search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இன்டர்நேஷனல்"

    • குழந்தைகள் அனைவரும் இளஞ்சிவப்பு நிறத்தில் உடை அணிந்து ரோஜாபூக்களாக பள்ளிக்கு வந்தனர்.
    • பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வின் தலைமை தாங்கினர்.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் மழலையர் பிரிவு குழந்தைகளுக்கு வாரந்தோறும் சிறப்பு தின கொண்டாட்டம் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வார கொண்டாட்டமாக ரோஜா தினம் கொண்டாடப்பட்டது. குழந்தைகள் அனைவரும் இளஞ்சிவப்பு நிறத்தில் உடை அணிந்து ரோஜாபூக்களாக பள்ளிக்கு வந்தனர்.

    ரோஜா தினத்தையொட்டி குழந்தைகள் ரோஜாப்பூவின் படம் வரைந்தும், வண்ணத்தாளில் பூ வடிவத்தை செய்தும் எடுத்து வந்தனர். அவற்றைக்கொண்டு வகுப்பு முழுவதும் அலங்கரிக்கப்பட்டது. பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வின் தலைமை தாங்கினர். ஆசிரியைகள் ரோஜா தினம் பற்றி உரையாற்றினர். குழந்தைகள் ரோஜாப்பூ குறித்த பாடல்களை பாடினர்.

    பின்னர் பள்ளியில் உள்ள அனைவருக்கும் ரோஜா பூக்களை கொடுத்து மகிழ்ந்தனர்.

    ×