என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கடைக்கு சீல்"
- பஜார் வீதியில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.
- ரூ. 40,000/- மதிப்பிலான ஹான்ஸ் விமல் பறிமுதல் செய்யப்பட்டன.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிற்கு வெள்ளிமேடு பேட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பஜார் வீதியில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அவரது உத்தரவின் பேரில் ரோஷனை இன்ஸ்பெக்டர் பிருந்தா, தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்செந்தில்குமார் மற்றும் போலீசார் பஜார் வீதி தரணி என்பவரின் பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். அப்போது மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வெள்ளிமேடு பேட்டை பஜார் வீதியை சேர்ந்த சரவணன் மனைவி ஸ்ரீபிரியா, தரணி ஆகி யோரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து சுமார் ரூ. 40,000/- மதிப்பிலான ஹான்ஸ் விமல் பறிமுதல் செய்யப்பட்டன. மேற்கண்ட எதிரிகள் இருவரின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு எதிரியின் பெட்டி க்கடையை வெள்ளிமேடு பேட்டை கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
- பலமுறை வழக்குப் பதிவு செய்தும், எச்சரித்தும் தொடர்ச்சியாக கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்து வந்ததால் கடையை சீல் வைத்தனர்.
- புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கடை உரிமையாளர்களை கைது செய்து வருகின்றனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களுக்கு அருகிலும், கடை வீதிகளிலும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்களை போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களை கைது செய்து வருகின்றனர்.
இதன்படி பாவூர்சத்திரத்தில் நெல்லை - தென்காசி மெயின் ரோட்டில் அரசு மகளிர் பள்ளி அருகில் நடராஜன் என்பவர் பாவூர்சத்திரம் காவல் அதிகாரிகள் மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் பலமுறை வழக்குப் பதிவு செய்தும், எச்சரித்தும் கூட தொடர்ச்சியாக கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்து வந்ததால் தென்காசி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி டாக்டர் சசிதீபா, வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் மகாராஜன் மற்றும் பாவூர்சத்திரம் சப்- இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் அங்கிருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்து கடையை சீல் வைத்தனர்.
தென்காசி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடையை சீல் வைப்பது முதன்முறை ஆகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்