search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பங்கேற்பு"

    • முட்டத்தில் இன்று மாலை நடக்கிறது
    • 2 அமைச்சர்களும் கலந்து கொள்கிறார்கள்

    நாகர்கோவில்:

    புதுடெல்லியில் 1997 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21-ந்தேதி 40 நாடுகளின் மீனவ பிரதிநிதிகள் ஒன்று கூடினர்.

    சூழலியல் மாற்றங்கள் அரசு கொண்டுவரும் திட்டங்கள் மற்றும் கடல் மாசு அடைதலால் மீன்வளம் குறைதல் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் குரல் கொடுக் கும் வகையிலும் மீனவ மக்களிடையே விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகை யிலும் அன்று முதல் ஆண்டுதோறும் நவம்பர் 21-ந் தேதி மீனவர் தினமாக கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டு 25-வது வெள்ளி விழா கொண்டாட் டமாக உலக மீனவர் தினம் கொண்டாடப்படுகிறது. உலக மீனவர் தினத்தை குமரி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராம மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் மீனவர் தினம் சிறப்பாக கொண்டாடப்படும்.

    இந்த ஆண்டுக்கான மீனவர் தினவிழா கொண் டாட்டம் முட்டம் கடற்கரை மைதானத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு நடக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன்சூசை தலைமை தாங்குகிறார். முட்டம் துணைத்தலைவர் சகாயராஜ், மாநில சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு இணைச் செயலாளர் ஏ.ஜே.ஸ்டாலின், தாரகை கட்பட் ஆகியோர் முன்னிலை வைக்கிறார்கள். முட்டம் பங்கு தந்தை அமல்ராஜ் வரவேற்று பேசுகிறார்.

    கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி இயக்குனர் டன்ஸ்டன் தொடக்க உரை யாற்றுகிறார். விழாவில் தி.மு.க. இளைஞரணி செய லாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ், விஜய் வசந்த் எம்.பி., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் சிறப்புரை ஆற்று கிறார்கள்.

    மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் பழனிச்சாமி, கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், தமிழ்நாடு மாநில தலைமை மீனவர் கூட்டுறவு இணைய தலைவர் சேவியர் மனோகரன், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், முட்டம் ஊராட்சி தலைவர் நிர்மலா ராஜ், அருள் எழிலன், ராஜசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

    சிறப்பு அழைப்பாளராக எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், தளவாய்சுந்தரம், விஜய தரணி, ராஜேஷ்குமார், எம்.ஆர். காந்தி, மீனவர் கூட்டுறவு இணைய தலைவர் திமிர்த்தியூஸ் முன்னாள் மீனவர்கள் செயலாளர் நசரேத் பசலியான், உள் நாட்டு மீனவர் அமைப் பின் இயக்குனர் ஜோஷ் ஆகியோர் கலந்து கொள் கிறார்கள். உள்நாட்டு மீனவர்அமைப்பு இயக்குனர் வெனிஸ் மைக்கேல்ராஜ் நன்றி கூறுகிறார்.

    இந்த நிகழ்ச்சிகளை சர்ச்சில், குறும்பனை பெர்லின், நாஞ்சில் மைக்கேல் ஆகியோர் தொகுத்து வழங்குகிறார்கள்.

    • 9 தாலுக்காவில் இருந்து 33 தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
    • பேரிடர் கட்டுப்பாட்டு அறைக்கு தன்னார்வலர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் அப்தமித்ரா 5-வது கட்ட 12 நாள் சிறப்பு பயிற்சி ரெட்கிராஸ் பேரிடர் மேலாண்மை பயிற்சி மையத்தில் நடைபெற்று வருகிறது.

    இப்பயிற்சியில் தஞ்சாவூர் மாவட்ட த்தைச் சார்ந்த 9 தாலுக்காவில் இருந்து 33 தன்னார்வலர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இப்பயிற்சி வருகிற 9-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இதில் தினசரி தமிழகத்தின் சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் பேரிடர் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு குறித்து செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி வழங்கப்படுகிறது.

