search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விநாயகர் சிலை"

    • அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என கலெக்டர் ஆஷா அஜீத் வலியுறுத்தினார்.
    • அரசின் அறிவுரையின்படி பொது மக்கள் கடைபிடித்திடல் வேண்டும்.

    சிவகங்கை

    முதலமைச்சரின் சீரிய நல்லாட்சியில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்றுதொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும் போது, விநாயகர் சிலை களை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் வழிகாட்டு தல்களின் படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.

    அதில், கீழ்கண்ட நடைமுறைகளை அரசின் அறிவுரையின்படி பொது மக்கள் கடைபிடித்திடல் வேண்டும்.

    களிமண்ணால் செய்யப் பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப்பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவை யற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட் களால் மட்டுமே செய்யப் பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப் படுகிறது.

    சிலைகளின் ஆபர ணங்கள் தயாரிப்ப தற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப் படலாம்.

    ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட் களை பயன்படுத்த கண்டிப் பாக அனுமதிக்கப்படாது. நீர் நிலைகள் மாசு படுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள்/பந்தல்கள்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.

    சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத இரசாயன சாயம்/எண்ணை வண்ணப் பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சு களை பயன்படுத்தக்கூடாது, மாற்றாக சுற்றுச்சூழலுகுகந்த நீர் சார்ந்த, மக்கக் கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

    சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு இரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும்.

    மேலும், விநாயகர் சிலைகளை சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள சிவகங்கை தெப்பக்குளம், மானாமதுரை, ஆலங்ககுளம், இளை யான்குடி சாலை கிராமம் டேங்க், சிவன்கோவில் ஊரணி, சிலம்பனி ஊரணி, சிங்கம்புணரி ஊரணி இடங்களில் மட்டும் தமிழ் நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.

    விநாயக சதுர்த்தி விழாவினை சூற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டா டும்படி பொதுமக்கள் கொண்டாடிட வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகி யோர்களை அணுகலாம்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.

    • மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டு உள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
    • சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.

    சென்னை:

    சென்னை மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் ஆட்சியில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்றுதொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச் சூழல் பாதுகாப்பில் மக்க ளாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடி நீர் ஆதாரத்தை தருகிறது.

    நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி (www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது) மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டு உள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    எனவே, பொது மக்களுக்கு கீழ்க்கண்டவாறு வேண்டுகோள் விடப்படுகிறது.

    * களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப்பாரிஸ் (பி.ஒ.பி.), பிளாஸ்டிக் மற்றும் தெர்மா கோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச் சூழலை பாதிக்காத மூலப் பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது.

    * சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.

    * ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. நீர் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச் சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள், பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.

    * சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணை வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது, மாற்றாக சுற்றுச்சூழலுக்கு தகுந்த நீர் சார்ந்த, மக்கக் கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

    * சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப் படவேண்டும்.

    * விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ் நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.

    விநாயக சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர், காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • போக்கு வரத்தை ஒழுங்கு படுத்துதல் முறையாக கடை பிடிக்க வேண்டும்.
    • ஒலி பெருக்கி உரிமம் அனுமதி பெற வேண்டும்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜா ராம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    கடலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வின்போது, பொது அமைதி, பொது பாதுகாப்பு, போக்கு வரத்தை ஒழுங்கு படுத்துதல் முறையாக கடை பிடிக்க வேண்டும். விநா யகர் சிலையை நிறுவ விரும்பும் எந்த ஒரு அமைப் பாளரும் பரிந்துரைக்கப் பட்ட படிவத்தில் முறையே வருவாய் கோட்டாட்சியர், துணை கலெக்டரிடம் விண்ணப்பிக்க வேண்டும். சிலை நிறுவும் இடத்தின் நில உரிமையாளரின் சம்மத கடிதம், சிலை நிறுவும் இடம் பொது இடமாக இருந்தால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைகள் அல்லது சம்பந்தப்பட்ட துறையிடம் தடையில்லா சான்று பெறப்பட வேண்டும்.

