என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பழங்குடியின மக்கள்"
- வெற்றி பெற்ற திரவுபதி முர்முவுக்கு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- கோத்தர் இன மக்கள் தங்களது பாரம்பரிய உடையணிந்து, பாரம்பரிய இசைகளை முழங்கி கொண்டு ஊர்வலமாக சென்றனர்.
அரவேணு:
இந்தியாவின் 15-வது ஜனாதிபதியாக பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்மு வெற்றி பெற்றார்.
இதன் மூலம் பழங்குடியினத்தை சேர்ந்த முதல் ஜனாதிபதி, 2-வது பெண் ஜனாதிபதி, மிகவும் இளைய ஜனாதிபதி என பல்வேறு பெருமைகளை திரவுபதி முர்மு பெற்றார்.
வெற்றி பெற்ற திரவுபதி முர்முவுக்கு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பழங்குடியின மக்களும் தங்கள் இனத்தை சேர்ந்த பெண் ஒருவர் நாட்டின் மிகப்பெரிய பதவியை அலங்கரிக்க போவதால் அதனை கொண்டாடி மகிழ்ந்தனர்.
அந்த வகையில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பழங்குடியின கோத்தர் இன மக்கள் மற்றும் பா.ஜ.க.வினர் காமராஜர் சதுக்கத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது கோத்தர் இன மக்கள் தங்களது பாரம்பரிய உடையணிந்து, பாரம்பரிய இசைகளை முழங்கி கொண்டு ஊர்வலமாக சென்றனர்.
காமராஜர் சதுக்கத்தில் தொடங்கிய ஊர்வலமானது நேரு பூங்கா வளாகத்தில் உள்ள கோத்தர் பழங்குடியின மக்களின் குல தெய்வ கோவிலான அய்யனோர் அம்மனோர் கோவிலுக்கு சென்றது.
அங்கு பழங்குடியின மக்கள் வழிபாடு நடத்தினர். பின்னர் அங்கிருந்து அவர்கள் காமராஜர் சதுக்கம், மார்க்கெட் திடல் வழியாக வெற்றி கோஷங்களை எழுப்பியவாறு, ஊர்வலமாக சென்று பஸ் நிலையத்தை அடைந்தனர்.
மேலும் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை பழங்குடியின மக்கள் மற்றும் ஜனாதிபதி திரவுபதி முர்முவின், பழங்குடியின வெற்றி தினமாக கொண்டாட உள்ளதாக தெரிவித்தனர். அவருக்கு கிடைத்த வெற்றி எங்கள் பழங்குடியின மக்களின் வெற்றி எனவும் அவர்கள் கூறினர்.
இதில் நீலகிரி வனவாசி கேந்திர தலைவர் ராஜன், நீலகிரி ஆதிவாசிகள் நலசங்க நிர்வாகி புஷ்பகுமார், புது கோத்தகிரி ஊர்த்தலைவர் சுப்பிரமணி, பா.ஜனதா மூத்த நிர்வாகிகள் இட்டக்கல் போஜராஜன், அம்பிகை கணேசன், அன்பரசன், ஹால்தொரை , உதயகுமார், முட்டை கடை முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பழங்குடியினர் அடிப்படை வசதிக்காக ரூ.394.69 கோடியில் திட்டப் பணிகள்.
- பழங்குடியின மக்கள் வாழ்வாதாரத்தை பெருக்கிட வனத்துறை நடவடிக்கை.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள வனத்துறை கூட்ட அரங்கில் தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தலைமையில் வனத்துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தின் வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர் அடிப்படை வசதிக்காக ரூ.394.69 கோடியில் இணைப்புச் சாலைகள், தெரு விளக்குகள், குடிநீர் திட்டப் பணிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக வனத்துறை மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் இணைப்புச் சாலைப் பணிகள் ரூபாய்.294.21 கோடி மதிப்பிலும், தெரு விளக்குகள் ரூபாய்.3.79 கோடி மதிப்பிலும், சோலார் மின் விளக்குகள் ரூபாய்.16.99 கோடி மதிப்பிலும், குடிநீர் திட்டப் பணிகள் ரூபாய் 79.69 கோடி மதிப்பிலும் பணிகளை மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கூடுதல் திட்டங்களுக்காக ரூபாய்.93.99 கோடி நிதி ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளது.முதலமைச்சர் ஆணையின்படி பழங்குடியின மக்கள் வாழ்வாதாரத்தை பெருக்கிட பல்வேறு பணிகள் வனத்துறை மேற்கொண்டு வருகிறது.
நீதிமன்ற வழிகாட்டுதழின்படி வனப்பகுதியில் உள்ள அந்நிய களைத் தாவரங்களை அகற்றும் பணி மூலம் பழங்குடியின மக்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கவும், பழங்குடியின மக்களுக்கான குடியிருப்பு வசதி, கல்வி, விவசாயம், தொழில் வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்நிய களைத் தாவரங்களை அகற்றும் பணி மூலம் பழங்குடியின மக்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்க முதல்கட்டமாக 700 எக்டேர் பரப்பளவில் பணிகளை மேற்கொள்ள ரூபாய்.535.21 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அலுவலர்கள் ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் கா.ராமசந்திரன் தெரிவித்தார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்