search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடமாநில தொழிலாளர்கள்"

    • திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள், இளைஞர்கள் திரண்டனர்.
    • சமூக வலைதளங்களில் வீடியோவை பதிவிட்ட நபர் யாரென்று சைபர் க்ரைம் போலீசார் அடங்கிய தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் அனுப்பர்பாளையம் திலகர் நகரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலைபார்க்கும் வடமாநில தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள், தமிழக வாலிபர் ஒருவரை பெல்ட், கட்டை, உள்ளிட்டவைகளை கொண்டு துரத்தி துரத்தி தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து வேலம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் வடமாநில தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள், இளைஞர்கள் திரண்டனர். அவர்கள் வடமாநில தொழிலாளர்களை முறைப்படுத்த வேண்டும். தமிழக இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் , தமிழக வாலிபரை தாக்கிய வடமாநில தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் தமிழக வாலிபரை, வடமாநில தொழிலாளர்கள் தாக்கியதாக சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பாக தகவல்கள் பகிரப்பட்டு வருவதாகவும், வீடியோவை தவறாக சித்தரித்து வெளியிட்டுள்ளதாகவும் திருப்பூர் மாநகர போலீசார் விளக்கம் அளித்தனர். மேலும் வீடியோவை பகிர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

    மேலும் சமூக வலைதளங்களில் வீடியோவை பதிவிட்ட நபர் யாரென்று சைபர் க்ரைம் போலீசார் அடங்கிய தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வட மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்துகின்றனர்.
    • குடிபோதையில்,வடமாநில வாலிபர்களுக்குள் மோதல் ஏற்பட்டு, ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பெரும்பாலி என்ற இடத்தில் உயர் தொழில் நுட்ப நெசவு பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு வட மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்துகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு குடிபோதையில்,வடமாநில வாலிபர்களுக்குள் மோதல் ஏற்பட்டு, ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்துஅங்கு சென்ற பல்லடம் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • திருப்பூர் பின்னலாடை துறையை சார்ந்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
    • தீபாவளி அன்று திருப்பூர் பஜார்களில் வடமாநில தொழிலாளர்கள் கூட்டம் அலைமோதியது.

    திருப்பூர் :

    திருப்பூர் பின்னலாடை துறையை சார்ந்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பின்னலாடை சார்ந்த உப தொழில்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் என திருப்பூர் நகரத்தில் ஏராளமானோர் தினந்தோறும் வந்து செல்கின்றனர். மேலும் புறநகர் பகுதிகளில் இருந்து நகருக்கு வேலைக்கு வருவோர், பனியன் துணிகளை எடுத்துச்செல்லும் கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் பேருந்துகள் என திருப்பூர் நகரில் உள்ள அனைத்து சாலைகளுமே எப்போதும் வாகனப் போக்குவரத்து இருந்தபடியே இருக்கும்.

    குறிப்பாக அவிநாசி சாலை, பி.என் சாலை, ஊத்துக்குளி சாலை மூன்றும் இணையும் குமரன் சாலை எப்போதும் பரபரப்பாகவும், வாகன நெரிசலோடும் காணப்படும். முக்கிய வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதி என்பதால் மக்கள் கூட்டமும் இருக்கும். திருப்பூரின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியை இணைக்கும் சாலையாக குமரன் சாலை இருப்பதால் இரவு நேரம் சில மணி நேரம் மட்டும் வாகனப் போக்குவரத்து இன்றி காணப்படும்.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து ஏறக்குறைய அனைத்து நிறுவனங்களும் விடுமுறை விடப்பட்டதால் திருப்பூர் நகரில் தற்போது சற்று போக்குவரத்து நெரிசல் குறைந்து காணப்படுகிறது. பனியன் நிறுவனங்களுக்கு தொடர் விடுமுறையால் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லாம வடமாநில தொழிலாளர்கள் திருப்பூர் பஜார்களில் ஹாயாக உலா வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர். தீபாவளி அன்று திருப்பூர் பஜார்களில் வடமாநில தொழிலாளர்கள் கூட்டம் அலைமோதியது. தற்போது மாலை நேரங்களில் பஜார்களில் குவிந்து வருகின்றனர்.மேலும் மாநகராட்சி பூங்கா மற்றும் பொழுது போக்கு மையங்களில் குவிந்து வருகின்றனர்.

    வருகிற திங்கட்கிழமை முதல் பனியன் நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கும் என்பதால் அதன்பிறகு திருப்பூர் மீண்டும் சுறுசுறுப்பாகும்.

