search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெயிலர்"

    • நடிகர் ரஜினிகாந்த் தான் நடித்த படம் வெளியாகும் முன்பு இமயமலைக்கு ஆன்மீக யாத்திரை மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
    • அண்ணாத்த படம் தொடங்குவதற்கு முன்பு கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ரஜினிகாந்த் திடீரென இமயமலைக்கு சென்றார்.

    சென்னை விமான நிலையத்தில் இன்று காலை ரஜினிகாந்த் வி.ஐ.பி.க்கள் செல்லும் வழியில் போலீஸ் பாதுகாப்புடன் சென்றார்.

    அப்போது அவருக்கு முன்னால் வரிசையில் பலர் நின்று கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் போலீசார் ரஜினியிடம் முன்னால் சென்று விடலாம் என கூறி அழைத்துச் சென்றனர். அப்போது ரஜினி, வரிசையில் நிற்பவர்களை பார்த்து "ரொம்ப நேரமா நிற்பீங்க... சாரி" என கூறி விட்டு சென்றார்.

    இதையடுத்து அங்கு நின்றவர்கள் பரவாயில்லை என்று கூறி புன்னகைத்து ரஜினியை அனுப்பி வைத்தனர்.

    • பாபாஜி குகையில் தியானம் செய்வது தனக்கு மிகுந்த மன நிறைவையும் நிம்மதியையும் தருவதாக ரஜினிகாந்த் பலமுறை தெரிவித்துள்ளார்.
    • பயணத்தின் போது தனக்கு உறுதுணையாக இருப்பதற்காக உதவியாளர் ஒருவரை ரஜினிகாந்த் அழைத்துச் சென்றுள்ளார்.

    சென்னை:

    சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தான் நடித்த படம் வெளியாகும் முன்பு இமயமலைக்கு ஆன்மீக யாத்திரை மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

    ஆன்மீகவாதிகளுடன் அவருக்கு நட்பு அதிகரித்த பிறகு அவரிடம் இந்த பழக்கம் உருவானது. கொரோனா பரவல் மற்றும் தனது உடல்நிலை காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக வெளியிடங்களுக்கு செல்வதை ரஜினி தவிர்த்து வந்தார். இமயமலை பயணத்தையும் அவர் ஒத்தி வைத்திருந்தார்.

    "அண்ணாத்த" படம் தொடங்குவதற்கு முன்பு கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ரஜினிகாந்த் திடீரென இமயமலைக்கு சென்றார். அந்த பயணம் குறுகிய கால ஆன்மீக யாத்திரையாக இருந்தது.

    அவர் நடித்துள்ள 'ஜெயிலர்' திரைப்படம் நாளை (வியாழக்கிழமை) உலகம் முழுக்க வெளியாக உள்ளது. இந்த படம் ரஜனி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. இதையடுத்து மீண்டும் இமயமலை பயணத்தை தொடங்க ரஜினி முடிவு செய்தார்.

    அதன்படி இன்று (புதன்கிழமை) நடிகர் ரஜினிகாந்த் இமயமலை பயணத்தை தொடங்கினார். இன்று காலை 8 மணிக்கு அவர் தனது வீட்டில் இருந்து விமான நிலையத்துக்கு காரில் புறப்பட்டு சென்றார்.

    விமான நிலையத்தில் அவரை நிருபர்கள் பேட்டி கண்டனர். ஆனால் அவர் விரிவாக பதில் அளிக்க மறுத்து விட்டார். ரஜினிகாந்த் சென்னையில் இருந்து விமானத்தில் பெங்களூரு சென்றார். பெங்களூரில் இருந்து அவர் இமயமலைக்கு பயணமாகிறார்.

    இமயமலையில் ஒரு மாதம் வரையில் தங்கி இருக்க ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளார். ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்ட ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்று ஓய்வு எடுப்பதையும் அங்கு சாதாரண மனிதர்களை போல் காவி வேட்டியுடன் சுற்றி திரிவதையும் அதிகம் விரும்புவார்.

