search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 235262"

    • என்னுடைய ஆன்மீகத்தில் உணவு, உடைக்கு கட்டுப்பாடு கிடையாது.
    • ஆன்மீகத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகவே பிறவி எடுத்துள்ளேன்.

    சென்னை:

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு அன்னபூரணி அம்மாள் என்ற பெண் சாமியார் பரபரப்பாக பேசப்பட்டார்.

    ஆன்மீக சொற்பொழிவு மூலமாக சர்ச்சையில் சிக்கிய அன்னபூரணி அம்மாளுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பின.

    இந்த நிலையில் அன்னபூரணி அம்மாள் திருவண்ணாமலையில் புதிய ஆசிரமம் அமைத்து அவரை தேடி செல்லும் பக்தர்களுக்கு ஆன்மீகத்தை உணர வைத்து வருகிறார்.

    திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அருகே ராஜாதோப்பு நெடுஞ்சாலையை தாண்டி ஊரை கடந்து சென்றால் தாமரைக்குளத்தின் எதிரே தென்னை ஓலைகளால் ஆசிரம குடில் அமைக்கப்பட்டுள்ளது.

    அந்த குடிலில் உள்ள ஆஸ்தான இருக்கையில் இருந்தபடி அவர் ஆன்மீகம் போதிக்கிறார். தற்போது அன்னபூரணி அம்மாள் 'டிஜிட்டல்' முறையிலும் ஆன்மீக தீட்சை அளிக்கிறார். இதற்காக ஒரு போன் அழைப்புக்கு ரூ.20 ஆயிரம் கட்டணம் வசூலிக்கிறார்.

    ஆன்லைனில் அவரது வங்கி கணக்குக்கு முன் கூட்டியே கட்டணம் செலுத்தினால் அவரிடம் மனம் விட்டு பேசி ஆன்மீக தீட்சை பெறலாம்.

    ஆன்மீகம் தொடர்பாக அன்னபூரணி அம்மாள் கூறியதாவது:-

    நான் சக்தியின் வெளிப்பாடு. எல்லோருக்கும் இறைதன்மையை உணர வைப்பதற்காக நான் இங்கு வந்திருக்கிறேன். என்னை தேடி வருகிறவர்களின் நோய்களை சரி செய்கிறேன். பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடிய தன்மையை அவர்களுக்கு கொடுக்கிறேன். என்னுடைய கடந்த கால தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்வதால் யாருக்கும் எந்த பயனும் கிடையாது. அது பற்றி நான் சொன்னால் தவறாக சித்தரிக்கிறார்கள்.

    என்னுடைய ஆன்மீகத்தில் உணவு, உடைக்கு கட்டுப்பாடு கிடையாது. காவி உடை கட்டிக்கொண் டால் எல்லாவற்றையும் மாற்றி விட முடியாது. ஆசிரமம் இருக்கும் இடம் எனக்கு இறைவனால் உணர்த்தப்பட்டது. நான் யாரையும் ஏமாற்றவில்லை. எந்த ஒளிவுமறைவும் என்னிடம் கிடையாது. என்னை பிடிக்காதவர்கள் தவறான வதந்திகளை பரப்பி வருகிறார்கள். என் மீதான தவறான பார்வைகளை உடைத்தெறிவேன்.

    இது ஒரு ஆணாதிக்க சமூகம். ஆன்மீகத்தில் ஒரு பெண் வந்து விடக்கூடாது என்று நினைக்கிறார்கள். என்னை பிடிக்காதவர்கள் ஒதுங்கி போய் விடுங்கள். என்னை தொந்தரவு செய்யாதீர்கள். நான் மதங்களுக்கு அப்பாற்பட்டவள். எல்லோருமே எனக்கு குழந்தைகள்தான். எனக்குள் இறை சக்தி செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. ஆன்மீகத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகவே பிறவி எடுத்துள்ளேன்.

