search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 235761"

    • வருவாய் கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு அரசு சேவை கிடைப்பதில்லை.
    • கிராமம்தோறும் இ-சேவை மையம் இருக்க வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது.

    திருப்பூர் :

    மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் ஒவ்வொரு அரசுத்துறையும், கணினிமயமாகி வருகிறது. பொதுமக்களுக்கான அரசு சேவைகள் ஆன்லைன் மூலம் வழங்கப்படுகின்றன. அதற்காக 2016 முதல் பொது இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    அதேசமயம் ஒவ்வொரு மாவட்டத்திலும், கடைக்கோடியில் உள்ள வருவாய் கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு அரசு சேவை கிடைப்பதில்லை. அதற்காக தொலைதூரத்தில் இருக்கும் இ-சேவை மையம் சென்றுவருகின்றனர்.பொதுமக்கள் சிரமத்தை குறைக்கவும், அரசு சேவைகளை விரிவுபடுத்தவும், வருவாய் கிராமத்துக்கு ஒரு இ-சேவை மையம் செயல்பட வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது.

    மின்னாளுமை முகமை அலுவலர்கள் கூறுகையில், கிராமம்தோறும், இ-சேவை மையம் இருக்க வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்காக, தனியார் இ-சேவை மையம் அமைக்க உரிமம் வழங்கப்படுகிறது. குறிப்பாக, கிராமப்புற தொழில் முனைவோர், மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு முன்னுரிமை அளித்து உரிமம் வழங்கப்படுகிறது. புதிய உரிமம் பெற https://tnesevai.tn.gov.in, https://tnega.tn.gov.in என்ற இணையதளங்களில் வருகிற 30-ந்தேதி வரை விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது என்றனர்.

    • ஆதி திராவிடர்-பழங்குடியின மாணவர்கள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிக்கையில் கூறியிருக்கிறார்.
    • இணைய வழியில் https:\\tnadw.hms.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    ராமநாதபுரம் மாவட் டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளி மாணவ-மாணவியர் விடுதிகள் மாணவர் விடுதி 22, மாணவியர் விடுதி 13 என மொத்தம் 35 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவ-மாணவிகள் கீழ்கண்ட அரசின் நலத் திட்டங்கள் வழங்கப்படும்.

    விடுதியில் சேர்ந்து தங்கி பயிலும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் உணவு மற்றும் தங்கும் வசதி இலவசமாக வழங்கப்படும். 10 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவி களுக்கு சிறப்பு வழிகாட்டி மற்றும் வினாவங்கி நூல்கள் இலவசமாக வழங்கப்படும். விடுதியில் சேர்ந்து தங்கி பயிலும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் 4 இணை சீருடைத்துணிகள் தைத்து வழங்கப்படும்.

    அரசாணைப்படி 85 சதவீதம் ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்கள் (85 சதவீதம்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின மாணவர்கள் (10சதவீதம்), பிற வகுப்பி னர்கள் (5சதவீதம்) என்ற விகிதத்தில் புதிய மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

    மாணவர்கள் விடுதியில் சேர அவர்களது பெற்றோர், பாதுகாவலரது குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து கல்வி பயிலும் நிலையத்தின் தூரம் குறைந்த பட்சம் 5 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும்.

    மேற்படி நிபந்தனை மாணவிக்கும், பெற்றோரை இழந்த மாணவர்கள் மற்றும் தாய் அல்லது தந்தை வெளியூர்களில் பணிபுரிந்து பாதுகாவலர் பொறுப்பில் இருக்கும் மாணவர்களுக்கும் பொருந்தாது. ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி கல்வி பயில விரும்பும் மாண வர்கள் இணைய வழியில் https:\\tnadw.hms.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

    மாணவர்கள் கல்வி பயிலும் பள்ளி தலைமை யாசிரியர் சான்று இணைய வழியில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். மாணவர்களுக்கு EMIS எண் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும். புதிய மாணவர்கள் பள்ளி விடுதிகளுக்கு வருகிற 7-ந் தேதி முதல் 30-ந்தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்யப்படவேண்டும்.

