என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கடைமடை பகுதி"
- சம்பா நெல் சாகுபடி கால்வாய் வழியாக கடந்த 19-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
- மங்களப்பட்டி கிராமம் மற்றும் அஞ்சூர் கிராம ஊராட்சி பகுதியை சென்றடைய 9 நாட்கள் ஆகும்
காங்கயம் :
பவானிசாகர் அணையில் இருந்து நஞ்சை சம்பா நெல் சாகுபடி கால்வாய் வழியாக கடந்த 19-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால் கடைமடை பகுதியான மங்களப்பட்டி கிராமம் மற்றும் அஞ்சூர் கிராம ஊராட்சி பகுதியை சென்றடைய 9 நாட்கள் ஆகும். ஆனால் இந்த ஆண்டு பாசன பிரதான கால்வாய் பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரப்பட்டதால் தண்ணீர் வந்து சேர்ந்தது.
இதனை தொடர்ந்து கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள், கடைமடை விவசாயிகள் மங்களப்பட்டி கிராமத்திற்கு வந்து சர்க்கரை பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். பின்னர் தண்ணீரில் மலர் தூவி வணங்கினர்.
இதுபற்றி கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் கூறியதாவது:-
பவானிசாகர் அணை கட்டப்பட்ட கடந்த 66 ஆண்டுகளில் கீழ் பவானி பாசன கால்வாய் தூர்வாரப்படாமல் ஆண்டுதோறும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு உத்தரவின்படி திருப்பூர், ஈரோடு மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் குழுவினர் ஒருங்கிணைந்து கீழ்பவானி பாசன கால்வாயை தூர்வாரி இருந்தனர்.
கீழ்பவானி பாசன கால்வாயில் தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் காலநிலை கோடை வெயில் காரணமாக குறைந்து இருந்த கிணறுகள், ஆழ் குழாய் கிணறுகளின் நீர்மட்டம் விரைவில் கிடுகிடுவென உயர்ந்து பொதுமக்களின் குடிநீர் ஆதாரம் பாதுகாக்கப்படும். எனவே பவானிசாகர் அணையில் இருந்து நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட்ட தமிழ்நாடு அரசுக்கு கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் மற்றும் விவசாயிகள் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- வெள்ளகோயில் வரை சுமார் 164 கிலோ மீட்டர் தூரம் உள்ளது.
- பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை :
திருமூர்த்தி அணையிலிருந்து பி.ஏ.பி. வாய்க்கால் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு பாசன நீர் வழங்கப்படுகிறது. நான்கு மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது.
அணையில் இருந்து துவங்கும் பி.ஏ.பி., பிரதான வாய்க்கால் வெள்ளகோயில் வரை சுமார் 164 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இதில் பல இடங்களில் வாய்க்காலில் செடி கொடிகள் படர்ந்தும் ஸ்லாப் கற்கள் பெயர்ந்தும் காணப்படுகிறது. பெரிய பாப்பனூத்து, சின்னபாப்பனூத்து பகுதியில் வாய்க்காலே தெரியாத அளவுக்கு செடிகளும் மரங்களும் வளர்ந்து மூடி உள்ளன. இதனால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்ல முடியாமல் தடைபடுகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மரங்களை வெட்டி அகற்றி எளிதாக தண்ணீர் செல்ல வசதி செய்ய வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்