என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விடுதலை சிறுத்தை கட்சி"
- புதிய மாவட்ட செயலாளர்களை நியமிப்பதற்கான பணி தொடங்கி உள்ளது.
- கட்சிக்கு நற்பெயரை பெற்று தரக்கூடிய நிர்வாகிகளை நியமிப்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மாவட்ட செயலாளர்களை கட்சியின் தலைவர் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றம் செய்து வருகிறார்.
கடந்த 2016-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட 70 மாவட்ட செயலாளர்கள் தற்போது செயலாற்றி வருகிறார்கள். கொரோனா பாதிப்பால் புதிய மாவட்ட செயலாளர் நியமனம் தள்ளிப் போனது.
இந்த நிலையில் புதிய மாவட்ட செயலாளர்களை நியமிப்பதற்கான பணி தொடங்கி உள்ளது. இதற்காக 40 பேர் கொண்ட உயர்மட்ட குழுவினை கட்சித் தலைவர் தொல்.திருமாளவன் நியமித்துள்ளார்.
இந்த குழுவில் உள்ள தலைமை நிர்வாகிகள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று மாவட்ட செயலாளர்களை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு யாரை இந்த பொறுப்புக்கு பரிந்துரைப்பது என்ற அறிக்கையை கட்சி தலைவரிடம் வழங்கு வார்கள். அதனை திருமாவளவன் இறுதி செய்து சிறப்பாக செயல்படக் கூடியவர்களை அறிவிக்கிறார்.
அந்த வகையில் கட்சிக்கு நற்பெயரை பெற்று தரக்கூடிய நிர்வாகிகளை நியமிப்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். கட்சி அறிவித்துள்ள போராட்டங்களில் தீவிரமாக பங்கேற்று கொண்டு செல்லக்கூடியவர், தொண்டர்களிடமும், தோழமைக் கட்சி நிர்வாகிகளிடமும் பரஸ்பர நட்புறவு கொண்டவராகவும் இருக்க வேண்டும் என்பதில் திருமாவளவன் உறுதியாக இருக்கிறார்.
கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தக்கூடிய செயல்களில் ஈடபடக்கூடிய மாவட்ட செயலாளர்கள் "களை" எடுக்கப்படுகிறார்கள். 2 முறை மாவட்ட செயலாளர்களாக தொடர்ந்து இருக்க வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.
அந்த வகையில் தலைமைக்கு திருப்திகரமாக செயல்படாத, உள்ளூர் மட்டும் மாவட்டங்களில் நற்பெயர் இல்லாத மாவட்ட செயலாளர்களை மாற்றம் செய்ய திருமாவளவன் திட்டமிட்டுள்ளார்.
மீண்டு ஒருமுறை அவர்களுக்கு பணி தொடர வாய்ப்பு இருந்தாலும் கூட தலைமைக்கு தொடர்ந்து வந்த புகார்களின் அடிப்படையில் 2-வது வாய்ப்பு பறிக்கப்படுகிறது.
அதனால் பல மாவட்டங்களில் புதிதாக மாவட்ட செயலாளர்கள் மாற்றம் செய்யப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. சென்னையில் 6 மாவட்ட செயலாளர்கள் கட்சி பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இவர்களில் ஒரு சிலருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது. பிற மாவட்டங்களிலும் மாவட்ட செயலாளர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து மாநில நிர்வாகி ஒருவர் கூறுகையில், மாவட்ட செயலாளர் பதவிக்கு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகளுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களை ஆய்வு செய்து தலைவருக்கு அறிக்கை வழங்குவார்கள். அவர் இறுதியாக அதில் யாரை நியமிப்பது என முடிவு செய்து அறிவிப்பார்.
தலைவரின் 60-வது பிறந்த நாள் விழா ஆகஸ்டு 17-ந்தேதி வருவதால் அதனை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டு வருகிறோம். அதற்கு முன்னதாக புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பவார்கள் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்