என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வசதிகள்"

    • கொரோனா காரணமாக தொடர்ந்து 18 வாரங்கள் சந்தை நடக்காத நிலையில் நடப்பாண்டு மீண்டும் உயிர்ப்பெற்று சந்தை நடந்து வருகிறது.
    • தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் அதற்கான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூரில் 1945 முதல் கால்நடைச்சந்தை நடந்து வருகிறது. தென்னம்பாளையத்தில் நடந்து வந்த மாட்டுச்சந்தை தற்போது அமராவதிபாளையத்தில் நடந்து வருகிறது.வாரம் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் சந்தைக்கு ஆயிரம் முதல் 1,500 மாடுகள் கொண்டு வரப்படுகிறது. இவற்றை விலை பேசி வாங்க 2,500 பேர் வருகின்றனர். கேரளாவில் இருந்தும் திருப்பூருக்கு வியாபாரிகள் வருகின்றன்ர. உள்ளூர் வியாபாரிகளை விட, வெளிமாவட்ட, கேரள வியாபாரிகள் நம்பியே சந்தை நடக்கிறது. திங்கட்கிழமை காலை 10 மணிக்கு துவங்கி மாலை 4மணி வரை திருவிழா போல சந்தை நடக்கிறது. குறைந்தபட்ச விலை 3,000 ரூபாய் துவங்கி, அதிகபட்சம், 55 ஆயிரம் வரை மாடுகள் விலை போகிறது. காங்கயம் காளைகள் 2 லட்சம் ரூபாய் வரை விற்கப்படும்.

    சந்தைக்கு 800 முதல் ஆயிரம் கால்நடைகள் கொண்டு வரப்படுவதால் குறைந்தபட்சம் 80 லட்சம் முதல் 1.50 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடக்கிறது. கடந்த 2019ல் 50 கோடிக்கு வர்த்தகம் நடந்தது. கொரோனா காரணமாக தொடர்ந்து 18 வாரங்கள் சந்தை நடக்காத நிலையில் நடப்பாண்டு மீண்டும் உயிர்ப்பெற்று சந்தை நடந்து வருகிறது.

    அரை நூற்றாண்டு கடந்தும் செயல்பட்டு வரும் இச்சந்தைக்கு பல்வேறு மாநிலத்தவர் வந்து செல்ல தேவையான அனுமதி, போக்குவரத்து வசதி அமைந்தால், திருப்பூரில் கால்நடை வணிகம் மேலும் சிறக்கும். தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் அதற்கான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்.

    கால்நடை விலை நிர்ணயத்துக்கு குழுவெல்லாம் கிடையாது. விவசாயி - வியாபாரி அல்லது இரு வியாபரிகள் இடையே நடக்கும் ஒரு நிமிடம் பேரம் மட்டுமே விலை. படிந்து விட்டால் விலையை கொடுத்து மாட்டை கயிறுடன் அவிழ்த்து லாரியில் ஏற்றிவிடுவார்கள். சுவராசியமான வாக்குவாதங்களும் நடக்கும். 50 ஆயிரத்தில் இருந்து 5 லட்சம் ரூபாய் வரை சர்வசாதாரணமாக சட்டை, டவுசர் பாக்கெட்டில் வியாபாரிகள் பணம் வைத்திருப்பார்கள்.   

    • தஞ்சை மாநகரமே மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழா கோலம் பூண்டுள்ளது.
    • சாலை வசதி, குடிநீர், சுகாதார வசதிகள், போக்குவரத்து வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை நிறுவி தமிழர்களின் கட்டிடக்கலையை உலகறிய செய்த சோழப் பேரரசன் மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் "சதய விழா"வாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

    கடந்த ஆண்டு கொரோனா பரவலால் 1 நாள் விழா மட்டும் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா பரவல் வெகுவாக குறைந்ததால் வழக்கம்போல் 2 நாள் விழாவாக நடைபெறுகிறது.

    அதன்படி நாளை தொடங்கும் விழா நாளை மறுநாள் வரை நடைபெற உள்ளது. இதனால் தஞ்சை மாநகரமே மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழா கோலம் பூண்டுள்ளது.

    தஞ்சை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாக சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் பெரிய கோவிலில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், ஆணையர் சரவணகுமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது மேயர் சண். ராமநாதன் கூறியதாவது :-

    தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழா 2 நாட்கள் நடைபெறுகிறது. கடந்த ஆண்டை விட , இந்த ஆண்டு பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சாலை வசதி, குடிநீர், சுகாதார வசதிகள், போக்குவரத்து வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.

