search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஜோதி ஓட்டம்"

    • கலெக்டர்-போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தனர்
    • ஜூன் 26-ந் தேதி உலக போதை ஒழிப்பு விழிப்புணர்வு தினம்

    கன்னியாகுமரி:

    ஆண்டுதோறும் ஜூன் மாதம் 26-ந்தேதி உலக போதை ஒழிப்பு விழிப்புணர்வு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல இந்த ஆண்டு உலக போதை ஒழிப்பு விழிப்புணர்வு தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி மத்திய அரசின் திட்டமான போதைப்பொருள் இல்லாத இந்தியா திட்டம், குமரி மாவட்ட சமூக நலத்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூகத் தொண்டு நிறுவனங்களான திருப்புமுனை போதை நோய் நலப்பணி, போதை நோய் பணிக்குழு, புது வாழ்வு மையம், நியூ பாரத் டிரஸ்ட், ஏ.எம். கே. ஆகியவை இணைந்து குமரி மாவட்டத்தில் 21 இடங்களில் இருந்து நாகர்கோவிலுக்கு போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கன்னியாகுமரி யில் விழிப்புணர்வு ஜோதி ஓட்டத்தின் தொடக்க விழா காந்தி நினைவு மண்டபம் முன்பு இன்று காலை நடந்தது. குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் பங்கேற்று "மாணவரே, வேண்டாமே...போதை!" என்ற விழிப்புணர்வு துண்டுப் பிரசுரத்தை வெளியிட அதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் பெற்றுக்கொண்டார்.

    பின்னர் அவர்கள், போதை ஒழிப்பு விழிப்பு ணர்வு ஜோதியை ஏற்றி தொடர் ஓட்ட வீரர்களிடம் வழங்கினர். ஜோதி ஓட்டத்தை கொடி யசைத்து தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அதிகாரி சரோஜினி, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், செயல் அலுவலர் ஜீவநாதன், கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா, திருப்புமுனை போதை நோய் நலப்பணி இயக்குனர் அருட்பணியாளர் நெல்சன், ஜோதி ஓட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயசிறில், நாகர்கோவில் அரசு போக்குவரத்து கழக இயக்கம் மற்றும் ஆய்வு பிரிவு துணை பொது மேலாளர் ஜெரோலின் லிஸ்பன்சிங், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி துணைத்தலைவர்ஜெனஸ் மைக்கேல், வார்டு கவுன்சிலர்ஆனிரோஸ், முன்னாள் வார்டு கவுன்சிலர் தாமஸ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த ஜோதி ஓட்டத்தில் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் ஆகியோர் தொடர் ஓட்ட வீரர்களுடன் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓடினார்கள். கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம் முன்பு இருந்து புறப்பட்ட இந்த போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் விவேகானந்தபுரம், கொட்டாரம், பொற்றையடி, ஈத்தங்காடு, வழுக்கம்பாறை, சுசீந்திரம், இடலாக்குடி, கோட்டாறு, மீனாட்சிபுரம் மணிமேடை சந்திப்பு வழியாக நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தை சென்றடைந்தது. அங்கு உலக போதை விழிப்புணர்வு தினம் கொண்டாடப்பட்டது.

    குளச்சல் காணிக்கை அன்னை சபை மற்றும் புது வாழ்வு இல்லம் சார்பில் போதை விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் குளச்சல் பீச் சந்திப்பில் தொடங்கியது.குளச்சல் பங்குத்தந்தை டையனேசியஸ் லாரன்ஸ் சிறப்புரை ஆற்றினார். வட்டார முதன்மை அருட் பணியாளர் பிரான்சிஸ் டி.சேல்ஸ் ஜோதி ஏற்றி வாழ்த்துரை வழங்கினார். குளச்சல் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜுவா, இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் ஆகியோர் ஜோதி ஓட்டத்தை துவக்கி வைத்தனர்.

    இதில் மாவட்ட ஊராட்சி கள் உதவி இயக்கு னர் அலுவலக பி.டி.ஓ. விஜயகுமார் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.ஜோதியை குளச்சல் பங்கு இளைஞர்கள் பெற்றுக்கொண்டு மண்டை க்காடு, மணவாளக்குறிச்சி, ராஜாக்கமங்கலம் வழி யாக நாகர்கோவில் சென்றடைந்தனர்.அங்கு அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடக்கும் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    குளச்சலில் தொடங்கிய ஜோதி ஓட்டம் ஏற்பாடுகளை காணிக்கை அன்னை சபை தலைமை அருட்சகோதரி அன்பரசி செய்திருந்தார்.

    குமரி மாவட்டம் முழுவதும் 21 இடங்களில் இருந்து புறப்பட்ட போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கை வந்தடைந்தது.

    ×