search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகைகள் கொள்ளை"

    • வாழப்பாடி மற்றும் கருமந்துறை பகுதியில் 4 வீடுகளில் கைவரிசை காட்டியது தெரியவந்தது.
    • திருட்டு கும்பலை சேர்ந்த மற்ற நபர்களை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சேஷன்சாவடி ரெயில்வே ஸ்டேஷன் பகுதியைச் சேர்ந்த செல்லம்மாள் என்பவர் வீட்டில், கடந்த மார்ச் 27-ந் தேதி பட்டப்பகலில், 9 பவுன் நகைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றது.

    இதேபோல், வாழப்பாடி செல்லியம்மன் நகர் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற வட்டாட்சியர் சின்னசாமி என்பவர், குடும்பத்தோடு வெளியூருக்கு சென்றிருந்த நேரத்தில், இவரது வீட்டிற்குள் புகுந்த மர்மகும்பல், 6 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனர்.

    மேலும் கல்வராயன் மலை கருமந்துறை பகுதியைச் சேர்ந்த சுகாதார ஆய்வாளர் சிசில்தேவன் என்பவரது வீட்டிலும், அதே பகுதியைச் சேர்ந்த மாது என்பவர் வீட்டிலும் இந்த மர்ம கும்பல் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது.

    இதனையடுத்து, வாழப்பாடி பகுதியில் தொடர் கைவரிசை காட்டி வந்த இந்த திருட்டு கும்பலை பிடிக்க, வாழப்பாடி போலீஸ் டி.எஸ்.பி ஹரி சங்கரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தீவிர விசாரணை நடத்திய தனிப்படை போலீசார், இந்த மர்ம கும்பல் குறித்து துப்பறிந்தனர்.

    அதன்படி, வேறொரு திருட்டு வழக்கில் சிக்கி, புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த, இந்த கும்பலைச் சேர்ந்த கருமந்துறை தாழ்வீதி தேவா (வயது 49). மற்றும் இவரது சிறை நண்பரான தூத்துக்குடி லாசர் (47) ஆகிய இருவரையும், 2 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து, வாழப்பாடிக்கு கொண்டு வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில், இந்த கும்பல் வாழப்பாடி மற்றும் கருமந்துறை பகுதியில் 4 வீடுகளில் கைவரிசை காட்டியது தெரியவந்தது. இவர்களிடமிருந்த திருட்டு நகைகளை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்து மீண்டும் புதுக்கோட்டை சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர்.

    மேலும் இந்த திருட்டு கும்பலை சேர்ந்த மற்ற நபர்களை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த கும்பலுக்கு மூளையாக செயல்பட்டவர் மற்றும் நகைகளை பதுக்கி வைத்திருக்கும் நபர்களை பிடித்து நகைகளை கைப்பற்றி, உரிமையாளர்களிடம் ஒப்படைக்க தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    • கொள்ளையர்கள் அந்த மூதாட்டி அணிந்திருந்த செயின் மற்றும் கம்மல்களை திருடிக் கொண்டு தப்பி சென்றனர்.
    • தோட்டத்தில் தங்கியிருந்த வயதான தம்பதியினரை கொன்று நகை கொள்ளை அடிக்கபட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கரூர்:

    கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செங்குந்தபுரத்தை சேர்ந்தவர் சரவணகுமார். தொழிலதிபரான இவருக்கு சொந்தமான மாந்தோப்பு வாங்கல் ஓடையூரில் உள்ளது.

    இந்த தோப்பினை திருச்சி மாவட்டம் காட்டுப் புத்தூர் பெருமாள் காட்டுப் புத்தூரைச் சேர்ந்த தங்கவேல் (வயது 64)என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். கடந்த 15 ஆண்டுகளாக அவர் தனது மனைவி மயிலியுடன் தோட்டத்திலேயே தங்கி இருந்தார்.

    இந்த வயதான தம்பதி தங்குவதற்கு தோட்டத்தில் ஒரு சிறிய குடிசை அமைக்கப்பட்டுள்ளது. இதில் வழக்கம் போல் நேற்று இரவு சமையல் செய்து சாப்பிட்டு விட்டு கணவன்-மனைவி இருவரும் படுத்து உறங்கினர்.

