழு செயலாளரும், தேனி மாவட்ட உட்கட்சி தேர்தல் ஆணையாளருமான தாமோதரகண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்கள் குறித்து விளக்கி பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தின் போது மின் கட்டணம் உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.

    • கடலூரில் புதிய பஸ் நிலையம் அமைக்காவிட்டால் கள்ளக்குறிச்சி மாவட்டம் போல் கடலூர் மாறும் என முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • தற்போது மின்சார கட்டணம் வரலாறு காணாத வகையில் உயர்த்தி உள்ளனர்.தமிழகத்தில் 40 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    கடலூர்: 

    கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேட்டினை கண்டு கொள்ளாத தி.மு.க. அரசை கண்டித்து கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத் தலைமை தாங்கி பேசினார்.அவர் ேபசியதாவது:- அ.தி.மு.க. .ஆட்சி காலத்தில் 100 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று ஒரு வருடத்தில் தற்போது மின்சார கட்டணம் வரலாறு காணாத வகையில் உயர்த்தி உள்ளனர்.தமிழகத்தில் 40 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தனியாரிடம் ரூ.2.73-க்கு ஒரு யூனிட் மின்சாரம் கிடைத்து வரும் நிலையில் ரூ.5.25-க்கு மின்சாரம் வாங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மக்கள் மீது அரசு வரியை சுமத்தி வருகின்றனர். மேலும் சொத்து வரி 50 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை வீடுகளுக்கும், கமர்சியல் இடத்திருக்கும் தமிழக அரசு உயர்த்தி உள்ளதால் வணிகர்கள், பொதுமக்கள் கடும் அவதிஅடைந்து உள்ளனர்.

    இது மட்டும் இன்றி சிமெண்ட், கம்பி, ஜல்லிக்கற்கள் போன்றவற்றின் விலை கடுமையாக விலை உயர்ந்து உள்ளதால் பொதுமக்களின் அடிப்படை வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப், பெண்களுக்கு ஸ்கூட்டி, மற்றும் அம்மா குடிநீர், அம்மா மருந்தகம், அம்மா சிமெண்ட் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றி பொதுமக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். தற்போது தி.மு.க. ஆட்சியில் கடலில் பேனா வைப்பதற்கு 80 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வந்துள்ளன. ஆனால் தமிழகம் முழுவதும் மக்கள் கடும் நிதி நெருக்கடியில் உள்ள நிலையில் 80 கோடி ரூபாய் செலவில் இந்த பணிகள் மேற்கொள்வது அரசுக்கு நியாயமா?.

    தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினை தலைவிரித்து ஆடுகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக கள்ளக்குறிச்சி சம்பவம் அனைவருக்கும் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியதோடு சட்ட ஒழுங்கு பிரச்சினை கேள்விக்குறியாக்கி உள்ளது. இது மட்டும் இன்றி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் லாக்கப்பில் சாவு ஏற்பட்டு உள்ளது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்நிலையில் இருந்து வந்தது. இந்த நிலையில் கடலூர் மக்கள் பயன்பெறும் வகையில் கலெக்டர் அலுவலகம் அருகில் பஸ் நிலையம் அமைப்பதற்கு அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.