    ஒலி பெருக்கி பயன் படுத்தும் உரிமமானது சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய அலுவலரிடமிருந்து ஒலி பெருக்கி உரிமம் அனுமதி பெற வேண்டும். ஒலி பெருக்கியினை பயன் படுத்தும்போது ஒலியின் அளவு பரிந்துரைக்கப்பட்ட டெசிபல் அளவு வரம்பினை மிகாமல் பயன்படுத்த வேண்டும். சிலை அமைப்பா ளர்கள் தீப்பற்றக்கூடிய பொருட்களை கட்டு மானத்திற்கு பயன்படுத்து வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். தற்காலிக கட்ட மைப்புக்கள் பந்தல்களில் எளிதில் உள்ளே நுழையவும், வெளியேறும் வழிகளை அமைத்தல் மிக அவசியம். தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகளிடமிருந்து தடை யில்லா சான்று பெற்று சிலையை நிறுவ வேண்டும். மின்சாரம் வழங்குவதற்கான ஆதாரத்தைக் குறிக்கும் கடிதம் மற்றும் மின்சாரம் தற்காலிகமாக வழங்கப்பட்ட தற்கான ஆதாரம் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புதிய விநாயகர் சிலை பிரதிஷ்டை விழா நடந்தது.
    • வரசித்தி விநாயகருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    மதுரை

    மதுரை ஹார்விபட்டி எஸ்.ஆர்.வி.நகர் பாரதிதாசன் தெரு விவேகானந்தர் தெரு சந்திப்பில் உள்ளது வர சித்திவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள வன்னி மரத்தடியில் வலம்புரி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் முதல் கால யாக சாலை பூஜை நடந்தது.

    வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க வன்னி மரத்தடியில் வலம்புரி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யபட்டது. யாக சாலை பூஜைகள், வாசனை திரவியம், பாலாபிஷேகம் உள்பட அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் காட்சியளித்தார். வரசித்தி விநாயகருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அன்னதானம் பக்தர்களூக்கு வழங்கபட்டது.

    • பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து மாசுகட்டுப்பாட்டு வாரியம் வழிமுறைகள் அறிவித்து உள்ளது.
    • விநாயகர் சிலை அமைக்கும் இடத்தில் எளிதில் தீப்பிடிக்காத தகட்டால் குடில்கள் நிறுவப்பட வேண்டும்.

    பொன்னேரி:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொது இடங்களில் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படும் விநாயகர் சிலைகளை பின்னர் நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். இதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து மாசுகட்டுப்பாட்டு வாரியம் வழிமுறைகள் அறிவித்து உள்ளது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொன்னேரி பகுதியில் 2 அடிமுதல் 10 அடி உயரம் வரையிலான 500-க்கும் மேற்பட்ட சிலைகள் பல வண்ணங்களில் தயார் நிலையில் உள்ளன. பொன்னேரி பகுதியில் மட்டும் 55 விநாயகர் சிலைகள் பொது இடத்தில் வைக்க அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் விநாயகர் சிலை வழிபாடு மற்றும் அதனை நீர் நிலைகளில் கரைப்பது தொடர்பாக அதன் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் இந்து அமைப்பினருடன் ஆலோசனை கூட்டம் பொன்னேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னத்துரை தலைமை தாங்கினார். அப்போது போலீசார் கூறும்போது, விநாயகர் சிலை களிமண்ணால் செய்யப்பட்டிருக்க வேண்டும். மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை செய்துள்ள பொருட்களை உபயோகிக்க கூடாது. விநாயகர் சிலை அமைக்கும் இடத்தில் எளிதில் தீப்பிடிக்காத தகட்டால் குடில்கள் நிறுவப்பட வேண்டும் . எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது. பொது இடங்களில் நிறுவப்படும் சிலைகள் 5 நாட்களுக்குள் குறிப்பிட்ட இடத்தில் கரைக்க வேண்டும். விநாயகர் சிலையை கரைக்க அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் எடுத்துச் செல்ல வேண்டும். விநாயகர் சிலையை கரைக்க மினி லாரி டிராக்டர் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். மாட்டு வண்டி, மீன் பாடி வண்டி ஆட்டோகளில் எடுத்துச் செல்லக்கூடாது. சிலைகளை எடுத்து செல்லும் இடங்களில் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை. பழவேற்காடு கடலில் கரைக்க விநாயகர் சிலை கொண்டு செல்லும் வாகனங்களில் அதிகமான ஆட்களை ஏற்றக் கூடாது என்றனர். இதில் காவல் உதவி ஆய்வாளர்கள் வெங்கடேசன், கலைத்தோழன் மற்றும் விநாயகர் சிலை குழு அமைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சம்மந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் முன்னிலை வகித்தார்.
    • சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டிற்கு பயன்படுத்த வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சம்மந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசியதாவது:-

