என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வேத மந்திரங்கள்"
- 8-ம் கால யாகசாலை பூஜையில் பல்வேறு ஹோமங்கள் செய்யப்பட்டு பூரணாகுதி, மகா தீபாராதனை நடைபெற்றது.
- யாகசாலையை தொடர்ந்து கடம் புறப்பாடு கோவிலை சுற்றி வலம் வந்து வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தரங்கம்பாடி:
தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோயில் அடுத்த கருவாழக்கரை கிராமத்தில் பிரசித்திபெற்ற காமாட்சி அம்மன் கோவிலில் திருப்பணி வேலைகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 16-ம் தேதி அனுக்கை, விக்னேஷ்வர பூஜையுடன் பூர்வாங்க பூஜைகள் நடைபெற்று கடந்த 19-ம்தேதி முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது. காமாட்சி அம்மனுக்கு பிரத்தியேகமாக 33 குண்டங்களும்பரிவார தெய்வங்களுக்கு 10 குண்ட ங்கள் என 43 குண்டங்களில் 124 சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க வேத ஆகமம் திருமுறைகள், இசை பாராயணம் செய்யப்பட்டு தினம்தோறும் 96 வகையான ஹோமப் பொருட்களால் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
நிறைவாக 8-ம் கால யாகசாலை பூஜையில் பல்வேறு ஹோமங்கள் செய்யப்பட்டு பூரணாகுதி, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு கோவிலை சுற்றி வலம் வந்து விமானத்தில் உள்ள கலசத்திற்கு வந்தடைந்தது. இதனை தொடர்ந்து சிவஸ்ரீ சுவாமிநாதன் சிவாச்சா ரியார் தலைமையில் வேத விற்பனர்கள் மந்திரங்கள் ஓத கடத்தில் உள்ள புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
இதில் திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் 18 -வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், தொண்டைமண்டல ஆதீனம் சன்னிதானம் திருச்சிற்றம்பல தேசிகர் ஞானப்பிரகாசர் பரமாசாரிய சுவாமிகள், சூரியனார்கோயில் ஆதீனம் 28-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், செங்கோல் ஆதீனம் 103 -வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கனக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் நந்தினி, துணைத் தலைவர் மைனர் பாஸ்கர், ஒன்றிய கவுன்சிலர் சக்கரபாணி, ஊராட்சி மன்றத் தலைவர் பழனி, உள்ளிட்ட ஏராமானவர்கள் கலந்து கொன்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்