என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "3 பேர் மாயம்"
- தேனியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மாயமாகினர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து 3 பேரையும் தேடி வருகின்றனர்
தேனி:
தேனி ஜீவானந்தம் நகர், எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் அழகர்(52). அவரது மனைவி பரமேஸ்வரி(42), மகன் அழகுராஜா(26). இவர்கள் 3 பேரும் பரமேஸ்வரியின் சகோதரி தனலட்சுமி என்பவருடன் ஆண்டிபட்டியிலிருந்து தேனி புதிய பஸ்நிலையத்திற்கு பஸ்சில் வந்தனர்.
அங்கு தனலட்சுமி அவர்களை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அப்போது தனலட்சுமிைய செல்லுமாறும், பின்னால் வருவதாகவும் கூறியுள்ளனர். ஆனால் வெகுநேரமாகியும் 3 பேரும் வரவில்லை.
அவர்கள் செல்போனுக்கு அழைப்பு விடுத்தபோது அது சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் தேனி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து 3 பேரையும் தேடி வருகின்றனர்.
- உத்தமபாளையம் அருகே வெவ்வேறு சம்பவங்களில் மாணவன் உள்பட 3 பேர் மாயமாகினர்.
- மாயமானவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
உத்தமபாளையம்:
உத்தமபாளையம் அருகே காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த நந்தகுமார் மகன் தர்ணேஷ் (வயது14). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி விடுதியில் தங்கி 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற தர்ணேஷ் திடீரென மாயமானார்.
பள்ளி வளாகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேடி பார்த்தும் கிடைக்கா ததால் ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உத்தமபாளையம் அருகே காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த ராமசாமி மனைவி சங்கிலிமுத்தம்மாள் (67). சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இது குறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனுமந்தன்பட்டியை சேர்ந்தவர் அருணாச்சலம் மனைவி அய்யம்மாள் (70). கணவர் இறந்து விட்ட நிலையில் நோய் கொடுமை யால் பாதிக்கப்பட்டு இருந்தார். சம்பவத்தன்று அவர் திடீரென மாயமா னார்.
இது குறித்த புகாரின் பேரில் உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தேனி மாவட்டத்தில் 3 பேர் மாயமாகினர்
- பள்ளி மாணவன் மற்றும் 2 பெண்கள் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்
தேனி:
தேனி அருகே தப்புக்குண்டுவை சேர்ந்தவர் மாரிச்சாமி மனைவி சித்ரா(31). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சம்பவத்தன்று வீட்டில் இருந்த சித்ரா திடீரென மாயமானார். அக்கம்பக்கம் மற்றும் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடிபார்த்தும் கிடைக்காததால் வீரபாண்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து சித்ராவை தேடி வருகின்றனர்.
பெரியகுளம் தென்கரையை சேர்ந்தவர் அய்யப்பன் மனைவி ராதாருக்மணி(28). சம்பவத்தன்று கடைவீதிக்கு செல்வதாக கூறிச்சென்றவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் தென்கரை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
உத்தமபாளையத்தை சேர்ந்தவர் ஸ்டீபன் மகன் மாதவன்(16). இவர் 11-ம் வகுப்பு முடித்து 12-ம் வகுப்பு செல்ல இருக்கிறார். விடுமுறை தினத்தில் அருகில் உள்ள பாட்டி வீட்டில் தூங்குவது வழக்கம். நேற்று அங்கு சென்ற மாதவன் தனது நண்பர் வீட்டிற்கு செல்வதாக கூறிச்சென்றார். ஆனால் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து உத்தமபாளையம் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்