என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விபத்தில் சிக்கிய பஸ்"
- பஸ் இருசக்கரவாகனத்தின் மேல் மோதாமல் இருக்க டிரைவர் திருப்பினார்.
- பஸ் ரோட்டோரம் சிறிது தூரம் சென்று மோதி நின்றது.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி வழியாக நல்லூர் சத்திய மங்கலம் ரோட்டில் ஒரு அரசு பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு சத்திய மங்கலத்துக்கு சென்று கொண்டிருந்தது.
அப்போது அந்த வழியாக ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்தார். தொடர்ந்து அவர் ரோட்டின் குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது. அப்போது பஸ் இரு சக்கர வாகனத்தின் மேல் மோதாமல் இருக்க டிரைவர் திருப்பினார்.
அப்போது கட்டுப பா ட்டை இழந்த பஸ் எதிர்பா ராத விதமாக ரோட்டை விட்டு கீழே இறங்கி இழுத்து சென்றது. இதையடுத்து அந்த பஸ் ரோட்டோரம் சிறிது தூரம் சென்று மோதி நின்றது. இதை கண்டு பஸ்சில் இருந்தவர்கள் அலறி துடித்தனர். இதில் பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.
மேலும் விபத்தில் பஸ்சின் முன் பகுதி மற்றும் பின் பகுதி சேதம் அடை ந்தது. இது குறித்து போலீசா ருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்து க்கு வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.
இதையடுத்து கிரைன் எந்திரங்கள் வரவழைக்க ப்பட்டு அதன் மூலம் பஸ்வை மீட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
- 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பஸ் சீனிவாசபுரம் ெரயில்வே தரைப்பாலத்தின் கீழ் சென்று கொண்டிருந்தது.
- எதிரே வந்த அரசு பஸ் மீது லாரி பக்கவாட்டில் எதிர்பாராதவிதமாக உரசியது.
பொள்ளாச்சி:
-
சர்க்கார்பதியில் இருந்து பொள்ளாச்சிக்கு இன்று காலை அரசு பஸ் சென்றது.
30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்த நிலையில் சீனிவாசபுரம் ெரயில்வே தரைப்பாலத்தின் கீழ் சென்று கொண்டிருந்தது. அப்போது, திருச்சியிலிருந்து திருச்சூர் செல்லும் சிமெண்ட் லாரி தனக்கு முன்னால் வந்த வாகனத்தை முந்த முயன்றது.
இதில் எதிரே வந்த அரசு பஸ் மீது லாரி பக்கவாட்டில் எதிர்பாராதவிதமாக உரசியது. லாரி உரசுவதை உணர்ந்த அரசு பஸ் டிரைவர் சுரேஷ்குமார் பஸ்சை இடது புறமாக திருப்பினார்.
அப்போது தரை பாலத்தின் பக்கவாட்டில் அரசு பஸ்சின் முன்பக்கம் மோதியது. இந்த விபத்தில் அரசு பஸ்சில் பயணம் செய்த 7 பேர் லேசான காயம் அடைந்தனர். லாரி டிரைவர் முஹம்மது சாலி என்பவரிடம் பொள்ளாச்சி மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்