    அந்த வகையில் தற்போது இமயமலை பயணத்தை மேற்கொண்டிருக்கும் ரஜினிகாந்த் அங்கு எப்போதும்தான் தங்கும் விடுதிக்கு சென்று ஓய்வெடுக்கிறார். இந்த விடுதி ரஜினியால் கட்டப்பட்டதாகும்.

    ரஜினிகாந்த் தனது இமயமலை சுற்றுப்பயணத்தின் போது சித்தர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். தனது ஆன்மீக குருவான பாபாஜி குகைக்கு சென்று வழிபடவும் முடிவு செய்துள்ளார். மேலும் அவர் ரிஷிகேஷ், கேதர்நாத் உள்ளிட்ட இடங்களுக்கும் சென்று வழிபாடுகள் செய்ய திட்டமிட்டுள்ளார்.

    இமயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டிருந்த நேரங்களில் எல்லாம் ரஜினிகாந்த் நினைத்த இடங்களுக்கு எப்போதும் சென்று சராசரி மனிதர்களை போல வாழ்வதை வழக்கமாக வைத்திருந்தார். அந்த வகையில் தற்போதைய சுற்றுப்பயணத்தையும் மன அமைதியுடன் ரஜினி மேற்கொள்ள உள்ளார்.

    இதற்கு முன்பு ரஜினிகாந்த் இமயமலை சென்றிருந்த போது குதிரை சவாரியில் ஈடுபட்டிருந்தார். டீ கடையில் நின்று அங்கிருந்தவர்களுடன் பேசிக்கொண்டே டீ குடித்தார். இந்த புகைப்படங்கள் எல்லாம் அப்போது வெளியாகி வைரலாக பரவியது. அவரது எளிமையை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தன. தற்போதைய இமயமலை சுற்றுப் பயணத்தின் போதும் ரஜினிகாந்த் அது போன்ற ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கு முடிவு செய்துள்ளார்.

    ரஜினிகாந்தை பொறுத்த வரையில் கடவுள் மீது அதிகம் பக்தி கொண்டவர். தொடக்கத்தில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செல்வதை அதிகம் விரும்பினார். பின்னர் ராகவேந்திரா சுவாமிகள் மீது அவருக்கு பக்தி ஏற்பட்டது. ராகவேந்திரர் வேடத்தில் நடித்த அவர் ராகவேந்திரருக்கு ஆலயங்கள் கட்டுவதற்கும் பலருக்கு உதவி உள்ளார்.

    இந்த நிலையில் இமயமலையில் இன்றும் உயிரோடு இருப்பதாக கருதப்படும் பாபாஜி பற்றி ரஜினிகாந்துக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பாபாஜி பற்றி மேலும் அறிந்து கொள்ள அவர் இமயமலைக்கு அழைத்து செல்லப்பட்டார். அதன் பிறகு பாபாஜியை தனது ஆன்மீக வழிகாட்டியாக ரஜினி ஏற்றுக் கொண்டார்.

    இமயமலை பயணத்தின் போது அங்குள்ள பாபாஜி குகைக்கு சென்று தினமும் தியானம் செய்ய ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார். இமயமலையில் உள்ள சாமியார்களையும் ரஜினி சந்திக்கிறார்.

    பாபாஜி குகையில் தியானம் செய்வது தனக்கு மிகுந்த மன நிறைவையும் நிம்மதியையும் தருவதாக ரஜினிகாந்த் பலமுறை தெரிவித்துள்ளார். தனக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் இந்த தியானமும் ஒன்று எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

    ஒரு தடவை அவர் மனைவி லதாவுடன் சென்று பாபாஜி குகையில் தியானம் செய்து இருக்கிறார். மீண்டும் அதுபோல அனுபவத்தை பெறவே தனது தற்போதைய இமயமலை பயணத்தையும் அமைத்துக் கொள்ள ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார்.

    இமயமலையில் தியானம், மூச்சுப்பயிற்சி ஆகியவற்றை தினமும் மேற்கொள்ள ரஜினி முடிவு செய்திருக்கிறார்.

