search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணபதி"

    • விநாயகரை வழிபட்டு இம்மை, மறுமை துன்பங்கள் நீங்கி பக்தர்கள் இன்புறுவர்.
    • ஸ்ரீபால விநாயகர் இக்கோவிலில் கண் சுரம் தீர்த்த விநாயகராக விளங்கி அருள்பாலித்து வருகிறார்.

    கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் (ஸ்ரீ ராகு தலம்) நாகநாத சுவாமி கோவில் உள்ளது.

    இக்கோவிலில் தவக் கோலத்தில் தனிக்கோவில் கொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீ கிரி குஜாம்பிகைக்கு இருபுறமும் திருமகளும் கலைமகளும் பணி செய்ய நவசக்திகள் புடைசூழ பிந்து மத்தியில் நின்று தலம் இயற்றும் அம்பிகையின் தவச்சாலை காவலர்களாக ஸ்ரீ பாலவிநாயகர், ஸ்ரீபால சுப்பிரமணியர், ஸ்ரீபால பைரவர், ஸ்ரீபால சாஸ்தா ஆகிய 4 பேரும் உள்ளனர்.

    இவர்களில் ஸ்ரீபால விநாயகர் இக்கோவிலில் கண் சுரம் தீர்த்த விநாயகராக விளங்கி அருள்பாலித்து வருகிறார்.

    இவர் தன்னை வழிபடும் பக்தர்களின் உடல் நோயாகிய சுரத்தை தீர்த்து அருள்புரியும் மூர்த்தியாவார். இவ்விநாயகரை செவ்வாய், வெள்ளி, சதுர்த்தி ஆகிய நாட்களில் வணங்கி அபிஷேக ஆராதனை செய்து மிளகு நீர், மிளகு அன்னம், நீவேதித்து பிரசாதம் பெற்று உண்டு வந்தால் தீராத சுரம் தீர்ந்து நலம் பெறுவர் இடர்கடி கணபதியாக விளங்கும் இவ்விநாயகரை வழிபட்டு இம்மை, மறுமை துன்பங்கள் நீங்கி பக்தர்கள் இன்புறுவர்.

    • கணபதி காந்தி மாநகர் பகுதியில் உள்ள தீயணைப்புத் துறையில் தீயணைப்பு வீரராக பணிபுரிந்து வருகிறார்.
    • 2 வருடங்களுக்கு முன்பு தஞ்சாவூரை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுடன் பேஸ்புக் மூலமாக பழக்கம் ஏற்பட்டது

    கோவை :

    சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்தவர் கிருபாகரன்(வயது26). இவர் கணபதி காந்தி மாநகர் பகுதியில் உள்ள தீயணைப்புத் துறையில் தீயணைப்பு வீரராக பணிபுரிந்து வருகிறார்.

    இவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தஞ்சாவூரை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுடன் பேஸ்புக் மூலமாக பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் நட்பாக பழகி வந்தனர். நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போன் மூலமாக பேசியும் காதலை வளர்த்து வந்தனர்.

    அப்போது இளம்பெண் தனது காதலனிடம் தன்னுடைய பெற்றோர் இறந்து விட்டதாகவும், உறவினர் யாரும் இல்லை என்று கூறினார். இதனை தொடர்ந்து 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கோவை காந்திமா நகரில் உள்ள குடியிருப்பில் கணவன், மனைவி இருவரும் வசித்து வந்தனர்.

    கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி சிறு சிறு தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது. அப்போதெல்லாம் இளம்பெண் தனது கணவரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு சென்றார். இதுபோல் ஏற்கனவே 2 முறை அவர் வீட்டை விட்டு சென்றுள்ளார். கிருபாகரன் தஞ்சாவூர் சென்று அனிதாவிடம் பேசி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் இளம்பெண் கர்ப்பம் அடைந்தார். தற்போது அவர் 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். சம்பவத்தன்று கிருபாகரன் பணிக்கு சென்றார். அப்போது வீட்டில் இருந்த அவரது மனைவி மீண்டும் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தார். பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிய கிருபாகரன் தனது மனைவி வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தில் தேடினார்.

    அப்போது அவரது செல்போன் எண்ணுக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர் உனது மனைவியை பிரசவத்திற்காக தஞ்சாவூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளோம். அவருக்கு குழந்தை பிறந்துள்ளது என கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

    உடனடியாக தஞ்சாவூருக்கு சென்ற கிருபாகரன் அந்த நபர் கூறிய ஆஸ்பத்திரிக்கு சென்று தனது மனைவியை தேடினார். ஆனால் அவர் அங்கு இல்லை.