    ஆனால் தற்போது தி.மு.க. ஆட்சியில் எம். புதூர் பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருவதை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? அல்லது அந்த இடத்தை மக்கள் விரும்புகிறார்களா? என்பதனை பார்க்க வேண்டும் .மேலும் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஆகையால் கடலூரில் புதிய பஸ் நிலையம் அமைக்காவிட்டால் கள்ளக்குறிச்சி மாவட்டம் போல் கடலூர் மாவட்டம் மாறும் என்பதனை கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு எச்சரிக்கை விடுகிறோம். இது போன்ற சம்பவங்கள் முழுவதும் தவிர்க்கப்பட வேண்டுமானால் தி.மு.க. ஆட்சியை அகற்றி தூக்கி எறிய வேண்டும். மேலும் தமிழகத்தில் மந்திரிகள், அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் செயல்பட முடியாமல் குடும்ப ஆட்சியாக திமுக செயல் படுகின்றது மக்களை வஞ்சிக்கின்ற ஆட்சியாக திமுக செயல் படுகின்றது. ஆகையால் மக்கள் பிரச்சினை தீர்க்கும் அரசாக அதிமுக இருந்து வருவதால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு அமைய மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக முன்னாள் அமைச்சர் எம்.சி. தாமோதரன், அ.தி.மு.க. மருத்துவர் அணி தலைவர் டாக்டர் சீனிவாச ராஜா, மாநில இளைஞரணி துணை செயலாளர் சி.கே.எஸ். கார்த்திக்கேயன், மீனவரணி தங்கமணி, பேரவை துணைச் செயலாளர் ஆர்.வி. ஆறுமுகம், பகுதிகளை செயலாளர்கள் வெங்கட்ராமன், வக்கீல் பாலகிருஷ்ணன், கெமிக்கல் மாதவன், வினோத் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அவை தலைவர் சேவல் குமார், ஒன்றிய செயலாளர் காசிநாதன், மாவட்ட பொருளாளர் ஜானகிராமன், மாவட்ட துணை செயலாளர் பக்கிரி ஆகியோர் வரவேற்றனர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில் வட்ட துணை செயலாளர் மணிமேகலை தஷ்ணா, மாநகராட்சி கவுன்சிலர்கள் சங்கீதா வசந்த ராஜ், ஏ.ஜி.தஷ்ணா, ஏ.ஜி.எம். வினோத்குமார், ஒன்றிய செயலாளர்கள் கந்தன், தமிழ்ச்செல்வம், நாகபூஷணம், சிவா, நகர செயலாளர்கள் முருகன், காசிநாதன், பேரூராட்சி செயலாளர்கள் கனகராஜ், அர்ஜுனன், மாவட்ட மாணவரணி செயலாளர் கலையரசன், வர்த்தக பிரிவு வரதராஜன், இலக்கிய அணி ஏழுமலை, இணைச் செயலாளர் முத்து, சிறுபான்மை பிரிவு தாஜுதீன், ஒன்றிய கவுன்சிலர்கள் மகேஸ்வரி விஜய ராயலு, வேல்முருகன், கிரிஜா செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய செயலாளர் அழகானந்தம் நன்றி கூறினார். முன்னதாக அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் பெண்கள் திரண்டு வந்ததால் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டிருந்தது.

    • கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

    கும்பகோணம்:

    இறைத்தூதர் நபிகள் நாயகம் அவதூறாக பேசிய பா.ஜ.க கும்பலை கைது செய்யாத மோடி அரசு பதவி விலக கோரி கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    குடந்தை, திருவிடைமருதூர், பாபநாசம் வட்டார ஜமாஅத் கூட்டமைப்பு, வட்டார ஜமா அத்துல் உலமா சபை மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் இணைந்து நடத்திய

    ஆர்பாட்டத்தில் தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள், நாம் தமிழர், தமிழக வாழ்வுரிமை கட்சி, நீலப் புலிகள் இயக்கம், விடுதலை தமிழ் புலிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் நிர்வாகிகளும், ஜமாஅத்துல் உலமா சபையின் வட்டார நிர்வாகிகளும், இஸ்லாமிய இயக்கங்களின் பொறுப்பாளர்களும் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் அப்துல் சமது எம்எல்ஏ, மதிமுக

    மாநில துணை பொதுச்செயலாளர் முருகன், மேயர் சரவணன் துணைமேயர் தமிழழகன், விடுதலை சிறுத்தை கட்சி மண்டல செயலாளர் விவேகானந்தன், மற்றும்

    ஜமாத்தார்களும், பெண்களும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

    ×