    பக்தர்களின் எண்ணிக்கை அதிகம் வந்தாலும் அதற்கேற்றவாறு பல்வேறு வசதிகளை செய்ய மாநகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு தஞ்சைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    விழாவின் முக்கிய நிகழ்வான ராஜராஜ சோழனின் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி 3 -ம் தேதி நடைபெறுகிறது.

    அன்றைய தினம் மாவட்ட கலெக்டர் தலைமையில் சோழனின் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதேபோல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

    • அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் என்னென்ன அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும்.
    • தஞ்சை பெரிய கோவில் முகப்பு பகுதிகளை அழகுப்படுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி நிதியிலிருந்து ரூ. 1 கோடியே 22 லட்சம் செலவில் கடந்த 2010-11-ம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யபட்டு 2013-ம் ஆண்டுபேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது.

    தற்போதுதஞ்சை பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது.

    அதை சீரமைத்து அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் வாடகைக்கு விடப்படுவது குறித்து எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எம்.பி. தலைமையில் இன்று மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் அரங்கத்தை பார்வையிட்டு ஆலோசனை நடத்தினர்.

    பின்னர் நிருபர்களுக்கு எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் என்னென்ன அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும், சீரமைக்க நிதி எவ்வளவு குறித்து ஆலோசனை நடத்தபட்டது. உடனடியாக சீரமைப்பு பணிகள் தொடங்கப்படும்.

    அதேபோல், தஞ்சையில் விமான போக்குவரத்து தொடங்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஏ.கே.அந்தோணியிடம் கோரிக்கை வைத்திருந்தேன்.

    அப்போது, தஞ்சை விமான படை தளத்திற்கு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு இடமா ற்றம் செய்வது குறித்து பிரச்சினை இருந்தது. தற்போது இதுகுறித்து, தஞ்சை மாவட்ட கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்தி ராவிடம் ஆலோசனை நடத்தினோம்.

    அவர் நில மாற்றம் குறித்து இரண்டு அமைச்சகமும், ஏற்றுக்கொண்டால் விரைவில் தீர்க்கப்பட்டு விமான சேவை தொடங்கப்படும் என்றார்.

    மேலும், தஞ்சை பெரிய கோவில் முகப்பு பகுதிகளை அழகுப்படுத்தவும், கோவில் வளாகத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில், மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியா ளர் கார்த்திகேயன், மண்டல குழுத்தலைவர் நீலகண்டன், மாநகர நல அலுவலர் (பொ) அசோகன் ஆகியோர் உடன் உள்ளனர்.

    • பல கிராமங்களில் மின்சார வசதிகள் இல்லை.
    • மாற்று வழியாக பவர் என்ஜின் பொருத்தப்படும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 10 -11 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தின் இயல்புநிலை முடங்கியது. பல்வேறு பகுதிகளில் குடியிருப்பு பகுதிகள் வயல்வெளிகள் நீரில் மூழ்கின.

    இரண்டு லட்சத்து 35 ஆயிரம் குடியிருப்புகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கடந்த 10- தேதி முதல் தற்போது வரை பல கிராமங்கள் மின்சார வசதியின்றி தவித்து வருகின்றன.

    இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டடம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் அடுத்து மடப்புரம் ஊராட்சியில் 5 நாட்களாக மின்சாரம் வழங்கப்படாத காரணத்தால் இருளில் முழ்கியது.

    அப்பகுதி கிராம பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படாத நிலையில் ஊராட்சி மற்றும் அரசையை கண்டித்தும், மின்சாரம் வழங்க வலியுறுத்தியும் பொதுமக்கள் மயிலாடுதுறை தரங்கம்பாடி நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து மறியல் போராட்டம் செய்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் உயர் மின்னழுத்தம் கம்பிகள் சாய்ந்து கிடப்பதால் இதனை சரிசெய்து தர ஒருவார காலம் ஆகலாம். மாற்று வழியாக பவர் இன்ஜின் பொருத்தப்படும்.

    மேலும் குடி நீர் வாகனங்களில் கொண்டுவந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • கொரோனா ஊரடங்கால் கடைகள் வியாபாரம் இன்றி பூட்டப்பட்டிருந்தது.
    • கால அவகாசம் கேட்டபோது அவகாசம் இன்றி கடைகளுக்கு சீல் வைத்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி பழைய பஸ் நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான 96 கடைகள் உள்ளது.