    இதற்கிடையே நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் குடிசை வீட்டின் கதவை தட்டினர். உடனே தங்கவேல் திடுக்கிட்டு எழுந்து கதவை திறந்தார். அடுத்த நொடி கொள்ளையர்கள் தாங்கள் எடுத்து வந்த மிளகாய் பொடியை கணவன்-மனைவி இருவர் மீதும் தூவி சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த தங்கவேல், அவரது மனைவி மயிலி ஆகிய இருவரும் மயங்கி விழுந்து இறந்தனர்.

    பின்னர் கொள்ளையர்கள் அந்த மூதாட்டி அணிந்திருந்த செயின் மற்றும் கம்மல்களை திருடிக் கொண்டு தப்பி சென்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை அந்த மாந்தோப்பு தோட்டத்தில் வயதான தம்பதியினரின் நடமாட்டம் இல்லாததால் கிராம மக்கள் குடிசை வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது கணவன் மனைவி இருவரும் ரத்த காயங்களுடன் பிணமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக வாங்கல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். கொள்ளையர்கள் பற்றி எந்த துப்பும் கிடைக்கவில்லை.

    தோட்டத்தில் தங்கியிருந்த வயதான தம்பதியினரை கொன்று நகை கொள்ளை அடிக்கபட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரிய வந்தது.

    பெருந்துறை:

    பெருந்துறை சென்னி மலை ரோடு விக்னேஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 47). இவர் திருப்பூரில் தனியாக கம்பெனி நடத்தி வருகிறார்.

    இவர் தனது மாமனாரின் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றார். இதையடுத்து சேகர் மட்டும் தனது வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதை தொடர்ந்து அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டின் பீரோவை உடைத்து அதில் இருந்த 6 பவுன் தங்க செயின் உள்பட மொத்தம் 11 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரிய வந்தது.

    இதேபோல் அதே பகுதி யை சேர்ந்தவர் துர்க்கைராஜ் என்பவர் பழனி கீரனூர் சென்றார். இதையடுத்து மீண்டும் அவர் வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது வீட்டின் கதவு திறந்திரு ப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 1/2 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.

    இது குறித்து பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர்.

    ஒரே பகுதியில் 2 வீடுகளில் நகை கொள்ளை போன சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    • கடந்த 2-ந் தேதி வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர்.
    • பீரோவில் இருந்த 2 பவுன் செயின், ஒரு பவுன் தோடு, மோதிரம் உள்பட 4 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    தருமபுரி,

    தருமபுரியை அடுத்த மேல்கொட்டாய்மேடு பகுதியைச் சேர்ந்தவர் ரெங்கநாதன். இவரது மனைவி சுகந்தி (வயது78). கணவன்-மனைவி இருவரும் கூலிவேலைக்கு சென்று வருகின்றனர்.

    நகைகள் கொள்ளை

    இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் மாலையில் வீடு திரும்பி வந்து பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    உடனே அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 2 பவுன் செயின், ஒரு பவுன் தோடு, மோதிரம் உள்பட 4 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து சுகந்தி தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    தருமபுரி அருகே வெண்ணாம்பட்டி குள்ளானூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் (42). இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

    கடந்த 2-ந் தேதி சந்திரன் தனது மனைவியுடன் வீட்டை பூட்டி விட்டு தோட்டத்திற்கு சென்று விட்டார். மாலையில் வீடு திரும்பி வந்து பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உடனே அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 பவுன்செயின் உள்பட 5 பவுன் நகைகள் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து சந்திரன் தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்சங்கர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி பகுதிகளில் அடுத்தடுத்து 2 வீடுகளில் கதவின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகைகளை திருடி சென்ற சம்பவம் பொதுமக்க ளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி யுள்ளது.

    • குடும்பத்துடன் ஒடிசா மாநிலம் பூரி ஜெகநாதர் கோயிலுக்கு சென்றார்.
    • வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.

    சேலம்:

    சேலம் செவ்வாய்பேட்டை தொட்டு சந்திரையர் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 53) வெள்ளி வியா பாரியான இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் ஒடிசா மாநிலம் பூரி ஜெகநாதர் கோயிலுக்கு சென்றார். பின்னர் அங்கி ருந்து வரும் வழியில் திருப்பதி கோயிலில் தரிச னம் செய்து விட்டு நேற்று காலை சேலம் திரும்பினார்.

    அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாஸ்க ரன் மற்றும் குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த துணிகள் சிதறிக் கிடந்தன். அதில் இருந்த 3 பவுன் தங்க நகை, 2 கிலோ வெள்ளி ஆகியவை திருடு போய் இருந்தது. இதன் மதிப்பு ரூ.3.5 லட்சமாகும். இதுபற்றி பாஸ்கரன் செவ்வாய் பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் உதவிகமிஷனர் வெங்கடே சன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை மற்றும் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. வீடு பூடடிக்கிடந்ததை நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமி ராக்களை ஆய்வு செய்து வருவதுடன் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    • கிருஷ்ணன் (வயது 57). இவர் அரிசி வியாபாரம் செய்து வருகிறார்.
    • இந்த நிலையில் சம்பவத்தன்று தமிழரசியின் உறவினர் ஒரு வருக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அவருக்கு ஜெபம் செய்யும் படி கிருஷ்ணனிடம் கேட்டுக் கொண்டார்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் ஜாகீர்அம்மாபாளையம் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 57). இவர் அரிசி வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த தமி ழரசி என்கிற தமிழ்ச்செல்வி என்ப வர், கடனுக்கு அரிசி வாங்கி வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று தமிழரசியின் உறவினர் ஒரு வருக்கு உடல்நிலை சரி யில்லை என்றும், அவருக்கு ஜெபம் செய்யும் படி கிருஷ்ண னிடம் கேட்டுக் கொண்டார்.

    அதைத் தொடர்ந்து கிருஷ்ணன் ஜெபம் செய்து முடித்த பின், அந்த நபரை, அவரது வீட்டில் விட்டு விட்டு வருவதாக கூறிச் சென்றார்.

    கிருஷ்ணன் வீட்டை விட்டு சென்றதும், அவரது வீட்டு பீரோவில் இருந்த செயின், வளையல், மோதிரங்கள் உட்பட 13 3/4 பவுன் தங்க நகைகளை தமிழரசி திருடிச் சென்று விட்டதாக தெரிகிறது.

    இதுகுறித்து கிருஷ்ணனின் மனைவி மலர்விழி, கொடுத்த புகாரின் பேரில் சூரமங்கலம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • குளிர்பானம் கொண்டு வந்து லட்சுமம்மாவுக்கு கொடுத்து அந்த குளிர்பானத்தை குடிக்குமாறு பலமுறை வற்புறுத்தியதாக தெரிகிறது.
    • அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் உதவியுடன் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    ராயக்கோட்டை, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கெலமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அக்கொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமம்மா. இவரது கணவர் நஞ்சுண்ட ரெட்டி. ஓய்வு பெற்ற ஆசிரியர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நஞ்சுண்ட ரெட்டி உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் லட்சுமம்மா தனியாக வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு மர்ம நபர் தனியாக வசிக்கும் லட்சுமம்மா வீட்டுக்கு சென்று தான் அக்கொண்டபள்ளி பகுதியில் வீடு கட்டுவதற்காக நிலம் வாங்கியதாகவும் நிலம் பத்திரத்தை பூஜை அறையில் வைத்து பூஜை செய்து தனக்கு கொடுக்குமாறு கேட்டதாக தெரிகிறது.

    மர்ம நபர் பேச்சை நம்பிய மூதாட்டி லட்சுமம்மா மர்மநபர் கொடுத்த பத்திரத்தை பூஜை அறையில் வைத்து பூஜை செய்து அந்த பத்திரத்தை மீண்டும் அந்த மர்ம நபரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் வந்த அந்த மர்ம நபர் குளிர்பானம் கொண்டு வந்து லட்சுமம்மாவுக்கு கொடுத்து அந்த குளிர்பானத்தை குடிக்குமாறு பலமுறை வற்புறுத்தியதாக தெரிகிறது.

    குளிர்பானத்தை சாப்பிட்ட லட்சுமம்மாவுக்கு மயக்கம் அடைந்த நிலையில் லட்சுமம்மா கையில் இருந்த 4 தங்க வளையல் மற்றும் 4 சவரன் தங்க சங்கிலி ஆகியவற்றை இந்த மர்ம நபர் கொள்ளை அடித்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

    பின்னர் இரண்டு மணி நேரம் கழித்து சுய நினைவிற்கு வந்த லட்சுமம்மா கழுத்தில் தங்க சங்கிலி, கையில் தங்க வளையல் இல்லாததால் அதிர்ச்சி அடைந்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து லட்சுமம்மா கெலமங்கலம் போலீசாருக்கு புகார் அளித்ததின் பேரில் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் உதவியுடன் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    அக்கொண்டபள்ளி கிராமத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளதால் இந்த கிராமத்தில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெறு வதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளை அடிக்கும் மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • பீரோவில் இருந்த தங்கம், வைர நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
    • வீடுகள் மற்றும் கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராக்களில் மர்மநபர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகிறார்கள்.

