என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மவுண்ட்பார்க் மேல்நிலைப்பள்ளி"
- பிளஸ்-2 பொதுத்தேர்வில் தியாகதுருகம் மவுண்ட்பார்க் மேல்நிலைப்பள்ளி சாதனை படைத்துள்ளனர்.
- சிறந்த மதிப்–பெண் பெற்ற மாணவ-மா ண–வி–களை பள்ளி தாளாளர் மணிமா–றன் பரிசு வழங்கி பாராட்டினார்.
கள்ளக்குறிச்சி:
பிளஸ்-2 பொதுத்தேர்வில் தியாகதுருகம் மவுண்ட்பார்க் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 99.50 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். தேர்வு எழுதிய 616 மாணவ-மாணவிகளில் 613 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 580 மதிப்பெண்களுக்கு மேல் 14 பேரும், 560 மதிப்பெண்களுக்கு மேல் 55 பேரும், 550 மதிப்பெண்களுக்கு மேல் 88 பே ரும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 246 மாணவ-மாணவிகளும் பெற்றனர்.
அதேபோல் கணித பாடத்தில் 12 பேர், வேதியியலில் 17 பேர், இயற்பியலில் 4 பேர், உயிரியலில் 2 போ், கணினி அறிவியலில் 8 பேர், கம்ப்யூட்டர் அப்ளிகேசனில் ஒருவர், கணக்குப்பதிவியலில் 2 பே ர் என மொத்தம் 46 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். மாணவி ஜான்சிராணி 600-க்கு 589, மாணவர்கள் ராம்குமார்-588, சாய்கணேஷ் மற்றும் மதன் மோகன் ஆகியோர் தலா 587 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் மணிமாறன் பரிசு வழங்கி பாராட்டினார். அப்பொழுது பள்ளி முதல்வர் கலைச்செல்வி, துணை முதல்வர் முத்துக்குமரன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்