    விண்ணப்பத்துடன் மாணவ-மாணவிகள் புகைப்படம், சாதிச்சான்று, ஆதார் அடையாள அட்டை, பயன்பாட்டிலுள்ள வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். மாணவர்கள் விண்ணப் பத்தினை பதிவேற்றம் செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட காப்பாளர், காப்பாளினி மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு விடுதிகளில் சேர பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
    • மாணவ-மாணவிகள் அரசின் இந்த சலுகைகளைப் பெற்று, பயனடையலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசால் சிவகங்கை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவ- மாணவிகளுக்கு என 21 மாணவர் பள்ளி விடுதிகளும், 14 மாணவி பள்ளி விடுதிகளும், 5 மாணவர்கள் கல்லூரி , பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. விடுதிகளும், 5 மாணவிகள் கல்லூரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. விடுதிகளும் என மொத்தம் 45 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

    பள்ளி விடுதிகளில் 4 முதல் 12 வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளும், கல்லூரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. படிக்கும் மாணவ- மாணவிகள் சேர தகுதியு டையவர்கள் ஆவார்கள்.

    அனைத்து விடுதி மாணவர், மாணவிகளுக்கும் உணவும் தங்கும் வசதியும் அளிக்கப்படும். 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 4 இணைச்சீருடைகளும் வழங்கப்படும். 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவி களுக்கு சிறப்பு வழிகாட்டி நூல்களும் வழங்கப்படும்.

    விடுதிகளில் சேருவதற்கு பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பி டத்தில் இருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு மாணவர்களுக்கு குறைந்தபட்சம் 8 கி.மீ-க்கு மேல் இருக்க வேண்டும். இந்ததொலைவு விதி மாணவிகளுக்கு பொ ருந்தாது.

    தகுதியுடைய மாணவ- மாணவிகள் விண்ணப்ப ங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பா ளினிகளிடம் இருந்தோ அல்லது கலெக்டர் அலுவ லகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளைப் பொறுத்த வரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளி னியிடம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 15.6.2023-க்குள்ளும், கல்லூரி விடுதிகளைப் பொறுத்த வரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினி யிடம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 15.7.2023-க்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.

    மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கும் பொழுது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் அளிக்கத் தேவையில்லை. விடுதியில் சேரும் போது மட்டும் இந்த சான்றிதழ்களை அளித்தால் போதுமானது.

    ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தை களுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. மாணவ-மாணவிகள் அரசின் இந்த சலுகைகளைப் பெற்று, பயனடையலாம்.

    • மணிமேகலை விருது வழங்குவதற்கானஅறிவிப்பை அரசாணை எண் 133-ல் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
    • விண்ணப்பங்கள் 25.6.2023-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    திருப்பூர் :

    2022-23ம் ஆண்டிற்கான மணிமேகலை விருதிற்கானவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் கிராம ஊராட்சி பகுதிகளில் சிறப்பாகசெயல்படும் சுய உதவிக் குழுக்கள், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, வட்டாரஅளவிலான கூட்டமைப்பு மற்றும் வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புறங்களில்உள்ள சுய உதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் தொகுதிஅளவிலான கூட்டமைப்பு ஆகியோர்களுக்கு மணிமேகலை விருது வழங்குவதற்கானஅறிவிப்பை அரசாணை (நிலை) எண் 133-ல் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

    மணிமேகலை விருது தேர்வுக்கான மதிப்பீட்டு காரணிகள் பின்வருமாறு :- வார மற்றும் மாதாந்திர கூட்டங்களை முறையாக நடத்தியிருக்க வேண்டும். குழுவில் சேமிக்கப்படும் சேமிப்புத்தொகையினை சரியான முறையில் பயன்படுத்தியிருக்க வேண்டும்.குழுக்கள் / கூட்டமைப்புகள் தகுதியான அனைத்து குழுக்களுக்கும்வங்கியிலிருந்து கடன் பெற்றிருக்க வேண்டும்.குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் பொருளாதார நடவடிக்கைகளில்ஈடுபட்டிருக்க வேண்டும்.திறன் வளர்ப்புப் பயிற்சி மற்றும் வாழ்வாதாரம் தொடர்பான பயிற்சிகள்அனைத்து உறுப்பினர்களும் பெற்றிருக்க வேண்டும்.

