என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இடைநிலை ஆசிரியர் பயிற்சி"
- தொடக்க கல்வி பட்டய படிப்பில் சேர விரும்புவோர் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
- ஓ.சி.வகுப்பு 50 சதவீதம் மதிப்பெண்ணும் மற்ற பிரிவினர் 45 சதவீத மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும்.
சென்னை:
2022-23-ம் கல்வி ஆண்டில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் தொடக்க கல்வி பட்டய படிப்பில் சேருவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
விண்ணப்பங்கள் இணையதளத்தில் https://scert.tnschools.gov.in என்ற முகவரியில் ஜூலை 4-ந்தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. உரிய கட்டணம் செலுத்தி விவரங்களை பதிவேற்றம் செய்யலாம்.
தொடக்க கல்வி பட்டய படிப்பில் சேர விரும்புவோர் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். ஓ.சி.வகுப்பு 50 சதவீதம் மதிப்பெண்ணும் மற்ற பிரிவினர் 45 சதவீத மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும். 31.7.2022 அன்று அதிகபட்ச வயது 30-க்கு மிகாமல் இருக்க வேண்டும். பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்சமாக வயது 35 ஆகும்.
9-ந்தேதி மாலை 5 மணிக்குள் உரிய கட்டணத்துடன் விண்ணப்பதினை பதிவேற்றம் செய்ய கடைசி நாளாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்