    கோவை,

    கோவை விஷ்வேஸ்வரா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அரவிந்த் கிருஷ்ணன். ஐ.டி. ஊழியர். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு பெற்றோரை பார்ப்பதற்காக செங்கல்பட்டுக்கு சென்றார்.

    அப்போது அரவிந்த் கிருஷ்ணன் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர்.

    பின்னர் அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், வைர டாலர், மோதிரம், கம்மல் உள்பட 13½ பவுன் தங்க நகைகள் மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    நேற்று வீட்டிற்கு திரும்பி அரவிந்த் கிருஷ்ணன் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அறையில் பீரோவில் இருந்த தங்கம், வைர நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து அவர் பீளமேடு போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைேரகைகளை பதிவு செய்தனர்.

    இதனை வைத்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐ.டி. ஊழியர் வீட்டில் 13½ பவுன் தங்க நகைகள் மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    மேலும் போலீசார் அந்த பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராக்களில் மர்மநபர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகிறார்கள். 

    • வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
    • வீட்டில் இருந்த 11 பவுன் தங்க நகை, வெள்ளி திருடு போனது தெரியவந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அடுத்துள்ள பெரியமோட்டூர் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது57), இவர் துணி வியாபாரம் செய்து வந்தார்.

    கடந்த 2-ந்தேதி அன்று வீட்டை பூட்டி விட்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர் அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த 11 பவுன் தங்க நகை, வெள்ளி மற்றும் பணம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.

    இது குறித்து அவர் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாக்கியலட்சுமி தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
    • தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

    கோவை,

    கோவை வடவள்ளி அருகே உள்ள சுண்டபாளையம் ஹரிஸ்ரீ கார்டனை சேர்ந்தவர் அன்பு சிவா. பேராசிரியர். இவரது மனைவி பாக்கியலட்சுமி (வயது 42). தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் வழக்கம் போல தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். அப்போது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர்.

    அவர் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்து கம்மல், செயின், மோதிரம் உள்பட 12 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய பாக்கியலட்சுமி கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. இது குறித்து அவர் வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைேரகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியை வீட்டில் 12 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள். 

    • சீனிவாசன் கடந்த 24-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் சென்னைக்கு சென்றார்.
    • 12 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றது தெரிய வந்தது.

    கோவை,

    கோவை வடவள்ளி அருகே உள்ள குருசாமி நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 57). ரியஸ் எஸ்டேட் புரோக்கர்.

    கடந்த 24-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் சென்னைக்கு சென்றார். அப்போது சீனிவாசன் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், வளையல், மோதிரம் உள்பட 12 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றார்.

    வீட்டிற்கு திரும்பிய சீனிவாசன் கதவு உடைக்க ப்பட்ட திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோவை திறந்த மர்மநபர்கள் அதில் இருந்த 12 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றது தெரிய வந்தது.இது குறித்து அவர் வடவள்ளி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாக இருந்த மர்மநபர்களின் கைேரகைகளை பதிவு செய்தனர்.

    இதனை வைத்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரியல் எஸ்டேட் புரோக்கர் வீட்டில் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள். 

    • தனது மகள் அணிந்து செயின் மோதிரம் உள்ள 5 பவுன் தங்க நகைகளை கழற்றி பீரோவில் வைத்தார்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள பட்டணம் சிவன் கோவில் வீதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 38). வேன் டிரைவர்.

    சம்பவத்தன்று இவர் குடும்பத்துடன் அந்த பகுதியில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றார். பின்னர் அவர் தனது மகள் அணிந்து செயின் மோதிரம் உள்ள 5 பவுன் தங்க நகைகளை கழற்றி பீரோவில் வைத்தார். சம்பவத்தன்று அனைவரும் வீட்டை பூட்டி விட்டு சாவியை துணி துவைக்கும் எந்திரத்தில் மறைத்து வைத்து விட்டு சென்றனர்.

    இதனை நோட்ட மிட்ட யாரோ மர்மநபர் சாவியை எடுத்து வீட்டை திறந்து உள்ளே சென்றனர். பின்னர் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 5 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். மாலையில் வீட்டிற்கு திரும்பிய சக்திவேல் பீேராவில் இருந்த நகைகள் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    ×