    சமூக மேம்பாட்டு பணிகளில் மக்கள் அமைப்புகள் ஈடுபட்டிருக்க வேண்டும். எனவே மேற்கண்ட காரணிகளின் அடிப்படையில் தகுதிவாய்ந்த 4 ஆண்டுகள்முடித்த சுய உதவிக்குழுக்கள், தர மதிப்பீட்டில் ஏ அல்லது பி தகுதி உள்ள பஞ்சாயத்துஅளவிலான கூட்டமைப்பு, ஏ அல்லது பி தகுதி உள்ள வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் ஏ அல்லது பி தகுதி உள்ள கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் நகர்ப்புறங்களில்தகுதிவாய்ந்த 4 ஆண்டுகள் முடித்த சுய உதவிக் குழுக்கள், ஏ அல்லது பி தகுதி உள்ள பகுதிஅளவிலான கூட்டமைப்பு மற்றும் ஒரு ஆண்டு நிறைவு செய்த நகர அளவிலானகூட்டமைப்பு ஆகிய மக்கள் அமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இவ்விண்ணப்பங்களை ஊரக பகுதிகளில் உள்ளவர்கள் சம்மந்தப்பட்ட வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்திலும், நகர்ப்புற பகுதிகளில் தகுதியான விண்ணப்பங்கள் சம்மந்தப்பட்ட பேரூராட்சி-நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்களிலும் 25.6.2023-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.மேலும் தொடர்புக்கு - உதவி திட்ட அலுவலர் (கூடுகை மற்றும் கூட்டாண்மை),அறை எண்.305 மூன்றாவது தளம், மகளிர் திட்ட அலுவலகம், திருப்பூர் என்ற முகவரியையும் 9444094396, 8825552321, 0421-2971149 என்ற செல்போன்-தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • விண்ணப்ப கட்டண தொகையான ரூ.50-ஐ விண்ணப்பதாரர் ஆன்லைன் மூலமாக செலுத்தலாம்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    எஸ்.எம்.ஆர்.வி. அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் சேர விரும்பும் மாணவர்கள் வருகிற 7-ந் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டண தொகையான ரூ.50-ஐ விண்ணப்பதாரர் ஆன்லைன் மூலமாக செலுத்தலாம். குறைந்தபட்ச கல்வி தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி (ஆடை தயாரித்தல் தொழிற்பிரிவு மட்டும்) மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    குறைந்தபட்ச வயது வரம்பு 15 மற்றும் அதிகபட்ச வயது வரம்பு இல்லை. தகுதி வாய்ந்த மாணவிகள் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளான கம்மியர் மின்னணுவியல், டெஸ்க் டாப் பப்ளிசிங் ஆப்ரேட்டர், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் மற்றும் புரோகிராம் அசிஸ்டெண்ட், ஆடை தயாரித்தல் (8-ம் வகுப்பு தேர்ச்சி), சுருக்கெழுத்து (ஆங்கிலம்), நவீன ஆடை வடிவமைப்பு தொழிற்நுட்பம், மருத்துவ மின்னணுவியல் நுட்பவியலாளர், கட்டிடக்கலை படவரைவாளர் ஆகிய தொழிற்பிரிவில் சேர்ந்து பயிற்சி பெறலாம். பயிற்சி கட்டணம் முற்றிலும் இலவசம்.

    மாணவிகள் தொழிற்கல்வி சேர்க்கைக்கு நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள எஸ்.எம்.ஆர்.வி. அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு (மகளிர்) நேரில் வந்து இலவசமாக விண்ணப்பிக்கலாம்.பயிற்சி பெறுபவர்களுக்கு தரமான பயிற்சி வழங்கப்படுவதுடன் விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடை, பாடபுத்தகங்கள், காலணி, மாதந்தோறும் வருகைக்கேற்ப ரூ.750 உதவித்தொகை மற்றும் கட்டணமில்லா பஸ் சலுகை வழங்கப்படும்.

    மேலும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் விடுதிகளில் தங்கி பயிற்சி பெற வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். தமிழக அரசு வழங்கும் உயர்கல்வி உதவித்தொகை (6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையில் அரசு பள்ளியில் பயின்ற) மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை கூடுதலாக வழங்கப்படும்.