    இதில் கடந்த சில வாரத்துக்கு முன்பு 12 கடைகளுக்கு வாடகை நிலுவை இருப்பதாக நகராட்சி நிர்வாகத்தினர் கடைகளுக்கு சீல் வைத்தனர்.

    இந்நிலையில் சீர்காழி பழைய பஸ் நிலைய நகராட்சி வர்த்தக சங்கத்தின் சார்பில் கால அவகாசம் இல்லாமல் கடைகளுக்கு சீல் வைத்ததை கண்டித்தும், அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரியும், நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் சீர்காழி பழைய பஸ் நிலையம், காமராஜர் வீதி ஆகிய பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான 96 கடைகளை வர்த்தகர்கள் பூட்டி கடையடைப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

    இது குறித்து பழைய பஸ் நிலைய வியாபாரிகள் தரப்பில் கூறுகையில், கொரோனோ காலக ட்டத்தில் இரண்டு ஆண்டுகளாக ஊரடங்கு உத்தரவால் கடைகள் வியாபாரம் இன்றி பூட்டப்பட்டிருந்தது.

    இதனால் கடைகளுக்கு வாடகை செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.

    இது குறித்துநகராட்சி நிர்வாகத்திடம் கால அவகாசம் கேட்டபோது இரண்டு ஆண்டுகளுக்கு இரண்டு மாதத்திற்கு மட்டு மே வாடகை விலக்கு அளித்தனர்.

    மீதமுள்ள வாடகை தொகையை மொத்தமாக கால அவகசம் இன்றி கட்ட கூறியதால் தங்களால் கட்ட இயலவில்லை.அதற்கு கால அவகாசம் கேட்டபோது அவகாசம் இன்றி கடைகளுக்கு சீல் வைத்தனர் என வருத்தத்துடன் தெரிவித்தனர்.

    • பரதநாட்டிய கலைஞா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.
    • நடன கலைஞா்களுக்கும் இடையூறு ஏற்படாத வண்ணம் போக்குவரத்தை இயக்க வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் சிவராத்திாியை முன்னிட்டு 10-ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா வருகிற 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    இதுதொடா்பான ஆலோசனை கூட்டம் கோவில் செயல் அலுவலா் முருகையன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவா் கவிதா பாண்டியன், வா்த்தக சங்க தலைவா் செந்தில்குமாா், முன்னாள் நகர்மன்ற தலைவா் பாண்டியன், நாட்டியாஞ்சலி விழாக்குழு செயலாளா் ராஜா, தலைவா் செல்வகணபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    இதில் சப்-இன்ஸ்பெக்டர் மனோகர், பாரதமாதா திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் துர்கா தேவி, அருண் சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக நாட்டி யாஞ்சலி விழாக்குழு அமைப்பு செயலாளா் எடையூர் மணிமாறன் அனைவரையும் வரவே ற்றார்.

    கூட்டத்தில் நாட்டியா ஞ்சலி விழாவில் கலந்து கொள்ளும் பரதநாட்டிய கலைஞா்களுக்கு தேவை யான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

    அண்ணாசிலையில் இருந்து போிக்காடு அமைத்து மேலவீதியில் போக்குவரத்து தடைசெய்து பக்தா்களுக்கும், நடன கலைஞா்களுக்கும் இடையூறு ஏற்படாத வண்ணம் அனைத்து வாகனங்களையும் வடக்கு, கீழ, தெற்கு வீதி வழியாக போக்குவரத்தை இயக்க வேண்டும்.

    சன்னதி தெருவில் உள்ள கடைகளை சிவராத்திாி அன்று மதியம் 2 மணியிலிருந்து இரவு முழுவதும் அடைத்து விழா நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    முடிவில் நாட்டியாஞ்சலி விழாக்குழு பொருளாளர் ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.

    • அரசு மேம்ப டுத்தப்பட்ட ஆரம்ப சுகா தார நிலையம், கடந்த 2016–-ம் ஆண்டு ஏப்ரல் 1–-ந்தேதி அரசு மருத்துவமனை யாக தரம் உயர்த்தப்பட்டது.
    • இந்த மருத்துவமனையில், வாழப்பாடி பேரூராட்சி மற்றும் சுற்றுப்புற கிரா மங்களை சேர்ந்த நுாற்றுக்க ணக்கானோர் தினந்தோறும் சிகிச்சை பெற்று வருகின்ற னர்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி சுற்றுப்புற கிராம மக்களின் நலன் கருதி, வாழப்பாடியில் இயங்கி வந்த அரசு மேம்ப டுத்தப்பட்ட ஆரம்ப சுகா தார நிலையம், கடந்த 2016–-ம் ஆண்டு ஏப்ரல் 1–-ந்தேதி அரசு மருத்துவமனை யாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த மருத்துவமனையில், வாழப்பாடி பேரூராட்சி மற்றும் சுற்றுப்புற கிரா மங்களை சேர்ந்த நுாற்றுக்க ணக்கானோர் தினந்தோறும் சிகிச்சை பெற்று வருகின்ற னர்.