    இதுகுறித்து அவர் காணாமல் போன தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறு சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கர்ப்பிணி பெண்ணை தேடி வருகிறார்கள்.

    • கும்பகோணத்தில் உள்ள விநாயகருக்கு 'கரும்பாயிரம் கொண்ட விநாயகர்' என்று பெயர்.
    • திருநெல்வேலி நகரில் 'எண்ணாயிரம் பிள்ளையார்' எனும் பெயரில் அருள்பாலிக்கிறார்

    மூலமுதற் கடவுளாக வணங்கப்படுபவர், விநாயகர். இவரை வணங்கிவிட்டு தான் எந்த காரியத்தையும் செய்ய வேண்டும் என்பது ஆன்மிக சான்றோர்களின் கருத்து. முன்னுரிமை அளித்து வணங்கப்படும் விநாயகர், பலவித பெயர்களில் அருள்புரிகிறார். அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.

    ஓங்கார கணபதி

    காஞ்சிபுரத்தில் தேவாரம் பாடல் பெற்ற திருத்தலங்களுள் ஒன்று, ஓணேஸ்வரர் கோவில். இது காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஓணகாந்தன் தளி என்ற இடத்தில் அமைந்துள்ளது. சுந்தரர் இத்தல இறைவனிடம் பதிகம் பாடி, பொன் பொருளை பெற்றதாக தல வரலாறு சொல்கிறது. இங்கு 'வயிறு தாரி பிள்ளையார்' என்ற பெயரில் விநாயகர் வீற்றிருக்கிறார். இது தவிர 'ஓங்கார கணபதி' என்ற பெயரிலும் விநாயகர் அருள்கிறார். இந்த விநாயகரின் மீது காதை வைத்துக் கேட்டால், 'ஓம்' என்ற ஒலி கேட்பதாக சொல்கிறார்கள்.

    ஞானசம்பந்த விநாயகர்

    சமயக்குரவர்களில் ஒருவராகவும், தேவாரப் பாடல் பாடியவர்களில் முக்கியமானவராகவும் போற்றப்படுபவர் திருஞானசம்பந்தர். இவர் தேரெழுந்தூர் திருத்தலம் சென்றபோது, அங்கு சிவன் கோவில் எது?, திருமால் கோவில் எது? என்று தெரியாமல் திகைத்து நின்றார். அப்போது அங்கே சாலையில் அருகில் இருந்த விநாயகர், 'அதோ ஈஸ்வரன் கோவில்' என்று கிழக்கு திசையை காட்டியருளினார். அன்று முதல் அந்த சாலை விநாயகர், 'ஞான சம்பந்த விநாயகர்' என்று பெயர் பெற்றார்.

    நாலாயிரத்து ஒரு விநாயகர்

    ஒரு முறை 4 ஆயிரம் முனிவர்கள், அஸ்வமேத யாகம் செய்தனர். அவர்கள் விநாயகரை வழிபட மறந்ததால், யாகம் நடத்துவதற்கான மந்திரம் மறந்து யாகம் தடைபட்டது. பின்னர் நாரதர் வாக்குப்படி, முனிவர்கள் விநாயகரை வழிபட்ட பிறகு யாகம் பூர்த்தியானது. அதில் விநாயகரும் கலந்துகொண்டார். இவர் நாலாயிரத்து ஒரு விநாயகர் என்ற பெயரில், சீர்காழிக்கு கிழக்கே 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநாங்கூர் செல்லும் வழியில் திருமணிக்கூடம் வைணவ திருப்பதியில் உள்ள சுயம்பு மூர்த்தியாக வீற்றிருந்து அருள்கிறார். இவருக்கு செய்யப்படும் அபிஷேக நீர், முழுமையாக விநாயகர் சிலைக்குள் உறிஞ்சப்படுகிறது.

    ஆயிரமும் விநாயகரும்

    கும்பகோணத்தில் உள்ள விநாயகருக்கு 'கரும்பாயிரம் கொண்ட விநாயகர்' என்று பெயர். அதே போல் திருவண்ணாமலை ஆலயச் சுவரில் வீற்றிருக்கும் ஒரு ஜான் உயரமே கொண்ட விநாயகருக்கு 'ஆயிரம் யானை திரை கொண்ட விநாயகர்' என்றும், திருநெல்வேலி நகரில் 'எண்ணாயிரம் பிள்ளையார்' என்றும், ஆறுமுகமங்கலம், கினாக்குளம் ஆகிய ஊர்களில் 'ஆயிரத்தெண் விநாயகர்' எனும் பெயர்களிலும் அருள்பாலிக்கிறார்.

    ×