    பயிற்சியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பேரிடர் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    அங்கு பேரிடர் வட்டாட்சியர் ராஜேஸ்வரி பேரிடர் கட்டுப்பாட்டு அறை செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் ரெட்கிராஸ் மாவட்ட பொருளாளர் பொறியாளர் முத்துக்குமார், ஒருங்கிணைப்பாளர் பயோகேர் முத்துக்குமார்,பேரிடர் கட்டுப்பாட்டு அறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • முன்னுதித்த நங்கை அம்மன் இன்று சுசீந்திரம் வந்தடைந்தது
    • தமிழக-கேரள போலீசார் அணிவகுப்பு மரியாதை

    கன்னியாகுமரி:

    திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்க சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி, வேளி மலை குமாரசுவாமி விக்கிர கங்கள் கடந்த 24-ந் தேதி பத்மநாபபுரத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றன.

    10 நாட்கள் நவராத்திரி விழாவுக்கு பிறகு சுவாமி விக்கிரகங்கள் 7-ந் தேதி அங்கிருந்து புறப்பட்டன. வழிநெடுக பக்தர்கள் திரண்டு சுவாமி விக்ரகங்களை வரவேற்றனர். 8-ந் தேதி காலையில் குமரி மாவட்ட எல்லை பகுதியான களியக்காவிளைக்கு சுவாமி விக்கிரகங்கள் வந்தடைந்தது.

    தொடர்ந்து குழித்துறை சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயம்,இரவிபுதூர் கடை, சாமியார் மடம், காட்டாதுரை அம்மன் கோவில், அழகிய மண்டபம் , வைகுண்ட புரம், மணலி ஆகிய பகுதிகளில் பாரம்பரிய முறைப்படி சுவாமி விக்ரகங்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    வைகுண்டபுரத்தில் தொழிலதிபர் அழகி விஜி தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மணலியில் கரை கண்டார் கோணம், சித்தி விநாயகர் கோவில் நிர்வாகிகள் சார்பில் சுவாமி விக்கிரகங்களுக்கு தால பொலியிட்டு வரவேற்பளிக்கப்பட்டது.

    இதில் கவுன்சிலர் உண்ணி கிருஷ்ணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து பத்மநாபபுரம் கோட்டைவாசல் முன் வரை 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் தால பொலிவுடன் தீபமேற்றி வரவேற்பளிக்கப்பட்டது.

    பத்மநாபபுரம் அர ண்மனை வாசல் முன் சுமார் ஒரு மணி நேரம் கொளுத்தும் வெயிலில் பொதுமக்கள் திரண்டு தால பொலியிட்டு சுவாமி விக்கிரகங்களுக்கு வரவேற்பு கொடுத்தனர். இதை தொடர்ந்து தேவாரக் கட்டு சரஸ்வதி அம்மன் சிறப்பு பூஜைகளுக்கு பின் மண்டபத்தில் அமர்த்தப் பட்டார். வேளிமலை குமாரசாமி, குமார கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். முன்னுதித்த நங்கை அம்மன் இன்று (திங்கட்கிழமை) காலையில் சுசீந்திரம் புறப்பட்டார். பக்தர்கள் சிறப்பான முறையில் வர வேற்பு கொடுத்த நிலை யில் மணலி முதல் பத்மநாதபுரம் அண்ணா சாலை முதல் பத்மநாபபுரம் வரை போக்குவரத்து நெருக்கடி அதிகமாக இருந்தது.

    இன்று காலை 9.30 மணிக்கு முன்னுதித்த நங்கை அம்மன், சுசீந்திரம் ரதவீதியை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து சுவாமி கோவிலை வந்தடைந்ததும், தமிழக-கேரள போலீசார் இசை கருவிகளை முழங்கி வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து அவர்கள் அணிவகுப்பு மரியாதையும் செய்தனர். அதன்பிறகு முன்னுதித்த நங்கை அம்மன் கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • புதிய பஸ் நிலையம் அம்பேத்கர் சிலையிலிருந்து காந்தி சிலை வரை போராட்டம் நடைபெற இருக்கிறது.
    • துண்டு பிரசுரம் விநியோகித்து ஆதரவு திரட்டுவது என முடிவு.