    இதை 150 படுக்கை கொண்ட மருத்துவமனை யாக தரம் உயர்த்தி, மகப்பேறு, எழும்பு முறிவு, பொது மருத்துவம் உள்ளிட்ட சிறப்பு மருத்துவ நிபுநர்கள், செவிலியர் உள்ளிட்ட மருத்துவ பணி யாளர்கள், இரவு காவலர் மற்றும் துாய்மை பணியாளர்கள் நியமிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

    வாழப்பாடி ஒன்றியத்தில் மக்கள் தொகை 1.30 லட்ச மாக உயர்ந்துள்ள நிலையில், சிங்கிபுரம் மற்றும் புழு திக்குட்டை ஆகிய இரு இடங்களிலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சேலத்தில் கலெக்டர் கார்மேகம் தலை மையில் நடைபெற்ற மாவட்ட சுகாதார பேரவை கூட்டத்தில், மக்கள் பிரதி நிதிகள் மற்றும் தன்னார்வ இயக்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர்.

    கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறை வேற்றிக் கொடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக, மாவட்ட மருத்துவத்துறை மற்றும் சுகாதாரத்துறை உயர் அலுவலர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.16 கோடியில் புதிய பஸ் நிலையம் நவீன வசதிகளுடன் கட்ட ஏற்பாடு நடக்கிறது.
    • மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் கடந்த 1985-ம் ஆண்டு 2 ஏக்கர் பரப்பளவில் 16 பேருந்துகள் நிறுத்தும் வகையில் பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. தற்போது மக்கள் தொகை அதிகரித்துவிட்ட நிலையில் இடநெருக்கடி ஏற்பட்டது. மேலும் பஸ் நிலையத்தில் வாகன காப்பகம், காத்திருப்பு அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

    மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளதால் மதுரை, சென்னை, மூணாறு, திண்டுக்கல், கொல்லம், தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையம் வந்து செல்கின்றன. ராஜாஜி சாலை, சின்னக்கடை பஜார், அரசு மருத்துவமனை, பென்னிங்க்டன் மார்க்கெட் உள்ளிட்ட நகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    இதனால் நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பஸ் நிலையத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் நடப்பு சட்டப்பேரவை கூட்ட தொடரில் ஸ்ரீவில்லிபுத்தூர், திருவாரூர் உள்ளிட்ட 9 நகராட்சிகள் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட 3 மாநகராட்சிகளில் ரூ.174 கோடியில் புதிய பஸ் நிலையங்கள் அமைக்கப்படும் என மானிய கோரிக்கையின் போது அமைச்சர் கே.என் நேரு தெரிவித்தார்.

    இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றம் அருகே மதுரை-கொல்லம் நான்கு வழிச்சாலை அருகே புதிய பஸ் நிலையம் அமைப்பதற்காக 3.5ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ரூ.16கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் அமையவுள்ளது. இங்கு 36 பஸ்களை நிறுத்துவதற்கு வசதி செய்யப்படுகிறது, மேலும் கடைகள், வாகன நிறுத்துமிடம், சுகாதார வளாகம், காத்திருப்பு அறை உள்ளிட்ட பயணிகளுக்கான நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது.

    மாவட்ட நீதிமன்றம், நான்கு வழிச்சாலை, ரயில் நிலையம் ஆகியவற்றிற்கு அருகே புதிய பேருந்து நிலையம் அமைய உள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • சோழர் கால பொருட்கள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டார்.
    • அடிப்படை வசதிகள் எதுவும் செய்ய வேண்டியது இருக்கிறதா?

    தஞ்சாவூர்:

    தஞ்சை பழைய கலெக்டர் அலுவலகஅருங்காட்சிய கத்தில் மேற்கொள்ள ப்பட்டுள்ள பணிகள் குறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் சுற்றுலா, பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அரசு முதன்மை செயலாளர் சந்திரமோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர், அங்கு வைக்கப்பட்டுள்ள காவிரி டெல்டா பாசன பகுதிகளின் மாடல், புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள், சோழர் கால பொருட்கள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டார்.

