என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பட்டாசு குடோன் வெடிவிபத்து"
- காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவிலுக்கு செல்லும் சாலையில் வாட்டர் கம்பெனி வைத்து தொழில் செய்து வருகிறேன்.
- புகார் தொடர்பாக கிருஷ்ணகிரி டவுன் போலீசார் தீ விபத்து பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பழையபேட்டையில் நடந்த பட்டாசு குடோன் விபத்தில் 9 பேர் பலியானார்கள். 15 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில் விபத்து குறித்து கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையை சேர்ந்த அந்தோணி ஆரோக்கியராஜ் (வயது30) என்பவர் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
நான் பழையபேட்டை நேதாஜி சாலையில் எனது குடும்பத்துடன் வசித்து வருகிறேன். காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவிலுக்கு செல்லும் சாலையில் வாட்டர் கம்பெனி வைத்து தொழில் செய்து வருகிறேன். எனக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.
கடந்த 29-ந்தேதி அன்று எனது வாட்டர் கம்பெனியில் இருந்த போது டமார் என்று பெரிய அளவில் சத்தம் கேட்டது. நான் சென்று பார்த்த போது அருகில் ராஜேஸ்வரி நடத்தி வந்த ஓட்டல் கடையின் சுவர் இடிந்து விழுந்து விட்டது.
நானும், அருகில் இருந்த முருகேசன், எனது மாமா அந்தோணி ஆரோக்கியராஜ் ஆகியோர் தொலைவில் நின்று பார்த்த போது ராஜேஸ்வரியின் ஓட்டல் கடை அருகில் இருந்த கடைகள், ஒவ்வொன்றாக இடிந்து விழுந்தது. மேலும் பட்டாசு கடையில் வெடிகள் வெடித்து புகை மண்டலமாக இருந்தது.
ஒரே அலறல் சத்தம் கேட்டது. கடைகள் வரிசையாக இடிந்து தரைமட்டம் ஆகி விட்டது.
இதில் இம்ரான், இப்ராஹிம் கலிவுல்லா, ருத்திகா, ருத்தேஷ், ரவி, ராஜேஸ்வரி, சிவராஜ், ஜேம்ஸ், சரசு ஆகிய 9 பேர் இறந்தது தெரிய வந்தது.
இது பற்றி விசாரித்த போது ராஜேஸ்வரி நடத்தி வந்த ஓட்டலில் சிலிண்டர் வெடித்ததில் பட்டாசு கடைக்கு தீ பரவி பட்டாசுகள் வெடித்து கடைகள் சேதமடைந்து அனைத்து கடைகளும் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த புகார் தொடர்பாக கிருஷ்ணகிரி டவுன் போலீசார் தீ விபத்து பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பட்டாசு குடோனில் நேற்று மதியம் திடீரென வெடிபொருள் தீப்பிடித்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் அந்த குடோன் இடிந்து தரைமட்டமானது.
- இந்த வெடிசத்தம் குண்டு வெடித்தது போல் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு கேட்டது. இதனால் அந்த பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர்.
கடலூர்:
கடலூர் அருகே பெரியகாரைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் அரிசி பெரியாங்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட எம்.புதூரில் தனது மாமனார் ஸ்ரீதர் என்பவருக்கு சொந்தமான இடத்தில் நாட்டு பட்டாசு தயாரிக்கும் குடோன் வைத்துள்ளார்.
இந்த குடோனில் நாட்டு வெடி, வாண வெடிகள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த பட்டாசு குடோனில் நேற்று மதியம் திடீரென வெடிபொருள் தீப்பிடித்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் அந்த குடோன் இடிந்து தரைமட்டமானது. இந்த வெடிசத்தம் குண்டு வெடித்தது போல் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு கேட்டது. இதனால் அந்த பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்தனர். அப்போது பட்டாசு குடோனில் வேலை பார்த்த பெரியகாரைக்காடு பகுதியை சேர்ந்த அகோரமூர்த்தி என்பவரின் மனைவி சித்ரா (வயது 37), வான்பாக்கத்தை சேர்ந்த சார்லஸ் மனைவி அம்பிகா (,50), மூலக்குப்பம் பகுதியை சேர்ந்த சத்தியராஜ் (32) ஆகியோர் உடல்சிதறி பலியானார்கள்.
மேலும் இந்த விபத்தில் எம்.புதூரை சேர்ந்த வைத்தியலிங்கம், பெரியகாரைக்காடு பகுதியை சேர்ந்த வசந்தா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இவர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி வசந்தா இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
ஆஸ்பத்திரியில் வைத்தியலிங்கத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மோகன்ராஜ் மற்றும் அவரது மனைவி வனிதாவை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாதது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்