    இந்த பயணத்தின் போது தனக்கு உறுதுணையாக இருப்பதற்காக உதவியாளர் ஒருவரை ரஜினிகாந்த் அழைத்துச் சென்றுள்ளார். கடந்த முறை நண்பர் ஒருவருடன் இமயமலை பயணத்தை ரஜினி மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இமயமலைக்கு புறப்பட்டு சென்ற ரஜினிகாந்த் இன்று அளித்த பேட்டியில் "ஜெயிலர்" படம் நன்றாக வந்துள்ளது. பார்த்து விட்டு கருத்துக்களை சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டார். ஒரு மாத கால இமயமலை பயணம் முடிந்த பின்னர் அடுத்த மாதம் ரஜினிகாந்த் சென்னை திரும்புவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    • நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் நாளை மறுதினம் (வியாழக்கிழமை) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த், தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு பயணிப்பது வழக்கம். உடல்நலக்குறைவு காரணமாக 2010-ம் ஆண்டுக்கு பிறகு இமயமலை பயணத்தை அவர் தவிர்த்து வந்தார். 2018-ம் ஆண்டில் 'காலா', '2.0' படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு சென்றார். அதன்பிறகு கொரோனா சூழல் காரணமாக பயணத்தை தவிர்த்தார்.



    இந்நிலையில் ரஜினிகாந்த் மீண்டும் இமயமலை பயணத்தை கையில் எடுத்திருக்கிறார். நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர்' திரைப்படம், நாளை மறுதினம் (வியாழக்கிழமை) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை முழுமையாக பார்த்துவிட்டு ரஜினிகாந்த் இமயமலை புறப்பட உள்ளார். படத்தின் முதல் காப்பியை ரஜினிகாந்த் இன்று (செவ்வாய்க்கிழமை) பார்த்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் இன்று இரவோ அல்லது நாளை காலையோ அவர் இமயமலை நோக்கி புறப்படுவார் என்று கூறப்படுகிறது.

    • ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இந்நிலையில், நடிகர் தனுஷ், ரஜினியின் ரசிகன் என்பதை நிரூபிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், 'இது ஜெயிலர் வாரம்' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலர் 'முதல்ல ரஜினி ரசிகன்.. அப்பறம்தான் எல்லாமே' என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.


    • நடிகை தமன்னா ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. அதன்பின்னர் வியாபாரி, அயன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். பாலிவுட்டிலும் அதிகமான படங்களில் நடித்து வரும் தமன்னா, வெப் சீரிசிலும் நடித்துள்ளார். ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படத்தில் தமன்னா நடித்துள்ளார். இப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    தமன்னாவை பார்க்க பாய்ந்த ரசிகர்

    இந்நிலையில், கேரள மாநிலம் கொல்லத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமன்னா, விழா அரங்கை விட்டு வெளியில் வந்த போது திடீரென ரசிகர் ஒருவர் தமன்னாவை நெருங்கினார். உடனே உடனிருந்த பாதுகாவலர்கள் அந்த ரசிகரைத் தடுத்த நிறுத்தினர். அப்போது தமன்னா தனது பாதுகாவலர்களுக்கு அறிவுரை கூறி விலகச் செய்து, தன் ரசிகரின் ஆசைப்படி அவருடன் இணைந்து செல்பி எடுத்துக் கொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’ஜெயிலர்’.
    • இப்படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'ஜெயிலர்' திரைப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.


    ஜெயிலர் போஸ்டர்

    இந்நிலையில், 'ஜெயிலர்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ரஜினியும் சிவராஜ்குமாரும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளும் இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இதற்கு முன்பு ரஜினியும் மோகன் லாலும் இடம்பெற்றிருந்த போஸ்டரை படக்குழு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.


    • இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜெயிலர்'.
    • இப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.


    'ஜெயிலர்' திரைப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ஷோகேஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இதையடுத்து இப்படத்தின் 'ரத்தமாரே' பாடல் நேற்று வெளியாகி சமூக வலைதளத்தில் 1.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.


