search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துண்டு பிரசுரம்"

    • பள்ளி மாணவர்கள் பதாகைகள் ஏந்தியும், பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம், மஞ்சள் பையை கையில் எடுத்து செல்வோம் என முழக்கங்கள் எழுப்பினர்.
    • பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக மாணவர்கள் கராத்தே பயிற்சி மற்றும் சிலம்பம் சுற்றி காலில் சக்கரம் மாட்டி சென்றனர்.

    பேராவூரணி:

    பேராவூரணியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தாலுகா அலுவலகத்தில் விழிப்பு ணர்வு பேரணியை அட்லா ண்டிக் பன்னாட்டு பள்ளி தலைவர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் சிலம்புச்செல்வன் தலைமையில் புறப்பட்ட விழிப்புணர்வு பேரணி சேதுசாலை, அண்ணா சாலை, பட்டுக்கோட்டை சாலை, அறந்தாங்கி சாலை வழியாக நகரின் முக்கிய வீதியில் சென்று புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

    பள்ளி மாணவ-மாணவிகள் பதாகைகள் ஏந்தியும், பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம், மஞ்சள் பையை கையில் எடுத்து செல்வோம் என முழக்கங்கள் எழுப்பினர். பேராவூரணி சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சமூக ஆர்வலர்கள் சாமியப்பன், நிமல் ராகவன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். பெரியார் சிலை அருகில் பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக மாணவர்கள் கராத்தே பயிற்சி மற்றும் சிலம்பம் சுற்றினர். பேரணியில் மாணவர்கள் காலில் சக்கரம் மாட்டி சென்றனர். விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களைபொது மக்களிடம் வழங்கினர். 

    • தூய்மை குறித்த துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.
    • இந்த நிகழ்ச்சி வார்டு வாரியாக நடந்தது.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை நகராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி புதன்கிழமை தோறும் உலர் கழிவுகளை மட்டும் தனியாக பிரித்து வாங்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் வீடுகளில் தினசரி சேகரமாகும் குப்பை கழிவுகளை மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் என தனித்தனியாக பிரித்து வழங்க வேண்டும் என்று நகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. அருப்புக்கோட்டை நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளது. இந்த நிகழ்ச்சி வார்டு வாரியாக நடந்தது.

    ஆணையாளர்அசோக் குமார் தலைமையில் ெபாதுமக்களுக்கு தூய்மை குறித்த துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. பின்னர் ''என் குப்பை என் பொறுப்பு'' என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    இதில் நகர்மன்றத் தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம், துணைத்தலைவர் பழனிச்சாமி மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள், சுகாதார ஆய்வாளர் அய்யப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.

    ×