search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரபாஸ்"

    • இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘லியோ’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. 'லியோ' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    லியோ

    இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக நடிகர் பிரபாஸை வைத்து படம் இயக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இப்படம் இருவரின் திரைப்பயணத்திலும் மிகவும் முக்கியமான படமாக இருக்கும் என்றும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பிற்கு பிறகு இப்படத்தின் பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    • ஓம் ராவத் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஆதிபுருஷ்’.
    • இப்படம் வெளியான நாளில் இருந்து பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.

    இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ள படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளனர்.

    ஆதிபுருஷ் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த 16-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்திற்கு சிலர் ஆதரவும் பலர் கடும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். மேலும், படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் மோசமாக உள்ளதாக நெட்டிசன்கள் பலர் விமர்சனம் செய்திருந்தனர். இப்படம் பல எதிர்ப்புகளை சந்தித்திருந்தாலும் வெளியான ஆறு நாட்களில் உலக அளவில் ரூ. 410 கோடியை வசூல் செய்துள்ளது.

    இந்த நிலையில் 'ஆதிபுருஷ்' படக்குழுவினர் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி அகில இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் மும்பை காவல்துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் "கடந்த ஜூன் 16-ந்தேதி வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் 'ஆதிபுருஷ்' திரைப்படம் பகவான் ராமர், தேவி சீதா மற்றும் ராம பக்தரான அனுமான் ஆகியோரை வணங்கும் இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

    அகில இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் கடிதம் 

    மேலும் இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் தள்ளுபடி விலையில் டிக்கெட்டுகளை விற்பனை செய்து பணம் சம்பாதிக்க முயல்வது ராமாயணத்தின் மீதான எங்கள் நம்பிக்கை குறித்து தவறான பிம்பத்தை ஏற்படுத்துகிறது. இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான டி-சீரிஸ், எழுத்தாளர் மனோஜ் முண்டாசிர், இயக்குனர் ஓம் ராவத் ஆகியோர் ராமாயணத்தை கேலி செய்யும் வகையில் கதைக்களத்தையும், வசனங்களையும், உடை அலங்காரங்களையும் மாற்றி அமைத்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது ஆகும்.

    இந்து மதம் மற்றும் சனாதன தர்மத்தை பின்பற்றுபவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் படத்தின் காட்சியமைப்புகள் இடம்பெற்றுள்ளன. நமக்கு பரீட்சையமான ராமாயண கதையை 'ஆதிபுருஷ்' படக்குழுவினர் தங்கள் ரசனைக்கு ஏற்ப முற்றிலுமாக திரித்துள்ளனர். எனவே ஆதிபுருஷ் படத்தின் தயாரிப்பாளர் டி-சீரிஸ் பூஷன் குமார், இயக்குனர் ஓம் ராவத் மற்றும் எழுத்தாளர் மனோஜ் முண்டாசிர் சுக்லா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்." இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.




    • தமிழ், தெலுங்கு, மலையாளம் என படங்களில் நடித்து வருபவர் ஸ்ரேயா ரெட்டி.
    • இவர் தற்போது ‘சலார்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    கடந்த 2002-ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான 'சாமுராய்' படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ரேயா ரெட்டி. இதைத்தொடர்ந்து விஷால் நடிப்பில் வெளியான 'திமிரு' படத்தில் இவர் நடித்திருந்த வில்லி கதாபாத்திரம் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது.


    தொடர்ந்து, வெயில், காஞ்சிவரம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். கடந்த 2008-ம் ஆண்டு விஷாலின் சகோதரர் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார். மேலும் விஷாலின் தோரணை, வெடி உள்ளிட்ட படங்களையும் ஸ்ரேயா ரெட்டி தயாரித்துள்ளார்.

    இவர் தற்போது இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்து வரும் 'சலார்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்நிலையில், இந்த படத்தில் தன்னுடன் பணியாற்றிய உதவியாளர்களுக்கு தங்க நாணயங்களை ஸ்ரேயா ரெட்டி பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘ஆதிபுருஷ்’.
    • இப்படம் கடந்த 16-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

    இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ள படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளனர்.


    ஆதிபுருஷ் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த 16-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்திற்கு சிலர் ஆதரவும் பலர் கடும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். மேலும், படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் மோசமாக உள்ளதாக நெட்டிசன்கள் பலர் விமர்சனம் செய்திருந்தனர்.


