search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 234887"

    • சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த நெசவாளர்களுக்கான குறை தீர்க்கும் மையம் அமைக்கப்படவுள்ளது.
    • பல்வேறு திட்டங்களில் நெசவாளர்களை சேர்ப்பது போன்றவற்றை மேம்படுத்தவும், குறைகளை தெரிவிக்க ஏதுவாகவும், கைத்தறி துணை ஆணையரகத்தில் நெசவாளர் குறை தீரக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கைத்தறி நெசவாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்காகவும், நெசவாளர்களின் குறைகளான வேலைவாய்ப்பு, கூலி உயர்வு, கைத்தறி துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களில் நெசவாளர்களை சேர்ப்பது போன்றவற்றை மேம்படுத்தவும், குறைகளை தெரிவிக்க ஏதுவாகவும், கைத்தறி துணை ஆணையரகத்தில் நெசவாளர் குறை தீரக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நெசவாளர் குறை தீர்க்கும் மையத்தில் நெசவாளர்கள் குறைகளை கீழ்காணும் வழிமுறைகளில் தெரிவித்து தீர்வு பெறலாம்.

    https://gdp.tn.gov.in/dhl, என்ற இணையதளத்தின் வாயிலாகவோ wgrcchennai;gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது குறை தீர்க்கும் அலுவலர், கைத்தறி ஆணையரகம், குறளகம் 2-ம் தளம், சென்னை - 104 என்ற முகவரிக்கு குறை தீர்க்கும் அலுவலரை நேரில் அணுகியும் தெரிவிக்கலாம்.

    மேலும், தொலைபேசி எண்:044 - 25340518 (நேரம் அரசு அலுவலக வேலை நாட்களில், காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை) தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சேலத்தில், 11-ந் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
    • சாத்தகிராமன் தலைமையிலும் நிதி ஆப்கே நிகட் என்ற தலைப்பில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.

    சேலம்:

    சேலம் மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையாளர் விஜய் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலம் தளவாய்பட்டியில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்தில் வருகிற 11-ந் தேதி மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் சிவகுமார் தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

    அதே நாளில் ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள மாவட்ட அலுவ–லகத்தில் அமலாக்க அதிகாரி சுப்ரமணியன் தலைமையிலும், கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலகத்தில் அமலாக்க அதிகாரி சாத்தகிராமன் தலைமையிலும் நிதி ஆப்கே நிகட் என்ற தலைப்பில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.

    அன்றைய தினம் காலை 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரையில் சந்தாதாரர்களுக்கும், பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை தொழில் அதிபர்களுக்கும், மாலை 4 மணி முதல் 5 மணி வரை விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுக்கும் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

    எனவே, இந்த கூட்டத்தில் வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைகளை தெரிவிக்க விரும்பும் உறுப்பினர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் குறித்த விவரங்களுடன் தங்களது பெயர், தொழில் மையம், நிறுவன முகவரி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எண், யு.ஏ.எண். எண், டெலிபோன் மற்றும் செல்போன் எண்கள் ஆகிய விவரங்களை வருகிற 8-ந் தேதிக்கு முன்னதாக இந்த அலுவலகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    அதேசமயம் ஈரோடு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலகத்திலும் அல்லது ro.salem@epfindia.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஈரோடு மாவட்டத்தில் ஜூன் மாதத்திற்கான வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 24-ந் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
    • இக்கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஜூன் 2022-ம் மாதத்திற்கான வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் வரும் 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

    அன்றைய தினம் காலை 10 மணிமுதல் 11.ஈரோடு மாவட்டத்தில் ஜூன் 2022-ம் மாதத்திற்கான வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் வரும் 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.30 வரை மனுக்கள் பெறப்படும். 11.30 மணி முதல் 12.30 மணி வரை விவசாய சங்கப்பிரதிநிதிகள் விவசாயம் தொடர்பான தங்களது பகுதி பிரச்சினைகள் குறித்து கருத்துக்கள் தெரிவிக்கலாம்.

    மேலும் மதியம் 12.30 முதல் 1.30 முடிய அலுவலர்களின் விளக்கங்களும் தெரிவிக்கப்பட உள்ளது. இக்கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

    ×