search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 237503"

    • மதுபோதையில் இருந்த கிருஷ்ணமூர்த்தி வீட்டு அருகே உள்ள ரெயில் தண்டபாளத்தை நோக்கி ஓடினார்.
    • வீட்டின் மேற்கூரை ஓட்டை பிரித்து உள்ளே இறங்கிப் பார்த்த போது கிருஷ்ணமூர்த்தி தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு, கொல்லம்பாளையம், லோகநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (38). அவரது மனைவி ஜோதி லட்சுமி.16 ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    மது போதையில் கிருஷ்ணமூர்த்தி தான் தற்கொலை செய்து கொள்வேன் என அடிக்கடி கூறி வருவாராம்.

    இந்த நிலையில் நேற்று மதுபோதையில் இருந்த கிருஷ்ணமூர்த்தி வீட்டு அருகே உள்ள ரெயில் தண்டபாளத்தை நோக்கி ஓடினார். இதனால் அதிர்ச்சியடைந்த ஜோதிலட்சுமி மகனுடன் ஓடிச் சென்று கணவரை வீட்டுக்கு அழைத்து வந்தார். திடீரென கிருஷ்ணமூர்த்தி தனது மனைவி, மகன்களை வீட்டில் இருந்து வெளியில் தள்ளிவிட்டு கதவை உள்பக்கமாகப் பூட்டி கொண்டாராம்.

    அவர் தூங்குவதாக நினைத்து அனைவரும் வெளியிலேயே அமர்ந்தி ருந்துள்ளனர். நீண்ட நேரத்துக்குப் பின்னர் ஜோதி லட்சுமியும் அவரது மகன்களும் கதவைத் தட்டியுள்ளனர்.

    ஆனால், கிருஷ்ணமூர்த்தி கதவைத் திறக்கவில்லை. இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன், வீட்டின் மேற்கூரை ஓட்டை பிரித்து உள்ளே இறங்கிப் பார்த்த போது கிருஷ்ணமூர்த்தி தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

    அவரை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர், கிருஷ்ணமூர்த்தி ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தார்.

    இதுகுறித்து மனைவி ஜோதிலட்சுமி அளித்த புகாரின் பேரில் ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆப்பக்கூடல் அருகே உள்ள சுக்கநாயக்கனூர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் சிறுமி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • புகாரின் பேரில் ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    மேற்கு வங்கம் மாநிலம் மேற்கு பர்கானா மாவட்டம் சந்தேஷ்கல்லி பகுதியைச் சேர்ந்தவர் ராகுல் அமின் மோலா (34).

    இவர் கடந்த ஒன்றரை வருடமாக ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள சுக்கநாயக்கனூர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் தனது குடும்பத்தினருடன் தங்கி வேலை செய்து வருகிறார்.

    இவரது இளைய மகள் பாத்திமா (13) மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு அனைவரும் வீட்டுக்கு வெளியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, வீட்டுக்குள் இருந்து சத்தம் கேட்டுள்ளது.

    உள்ளே சென்று பார்த்தபோது பாத்திமா வீட்டின் விட்டத்தில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பாத்திமாவை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து ராகுல் மோலா அளித்த புகாரின் பேரில் ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன், மனைவி இடையே மீண்டும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சிவகாமி கணவரிடம் கோபித்துக்கொண்டு அதே பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
    • இதனால் மனமுடைந்த நிலையில் சுரேஷ் வீட்டில் தூக்கு போட்டு இறந்தார்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் தாலுகா கீழ்சாத்தம்பூர் அருகே உள்ள பெருமாபாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது37) கூலித்தொழிலாளி. இவரது மனைவி சிவகாமி(32). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

    சுரேஷ் மற்றும் சிவகாமிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கணவன், மனைவி இடையே மீண்டும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சிவகாமி கணவரிடம் கோபித்துக்கொண்டு அதே பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த நிலையில் சுரேஷ் வீட்டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று வெகு நேரமாகியும் வீட்டில் இருந்து சுரேஷ் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது சுரேஷ் வீட்டின் அறையில் தூக்கு போட்டு இறந்த நிலையில் தொங்கிக் கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் இது குறித்து பரமத்தி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஜெஸ்சியா (வயது32). இவருக்கு திருமணமாகி கணவர் சில நாட்களிலேயே இறந்து விட்டதாக கூறப்படுகிறது.
    • மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் தாலுகா, தவிட்டுப்பா–ளையத்தை சேர்ந்தவர் சர்புதீன்.இவரது மனைவி சகிலாபானு.