    மேலும் தொழிற்பிரிவில் படிக்கும் போதே பிரபல தொழிற்நிறுவனங்களில் உதவி தொகையுடன் வேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும். பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு பிரபல தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கும் ஏற்பாடு செய்து தரப்படும்.

    10-ம் வகுப்பு முடித்த பின்னர் 2 ஆண்டுகள் ஐ.டி.ஐ. பயிற்சி முடித்த பயிற்சியாளர்கள் மொழிப்பாடங்களை மட்டும் எழுதி 12-ம் வகுப்பு அரசு சான்றிதழ் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிறுபான்மையினர் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.
    • ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப் படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுய உதவிக்குழுக்க ளுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞ ர்களுக்கு கடன், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

    திட்டம் 1-ன் கீழ் பயன் பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1,20,000 மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98,000 மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00, 000 மிகாமல் இருத்தல் வேண்டும்.

    தனிநபர் கடன் திட்டம் 1-ன் கீழ் ஆண்டிற்கு (ஆண்,பெண்) 6 சதவீத வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூ.20,00,000, திட்டம் 2-ன் கீழ் ஆண்க ளுக்கு 8 சதவீதம், பெண்க ளுக்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூ.30,00,000 கடன் வழங்கப்படுகிறது.

    கைவினை கலைஞர் களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10,00,000 கடன் வழங்கப்படுகிறது. சுய உதவிக் குழுக்கடன் திட்டம் 1-ன் கீழ் ஆண்டிற்கு 7 சதவீத வட்டி விகிதத்தில் 10 நபர் முதல் 20 நபர் வரை ஒருவருக்கு ரூ.1,00,000 கடன் வழங்கப்படுகிறது.

    திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும் 10 நபர் முதல் 20 நபர் வரை ஒருவருக்கு ரூ.1,50,000 கடன் வழங்கப்படுகிறது.

    மேலும் சிறுபான்மை மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை தொழிற்கல்வி, தொழில் நுட்பக்கல்வி பயில்பவர் களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-ன் கீழ் 3 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.20,00 ,000 வரையிலும், திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8 சதவீதம், மாணவிகளுக்கு 5 சதவீத வட்டி விகிதத்திலும் ரூ.30,00,000 வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்ப டுகிறது.

    எனவே மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மை யினர்கள் கடன் விண்ணப்பங்களை கூட்டுறவு சங்கங் களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பெற்று, அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.

    கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமானசான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிட சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்டஅறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக்கு வரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கிகோரும் இதர ஆணவங்கள் சமர்ப்பி க்கப்பட வேண்டும்.

    கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்றுசான்றிதழ், உண்மை சான்றிதழ், கல்வி கட்டணங்கள் செலுத்திய ரசீது, சலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்பித்து விண்ணப்பி க்கலாம்.

    மேற்குறிப்பிட்ட திட்டத்தி ன் கீழ் அனைத்து சிறு பான்மை ஒயின மக்கள் கடனுதவி பெற்று பயனடை யுமாறு ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் நடமாடும் வாகன அங்காடி பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • வருகிற 31-ந் தேதிக்குள் திட்ட இயக்குநர், மகளிர் திட்டம், கலெக்டர் அலுவலகம் வளாகம், ராமநாதபுரம் என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். வருகிற 31-ந் தேதிக்குள் திட்ட இயக்குநர், மகளிர் திட்டம், கலெக்டர் அலுவலகம் வளாகம், ராமநாதபுரம் என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    ராமநாதபுரம் மாவட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய மதி எக்ஸ்பிரஸ் என்ற வாகனம் வழங்கப்படுகிறது. இந் திட்டத்தில் பயன்பெற தகுதியுடைய மாற்றுத்திறனா ளிகள் விண்ணப்பிக்கலாம்.