    பேராவூரணி:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்தை அறிவித்துள்ளது. இந்த போராட்டத்தில் சமூக நல்லிணத்தை விரும்புகின்ற அனைத்துக் கட்சிகள், ஜனநாயக அமைப்புகள், இயக்கங்கள் அனைவரும் பங்கேற்க வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இந்த அடிப்படையில் பேராவூரணியில் மனித சங்கிலி போராட்டம் புதிய பேருந்து நிலையம் அம்பேத்கர் சிலையிலிருந்து காந்தி சிலை வரை நடைபெற இருக்கிறது. இந்த போராட்டத்தில் அனைத்து தரப்பு பொதுமக்களும், உழைக்கின்ற தொழிலாளர்களும், ஜனநாயக சக்திகளும் பங்கேற்க வேண்டி அனைத்து கட்சிகள் சார்பில் நேற்று பேராவூரணி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சி பேராவூரணி சட்டமன்றத் தொகுதி செயலாளர் அரவிந்த் குமார் தலைமையில் நடைபெற்றது.

    பொதுமக்களிடமும், தொழிலாளர்களிடமும் துண்டு பிரசுரம் விநியோகித்து ஆதரவு திரட்டுவது என முடிவு செய்யப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் மைதீன், திராவிடர் கழகம் மாவட்ட அமைப்பாளர் சிதம்பரம், தி.வி.க மாவட்ட அமைப்பாளர் திருவேங்கடம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கம் அரசியல் செயலாளர் முனைவர் ஜீவானந்தம், தமிழக மக்கள் புரட்சி கழகம் மதியழகன், அறநெறி மக்கள் கட்சி ஜேம்ஸ், தமிழின உணர்வாளர்கள் கூட்டமைப்பு வெங்கடேசன் மற்றும் அப்துல் சலாம், முஜிபுர், உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக விசிக பேராவூரணி ஒன்றிய செயலாளர் சிவா நன்றி கூறினார்.

    • சாத்தூர் நகராட்சி ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்றனர்.
    • இந்து சமய அறநிலையத்துறை செயலரிடம் ஆவணங்களை சமர்ப்பித்து அதன் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சி அலுவலகத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. நகர்மன்ற தலைவர் குருசாமி, நகராட்சி ஆணையாளர் இளவரசன் முன்னிலை வகித்தனர்.

    சாத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளை சேர்ந்த கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். நகராட்சியில் உள்ள பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு, கழிவு நீர் வாறுகால், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள்-குறைபாடுகள் குறித்து கவுன்சிலர்கள் முறையிட்டனர். இந்த குறைகள் சம்பந்தமாக அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து சரி செய்வதாக அமைச்சர் தெரிவித்தார்.

    மேலும் கோவில் நிலங்களில் குடியிருப்பவர்கள் வாடகை அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளது குறித்து முறையிட்டனர். இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை செயலரிடம் ஆவணங்களை சமர்ப்பித்து அதன் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வு கூட்டத்தில் சாத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும் என அமைச்சர் உறுதியளித்தார். வட்டாட்சியர் வெங்கடேசன், தி.மு.க. ஒன்றிய செயலா ளர்கள் கடற்கரை ராஜ், முருகேசன், போலீஸ் டி.எஸ்.பி. நாகராஜ், இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டியன் மற்றும் நகராட்சி, வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மதுரையில் இன்று மாலை 60 மாவட்ட வீரர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட கபடி போட்டி நடக்கிறது.
    • இதில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்கிறார்.

    மதுரை

    மதுரை மாவட்ட பா.ஜ.க. விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு சார்பில் 60 மாவட்ட வீரர்கள் பங்கேற்கும் பிரம்மாண்டமான இறுதி கபடி போட்டி மதுரா கல்லூரியில் இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. இதில் 720 வீரர்கள் கலந்து கொண்டு விளையாடுகின்றனர்.