    விநாயகர் சிலை

    விநாயகர் சிலை வைப்பதற்கு சம்பந்தப்பட்ட சிலை அமைப்பாளர்கள் ஆர்.டி.ஓ.விடம் முன்கூட்டியே தடையில்லா சான்று பெற விண்ணப்பிக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டிற்கு பயன்படுத்த வேண்டும். தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆப் பாரீஸ் போன்ற மாசு விளைவிக்கும் ரசாயணங்களை பயன்படுத்துதலை தவிர்க்க வேண்டும்.

    சிலை அமைப்பவர்கள் தற்காலிக கட்டுமானங்களை தீப்பற்றாத உபகரணங்கள் கொண்டு அமைத்திட வேண்டும். சிலை வழிபாடு மேற்கொள்வதற்கான பகுதிகளில் எவ்வித இடையூறும் இல்லாதவாறு போதிய அளவில் அகலமான பந்தல்கள் அமைத்திட வேண்டும். விநாயகர் சிலையின் உயரத்தினை 10 அடிக்கு மேல் உயர்த்தி அமைக்க கூடாது.

    மதம் தொடர்பான இடங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் சிலை அமைப்பதினை தவிர்க்க வேண்டும். ஒலிபெருக்கிகள் காலை, மாலை ஆகிய இரு நேரங்களில் வழிபாட்டு நேரங்களில் மட்டும் பயன்படுத்த வேண்டும். தடைசெய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளை தவிர்க்க வேண்டும்.

    விநாயகர் சிலைகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் அடையாளமிடப்பட்டு குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்திட வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் குமாரபாளையம், பள்ளிபாளையம், மோகனூர், பரமத்தி வேலூர் ஆகிய 4 இடங்களில் உள்ள காவிரி ஆற்று பகுதிகளில் படித்துறைகளில் மட்டுமே சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    விநாயகர் சிலைகள் நிறுவப்பட்ட நாளிலிருந்து 5 நாட்களில் வழிபாடுகள் முடிவுற்று சிலையினை அனுமதிக்கப்பட்ட இடங்களில் கரைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் அறிவுரைப்படி அனைவரும் நடந்துகொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்து முன்னனி அமைப்பாளர்கள், பி.ஜே.பி கட்சியினர் தனியாக சிலை வைப்போர் என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
    • சுகாதாரத்துறை உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஆலோசித்து கேட்ட வசதிகளை ஏற்படுத்தி தருவதாக கூறினர்.

    மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், கல்பாக்கம், திருப்போரூர் சுற்றுவட்டார பகுதிகளில் வரும் 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கு வைக்கப்படும் சிலைகள் மற்றும் அதை கடலில் கரைக்கும் இடத்தில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து, இன்று மாமல்லபுரத்தில் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதில் பகுதி காவல் ஆய்வாளர்கள், இந்து முன்னனி அமைப்பாளர்கள், பி.ஜே.பி கட்சியினர் தனியாக சிலை வைப்போர் என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    ஆலோசனை கூட்டத்தில் விநாயகர் சிலைகள் வைக்கும் நபர்கள் அதை வாங்க செல்லும்போது ஊர்வலமாக செல்லக்கூடாது, சிலைகளை வைக்கும் பகுதி பாதுகாப்பாக இருக்க வேண்டும், பிற மதத்தினர் பகுதியில் இடையூறு செய்ய கூடாது, உயர்நீதிமன்ற உத்தரவின் படி பதாகைகள் வைக்க கூடாது, பிளாஸ்டிக், ரசாயனம் கலந்த சிலைகள் வைக்க கூடாது, நன்கொடை என்ற பெயரில் அடாவடி செய்யக்கூடாது, சிலைகளை கரைப்பதற்கு கடற்கரை வரும்போது மது அருந்தி விட்டு கோஷங்கள் போடக்கூடாது, போலீசார் கூறும் பாதை வழியாக மட்டுமே சிலைகளை எடுத்து வரவேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர்.