    கோவை, திருப்பூர் மாவட்டத்தில் பிரதான தொழிலாக விசைத்தறி ஜவுளி தொழில் உள்ளது. சுமார் 2.5 லட்சம் விசைத்தறிகளில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர்.

    வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர். ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகைக்கு வடமாநிலத்தவர்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.

    அதேபோல், தீபாவளி, பொங்கல் மற்றும் கோவில் திருவிழாவுக்கு வெளிமாவட்ட தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். கடந்த வாரம் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து, தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். ஆண்டு முழுவதும் ஓய்வில்லாமல் இயங்கி கொண்டிருக்கும் விசைத்தறிகள், தொழிலாளர்கள் விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு சென்றதால் ஓய்வெடுத்து வருகின்றன.

    இதுகுறித்து விசைத்தறி உரிமையாளர்கள் கூறுகையில்,சொந்த ஊர் சென்றுள்ள தொழிலாளர்கள் திரும்பி வந்த பிறகுதான் விசைத்தறிகளை இயக்க முடிவு செய்துள்ளோம் என்றனர்.

    தீபாவளி பண்டிகையின் போது தீக்காய விபத்துகளை தடுக்க மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை மாவட்டத்தில் தயாராக இருக்க தமிழக அரசு அறிவுறுத்தியது.இதற்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒரு டாக்டர், 3 செவிலியர், ஊழியர் அடங்கிய பிரத்யேக குழு பண்டிகைக்கு முதல் நாள் இரவில் இருந்து மறுநாள் காலை வரை தயார் நிலையில் இருந்தது.

    தீக்காயம் ஏற்பட்டால் சிகிச்சையளிக்க தேவையான ஏற்பாடுகளுடன் மாவட்டத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ்களும் தயார்படுத்தப்பட்டன. இருப்பினும், குறிப்பிட்டு சொல்லும்படியான தீ விபத்து எதுவும் நடக்கவில்லை.சிறிய அளவிலான தொடர் சிகிச்சை அளிக்க அவசியமில்லாத வகையிலான தீ விபத்துகளே நடந்துள்ளது. இதனால் மருத்துவம், தீயணைப்பு அதிகாரிகள், 108 ஆம்புலன்ஸ் அலுவலர், பணியாளர்கள் நிம்மதி அடைந்தனர்.

    இது குறித்து திருப்பூர் மருத்துவ கல்லுாரி முதல்வர் முருகேசன் கூறுகையில், தீபாவளி நாளில் நான்கு ஆண், ஒரு பெண், ஒரு குழந்தை உட்பட 6 பேர், பட்டாசு வெடித்து தீக்காயம் ஏற்பட்டு சிகிச்சைக்கு வந்தனர். அவர்களுக்கு சிகிச்சையளித்து, மருந்து, மாத்திரைகளை வழங்கி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சை பெறும் வகையிலோ, உயர் சிகிச்சைக்கு பரிந்துரைக்கும் அளவில் பாதிப்பு யாருக்கும் இல்லை என்றார்.

    திருப்பூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் காங்கேயபூபதி கூறுகையில், தக்க ஏற்பாடுகளுடன் தீயணைப்பு வாகனங்கள், வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர்.மாவட்டத்தில் பல்லடத்தில் 2,திருப்பூர் வடக்கு பகுதியில் 2 என மொத்தம் 4 சிறிய விபத்துக்கள் நடந்தது. உடனடியாக வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டு தீ பரவாமல் தவிர்க்கப்பட்டது. காயம், சேதம் எதுவுமில்லை என்றார்.

    கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய வழித்தடமாக பல்லடம் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. கோவை, திருச்சி, திருப்பூர், மதுரை, கொச்சி, உடுமலை, பொள்ளாச்சி, அவிநாசி செல்லும் மாநில நெடுஞ்சாலைகளும் பல்லடம் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைகின்றன.

    இதனால் பல்லடத்தில் எப்போதும், கட்டுக்கடங்காத வாகன நெரிசல் ஏற்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து தென் மாவட்டங்களை நோக்கி செல்லும் வாகனங்களால் பல்லடம் தேசிய நெடுஞ்சாலை திக்குமுக்காடியது. அண்ணா நகர் முதல் தாராபுரம் ரோடு பிரிவு வரை வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் அணிவகுத்து சென்றன.