    மதி எக்ஸ்பிரஸ் வாகன அங்காடி இயக்க விண்ண ப்பிக்கும் உறுப்பினர்கள் சுய உதவிக்குழு உறுப்பி னராக இருக்க வேண்டும். முன்னு ரிமை அடிப்ப டையில் மகளிர் மாற்றுத்தி றனாளி கள், கணவரால் கைவிடப் பட்ட மாற்றுத்தி றனாளிகள், மாற்றுத்தி றனாளி விதவைகள், முதிர் கன்னி மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆண் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு மட்டுமே வாகன விற்பனை அங்காடி வழங்கப்படும்.

    தேர்வு செய்யப்படும் மாற்றுத்திறனாளி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் சிறப்பு சுய உதவிக்குழு உறுப்பினராக இருக்க வேண்டும். இவர்கள் சிறப்பு சுய உதவிக்குழு தொடங்கி ஓரு ஆண்டிற்கு மேல் தொடர்ந்து உறுப்பினராக இருக்க வேண்டும். வாகன அங்காடிக்கு வாடகை NRLM இணையதளத்தில் பதிந்து செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

    வாகன அங்காடியின் உரிமை மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்தி டமே இருக்கும். அங்காடி நடத்துவதற்கான வாய்ப்பு மட்டுமே பயனாளிக்கு வழங்கப்படும். வாகனத்தை விற்பனை செய்யவோ, வேறு நபருக்கு மாற்றவோ உரிமை இல்லை. வாகனத்தில் ஏற்படும் சிறிய அளவிலான பழுதை பயனாளிகளே மேற்கொள்ள வேண்டும். வாகனத்திற்கு பயனாளியே மின்னேற்றம் (Electric Charge) செய்து பயன்படுத்த வேண்டும். வாகன அங்காடி நடத்த இயலாத பட்சத்தில் மீண்டும் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்திடம் வாகனத்தை எவ்வித பழுதுமின்றி ஒப்படைக்க வேண்டும்.

    விதிமுறைகளை மீறி செயல்படும் உறுப்பினரிடம் இருந்து வாகன அங்காடி திரும்ப பெறப்படும். தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு மேல் வாகனம் இயக்கப்படவில்லை எனில் வாகன அங்காடி திரும்ப பெறப்பட்டு தகுதியான வேறு பயனாளிக்கு வழங்கப்படும்.

    தகுதியுள்ள மாற்றுத்தி றனாளிகள் தங்களது விண்ணப்பங்களை வருகிற 31-ந் தேதிக்குள் திட்ட இயக்குநர், மகளிர் திட்டம், கலெக்டர் அலுவலகம் வளாகம், ராமநாதபுரம் என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள வட்டார இயக்க மேலாண்மை அலகு, (மகளிர் திட்டம்) நகல் களையும் அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஈரோடு மற்றும் கோபி அரசு ஐ.டி.ஐ.யில் புதிய தொழில் பிரிவுகளில் பயிற்சி பெறலாம்.
    • ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தகவல்.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    ஈரோடு மற்றும் கோபி அரசு ஐ.டி.ஐ.யில் எலக்ட்ரீஷியன், பிட்டர், மெசினிஸ்ட், டர்னர், ஒயர்மேன், வெல்டர், டெக்ஸ்டைல்ஸ், மெக்கானிக்கல் மோட்டார் வைக்கிள், ஏ.சி.மெக்கானிக் ஆகிய என்ஜினீயரிங் பாடப்பிரிவும்,

    என்ஜினீயரிங் அல்லாத கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், கட்டிட பட வரைவாளர் தொழில் பிரிவுகள், இண்டஸ்டரி 4.0 திட்டத்தின் கீழ் அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய புதிய தொழில் பிரிவுகளில் பயிற்சி பெறலாம்.

    பயிற்சி பெற 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மற்றும் தோல்வி அடைந்தவர்கள் அரசு ஐ.டி.ஐ.யை நேரில் அணுகலாம்.

    பயிற்சி பெறுவோருக்கு மாதம் 750 ரூபாய் உதவித்தொகை, லேப்டாப், சைக்கிள், சீருடை, பாடப்புத்தகம், காலணி, பஸ் பாஸ் இலவசமாக வழங்கப்படும்.

    அரசு பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை படித்த பெண் பயிற்சியாளர்களுக்கு புதுமை பெண் திட்டத்தில் மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும்.

