என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கொடி ஏற்று விழா"
- குமாரசாமி பேட்டையில் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தருமபுரி.
அ.தி.மு.க.வின் 51 -வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு இன்று தருமபுரி குமாரசாமி பேட்டையில் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு நகரச் செயலாளர் பூக்கடை ரவி தலைமை வகித்தார். ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல் முன்னிலை வகித்தார்.
தருமபுரி மாவட்ட செயலாளரும், முன்னாள் உயர்கல்வி அமைச்சருமான கே.பி.அன்பழகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- உளுந்தூர்பேட்டை பகுதியில் பா.ம.க. கொடி ஏற்று விழா நடைபெற்றது.
- தொகுதிக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் அந்த நிர்வாகிகளுடன் கலந்து கொடியேற்று விழா நடந்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்க முழுவதும் பா.ம.க. 34-ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது/ இதை முன்னிட்டு பாண்டூர் பஸ்நிலையத்தில் மாவட்ட தலைவர் தமிழ்வாணன் தலைமையில் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினர். இதுபோல் தொகுதிக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் அந்த நிர்வாகிகளுடன் கலந்து கொடியேற்று விழா நடந்தது. இதில் முன்னாள் நிர்வாகிகள் பாண்டுர் பாண்டியன், மணிராஜ், ஜெயக்குமார், பாலாஜி, கோவிந்தராஜ், அறிவழகன், பாலகிருஷ்ணன், ராஜேந்திரன், கார்த்திக், தனபால் மற்றும் பலர் பங்கேற்றனர்.
- திண்டிவனத்தில் பா.ம.க. கொடி ஏற்று விழாவில் நிர்வாகிகளிடம் நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
- கூட்டத்தில் புகுந்த மர்ம ஆசாமி, இந்த கைவரிசையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
விழுப்புரம்:
திண்டிவனம் நகர பா.ம.க., சார்பில் பைபாஸ் சாலையில் உள்ள ஆரியாஸ் ஓட்டல் அருகில் கொடியேற்று விழா நேற்று மாலை நடந்தது. விழாவில் பா.ம.க., நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். பா.ம.க., தலைவர் அன்புமணி ராமதால் கொடியேற்றிவிட்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். அப்போது கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. அதன் பிறகு அன்புமணி ராமதாஸ், அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். கூட்டத்தில் இருந்த மாவட்ட செயலாளர் ஜெயராஜ் பாக்கெட்டில் இருந்த ரூ. 17 ஆயிரத்தை காணவில்லை. தொடர்ச்சியாக வழக்கறிஞர் பாலாஜி என்பவரின் பாக்கெட்டில் இருந்த ரூ.6 ஆயிரத்து 500ம், நடுக்குப்பத்தை சேர்ந்த பா.ம.க., நிர்வாகி பாலுவிடம் 3 பவுன் நகையை காணவில்லை. கூட்டத்தில் புகுந்த மர்ம ஆசாமி, இந்த கைவரிசையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அன்புமணி ராமதாஸ் பங்கேற்ற நிகழ்ச்சியில் நகை, பணம் திருடு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்