    இந்த போட்டி இன்று முதல் வருகிற 29-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. இதில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் மற்றும் மாநில நிர்வாகிகள் கருப்பு முருகானந்தம், சீனிவாசன், கதலி நரசிங்க பெருமாள், தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் கே.அண்ணாமலை, பா.ஜ.க. திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி, துணைத்தலைவர்கள் அக்னி எம்.ராஜேஷ், பாலாஜி தங்கவேல், சிறப்பு விருந்தினர்கள் ரமணன் விஜயன், ஆதம் சிம்சியர், மாநில செயலாளர்கள் என்.ராமச்சந்திரன், டாக்டர் சுரேஷ்குமார், டி.புஷ்பநாதன், எம்.கண்ணன், ஞானமணி, தமிழ்சங்கு,டாக்டர். பப்னா ராஜ்குமார், கார்த்திக், காளிராஜ்,ஹரிகிருஷ்ணன், ரவிக்குமார், ஆயிஷா அப்துல்லா, மதுரை புறநகர் மாவட்ட தலைவர் மகாசுசீந்திரன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் என்.ராமச்சந்திரன் செய்திருந்தார்.

    • மதுரை பழங்காநத்தம் பகுதியில் வருகிற 29-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
    • இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்கிறார்.

    திருப்பரங்குன்றம்

    அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருகிற 29-ந் தேதி மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    இதையொட்டி திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் மரக்கடை முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்திற்கு அமைப்புச் செயலாளரும், மாவட்ட செயலாளருமான ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசும் போது கூறியதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக வருகிற 29-ந் தேதி மதுரை வருகிறார். அவருக்கு மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்க வேண்டும்.

    தி.மு.க. தற்போது மக்கள் மனதில் நம்பிக்கை இழந்து விட்டது. அ.தி.மு.க.வின் பல்வேறு நலத்திட்டங்கள் நிறுத்தப்பட்டு உள்ளது.

    விலைவாசி உயர்வால் மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டு வருகின்றன. முதல்-அமைச்சர் விழாக்களில் மட்டுமே கலந்து கொள்கிறார். அவரால் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடிய வில்லை.

    வருகிற 29-ந் தேதி மாலை மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இதில் புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் ஏராளமானோர் கலந்து கொண்டு மாநாடு போல் பொதுக்கூட்டத்தை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மேலூர் எம்.எல்.ஏ. பெரியபுள்ளான், ஒன்றிய செயலாளர் தக்கார் பாண்டி, பொன். ராஜேந்திரன், பகுதி துணை செயலாளர் செல்வகுமார், வட்டச் செயலாளர் பொன்.முருகன், என்.எஸ்.பாலமுருகன், எம். ஆர். குமார், பாலா, எம்.ஜி. பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழக, கேரள அமைச்சர்கள் பங்கேற்பு
    • நவராத்திரி விழா பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரம் அரண்மனைக்கு மாற்றப்பட்டது.

    கன்னியாகுமரி:

    தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக பத்மநாபபுரம் இருந்த போது அரண்மனையில் உள்ள மண்டபத்தில் நவராத்திரி விழா விமரிசையாக நடந்து வந்தது.

    பின்னர் தலைநகர் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. அப்போது சில ஆண்டுகள் மட்டுமே இங்கு விழா நடந்தது. பின்னர் விழா திருவனந்தபுரம் அரண்மனைக்கு மாற்றப்பட்டது. இதற்காக குமரியில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை, வேளிமலை குமாரசாமி, அரண்மனை தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி ஆகிய சுவாமி விக்ரகங்கள் திருவனந்தபுரம்சென்று வருவது காலந்தொட்டு நடந்து வருகிறது.

    இந்த ஆண்டு நவராத்திரி விழாவையொட்டி சுவாமி விக்ரகங்கள் 23-ந்தேதி கேரளாவிற்கு புறப்பட்டு செல்கின்றன. விழாவில் பங்கேற்க 22-ந்தேதி சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் விக்ரகம் புறப்பட்டு பத்மநாபபுரம் வந்து சேர்கிறது. 23-ந்தேதி காலையில் வேளிமலை குமாரசாமி பத்மநாபபுரம் சரஸ்வதி அம்மன் கோவிலை வந்தடையும்.

