search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழங்குடியினர்"

    • கோக்கால் கிராமத்தில் கோலகலமாக தொடங்கியது.
    • திரளானோர் கலந்து கொண்டனர்.

    ஊட்டி,

    நீலகிரி மலைப்பகுதியில் கோத்தர், தோடர், பணியர், குரும்பர், காட்டுநாயக்கர், இருளர் என 6 இனங்களைச் சேர்ந்த பண்டைய பழங்குடினர் வசித்து வருகின்றனர்.

    கோக்கால் என்பது கோத்தர் குடியிருப்பின் பெயர். இந்தியாவிலேயே சோலூர், திருச்சுக்கடி, கொல்லிமலை, குந்தா கோத்தகிரி, மேல் கூடலூர், கோத்தகிரி, கீழ் கோத்தகிரி என 7 இடங்களில் மட்டுமே இவர்களின் சமுதாயத்தினர் வாழ்ந்து வருகின்றனர்

    எருமை மேய்த்தல், இரும்புப் பொருட்கள் மற்றும் மண்பாண்டங்கள் செய்தல், விவசாயம் ஆகியவை இவர்களின் தொழில். ஆரம்பத்தில் பாரம்பரிய சிறுதானியங்களான ராகி, சாமை, தினை, கம்பு போன்றவற்றை விளைவித்தனர் இப்போது கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு பயிரிட்டு வருகின்றனர்.

    இவர்கள் கடவுள் நம்பிக்கை, பாரம்பரியத்தை விட்டுக் கொடுக்க வில்லை. பெண்கள் மண்டூ செடியை தலையில் சூடிக்கொண்டு, துபிட்டி எனும் வெள்ளை புடவையை அணிந்து கொள்வதும், ஆண்கள் வேட்டி கட்டிக் கொண்டு வராடு என்கிற துணியை போர்த்திக் கொள்வதும்தான் இவர்களின் உடைக் கலாசாரம்.

    ஐனூர், அம்மனூர் தான் இவர்களின் குல தெய்வம். இந்த நிலையில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் 7 கோக்கால்களிலும் ஐனூர், அம்மனூர் கோவில் திருவிழா கோலாகலமாக நடக்கும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா சோலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோக்கால் கிராமத்தில் கோலகலமாக தொடங்கியது.

    பாரம்பரிய சிறப்புடன் தொடங்கிய இந்த திருவிழாவில் திரளான கோத்தர் இன மக்கள் கலந்து கொண்டு தங்களின் பாரம்பரிய உடை அணிந்து ஆடி பாடி திருவிழாவை கொண்டாடினர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர். 

    • விண்ணப்பதாரர் மற்றும் குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின்கீழ் இதுவரை மானியம் ஏதும் பெற்றிருக்க கூடாது.
    • விண்ணப்பதாரர் மற்றும் வணிகத்தை தொடர்வதற்கு முன் விண்ணப்பதாரர் நிறுவனத்திலிருந்து உணவு உரிமத்தை பெற வேண்டும்.

    கடலூர்:

    தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் தொழில் முனைவோர் திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ஆவின் பாலகம் அமைக்க மின் வாகனம் , குளிர்விப்பான் மற்றும் உறைவிப்பான் கொள்முதல் தாட்கோ மானியம் ரூ.90 ஆயிரம் மானியத்துடன் திட்டம் செயல்படுத்த அரசாணையிடப்பட்டுள்ளது. இதில் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். 18 முதல் 65 வயதிற்குள்ளவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் மற்றும் குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின்கீழ் இதுவரை மானியம் ஏதும் பெற்றிருக்க கூடாது. கூடுதல் செலவினத்தை ஈடு செய்யவும் மற்றும் அதிக பட்ச மானியத் தொகை சென்றடைய ஆதிதிராவிட தனிநபர்களுக்கான திட்டத் தொகையில் 30 சதவீதம் விழுக்காடு அல்லது அதிகபட்சமாக 2.25 இலட்சம் மானியம் விடுவிக்கப்படும்.