    பயிற்சி வகுப்புடன் 2 ஆண்டு ஐ.டி.ஐ. பயிற்சி மற்றும் 10-ம் வகுப்புடன் 2 ஆண்டு ஐ.டி.ஐ. பயிற்சி முடித்தவர்களுக்கு பள்ளி கல்வித்துறை மூலம் முறையே 10-ம் வகுப்பு, பிளஸ்-2 வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    பயிற்சியின் போது பிரபல தொழில் நிறுவனங்களில் இன்டர்ன்சி பயிற்சி உதவித்தொ கையுடன் வழங்கப்படும். பிரபல தொழில் நிறுவ னங்கள், மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்யப்படும்.

    ஆன்லைனில் விண்ணப்ப பதிவு கட்டணம் 50 ரூபாய் செலுத்த ஏ.டி.எம். கார்டு, போன் பே, ஜி பே வசதியுடன் வரலாம். ஆவணங்கள் கொண்டு வர வேண்டும்.

    வரும் ஜூன் மாதம் 7-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு ஈரோடு அரசு ஐ.டி.ஐ.யை 0424 2275244, 0424 2270044 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறியலாம்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • சுதந்திர தினத்தையொட்டி சிறந்த சமூக சேவகர், தொண்டு நிறுவனங்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்.
    • மேற்கண்ட தகவலை சிவகங்கை கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதல்-அமைச்சரால் வருகிற 15.8.2023 நடைபெறும் சுதந்திர தின விழாவில் சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த தொண்டு நிறுவனங்களுக்கு சுதந்திர தின விருது வழங்கப்பட உள்ளது. விருது பெறுவதற்கு தகுதியுடைய தமிழக அரசின் https://awards.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து விண்ணப்பங்களை (தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் தலா 2 நகல்கள் மற்றும் புகைப்படம்) சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் 10.6.2023 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    இந்த விருதினை பெற தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்ப்பட்டவராகவும் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூகநலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சமூக சேவை நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். இத்தகைய தொண்டு நிறுவனங்கள் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களாக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆதிதிராவிடர் தொழில் முனைவோர்கள் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.
    • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப் பதாவது:-

    தமிழக அரசின் பட்ஜெட் அறிக்கையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (எஸ்.சி./எஸ்.டி.) தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அம்பேத்கர் வணிக சாம்பியன்ஸ் திட்டம் என்ற புதிய திட்டம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோர்கள் தொழில் தொடங்கும் ஆரம்ப அமைவு கட்டத்தில் எதிர் கொள்ளும் நிதிச்சுமையை தணிப்பது மற்றும் தேவை யான வளங்களைப் பெறு வதை எளிதாக்குவது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

    மேலும் தொழில் முனை வோர்களின் ஒட்டுமொத்த செலவை கணிசமாக குறைத்து தொழில் முனைவோர்கள் தங்கள் வணிகத்தில் ஆர்வமுடன் முதலீடு செய்வதை ஊக்குவிக்கவும் இந்த திட்டம் பேருதவியாக இருக்கும்.

    இந்த திட்டத்தில் எந்திரங்கள் மற்றும் உபகர ணங்களை வாங்குவதற்கான கடனுக்கு 35 சதவீத மூலதன மானியமும், 6 சதவீத வட்டி மானியமும் வழங்க வழி வகை செய்யப்பட்டள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வியாபாரம், சேவை மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்க ளுக்கு விண்ணப்பிக்கலாம். நேரடி விவசாயம் சார்ந்த தொழில்கள் மேற்கொள்ள இந்த திட்டத்தில் வழிவகை இல்லை.

    இந்த திட்டத்தில் புதிய தொழில் ஆரம்பிக்கவும் மற்றும் ஏற்கனவே செயல்படுத்தப்படும் தொழில்களின் விரிவாக்கத்திற்கும் மானிய கடனுதவி வழங்கப்படும். வியாபாரம், சேவை மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு எந்திரங்கள், நிலம், சோதனைக்கருவிகள், கணிணி சார்ந்த பொருட்கள் மற்றும் தொழில் சார்ந்த வாகனங்கள் வாங்கவும் இந்த திட்டத்தில் மானியத்துடன் கடன் வழங்கப்படும்.