    ஆனால் தீபாவளி நாளன்றும், தற்போதும் பல்லடம் தேசிய நெடுஞ்சாலை குறைந்த அளவு வாகனங்களால் வெறிச்சோடி காணப்படுகிறது. பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்ற பெரும்பாலானவர்கள் இன்னும் 3 நாட்களில் திரும்ப வாய்ப்பு உள்ளதால் வரும் நாட்களில் மீண்டும் பழையபடி போக்குவரத்து அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

    • 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் வடமாநிலத்தில் இருந்து வந்து தங்கி வேலை செய்கின்றனர்.
    • தொழிலாளர் வருகை 5 லட்சமாக இருக்கலாம்.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்கள், விசைத்தறி, ஆட்டோ மொபைல், ஜவுளி நிறுவனங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் பெரும்பாலானோர் தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர் செல்வார்கள்.

    தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல தயாராகி வருவதால், அவர்கள் திரும்ப ஒரு வாரமாகலாம். இதனால் தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை தீவிரப்படுத்தியுள்ளது.

    ஒரு மாதம் இருப்பு வைக்கும் அளவிற்கு பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது. கோவையில் சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

    கோவையில் பீகார், ஒடிசா, ஜார்கண்ட், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களில் பலர் தீபாவளி கொண்டாட சொந்த ஊர் செல்ல தயாராகி உள்ளனர். இவர்கள் சொந்த ஊர் செல்வதற்காக ெரயில்களில் டிக்கெட் முன் பதிவு செய்து வருகின்றனர்.

    சில தொழில் நிறுவனங்கள் வடமாநில தொழிலாளர்களுக்காக பஸ்களை ஏற்பாடு செய்து தர திட்டமிட்டுள்ளது. தொழிலாளர்கள் அதிகளவு விடுமுறை எடுக்க இருப்பதால் சில தொழில் நிறுவனங்கள் தீபாவளிக்கு பின்னர் தொழிலாளர்கள் வரும் வரை நிறுவனங்களை நிறுத்தி வைக்க திட்டமிட்டுள்ளது.

    இதுகுறித்து கோவை தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் பெரும்பாலான தொழில் நிறுவனங்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் வடமாநிலத்தில் இருந்து வந்து தங்கி வேலை செய்கின்றனர்.

    அவர்கள் தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றால் ஒரு வாரம் அல்லது 2 வாரம் கடந்த பின்னர் தான் திரும்புவார்கள்.

    சிலர் பண்டிகை பின்னர் திரும்ப வருவதில்லை. வேறு நிறுவனங்களுக்கு வேலைக்கு சேர்ந்து விடுவார்கள். இதுபோன்ற நிலையில் நாங்கள் வேறு தொழிலாளர்களை தேட வேண்டிய நிலை ஏற்படுகிறது.

    தீபாவளி பண்டிகைக்கு பின்னர், தொழிலாளர்களின் வருகையை பொறுத்து நிலைமை மாறும்.

    கோவை மாவட்டத்தில், பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு தொழிலாளர்கள் தேவை அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக, கோவைக்கு தொழிலாளர்கள் பலர் விருப்பத்துடன் வந்து வேலை செய்கிறார்கள்.

    தீபாவளிக்கு பின்னர் கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு தொழிலாளர்கள் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். தற்போது சொந்த ஊர் செல்ல 3 லட்சம் பேர் தயாராகி வருகின்றனர்.

    இவர்கள் திரும்பும் போது அவரது நண்பர்கள், உறவினர்களையும் வேலைக்கு அழைத்து வருவார்கள். தொழிலாளர் வருகை 5 லட்சமாக இருக்கலாம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • பொதுமக்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் ஒரு வாரத்திற்கான மளிகை மற்றும் காய்கறிகளை வாங்கி பயன் பெற்று வந்தனர்.
    • வார சந்தைக்கு உண்டான ஏற்பாடுகளை வெள்ளகோவில் நகராட்சி நிர்வாகம் செய்திருந்தது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் நகராட்சிக்கு சொந்தமான வாரச்சந்தையை வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்களது விளை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றன்றனர். இங்கு வெள்ளகோவில் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வடமாநிலத்தில் இருந்து வந்து வெள்ளகோவில் பகுதியில் தங்கி வேலை செய்து வரும் மில் தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான ஒரு வாரத்திற்கான மளிகை மற்றும் காய்கறிகளை வாங்கி பயன் பெற்று வந்தனர்.