    ஆவின் பாலகம் அமைக்க தேர்ந்தெடுக்கப்படும் கடையின் இடம் குறைந்த பட்சம் 100 சதுர அடியாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் அருகில் உள்ள மண்டல அலுவலகத்திலிருந்து விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பித்தவுடன் அந்தந்த மண்டல அலுவலகத்தின் பொது மேலாளர் மற்றும் துணை பொது மேலாளர் கடையை மதிப்பீடு செய்து ஒதுக்கீட்டு உத்தரவை வழங்குவார்கள். விண்ணப்பதாரர் மற்றும் வணிகத்தை தொடர்வதற்கு முன் விண்ணப்பதாரர் நிறுவனத்திலிருந்து உணவு உரிமத்தை பெற வேண்டும். ஆவின் பொருட்கள் ஆவின் மூலம் விற்பனை நிலையத்திற்கே நேரடியாக சென்று விநியோகம் செய்யப்படும். அதற்கான பணத்தை உடனடியாக செலுத்த வேண்டும். இத்திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்திக தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என கலெக்டர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • தாட்கோ மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான நபா்கள் பயனடைவா்.
    • குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான வருமான உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது.இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளதால் தாட்கோ மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான நபா்கள் பயனடைவா். எனவே திருப்பூா் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இனத்தைச் சாா்ந்தவா்கள் இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக தமிழ்த்துறை யு.ஜி.சி சிறப்பு ஆய்வு திட்டத்தின் சார்பில் உலக தொல்குடிகள் நாள் விழா கொண்டாடப்பட்டது.
    • விழாவை முன்னிட்டு பராம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் ஓரக்கொம்பு கிராமத்தில் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக தமிழ்த்துறை யு.ஜி.சி சிறப்பு ஆய்வு திட்டத்தின் சார்பில் உலக தொல்குடிகள் நாள் விழா கொண்டாடப்பட்டது. பல்கலைக்கழக பதிவாளர் சிவக்குமார் தலைமை வகித்து பேசியதாவது,

    பளியர், பழங்குடியின மக்கள் பல்வேறு போராட்டங்களை கடந்து வாழ்ந்து வருகின்றனர். நவீன வளர்ச்சிகள் பெருகினாலும் எந்த ஒரு இனமும் தனது பாரம்பரியத்தை இழந்துவிடக்கூடாது. உலகெங்கும் வாழ்கின்ற மக்கள் உடல் பருமன் நோயினால் அவதிப்படுவதை பார்க்க முடிகிறது.

    ஆனால் பளியர் சமூக மக்கள் கடுமையான உழைப்பாளிகளாவும், நடைப்பழக்கம் கொண்டவர்களாகவும் இருப்பதால் அவர்களிடம் உடல் பருமனான ஒருவரைக்கூட பார்க்க முடியவில்லை என்றார்.

    எழுத்தாளர் முத்துநாகு சிறப்புரையாற்றி பேசுகையில்,

    பழங்குடியின மக்களில் பளியர், புழையர், முதுவர் ஆகிய 3 இன மக்கள்தான் சுற்றுச்சூழலை நன்கு அறிந்தவர்களாகவும், தங்களை சுற்றி இருக்கின்ற தாவர இனங்களை அடையாளம் காண்கின்ற மரபு அறிவு உடையவர்களாகவும் உள்ளனர். ஒரு குடும்பத்திற்கு 12 ஏக்கர் நிலம் வரைக்கும் ஒதுக்கீடு செய்யலாம் என வனச்சட்டம் கூறுகிறது. ஆனால் அரசு இன்றுவரை அதனை நடைமுறைப்படுத்தவில்லை. பழங்குடியின மக்கள் மரபானஅறிவினை பாதுகாப்பதிலும், பரப்புவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

    அதேபோல பழங்குடியினருக்கான உரிமைகளை பெறுவதற்காக ஊர்தலைவர் ஒருங்கிணைப்பின் கீழ் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் தாண்டிக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் பங்கேற்று பழங்குடியினருக்கு அரசு சார்பில் வழங்கப்படும் நலத்திட்டங்கள் பற்றி எடுத்து கூறினார்.

