search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "557 kg of cannabis seized 557 கிலோ"

    • நாமக்கல் மாவட்டத்தில் 557 கிலோ கஞ்சா பறிமுதல் - 48 பேர் கைது.
    • வழக்கில் சம்மந்தப்பட்ட 150 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுஉள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி நிருபர்களிடம் கூறியதாவது-

    நாமக்கல் மாவட்ட காவல் துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை இணைந்து மாவட்டம் முழுவதும் போதை பொருள் தடுப்பு நடவடிக்கையாக அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை செய்தவர்கள் மீது நடப்பு ஆண்டில் 29 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 48 குற்றவாளிகள் கைது செய்யபப்பட்டு அவர்களிடம் இருந்து 557 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் கஞ்சா வழக்கில் 7 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வழக்கில் சம்மந்தப்பட்ட 150 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுஉள்ளது.

    போதை பொருள் கடத்தல், விற்பனை செய்தல், தயாரித்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து நாமக்கல் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு செல்போன் எண் 9498181216 -க்்கு தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.

    ×