    இந்நிலையில் வாரச்சந்தை வளாகத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தினசரி மார்க்கெட் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் தற்காலிகமாக வெள்ளகோவில் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 4ம் வாரமாக நேற்று வாரச்சந்தை செயல்பட்டது. இதில் வழக்கம்போல் விவசாயிகள், பொதுமக்கள் ,வியாபாரிகள் வந்திருந்தனர். வட மாநில மில் தொழிலாளர்கள் பொதுமக்கள் சந்தைக்கு வந்து ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வாங்கி சென்றனர்.வார சந்தைக்கு உண்டான ஏற்பாடுகளை வெள்ளகோவில் நகராட்சி நிர்வாகம் செய்திருந்தது.

    • பரமசிவம் பாளையத்தில் தொடக்கப்பள்ளியில் 18 மாணவர்கள் வட மாநில தொழிலாளர்களின் குழந்தைகள்.
    • பெரும்பாலான பெற்றோர் விழிப்புணர்வு இல்லாததால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை.

    திருப்பூர் :

    திருப்பூர் அடுத்த பொங்கு பாளையம் ஊராட்சி, பரமசிவம் பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.ஒரே வகுப்பறை, ஒரே ஆசிரியர் செயல்பட்டு வருகிறார். பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை 22 மாணவர்கள் படிக்கின்றனர். இதில் 18 மாணவர்கள் வட மாநில தொழிலாளர்களின் குழந்தைகள். 4 பேர் தமிழ் குழந்தைகள்.பரமசிவம் பாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் ஒடிசா, பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலத்தை சேர்ந்த இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் நியூ திருப்பூர், அவிநாசி, பெருமாநல்லூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள பனியன் மற்றும் அதனை சார்ந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் சிலர் மட்டுமே தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகின்றனர்.பெரும்பாலான பெற்றோர் விழிப்புணர்வு இல்லாததால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை.பள்ளி ஆசிரியர் தாங்களே தங்கள் முயற்சியில்அவர்களது வீட்டுக்கு சென்று குழந்தைகளை கட்டாயபடுத்தி பள்ளிக்கு அழைத்து வருகின்றனர்.

    ஏழ்மை நிலையில் உள்ள பலர் வட மாநிலத்தில் இருந்து இங்கு வந்து பணியாற்றுகின்றனர்.விழிப்புணர்வு இல்லாததால் இவர்கள் குழந்தைகளை படிக்க வைப்பதில்லை. குழந்தைகளின் படிப்பிற்காக அரசு பல்வேறு சலுகைகளை செய்து வருகிறது.அரசு வட மாநில தொழிலாளர்களுக்கு கல்வி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களது குழந்தைகளை பள்ளியில் சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

    • நீண்ட தூர ெரயில்களுக்கான முன்பதிவு, 95 சதவீதம் நிறைவடைந்து விட்டது.
    • ஒரே நாளில் 6.24 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டது.

    திருப்பூர்:

    வருகிற அக்டோபர் மாதம் 24-ந் தேதி தீபாவளி பண்டிகைக்கு முந்தைய வாரத்துக்கான (அக்டோபர் 21 - 23)ெரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.

    திருப்பூரில் தீபாவளிக்கு முந்தைய நாட்களில் பயணிக்க, வடமாநிலத்தினர் அதிக அளவு டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். இது குறித்து ெரயில் டிக்கெட் முன்பதிவு மைய அதிகாரிகள் கூறுகையில், தீபாவளிக்கு முந்தைய நாட்களில் பயணிக்க வடமாநிலத்தினர் அதிக ஆர்வம் காட்டினர்.ராஜ்கோட், பாட்னா, ஜெய்ப்பூர், அகமாதபாத், மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். வட மாநிலங்களுக்குப் பயணிக்கும் நீண்ட தூர ெரயில்களுக்கான முன்பதிவு, 95 சதவீதம் நிறைவடைந்து விட்டது. அதே நேரம் நாகர்கோவில், திருநெல்வேலி, சென்னை, திருவனந்தபுரம் செல்வதற்கான 30 சதவீத இடங்கள் கூட இன்னமும் நிரம்பவில்லை.தமிழகத்திற்குள்ளான ெரயில் டிக்கெட் முன்பதிவில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. கடந்த, 23ந்தேதி, 1,011 பேர் டிக்கெட் முன்பதிவுக்கு வந்தனர். ஒரே நாளில் 6.24 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டது என்றனர்.

    ×