    இவர்களது மகள் ஜெஸ்சியா (வயது32). இவருக்கு திருமணமாகி கணவர் சில நாட்களிலேயே இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சர்புதீன் தற்போது தனது குடும்பத்துடன் பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூரில் உள்ள காவேரி நகரில் வசித்து வருகிறார்.

    சர்புதீன் தனது மகள் ஜெஸ்சியாவுக்கு மீண்டும் திருமணம் செய்து வைப்பதற்காக முதல் மனைவியை இழந்த ஒரு மணமகனை பார்த்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    அதற்கு ஜெஸ்சியா மறுத்துள்ளார். இதில் மனமுடைந்த நிலையில் இருந்து வந்த ஜெஸ்சியா வீட்டின் படுக்கை அறையில் மேல் உள்ள கொக்கியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உறவினர்கள் வேலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் மற்றும் போலீசார் ஜெஸ்சியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விடுதியில் தங்கி படிக்க மனமில்லாமல் நேற்றிரவு கல்லூரி விடுதி அறையில் துப்பட்டாவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து தலைவாசல் போலீசார் கல்லூரி நிர்வாகம் மற்றும் சக மாணவிகள், உறவினர்க ளிடம் விசாரணை நடத்தினர்.

    ஆத்தூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கனந்தல் அம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவர் கடந்த ஆண்டு விபத்தில் இறந்து விட்டார். இவரது மகள் கோபிகா (வயது 18), இவர் தலைவாசலில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் கோபிகா நேற்றிரவு கல்லூரி விடுதி அறையில் துப்பட்டாவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவு சாப்பாட்டிற்கு அவரை கூப்பிட சென்ற மாணவிகளான காவிய நிலா, ஜெயந்தி, கல்பனா ஆகிய 3 பேரும் இதனை பார்த்து மயக்கம் அடைந்தனர்.

    இதனை அறிந்த விடுதி நிர்வாகிகள் தூக்கில் தொங்கிய கோபிகாவை மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தலைவாசல் போலீசார் கல்லூரி நிர்வாகம் மற்றும் சக மாணவிகள், உறவினர்க ளிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது மாணவியின் தந்தை சங்கர் விபத்தில் இறந்து விட்ட நிலையில் தாத்தா மதியழகன் ஏற்பாட்டில் தான் கோபிகா படித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தந்தையின் தவசத்திற்கு தாத்தா வீட்டிற்கு சென்ற கோபிகா விடுதியில் தங்கி படிக்க மனமில்லை என்று உறவினர்களிடம் கூறி உள்ளார். ஆனால் உறவினர்கள் இன்னும் 2 ஆண்டுகள் தானே படிப்பை முடி, பின்னர் வீட்டிற்கு வந்து விடலாம் என்று கூறி அனுப்பி உள்ளனர்.

    இதையடுத்து கல்லூரி க்கு வந்து ஒரு வாரம் ஆன நிலையில் அவருடன் ஒரே அறையில் தங்கியிருந்த 3 மாணவிகளும் சொந்த ஊருக்கு சென்றதால் தனியாக இருந்த கோபிகா அதே அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே மயக்கம் அடைந்த 3 மாணவிகளும் சிகிச்சை பெற்று விடுதிக்கு திரும்பினர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா மாவுருட்டி பகுதியில் பால் வியாபாரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இந்நிலையில் கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா மாவுருட்டி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 36). இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார்.இந்நிலையில் கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் சீனிவாசன் விரக்தியில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அருகில் உள்ள வேப்பமரத்தில் சீனிவாசன் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து பரமத்தி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப் பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சீனிவாசன் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசா–ரணை நடத்தி வருகிறார்கள்.

    ×