    பின்னர் அங்கிருந்து பவனி கேரள போலீசாரின் அணி வகுப்பு மரியாதையு டன் தொடங்கும்.முன்ன தாக பவனியின் முன்னே கொண்டு செல் லும் மன்னரின் உடைவாள் கைமாறும் நிகழ்ச்சி அரண்ம னையில் உள்ள உப்பரிகை மாளிகையில் 23-ந்தேதி 7.30 முதல் 8.30-க்குள் நடைபெறும்.

    இந்நிகழ்ச்சியில் கேரள தேவசம்போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன், தமிழக தொழில்நுட்பத்துறை தகவல் அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் தமிழக கேரள உயர் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

    உடைவாள் கைமாறிய தும் அரண்மனை தேவா ரக்கட்டு சரஸ்வதியம் மன் ஆலயம் கொண்டு வரப்பட்டு பூஜைகள் செய் யப்படும். அங்கிருந்து அரண் மனை தேவாரக்கட்டு சரஸ் வதிதேவி யானை மீது அமர, பல்லக்குகளில் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை, வேளி மலை முருகன் ஆகியோர் வீற்றிருக்க பெண்களின் தாலப்பொலியுடன் பவனி தொடங்கும். இந்த பவனி

    அக்.25-ந்தேதி திருவனந்தபுரம் சென்றடைகிறது. அங்கு தொடங் கும் நவராத்திரி பூஜையில் சரஸ்வதி தேவி கோட் டைக்ககம் நவராத்திரி மண்டபத்திலும், வேளி மலைமுருகன் ஆரியசாலை கோவிலிலும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை செந்திட்டை பகவதி கோவி லிலும் பங்கேற்ககின்றனர்.

    பின்னர் விஜயதசமிக்கு முடிந்து நல்லிருப்பை அடுத்து அங்கிருந்து விக்ரகங்கள் பவனியாக புறப்பட்டு பத்மனாபபுரம் வந்தடையும்.

    • மாநில தலைவர் முனியாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
    • ஆர்ப்பாட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

    கடையம்:

    பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தக்கோரி சென்னையில் வள்ளுவர் கோட்டம் முன்பு வருகிற 14-ந் தேதி தமிழ்நாடு பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில், தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் முனியாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இது குறித்து தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர்களின் ஒருங்கிணைப்பாளர் டி.கே.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் வருகிற 14-ந்தேதி பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். பட்டியலின மற்றும் பெண் ஊராட்சி தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளுக்கான டெண்டரை ஊராட்சியே முடிவு செய்ய அதிகாரம் வழங்க வேண்டும், ஊராட்சி தலைவர்களுக்கு மாதம் ஊதியமாக ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி மன்ற கூட்டமைப்பின் சார்பாக நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 400-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் பங்கேற்கின்றனர். மேலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை கொடுக்க உள்ளோம்.

    ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் அதிகமானோர் பங்கேற்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக ரெயில் மூலமாகவும், ஆம்னி பஸ்கள் மூலமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாநாட்டில் மின்சார திருத்த சட்ட மசோதா ஒன்றிய அரசு தாக்கல் செய்ததற்கு கண்டனம்.
    • தமிழ்நாட்டில் வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் விவசாய நிலங்களில் பல்வேறு பணிகள் நடைபெறுகிறது.

    நாகப்பட்டினம்:

    ஒன்றிய அரசைகண்டித்து 50 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்கும் 30 ஆவது மாநில மாநாடு ; செப்டம்பர் 17,18,19 ஆகிய 3 தினங்கள் நாகையில் நடைபெற உள்ளதாக தமிழ்நாடுவிவசாய சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் அறிவித்துள்ளார்.

    நாகை மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில மாநாட்டின் லோகோவை நாகை மாலி எம்.எல்.ஏ வெளியிட விவசாய சங்க தலைவர்கள் பெற்று க்கொண்டனர். அதனை தொடர்ந்து தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில பொது ச்செயலாளர் சண்முகம் கூறுகையில் ;

    ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தின் 30வது மாநில மாநாடு செப்டம்பர் 17,18,19 ஆகிய 3 தினங்கள் நாகையில் நடைபெறுகிறது.