    மேற்காணும் திட்டத்தில் பயன்பெற திட்ட அறிக்கை, விலைப்பட்டியல் மற்றும் உரிய ஆவணங்களுடன் www.msmeonline.tn.gov.in/aabcs என்ற இணையதளம் முகவரியில் விண்ணப்பித்து பயனடையலாம்.

    மேலும் கூடுதல் விபரங்க ளுக்கு விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் பொது மேலாளர் அலுவலகம், மாவட்ட தொழில் மையத்தை நேரிலோ அல்லது 89255 34036 என்ற தொலைபேசியிலோ அணுகலாம்.

    இந்த திட்டத்திற்கான மாபெரும் விழிப்புணர்வு முகாம் வருகிற 30-ந் தேதி அன்று மாவட்ட கூட்ட அரங்கில் காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருப்பூர் மாவட்டத்துக்கு 3 வாகன அங்காடி அமைக்க இலக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • பராமரிப்பு செலவை பயனாளியே மேற்கொள்ள வேண்டும்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு ஆண்டு செயல்திட்டத்தின்படி, மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய மதி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் வாகன அங்காடி மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்துக்கு 3 வாகன அங்காடி அமைக்க இலக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அங்காடி அமைக்க விண்ணப்பிக்க, சுயஉதவிக்குழு உறுப்பினராக இருக்க வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் மகளிர் மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்ட, விதவை மகளிர் மாற்றுத்திறனாளிகள், ஆண் மாற்றுத்திறனாளிகளாக இருக்க வேண்டும். சுயஉதவிக்குழு, தேசிய ஊரக வாழ்வாதார இயக்க இணையதளத்தில் பதிவு பெற்றிருக்க வேண்டும். சுயஉதவிக்குழு தொடங்கி ஓராண்டு நிறைவடைந்து இருக்க வேண்டும். தொடர்ந்து ஒருவாரத்துக்கு மேல் வாகன அங்காடியை இயக்காவிட்டால் பறிமுதல் செய்யப்படும். பராமரிப்பு செலவை பயனாளியே மேற்கொள்ள வேண்டும்.

    விண்ணப்பங்களை திட்ட இயக்குனர், மகளிர் திட்டம், அறை எண்.305, மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருப்பூர் என்ற முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ வருகிற 23-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • ராமநாதபுரம் இசை பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
    • தொலைபேசி 04567-220104, 99422 67837, 94420 4310, 97516 74700, 95664 73769, 99941 34886 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடுஅரசுகலைபண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்டஅரசு இசைப்பள்ளி ராமநாதபுரத்தில் கீழ்காணும் பாடப்பிரிவுகளில் சிறந்த இசை ஆசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. குரலிசை (வாய்ப்பாட்டு), பரதநாட்டியம், நாதசுரம், தவில்,தேவாரம், மிருதங்கம், வயலின் போன்ற வகுப்புகள் நடைபெற உள்ளன.

    2023-24-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.வயது வரம்பு 12 முதல் 25 வயது வரைக்கு உட்பட்டவர்கள் சேரலாம். கல்வித் தகுதி குரலிசை, பரதநாட்டியம், தேவாரம், வயலின், மிருதங்கம் பிரிவுகளில் சேர 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாணவர்களும் பரதநாட்டிய பிரிவில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

    பயிற்சி காலம் 3ஆண்டுகள். பயிற்சி கட்டணம் முதலாமாண்டு மாணவர்களுக்கு ரூ.350-ம், 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ.325-ம் சிறப்பு கட்டணமாக வசூலிக்கப்படும். அரசுவழங்கும் சலுகை இலவச பஸ் பயணஅட்டை, கல்வி உதவித்தொகைமாதம் ரூ.400, அரசுமாணவர்விடுதி வசதி அளிக்கப்படும்.

    இசைக்கல்வியில் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் மாணவ-மாணவிகள்தலைமைஆசிரியர் மாவட்டஅரசு இசைப்பள்ளி, எண் 14,கவுரிவிலாஸ் பேலஸ், அரண்மனை ராமநாதபுரம் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி 04567-220104, 99422 67837, 94420 4310, 97516 74700, 95664 73769, 99941 34886 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.

    ×