    தொடர்ந்து ராஜாளி பறவை சரணாலயத்திற்கு சென்று அங்குள்ள பறவைகளை பார்வையிட்டு, மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்ய வேண்டியது இருக்கிறதா? என்பதையும் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து அவர், தஞ்சை பெரியகோவில் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், தஞ்சை கலைக்கூடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.
    • பழுதடைந்த ஆனந்தகாவேரி வாய்க்கால் பாலத்தை சீரமைத்து தர வேண்டும்.

    பூதலூர்:

    பூதலூர் அருகே உள்ள விச்சனூர் படுகை கிராம மக்கள் தங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் வழங்கவில்லை என்ற கூறி இன்று காலை பூதலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்பாக காலிகுடங்களுடன் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

    போராட்டத்திற்கு தமிழ்நாடு பொதுவுடமை இயக்கத்தின் கிளைச் செயலாளர் பெரியசாமி தலைமை தாங்கினார்.கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பொதுவுடமை இயக்கத்தின் நிர்வாகிகள் தேவதாஸ், வைத்தியநாதசுவாமி, முருகையன், ஜெயராஜ், திருநாவுக்கரசு, மணிகண்டன், விஜயகுமார், பகத்சிங் ஆகியோர் பேசினர்.

    மேலும் முறையாக குடிநீர் வழங்க வேண்டும், மேலும் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும், சாலை வசதியை மேம்படுத்தி வேண்டும், பழுதடைந்த ஆனந்தகாவேரி வாய்க்கால் பாலத்தை சீரமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    இது குறித்து தகவல் அறிந்ததும் பூதலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

    இதனால் அங்கு பரபரப்பாக சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    • சக்கரக்கோட்டை ஊராட்சியில் அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என தலைவர் யாழினி புஷ்பவள்ளி தெரிவித்தார்.
    • ஒரு கிலோ ரூ.60-க்கு விற்கப்படுகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் யூனியன் சக்கரக்கோட்டை ஊராட்சி யில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அதன் தலைவரும். முதுகலை என்ஜினீயரிங் பட்டதாரியுமான யாழினி புஷ்பவள்ளி கூறியதாவது:-

    ராமநாதபுரம மாவட்டத்திலேயே அதிக குடியிருப்புகளை கொண்ட, அதிக மக்கள் வசிக்க கூடிய பகுதியாக சக்கரக்கோட்டை ஊராட்சி உள்ளது. ஒரு நக ராட்சிக்கு இணையான மக் கள் தொகை கொண்ட இந்த ஊராட்சியில் மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்ற நான் மக்களுக்கு தேவை யான அடிப்படை வசதி களை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறேன்.

    ஊராட்சியில் அனைத்து பகுதிகளுக்கும் தரமான சாலை வசதி ஏற்படுத்தப் படும். பல புதிய விரிவாக்க பகுதிகளுக்கு புதிதாக சாலை உருவாக்க வேண்டி உள்ளது. இதுகுறித்து கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், கூடுதல் கலெக் டர் பிரவீன்குமார், ஊராட்சி களின் உதவி இயக்குனர் பரமசிவம், யூனியன் ஆணை யாளர்கள் கவனத்திற்கு எடுத்து சென்றுள்ளேன்.

    இவ்வளவு அதிகமான மக்கள் தொகை கொண்ட ஊராட்சிக்கு தேசிய ஊரக வேலை திட்டத்தில் ஒரு சாலை பணி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது போதுமானது அல்ல. சாலை வசதியில்லாத பகுதிகளுக்கு முதல் கட்டமாக மெட்டல் சாலை அமைக்க அனுமதி வழங்க வேண்டும்.சக்கரக் கோட்டை ஊராட்சிக்கு சாலை பணிகளுக்கு கூடுத லாக நிதி ஒதுக்கீடு வழங்கு மாறு மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறேன்.

    சேதுநகர், நேருநகர்-1, 2-வது தெருக்களில் தார் சாலை, நேருநகர்-சேட் இப் ராகிம் நகர் இணைப்பு சாலை ரூ.16 லட்சத்தில், திருவாடானை எம்.எல்.ஏ. கருமாணிக்கம் தொகுதி நிதியில் ரூ.5 லட்சத்தில் மகாசக்தி நகரில் சாலை, வாணி கிராமத்தில் ரூ.13 லட்சத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்கப் பட்டுள்ளது.