    ஆதிபுருஷ் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஆதிபுருஷ்' திரைப்படம் வெளியான ஆறு நாட்களில் உலக அளவில் ரூ.410 கோடியை வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.




    • பிரபாஸ், சயீப் அலிகான், கீர்த்தி சனோன் நடிப்பில் கடந்த 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் “ஆதிபுருஷ்”.
    • இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் அதே சமயத்தில் எதிர்பார்ப்பும் தொடர்சியாக கிளம்பி வருகிறது.

    இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து வெளியான படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடிப்பில் கடந்த 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் அதே சமயத்தில் எதிர்பார்ப்பும் தொடர்சியாக கிளம்பி வருகிறது. இப்படம் ரூ.300 கோடி வசூலை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    இப்படத்தில் சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்கக்கோரி இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்திலும் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், ஆதிபுருஷ் திரைப்படத்தை உடனே தடை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு அனைத்து இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

    அந்த கடிதத்தில் "ஆதிபுருஷ் படத்தில் ராமர், அனுமனை விடியோ கேம் கதாபாத்திரம் போல சித்தரித்தும் அவதூறு செய்யும் வகையில் படத்தில் வசனம் இடம்பெற்றிருப்பது உலகத்தில் உள்ள இந்தியர்கள் மனதை புண்படுத்துகிறது. சனாதன தர்மத்தை அவமதிக்கு இந்த படத்தை உடனே தடை செய்ய வேண்டும் என்றும் ஓடிடி தளங்களில் ஆதிபுருஷ் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கடித்ததில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆதிபுருஷ் படத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.


    • இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சலார்’.
    • இப்படம் வருகிற செப்டம்பர் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    கே.ஜி.எப். திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக 'சலார்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



    கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் 'சலார்' படத்தையும் தயாரிக்கிறது. இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகவுள்ளது. சலார் படக்குழுவினருக்கு நடிகர் பிரபாஸ் தலா ரூ. 10,000 அன்பளிப்பாக கொடுத்துள்ளதாக கூறப்பட்டது.



    இந்நிலையில் சலார் படத்தின் டீசர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்ட்தின் டீசர் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. பெரும் எதிர்பாப்பில் உருவாகி வரும் சலார் திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஆதிபுருஷ் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.
    • இப்படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ள படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளனர். ஆதிபுருஷ் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியானது. இது தமிழ்நாடு மற்றும் ஆந்திராவின் பல்வேறு இடங்களில் அதிகாலை காட்சிகளையும் திரையிடப்பட்டது.



    இந்நிலையில் இப்படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் வெளியான இரண்டு நாட்களில் ரூ.240 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படம் வெளியான முதல் நாளில் 140 கோடி ரூபாயும், அடுத்த நாளில் ரூ.100 கோடி ரூபாயும் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் அடுத்தடுத்த நாட்களில் ரூ.300 கோடியை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சலார்’.
    • இப்படம் வருகிற செப்டம்பர் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    கே.ஜி.எப். திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக 'சலார்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


    கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் 'சலார்' படத்தையும் தயாரிக்கிறது. இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், நடிகர் பிரபாஸ் படக்குழுவினருக்கு தலா ரூ. 10,000 அன்பளிப்பாக கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    • பிரபாஸ் நடித்த 'ஆதிபுருஷ்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
    • இப்படத்தின் வெளியீட்டை பிரபாஸ் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

    இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்'. இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.


    'ஆதிபுருஷ்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் இன்று (ஜுன் 16-ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படம் வெளியான தியேட்டர்களில் பிரபாஸ் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். தங்களின் அசைக்க முடியாத ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், பிரபாசின் தீவிர ரசிகர்கள் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள யெம்மிகனூரில் மாட்டு வண்டி பேரணி நடத்தினர்.


    பேரணி நடத்திய ரசிகர்கள்

    அதில் 'ஆதிபுருஷ்' படத்தில் நடித்துள்ள பிரபாசின் போஸ்டர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பிரபாஸ் ராமர் வேடத்தில் இருக்கும் பிரமாண்ட கட் அவுட்டுகள் மாட்டு வண்டியில் இடம் பெற்றிருந்தன. பிரபாஸைப் புகழ்ந்து ரசிர்கள் கோஷம் எழுப்பினர். பெரிய திரையில் தெய்வீக ராமர் கதாப்பாத்திரத்தை சித்தரிக்க அவர்தான் சரியான தேர்வு. வாழும் கடவுள் என்று ஆர்வத்துடன் முழக்கங்களை எழுப்பினர்.

    • இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’.
    • இப்படம் இன்று பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.

    இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்'. இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.

    'ஆதிபுருஷ்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் இன்று (ஜுன் 16-ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.


    நெட்டிசன்கள் பகிர்ந்த காட்சிகள்

    இந்நிலையில், 'ஆதிபுருஷ்' படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். 500 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவான படமா இது..? ஒரு படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு 'ஆதிபுருஷ்' திரைப்படம் எடுத்துக்காட்டாக உள்ளது என்று சமூக வலைதளத்தில் காட்சிகளை பகிர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

    • ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ள 'ஆதிபுருஷ்' இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
    • இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர்.

    இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.

    தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் இன்று (ஜுன் 16-ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்நிலையில் திரையரங்குகளில் வெளியான 'ஆதிபுருஷ்' படத்தின் காட்சியின்போது திடீரென திரையரங்கிற்குள் குரங்கு நுழைந்ததாக தெரிகிறது. குரங்கை கண்ட ரசிகர்கள் ஜெய் ஸ்ரீ ராம் பாடலை பாடி ஆரவாரம் செய்துள்ளனர். 

    • தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ஆம் தேதி திரையரங்குகளில் ஆதிபுருஷ் வெளியாக உள்ளது.
    • இப்படத்தில் பிரபாஸ் ராமரை போல் இல்லை, கர்ணனைப் போல இருக்கிறார் என்று நடிகை கஸ்தூரி விமர்சனம் செய்துள்ளார்.

    இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆதிபுருஷ் படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருந்தனர்.


    ஆதிபுருஷ்

    ஆதிபுருஷ்


    இந்த படம் ஆரம்பத்தில் இருந்தே விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. ஆதிபுருஷ் திரைப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு அக்டோபர் 2ந் தேதி காந்தி ஜெயந்தி அன்று உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தி சராயு நதிக்கரையில் வெளியிடப்பட்டது. ஆனால், டீசரை பார்த்த நெட்டிசன்ஸ், படத்தின் கிராபிக்ஸ், கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. தொடர்ந்து வெளியான போஸ்டர்களும் விமர்சனத்திற்கு உள்ளானது.


    ஆதிபுருஷ்

    ஆதிபுருஷ்


    ஆதிபுருஷ் திரைப்படம் வருகிற ஜூன் 16-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே எஞ்சி உள்ளதால் அதன் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் வெளியான இறுதி டிரெய்லரும் விமர்சனத்திற்கு உள்ளானது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு பிரபாஸ் அண்மையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று தரிசனம் மேற்கொண்டார்.


    ஆதிபுருஷ்

    ஆதிபுருஷ்


    மேலும் இயக்குனர் ஓம் ராவத் மற்றும் கதாநாயகி கீர்த்தி சனோன் உள்ளிட்டோரும் திருப்பதி சென்று தரிசனம் செய்த நிலையில், கீர்த்தி சனோனை வழியனுப்பும்போது இயக்குனர் அவருக்கு முத்தம் கொடுத்ததால் அது சர்ச்சையானது. இதற்கு கோவிலுக்கு முன்பு இப்படி முத்தமிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது என பாஜக கண்டனம் தெரிவித்தது.


    கஸ்தூரி

    கஸ்தூரி

    இந்நிலையில் நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளத்தின் வாயிலாக கேள்வி ஒன்று எழுப்பியுள்ளார். அதில், "ராமர் மற்றும் லக்ஷ்மணன் மீசை மற்றும் தாடியுடன் சித்தரிக்கப்படும் பாரம்பரியம் ஏதேனும் உள்ளதா? ஏன் இந்த குழப்பமான புறப்பாடு? குறிப்பாக பிரபாஸ் இருக்கும் தெலுங்கு திரையுலகில், ஸ்ரீராமன் கதாபாத்திரத்தில் லெஜண்ட் நடிகர்கள் கச்சிதமாக நடித்துள்ளனர். ஆனால் இந்த போஸ்டரில் பிரபாஸை பார்க்கையில் ராமரை போல் தோன்றுவதற்கு பதில் கர்ணனைப் போல இருக்கிறார்" என்று பதிவிட்டுள்ளார்.


    ×