    இந்நிலையில், 'ரத்தமாரே' பாடலை எழுதிய இயக்குனர் விக்னேஷ் சிவன் இப்பாடல் குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக முதல் பாடலை எழுதியுள்ளேன். இதுவே என் குழந்தைகள் உயிர் மற்றும் உலகுக்கான முதல் பாடலாகவும் அமைந்துள்ளது. இது போன்ற தருணங்களுக்காக தான் வாழ்கிறோம். இயக்குனர் நெல்சன் மற்றும் அனிருத்திற்கு நன்றி " என்று குறிப்பிட்டுள்ளார்.


    • நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’.
    • இப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'ஜெயிலர்' திரைப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.


    ஜெயிலர் போஸ்டர்

    இந்நிலையில், 'ஜெயிலர்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மோகன்லாலும் ரஜினியும் நேருக்கு நேர் அமர்ந்திருக்கும் இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி லைக்குகளை குவித்து வருகின்றனர். மேலும், இந்த காம்போவ பாக்கதான காத்திருக்கோம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.


    • நடிகர் ரஜினி தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’.
    • இப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'ஜெயிலர்' படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'காவாலா' பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    'ஜெயிலர்' திரைப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


    • ரஜினி தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.


    'ஜெயிலர்' திரைப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ஷோகேஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'ஜெயிலர்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ரத்தமாரே' பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளது.


    • நெல்சன் இயக்கத்தில் ரஜினி ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.

    நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் யோகிபாபு, வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் நடிக்கின்றனர். இப்படம் வருகிற 10-ஆம் தேதிதிரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இதனை தொடர்ந்து ரஜினியின் 170-வது படத்தை 'ஜெய் பீம்' பட இயக்குனர் டி.ஜே. ஞானவேல் இயக்கவுள்ளார். லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்காலிகமாக தலைவர் 170 என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் விக்ரம், அர்ஜூன் என பலர் வில்லனாக நடிக்கவுள்ளதாக செய்திகள் பரவி வந்தது.


    நானி -ரஜினி

    இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ரஜினியின் 170-வது படத்தில் நடிகர் நானி சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகவும் இவரின் காட்சிகள் 20 நிமிடம் திரையில் இடம்பெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜெயிலர் திரைப்படத்தில் பிரபலங்கள் பலர் இணைந்துள்ள நிலையில் இந்த படத்திலும் முன்னணி நடிகர்கள் பலர் நடிக்கவுள்ளதாக வெளியாகும் தகவல்களால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

    • ரஜினி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜெயிலர்'.
    • இப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

    இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    ஜெயிலர்

    இப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதையடுத்து இதே தலைப்பில் இதே நாளில் மலையாள 'ஜெயிலர்'படமும் வெளியாகவுள்ளது. அதாவது, தமிழில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதும், இதே தலைப்பில் தான் படம் இயக்கியுள்ளதாகவும், ரஜினியின் பட தலைப்பை மாற்ற வேண்டும் எனவும் மலையாள சினிமா சேம்பரில் இயக்குனர் சக்கீர் மடத்தில் கோரிக்கை வைத்திருந்தார். எனினும், தலைப்பு மாற்றப்படாத நிலையில், சக்கீர் மடத்தில் இயக்கத்தில் தியான் சீனிவாசன் நடித்துள்ள மலையாள 'ஜெயிலர்' படமும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.


    சக்கீர் மடத்தில் 

    இதையடுத்து ஜெயிலர்' படத்துக்குக் கேரளாவில் அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மலையாள ஜெயிலர் திரைப்படத்திற்கு திரையரங்குகள் கேட்டும் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இயக்குனர் சக்கீர் மடத்தில், கேரள பிலிம் சேம்பர் அலுவலக வாயிலில் தனியாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும், கேரளாவில் தமிழ் சினிமாவின் ஆதிக்கத்தால், மலையாள சினிமா மூச்சுத் திணறுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    ×