    சிவஞானபுரத்தில் மகளிர் சுயஉதவி குழுவினர் பயன்படுத்தும் வகையில் ரூ.78 லட்சத்தில் மகால், 5 இடங்களில் பேவர்பிளாக் சாலைகள், கலை அரங்கம், காரிக்கூட்டம் இந்திரா நகரில் மயான சாலை, சின்டெக்ஸ்தொட்டி, சக்கரக்கோட்டையில் ரூ.22 லட்சத்தில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடி நீர் மேல்நிலை தொட்டி அமைக்கப்படும்.

    போக்குவரத்து நகர், மணி நகர், தென்றல் நகர், ஆதம் நகர், முல்லை நகர், தமிழ் நகர் பகுதிகளில் ஏராளமான புதிய மின் கம்பங்கள் அமைத்து தெரு விளக்கு வசதி செய்யப் பட்டுள்ளது. ஊராட்சி முழுவதும் குடிநீர் பைப் லைன்கள் விரிவாக்கம் செய்து குடிநீர் வினியோகிக் கப்படுகிறது. மேலவாணியில் செயல்படாமல் இருந்த நீர் தேக்க தொட்டி பயன்பாட் டிற்கு கொண்டுவரப்பட்டு பைப்லைன் அமைத்து காரிக் கூட்டம், வாணி, சக்கரக்கோட்டை, தவ்ஹீத் நகர் பகுதிகளில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. மஞ்சன மாரியம்மன் நகரில் ஜவஜீவன் திட்டத்தில் 300 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கி குடிநீர் வினியோகம் செய்ய நட வடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது.

    சிவஞானபுரத்தில் இருந்து ரெயில்வே தண்ட வாளம் வழியாக சக்கரக் கோட்டை முனி யசாமி கோவில் வழியாக தரவை பகுதி வரை ரூ.60 லட் சத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த பணிமுடிவடையும் இடத்தில் கழிவுநீர் சுத்திக ரிப்பு நிலையம் அமைத்து தண்ணீரை மறுசு ழற்சி செய்யும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. பாரதிநகர் தெற்கு பகுதியில் மக்கும் குப்பைகள் அனைத் தும் திடக்கழிவு மேலாண்மை செய்து திரவ இயற்கை உரம் தயாரித்து ஒரு கிலோ ரூ.60-க்கு விற்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சீர்காழி நகர் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் நகராட்சி சார்பில் கொட்டப்பட்டு வருகிறது.
    • அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும் மறியல் போராட்டம்.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட பிச்சைக்காரன்விடுதியில் கடந்த சில மாதங்களாக சீர்காழி நகர் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை நகராட்சி சார்பில் கொட்டப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் 4-வதுவார்டில் தெருவிளக்கு, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரியும் சாலைமறியல் போராட்டம் அறிவித்தனர்.

    இதனையடுத்து சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதிபேச்சுவார்த்தை நடைபெற்றது.

    வட்டாச்சியர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், இன்ஸ்பெக்டர் சிவக்குமார், நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகர சபை தலைவர் துர்கா ராஜசேகரன்,போராட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயரெங்கன், தனியார் ஒப்பந்ததாரர் தனராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் நித்தியவனம், பிச்சைக்காரன் விடுதி, தோட்ட மானியம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் நித்தியவனம், பிச்சைக்காரன் விடுதி, தோட்ட மானியம் ஆகிய பகுதிகளில் உடனடியாக பொது குடிநீர் இணைப்பகூடுதலாக அமைத்து தருவது.

    தேவைப்படும் இடங்களில் கூடுதலாக தெருவிளக்கு வசதிஏற்படுத்தி தருவது.

    அடுத்த மாதம் அக்டோபர் 31ம் தேதி வரை பிச்சைக்காரன் விடுதியில் தற்காலிகமாக குப்பைகளை கொட்டி தரம் பிரிப்பது. அதற்குள் குப்பை கொட்டுவதற்கு நிரந்தர இடத்தினை தேர்வு செய்வது.

    கோவில் இடங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டு வரி ரசீது கிடைக்க அரசு சார்பில் பரிசீலனை செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த கூட்டத்தில் நகராட்சி பணி மேற்பார்வையாளர் விஜயேந்திரன், வருவாய் ஆய்வாளர் சுகன்யா, கவுன்சிலர்கள் பாஸ்கரன், வேல்முருகன், ராமு, கஸ்தூரிபாய் செந்தில்குமார், ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×