    சிலைகள் வைக்கும் பக்தர்கள் அந்த சிலைகளை கரைக்க மாமல்லபுரம் கடற்கரை வரும்போது தங்களுக்கு குடிநீர், கழிப்பறை, கிரேன், மருத்துவ மையம், ஆம்புலன்ஸ் வசதி உள்ளிட்ட வசதிகள் தேவை என போலீசாரிடம் கோரிக்கை வைத்தனர்.

    போலீசார் அவர்களிடம் வருவாய்துறை, மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம், சுகாதாரத்துறை உள்ளிட்டோரிடம் ஆலோசித்து கேட்ட வசதிகளை ஏற்படுத்தி தருவதாக கூறினர்.

    • புதிய கட்டுப்பாடுகள்
    • பெட்டி வடிவிலான ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டும்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பாக நடைபெறுவதை உறுதி செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் விநாயகர் சிலை நிறுவிட சம்மந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும் விண்ணப்பத்துடன் சிலை நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் தனியார் இடமாக இருப்பின் நில உரிமையாளர் இசைவுக்கடிதமும், பொது இடமாக இருப்பின் சம்பந்தப்பட்ட துறையின் ஆட்சேபணையில்லாச் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

    தீப்பற்றக்கூடிய பொருட்கள் கொட்டகைக்கு உட்பகுதியில் வைக்கக் கூடாது. விநாயகர் சதுர்த்தி அன்று நிறுவ உத்தேசி க்கப்பட்டுள்ள சிலைகள் அதன் அடிப்பாகம் உட்பட மொத்தம் 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    மாற்று மதத்தினரின் வழிபாட்டுத்தலங்கள் மருத்துவமனைகள்,கல்வி நிறுவனங்கள் அருகாமை யில் சிலைகள் அமைக்க க்கூடாது. கூம்பு வடிவ ஒலிபெருக்கி அமைப்பது தவிர்த்து பெட்டி வடிவிலான ஒலிபெரு க்கிகளை பயன்படுத்த வேண்டும்.

    இவ்விழா தொடர்பாக கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பின் அவற்றின் ஒலி அளவும் அனுமதிக்கப்பட்ட அளவிற்குள்ளேயே இருத்தல் வேண்டும். விழாக்குழுவினர் சட்டத்திற்கு புறம்பான வகையில் மின்சாரத்தினை பயன்படுத்துவதை தவிர்க்க உரிய கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். விழாக்குழுவினர் சார்பாக இரு தன்னார்வ லர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணி மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். மற்ற மதத்தினர்களின் வழிபாட்டினை, நம்பிக்கை களை இழிவுபடுத்தும் வகையில் கோஷங்கள் எழுப்ப கூடாது.

    5 நாளில் கரைப்பு

    சிலை நிறுவப்பட்ட நாளிலிருந்து 5 நாட்களுக்குள் சிலைகள் கரைப்பதற்கு விழாக்குழுவினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலைகள் கரைப்பதற்கான ஊர்வலங்கள் காவல் துறை யினரால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே சென்று கரைக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    • கரைக்கும் இடங்கள் அறிவிப்பு
    • கலெக்டர் தகவல்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவ ட்டத்தில் தாமரைக்குளம், சிங்காரப்பேட்டை ஏரி, கோனேரிராயன் குளம், ஐந்து கண் வாராபதி, பூமா செட்டிகுளம், போளூர் ஏரி, கூர் ஏரி ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்கலாம்.

    சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருட்களால் செய்ய ப்பட்ட விநாயகர் சிலைகள் மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும். சிலைகளை தயாரிக்க உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை களை பயன்படுத்தலாம். ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கூடாது.

    சிலைகளுக்கு வர்ணம் பூச நீர் சார்ந்த, மக்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு அணிவிக்கும் அலங்கார ஆடைகள் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட ஆடைகளை மட்டும் அணிவிக்க வேண்டும்.