    மாநிலம் முழுவதுமுள்ள 50 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.

    கேரளா மாநில நிதித்துறை அமைச்சர் பால கோபால் மற்றும் விவசாய சங்க தலைவர்கள், தொழிற் சங்கங்கள்பங்கேற்க உள்ளனர்.

    மாநாட்டில் மின்சார திருத்த சட்ட மசோதா ஒன்றிய அரசு தாக்கல் செய்ததற்கு கண்டனம், மின்சார திருத்த சட்டம் வந்தால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சார திட்டங்கள் நிறுத்தப்படும், போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

    தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தால் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அறிவித்தார்கள்.

    குறிப்பாக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 2500 ரூபாய் மற்றும் கரும்புக்கு டன்னுக்கு 4000 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் விவசாய நிலங்களில் பல்வேறு பணிகள் நடைபெறுகிறது.

    அதனை தமிழக முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும். ஊஎனவே இறால் பண்ணை களை மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    • ராமநாதபுரத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் 300 கிராம நிா்வாக அலுவலா்கள் பங்கேற்றனா்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த கிராம நிா்வாக அலுவலா்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவா் பேசியதாவது:-

    கிராம நிா்வாக அலுவலா்களிடம் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வது அவசியம். மனுக்கள் மீது உரிய கவனம் செலுத்தவேண்டும். முதியோா் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் மனுக்கள் மீது அக்கறையுடன் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கிராம மக்களிடம் அங்குள்ள பிரச்னைகள் குறித்து கேட்டறிந்து அவற்றைத் தீா்க்க நடவடிக்கை எடுப்பது அவசியம். கிராமத்தில் கொரோனா பரவல் தடுப்பூசி செலுத்தியவா்கள் விவரம், பள்ளிக் கட்டடங்கள் ஆய்வு ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.

    கூட்டத்தில் பங்கேற்ற கிராம நிா்வாக அலுவலா்கள் தங்களது கிராமப் பிரச்னைகள், மக்கள் கோரிக்கை குறித்தும் கலெக்டரிடம் முறையிட்டனா்.

    கூட்டத்தில் 300 கிராம நிா்வாக அலுவலா்கள் பங்கேற்றனா். இதில், மாவட்ட வருவாய் அலுவலா் காமாட்சிகணேசன், கலெக்டர் நோ்முக உதவியாளா் பழனிக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

    • திருஇருதய ஆண்டவர் ஆலய தேர்பவனியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
    • சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே 140 ஆண்டு புகழ் பெற்ற இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் ஆலயம் உள்ளது.

    இங்கு 128-ம் ஆண்டு திருஇருதய தேர்பவனி திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியே ற்றத்துடன் தொடங்கியது. இங்கு மாதம்தோறும் முதல் வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நேற்று காலைகூட்டுதிருப்பலி பூஜை, மாலை திருவிழா திருப்பலி பூஜைகளை மறைமாவட்ட பரிபாலக ஆயர் ஸ்டீபன் அந்தோணி நடத்தினார்.

    இதில் பல்வேறு ஊர்களில் உள்ள அருட்பணியாளர்கள் ஏசுவின் இறை செய்திகளை வாசித்தனர். நிறைவாக ஆலயம் முன் திருஇருதய ஆண்டவர் அழகிய சொரூபம் மின்சார தேரில்அலங்கரிக்கப்பட்டு இடைக்காட்டூர் தெருக்களில் வலம் வந்து திருத்தலத்தை அடைந்தது.

    அதை தொடர்ந்து பக்தர்கள் நன்றி செலுத்தும் திருப்பலியில் கலந்து கொண்டனர். இதில் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இன்று நற்பவனி விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தல பணியாளர் இம்மானுவேல் தாசன் , இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கம் , செல்ஸ் பேரவை உள்ளிட்டோர் செய்து இருந்தனர்.

    ×