என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாணவன் கடத்தல்"
- 4 பேர் தன்னை காரில் மயக்க மருந்து கொடுத்து கடத்திச் சென்று விட்டதாகவும் கூறியுள்ளார்.
- மாணவன் மாறி மாறி தகவல் தெரிவிப்பதால் அவரை உண்மையிலேயே யாரேனும் கடத்திச் சென்றார்களா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நெல்லை:
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள புலவனூர் பொன்மலை நகரை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் ஒருவர் நேற்று அவன் வழக்கம் போல் பள்ளிக்கு புறப்பட்டு சென்றான். ஆனால் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்து தேடிய நிலையில் மதுரையில் இருந்து தொடர்பு கொண்ட போலீசார் மாணவன் மதுரையில் இருப்பதாகவும், உடனே வந்து அழைத்துச் செல்லலாம் எனவும கூறியுள்ளனர்.
உடனே மாணவனின் பெற்றோர் அங்கு சென்று அவனை சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர்.
இதுகுறித்து மாணவனிடம் கேட்டபோது நேற்று பள்ளிக்கு செல்லும்போது சைக்கிள் பஞ்சர் ஆகிவிட்டதாகவும், அப்போது அந்த வழியாக வந்த 4 பேர் தன்னை காரில் மயக்க மருந்து கொடுத்து கடத்திச் சென்று விட்டதாகவும் கூறியுள்ளார்.
அதே நேரத்தில் மதுரையில் இருந்த போலீசாரிடம் பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லை, அதனால் இங்கு வந்து விட்டதாக கூறியுள்ளார்.
மாணவன் மாறி மாறி தகவல் தெரிவிப்பதால் அவரை உண்மையிலேயே யாரேனும் கடத்திச் சென்றார்களா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- விழுப்புரத்தில் பரபரப்பு வீடு புகுந்து மாணவனை கடத்தி ரூ. 10 லட்சம்கேட்டு மிரட்டல் 5 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
- விசாரணையில் சூர்யகுமாரை திருவெண்ணைநல்லூர் பகுதியை சேர்ந்த நந்தா, மாரி உள்ளிட்ட 5 பேர் கடத்தி சென்று இருப்பது தெரியவந்தது.
விழுப்புரம்:
விழுப்புரம் சாலாமேடு சிங்கப்பூர் நகரை சேர்ந்தவர் சசிகுமார். அவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களது மகன் சூர்யகுமார் (வயது 19). இவர் ஆன்லைன் மூலம் வெளிநாட்டில் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.இவர் நேற்று வீட்டில் இருந்தபோது திருவெண்ணைநல்லூர் பகுதியை சேர்ந்த நண்பர்கள் 5 பேர் விழுப்புரம் வந்தனர். அவர்கள் மோட்டார் சைக்கிளில் சூர்யகுமாரை நைசா பேசி அழைத்து சென்றனர்.
அப்போது 5 பேர் கும்பல் சூர்யகுமார் தாயாரிடம் செல்ேபானில் தொடர்பு கொண்டு உங்கள் மகனை கடத்தி வந்து உள்ளோம். அவனை விடுவிக்க வேண்டும்என்றால் ரூ. 10 லட்சம் தரவேண்டும். அதனை மீறி போலீசில் தெரிவித்தால் உனது மகனை கொன்று விடுவோம் என்று மிரட்டி விட்டு துண்டித்து விட்டனர்.பதறி போன கிருஷ்ணவேணி இது பற்றி விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் சூர்யகுமாரை திருவெண்ணைநல்லூர் பகுதியை சேர்ந்த நந்தா, மாரி உள்ளிட்ட 5 பேர் கடத்தி சென்று இருப்பது தெரியவந்தது.அவர்கள் பேசிய செல்ேபான் எண்ணை தொடர்பு கொண்ட போது அந்த 5 பேரும் விழுப்புரம் அருகே வீரன் கோவில் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே ேபாலீசார் அங்கு விரைந்தனர். போலீசார் வருவதை அறிந்த 5 பேரும் அங்கிருந்து சூர்யாகுமாருடன் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது/
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்