    மாவட்ட நிர்வாகத்தால் கண்டறியப்பட்ட இடங்களில் மட்டுமே மாசுக்கட்டு ப்பாட்டு வாரி யத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்படும்.

    மாவட்ட மக்கள் அனைவரும் விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்று ச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

    • ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது.
    • இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்

    திருவள்ளூர்:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீதிகளில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தி விட்டு அதனை நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் ரசாயனம் கலப்பு இல்லாமல் விநாயகர் சிலைகளை செய்யவும், அதனை கரைக்கும் இடங்கள் குறித்தும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது.

    இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் 16 ஏரி, குளங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் உத்தரவிட்டு உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப்பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மா கோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருட்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும். சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்பட லாம்.

    ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. நீர் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள்/பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.

    சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம்/எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது, மாற்றாக சுற்றுச்சூழலுகுகந்த நீர் சார்ந்த / மக்கக்கூடிய / நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

    விநாயகர் சிலைகளை கரைக்க மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் நகர் ஏரி (புட்லூர் ஏரி), கூவம் (ஈசா ஏரி) மப்பேடு, திருமழிசை, வெள்ளவேடு, ஊத்து கோடை குளம், சித்தேரி, ஊத்துக்கோட்டை, கொசஸ்தலையாறு, ஊத்துக்கோட்டை, காந்தி ரோடு குளம், திருத்தணி, வண்ணான் குளம், ஆர்.கே.பேட்டை, கரிம்பேடு குளம், பள்ளிப்பட்டு, பாண்டரவேடு ஏரி, பொதட்டூர்பேட்டை, பராசக்தி நகர் குளம், திருத்தணி, கனகமாசத்திரம், குளம் புலிகாட் ஏரி, திருப்பாலை வனம், ஏழு கண்பாலம், கும்மிடிப்பூண்டி, பக்கிங்காம் கால்வாய், காக்களூர் ஏரி, திருவள்ளூர் ஆகிய 16 ஏரி, குளங்களில் மட்டுமே அனுமதிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் சிலைகள் கரைக்கும் இடங்கள் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்.
    • கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக் டர் சங்கீதா வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக முதலமைச்சரின் சீரிய நல்லாட்சியில் சுற்றுச் சூழலை பாதுகாப்பதில் தொன்று தொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூ–ழல் பாதுகாப்பில் மக்களா–கிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடி–நீர் ஆதாரத்தை தருகி–றது.

    நீர் நிலைகளை பாதுகாக் கும் வகையில் வருகிற விநா–யகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநா–யகர் சிலைகளை நீர் நிலைக–ளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வழிகாட்டுதல்களின்படி (www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது) மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங் க–ளில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாது–காக்க ஒத்துழைப்பு வழங்கு–மாறு கேட்டுக்கொள் கிறேன்.

    எனவே, பொதுமக்கள் களிமண்ணால் செய்யப்பட் டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப்பாரிஸ் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்ற துமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட் களால் மட்டுமே செய்யப் பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும். சிலைகளின் ஆபரணங் கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப் படலாம். மேலும், சிலை களை பளபளப்பாக மாற்று வதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப் படலாம்.

    ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர் மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. நீர் நிலைகள் மாசு படுவதை தடுக்கும் பொருட்டு, வைக் கோல் போன்ற சுற்றுச்சூழ லுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள், பந்தல் கள்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.

    சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணை வண்ணப்பூச்சு களை கண்டிப்பாக பயன்ப டுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப் படையாக கொண்ட வண் ணப்பூச்சுகளை பயன்ப–டுத்தக்கூடாது, மாற்றாக சுற்றுச்சூழலுகுகந்த நீர் சார்ந்த, மட்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங் களை மட்டுமே பயன்ப டுத்தப்பட வேண்டும்.

    சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு இரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட் கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட் டுமே பயன்படுத்தப்பட வேண்டும். விநாயகர் சிலை களை மாவட்ட நிர்வாகத்தி னால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைக ளின்படி கரைக்க அனு மதிக்கப்படும். மதுரை மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கீழ்வரும் நீர் நிலைகளில் கரைக்கலாம்.