    பேராசிரியர் முத்தையா, அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி தலைமையாசிரியர் முருகன், கே.சி.பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜீவா, இளையராஜா, வார்டு உறுப்பினர் மகேஸ்வரி, குழந்தைகள் இல்லச்செயலாளர் ஸ்டான்லி மனோகரன், கொரன்கொம்பு வனக்குழு தலைவர் செல்வராஜ், ஊராட்சி மன்ற குழுச்செயலாளர் முருகேசன், சதாசிவம், எழுத்தாளர் பாரததேவி, பேராசிரியர் ராஜரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் ஊர்தலைவர் சங்கர் நன்றி கூறினார். விழாவை முன்னிட்டு பராம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. பாறைப்பட்டி நல்லூர்காடு, கோரம்கொம்பு, கள்ளக்கிணறு, கருவேலம்பட்டி ஆகிய ஊர்களை சேர்ந்த இளைஞர்களுக்கு பல்கலைக்கழகத்தின் குழல்இசைக்கருவிகள் வழங்கப்பட்டன.

    • பேச்சிப்பாறை ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட கலையரங்கில் காணி இன மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • மலைகள், காடுகளில் பிறந்து ஆற்றுப் படுகைகளில் வளர்ந்து ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மாவட்ட வனத்துறையின் சார்பில் உலக பழங்குடியினர் தினத்தையொட்டி பேச்சிப்பாறை ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட கலையரங்கில் காணி இன மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் நாகராஜன் வரவேற்றார். பழங்குடி யினர் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சுரேஷ் சுவாமியார் காணி, காணிக்காரர் வரலாற்று விளக்கவுரையாற்றினார். மாவட்ட வன அலுவலர் இளையராஜா விழா விளக்க உரையாற்றினார். கடையல் பேரூராட்சி வார்டு உறுப்பினர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

    விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் மனோ தங்கராஜ் மலைவாழ் மக்களுக்கு நில உரிமை ஆணை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    உலகம் முழுவதும் ஆகஸ்டு 9-ந்தேதி உலக பழங்குடியினர் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில்தான் பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்கும், அவர்களது முன்னேற்றத்திற்கும் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 48 காணி பழங்குடி யின மலைவாழ் மக்கள் காட்டு விலங்குகளோடு கூட்டு சேர்ந்து தங்களுடைய வாழ்க்கையினை நடத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டின் மூத்த குடிமக்கள் காணி இன மக்கள். சங்க இலக்கியங்களில் காணி மலைவாழ் மக்கள் குறித்து பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மக்கள் அனைவரையும் உபசரிப்பதில் சிறந்து விளங்குகிறார்கள். மலைகள், காடுகளில் பிறந்து ஆற்றுப் படுகைகளில் வளர்ந்து ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள்.

    பேச்சிப்பாறையில் இருந்துதான் 1989-வது வருடம் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக என்னு டைய போராட்டத்தை முன்னெடுத்தேன் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து தரப்பட்ட மக்களையும் ஒன்றிணைத்து செயல்படக்கூடிய அரசாக இருக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி புரிந்து வருகிறார். சாதி என்ற விலங்கை அறுத்து எறிந்திட நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். கடினமான பேச்சாக இருந்தாலும் வெறுப்பாக பேசக்கூடாது. வெறுப்பு அரசியல் செய்வது நாகரீகத்திற்கும், ஆன்மீகத்திற்கும் எதிரான தாக அமைந்திவிடக் கூடாது என்பதை தெரிவித்துக் கொள்வதோடு நாம் அனை வரும் வனத்தினையும், இயற்கையினையும், நமது நாட்டினையும் பாதுகாத்திட இத்தருணத்தில் உறுதி ஏற்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் சப்-கலெக்டர் அலர்மேல் மங்கை, வன பாதுகாவலர் சிவகுமார், பயிற்சி உதவி வன பாதுகாவலர் மனாசிர் ஹலிமா, திருவட்டார் தாசில்தார் சதீஷ் சந்திரன், ஆதிதிராவிடர் நலத்துறை சிறப்பு தாசில்தார் கோலப்பன், தோட்டக் கலைத்துறை அலுவர் ஷீலா ஜாண், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அலுவலர் ஜாண் ஜெகத் பிரைட், தி.மு.க. திருவட்டார் வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் ஜாண்சன், விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் அலாவுதீன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அணி அமைப்பாளர் ஜெஸ்டின் பால்ராஜ், மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் ஜே.எம். ராஜா, தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் பெர்ஜின், ஒன்றிய துணை செயலாளர் ஜோஸ் எட்வர்ட் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் பொதுத்தேர்வில் ஆதிதிராவிடர், நலத்துறை பள்ளிகள் 82.21 சதவீதம், பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள் 86.89 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் சரிவுக்கான காரணத்தை ஆராய குழு அமைத்து அதனை சரிசெய்ய முயல வேண்டும்.

