என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சங்க கூட்டம்"
- பாராட்டு விழா கூட்டம் கிருஷ்ணகிரியில் நடந்தது.
- மாவட்ட தலைவர் பூபதி தலைமை தாங்கினார்.
கிருஷ்ணகிரி,
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர்கள் பதவியேற்பு மற்றும் பாராட்டு விழா கூட்டம் கிருஷ்ணகிரியில் நடந்தது.
இதற்கு மாவட்ட தலைவர் பூபதி தலைமை தாங்கினார்.
முன்னாள் மாநில பிரசார செயலாளர் ஜார்ஜ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன், கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சதீஷ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் அழகிரிசாமி, மாநில செயலாளர் ஆறு.பக்கிரிசாமி, திருவள்ளூர் மாவட்ட தலைவர் சுந்தர்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய்த்துறை சங்க மாவட்ட தலைவர் சக்திவேல், மாவட்ட வருவாய்த்துறை சங்க செயலாளர் ஜெய்சங்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. அதே போல 24 மணி நேரமும் கிராமத்திலேயே தங்கி பணி செய்ய வேண்டும் என்ற விதியை தளர்வு செய்து வட்ட அளவில் தங்கி பணி செய்ய ஆவண செய்ய வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கான கல்வி தகுதி பட்டப்படிப்பாக உயர்த்திட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- சீர்காழி நகர வர்த்தக சங்கத்தின் 25ம் நிறைவு ஆண்டை வெள்ளிவிழா ஆண்டாக கொண்டாட முடிவு.
- திய குழு ஒன்றை அமைத்து சங்க நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஜெயின் சங்க கட்டிடத்தில் சீர்காழி நகர வர்த்தகர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.
சீர்காழி நகர வர்த்தகர்கள் சங்க தலைவர் சிவசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தென்பாதி, பழைய பேருந்து நிலையம், கடைவீதி, கச்சேரி ரோடு, ரயில்வே ரோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வணிகர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் 25 ஆண்டுகள் வர்த்தக சங்க செயல்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
மேலும் இக்கூட்டத்தில் விரைவில் சீர்காழி நகர வர்த்தக சங்கத்தின் 25ம் நிறைவு ஆண்டை வெள்ளிவிழா ஆண்டாக கொண்டாடப்படுவது, அப்போது மாநில தலைவரை அழைத்து மாநில வர்த்தக சங்க கட்டிடம் கட்டப்பட்டு வருவதற்கு நிதி திரட்டித் தருவது, 25 ஆண்டு நிறைவு விழாவில் வர்த்தக சங்கத் தலைவருக்கு பாராட்டு விழா நடத்துவது, புதிய குழு ஒன்றை அமைத்து சங்க நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் வர்த்தக சங்க பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்