    என்னுடைய தீட்சையை நம்புகிறவர்களுக்கு போன் மூலம் எல்லாம் பலிக்கிறது. போனில் தீட்சை கொடுக்கும்போது என்னிடம் இருக்கும் சக்தி பக்தர்களுக்கு செல்கிறது. என்னை உணருபவர்களுக்கு இந்த உண்மைகள் தெரியும். நான் இந்த ஆசிரமத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறேன். நாளை என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்வதில்லை. அது தானாகவே நடக்கும்.

    எனது கணவர் அரசுவும் நானும் ஒன்றாக இணைந்த பிறகுதான் எனக்குள் இறை சக்தி வெளிப்பட்டது. அவரது உடலுக்குதான் மறைவு. உயிருக்கு மறைவு இல்லை. அரசு இப்போதும் எனது உடலில்தான் கலந்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நடிகை லிஜோமோல் ஜோஸ், லாஸ்லியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘அன்னபூரணி’.
    • இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டனர்.

    அறிமுக இயக்குனர் லயோனல் ஜோஸ்வா இயக்கத்தில் லிஜோமோல் ஜோஸ், லாஸ்லியா முதன்மை கதாபாத்திரல் நடிக்கும் படம் 'அன்னபூரணி'. இவர்களுடன் மெட்ராஸ் ஹரிகிருஷ்ணன், ராஜீவ் காந்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். கோமளா ஹரி பிக்சர்ஸ் மற்றும் ஒன் டிராப் ஓசன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

    அன்னபூரணி படக்குழு

    பெண்கள் குடும்ப அமைப்பிற்குள் அனுபவிக்கும் சிரமங்களை மையமாக வைத்து திரில்லர் வடிவில் உருவாகியுள்ள 'அன்னபூரணி' படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில், இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

    அன்னபூரணி ஃபர்ஸ்ட் லுக்

    இந்த போஸ்டரை இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் ஜெயம் ரவி இணைந்து தங்களது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டனர். மேலும், நடிகர் ஜெயம் ரவி, "எங்கெல்லாம் அன்பினாலும் அதிகாரத்தினாலும் ஒரு பெண் அடக்கப்படுகிறாளோ அங்கெல்லாம் ஓர் அன்னபூரணி தேவைப்படுகிறாள்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • ‘அன்ன தோஷம்’ என்பது ஒரு வகையான தோஷமாகும்.
    • இந்த நாளில் விரதம் அனுஷ்டித்தால் அன்ன தோஷம் நீங்கும்.

    'அன்ன தோஷம்' என்பது ஒரு வகையான தோஷமாகும். 'பசி' என்று கேட்கும் ஒருவருக்கு, உணவளிக்காமல் விரட்டியவர்களை இந்த தோஷம் பிடிக்கும்.

    குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் பசி என்று கேட்கும் பொழுது அவர்களுக்கு உணவளிக்காமல் இருப்பவர்கள், உணவு உட்கொள்ள அமர்ந்தவர்களை சாப்பிடவிடாமல் விரட்டியடிப்பவர்கள், கைவசம் உணவு இருந்தும் அதை யாருக்கும் பகிர்ந்து அளிக்காமல் குப்பையில் வீசுபவர்கள், ஒழுங்காகப் பிண்டம் கொடுக்காதவர்கள், சிறு குழந்தைகளை பார்க்க வைத்து தான் மட்டும் சாப்பிடுபவர்கள் ஆகியோரை இந்த அன்ன தோஷம் பாதிக்கும்.

    இந்த தோஷம் உள்ளவர்களின் வீட்டில், எவ்வளவு உழைத்தாலும் செல்வம் நிலைக்காது. அவர்கள் வெள்ளிதோறும் விரதமிருந்து அன்னபூரணியை வழிபட்டு வருவதுடன், இயன்றவரை அன்னதானங்களும் செய்தால் இல்லத்தில் செல்வ வளம் பெருகும். மனக்குறை அகலும்.

    ×