    ஈரோடு:

    தமிழகத்தில் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. ஈரோட்டில் பிளஸ் - 2 பொதுத் தேர்வில் 95.72 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதேபோல் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 91.11 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

    இதில் ஆதிதிராவிடர், நலத்துறை பள்ளிகள் 82.21 சதவீதம், பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள் 86.89 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிற துறைகளை ஒப்பிடுகையில் மிகவும் பின்தங்கிய நிலையில் தேர்ச்சி விகிதம் உள்ளது.

    இதுகுறித்து பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் நடராஜ் கூறியதாவது:

    ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் தேர்வு நடந்த 5 பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் 10-ம் வகுப்பில் ஆசனூர்-74 சதவீதம், பர்கூர்-80 சதவீதம், கெத்தேசால்-75 சதவீதம், தலமலை-44 சதவீதம், பிளஸ்-2 தேர்வில் ஆசனூர்-68 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இந்த சரிவுக்கான முக்கிய காரணமாக ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதும், பூர்த்தி செய்யாததும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. பர்கூர் மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் பிளஸ்-2 வரை 418 மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். 418 பேருக்கு ஒரு தமிழாசிரியர், ஒரு ஆங்கில ஆசிரியர் உள்ளனர்.

    இது குறித்து கேட்டால் இந்த பள்ளிகள் பள்ளிக் கல்வித்துறையில் வருவதில்லை வேறு துறைகள் இருக்கின்றன என்று சொல்கிறார்கள். ஆனால் இந்த பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை தான் தேர்வு நடத்தி முடிவுகளை வெளியிடுகிறது.

    பள்ளி கல்வித் துறையில் காலிப்பணியிடங்களில் 95 சதவீதத்தை நிரப்பி விட்டு மீதி ஆசிரியர்கள் இருந்தால் இது போன்ற பிற துறை பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். இதுபோன்ற பள்ளிகளையும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வந்து ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    தற்போது பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் சரிவுக்கான காரணத்தை ஆராய குழு அமைத்து அதனை சரிசெய்ய முயல வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அந்தியூர் அடுத்த பர்கூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலை ப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
    • தேசிய மாணவர் படை (என்சிசி)மாணவ-மாணவிகள் பள்ளியில் தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் தலைமையில் யோகா சனம் செய்தனர்.

    அந்தியூர்:

    நாடு முழுவதும் யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பிரதமர் மோடி பெங்களூரில் நடக்கும் விழாவில் கலந்து கொண்டு யோகா செய்கிறார். இதையடுத்து பள்ளி மற்றும் பல்வேறு பகுதிகளிலும் யோகா நிகழ்ச்சி நடந்து வருகிறது.

    இதேபோல் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலை ப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி தேசிய மாணவர் படை (என்சிசி)மாணவ-மாணவிகள் பள்ளியில் தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் தலைமையில் யோகா சனம் செய்தனர்.

    நிகழ்ச்சியை தேசிய மாணவர் படை அலுவலர் ராஜேஷ்குமார் ஒருங்கி ணைந்து வழி நடத்தினார். இதில் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×