    மதுரை வைகை, கீழ் தோப்பு, ஒத்தக்கடை குளம், வாடிப்பட்டி, குமாரம் கண்மாய், மேலக்கால், அய்ய னார் கோவில் ஊரணி, குண்டாறு, மறவன்குளம் கண்மாய், மொட்டைக்குளம், சாப்டூர் கண்மாய், தேவன் குறிச்சி கண்மாய், மண்கட்டி தெப்பக்குளம், வைகை தைக்கால் பாலம், திருப்ப–ரங்குன்றம் செவந்திக்குளம் கண்மாய், அவனியாபுரம் அயன் பாப்பாகுடி கண் மாய், திருமங்கலம் சிவரக் கோட்டை கமண்டலநதி, மேலூர் கொட்டாம்பட்டி சிவன் கோவில் தெப்பம் ஆகிய இடங்களில் கரைக்க–லாம்.

    விநாயகர் சதுர்த்தி விழா வினை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டா–டும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ள ப்படுகி–றார்கள். மேலும் விபரங்க–ளுக்கு மாவட்ட கலெக்டர், மதுரை காவல் துறை கண் காணிப்பாளர், மதுரை மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை அணுகலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • பிரதிஷ்டை செய்ய கட்டுப்பாடு
    • ஒரு அடி முதல் 7 அடி வரை உயரத்திற்கு பல்வேறு வடிவிலான விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் :

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி விழாவும் ஒன்றாகும். குமரி மாவட்டத்தில் விநாய கர் சதுர்த்தி விழா விமர்சை யாக கொண்டா டப்படுவது வழக்கம்.

    இந்து முன்னணி, இந்து மகா சபா, சிவசேனா, பாரதிய ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்ப டும். விநாயகர் சதுர்த்தி யையொட்டி தற்பொழுது இரணியல் கண்ணாட்டு விளை, சுங்கான்கடை பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாராகி வருகிறது. ஒரு அடி முதல் 7 அடி வரை உயரத்திற்கு பல்வேறு வடிவிலான விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டுள்ளது.

    அன்ன விநாயகர், கற்பக விநாயகர், வலம்புரி விநாயகர், தாமரை விநாயகர் என பல வடிவில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப் பட்டுள்ளது. விநாயகர் சிலைகள் வருகிற 18-ந்தேதி பிரதிஷ்டை செய்யப்படு கிறது. மாவட்டம் முழுவதும் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலை களை பிரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கோவில்கள், வீடுகள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

    பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளுக்கு காலை, மாலை நேரங்களில் பூஜைகள் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று நீர்நிலைக ளில் கரைக்க 3 நாள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    சிவசேனா சார்பில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் 22-ந்தேதி ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கரைக்கப்படுகிறது. இந்து மகா சபா சார்பில் பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகள் 23-ந்தேதி தேதியும், இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் 24-ந்தேதியும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்படு கிறது.

    விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கும், ஊர்வலங்கள் செல்வதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. களி மண்ணால் செய்யப்பட்ட சிலைகள் மட்டுமே பிர திஷ்டை செய்ய வேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி சிலைகளை அலங்கரிக்க கூடாது.

    நீர்நிலைகள் மாசுபடு வதை தடுக்கும் பொருட்டு வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை மட்டுமே சிலைகள் தயாரிக்க பயன்ப டுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பா டுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் கடந்த ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய வேண்டும். அதற்கு அந்தந்த பகுதி போலீசாரிடம் உரிய அனுமதிபெற வேண்டும். புதிதாக இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யக்கூடாது என அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது பிறர் மனதை புண்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக்கூடாது. போலீசார் அனுமதித்த வழித்தடத்தில் மட்டுமே ஊர்வலமாக சென்று சிலைகளை கரைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து இந்து அமைப்பு நிர்வாகிகளுடன் போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறது. பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளை கடந்த ஆண்டுபோல் இந்த ஆண்டும் 11 இடங்களில் கரைப்பதற்கு போலீசார் அனுமதித்துள்ள னர்.

    சிலைகள் கரைக்க உள்ள இடங்களில் மின்விளக்கு வசதி உட்பட அனைத்து அடிப்படை வசதிகளை செய்வதற்கு பேரூராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ×