search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவட்டார் பெருமாள் கோவில்"

    • போலீஸ் துணை சூப்பிரண்டு நேரில் ஆய்வு
    • 2000 பக்தர்கள் கோவில் வளாகத்தில் நிற்பதற்கு வசதி உண்டு

    கன்னியாகுமரி:

    திருவட்டார் ஆதிகேசவ ப்பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா அடுத்த மாதம் 6-ந்தேதி நடைபெறுவதையொட்டி அதிகாரிகள் முகாமிட்டு வேலைகளை முடுக்கி விட்டனர்.

    கும்பாபிஷேக விழாவை சிறப்பாக நடத்துவது குறித்து நேற்று தேவஸ்வம் போர்டு இணை ஆணையாளர் ஞானசேகர், சூப்பிரண்டு ஆனந்த், பொறியாளர் ராஜ்குமார், தக்கலை டி.எஸ்.பி. கணேசன், திருவ ட்டார் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கோயிலுக்குச்சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    கும்பாபிஷேக விழாவை யொட்டி பக்தர்கள் வழக்க மாக வரும் கிழக்குவாசல் வழியாக அனுமதிக்காமல் மேற்கு வாசல் வழியாக கோயினுள் அனுமதிக்கப்படுவர்.

    கும்பாபிஷேக வேளை யில் கோயில் வளாகத்தில் 25 ஆயிரம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்றும், அந்நேரம் 2000 பக்தர்கள் கோவில் வளா கத்தில் நிற்பதற்கு வசதி உண்டு, அன்றைய தினம் ஒரு லட்சம் பக்தர்கள் வந்து செல்வார்கள் என்றும் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டது.

    மேலும் கோயில் வரை படத்தை வைத்து எந்தெந்த பகுதியில் என்னென்ன பணிகள் மேற்கொ ள்ளலாம் என்றும் ஆய்வு மேற்கொண்டனர்.

    கோவிலில் மூலவர் சிலை புதுப்பிக்கும் பணி முடிவடைந்து விட்டது. கோயில் கருவறையில் தற்போது 22 அடி நீளமுள்ள கடுசர்க்கரையோக திரு மேனியை கூடுதல் பள பளப்புடன் பக்தர்கள் தரிசிக்க முடியும். மேலும் சிலையின் பின்புறமுள்ள சுவரில் சங்கை உரைத்து அதன்மூலமாகக் கிடைக்கப்பெற்ற வெள்ளை வர்ணமாக பூசியுள்ளதால் சிலையின் அழகு கூடுதல் அழகுடன் காட்சி தருகிறது. கோயில் பிரகாரத்தில் மின் விளக்குகள் பணி முடிவடைது விட்டது.

    பிரகாரங்களில் வர்ணம் பூசும்பணி நடந்து வருகிறது. கோவில் பழமை மாறாமல் மூலிகை ஓவியங்கள் புதுபிக்கப்பட்டு உள்ளன. இவற்றையெல்லாம் தொல்லியல் துறை சிறப்பு அலுவலர் லோகநாதன் ஆய்வு மேற்கொண்டார் அறநிலையத் துறை பொறி யாளர் ராஜ்குமார் ஒவியங்க ள் புதுபிப்பது தொடர்பாக ஆய்வு செய்தார்.

    ×