search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஷவாயு தாக்கி பலி"

    • கனகன் ஏரி சுத்திகரிப்பு நிலையத்தை பொதுப்பணித் துறை நேரடியாக தனது கண்காணிப்பில் எடுத்துக்கொண்டுள்ளது.
    • இளநிலை பொறியாளர் ஒருவரை நியமித்து கழிவுநீர் சுத்திகரிக்கப்படுவதை கண்காணித்து வருகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகரில் கடந்த 11-ந் தேதி விஷவாயு தாக்கி மாணவி உள்பட 3 பெண்கள் பலியானார்கள்.

    இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் கழிவுநீர் சரிவர சுத்திகரிக்கப்படாததால் உருவான விஷவாயு பாதாள சாக்கடை வழியாக சென்று கழிவறைக்குள் புகுந்து உயிர்ப்பலி ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினார்கள்.

    பொதுப்பணி சுற்றுச்சூழல், சுகாதாரத்துறை அதிகாரிகள் குழுவினரும் அங்கு ஆய்வு நடத்தினார்கள். அப்போது பாதாள சாக்கடையில் உருவான ஹைட்ரஜன் சல்பைடு என்ற வாயு தாக்கியதால் மூச்சு வாயு தாக்கியதால் மூச்சு திணறி அவர்கள் 3 பேரும் இறந்ததாக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதாவது வீடுகளில் கழிவறை அமைத்த பொதுமக்கள் பாதாள சாக்கடையில் விஷவாயு உருவானால் அது கழிவறைக்குள் வராமல் தடுக்கும் வாட்டர் சீல், ஷோக் பிட் ஆகிய அமைப்புகளை செய்ய தவறியதால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

    பாதாள சாக்கடை திட்டங்களை பொறுத்த வரை கனகனேரியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு மேட்டுப்பாளையத்தில் உள்ள தொழிற்பேட்டையில் இருந்து ரசாயன கழிவுகளும், கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையிலிருந்து மருத்துவ கழிவுகளும் இரவு நேரத்தில் வெளியேற்றப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

    இத்தகைய கழிவுகளால்தான் விஷவாயு உருவாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தை அப்பகுதியில் வசிக்கும் மக்கள் எழுப்பியுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து கனகன் ஏரி சுத்திகரிப்பு நிலையத்தை பொதுப்பணித் துறை நேரடியாக தனது கண்காணிப்பில் எடுத்துக்கொண்டுள்ளது. இளநிலை பொறியாளர் ஒருவரை நியமித்து கழிவுநீர் சுத்திகரிக்கப்படுவதை கண்காணித்து வருகிறது.

    இதனிடையே நேற்று பெங்களூரை சேர்ந்த ரணதேவ் ஆனந்த் என்பவர் தலைமையிலான தனியார் நிறுவன குழு கனகனேரி சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டது. இதுதொடர்பாக அவர்கள் தலைமை பொறியாளருடன் ஆலோசனையும் நடத்த உள்ளனர்.

    மேலும் புதுவையில் உள்ள கழிவுநீர் வெளியேற்றம், சுத்திகரிப்பு ஆகியவற்றையும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஐ.ஐ.டி. குழு மற்றும் சூரத் நிபுணர் குழுவுக்கும் அரசு சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

    • பொதுமக்கள் திடீரென்று சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் செய்தனர்.
    • போராட்டத்தால் அங்கு போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி ரெட்டியார் பாளையம் பகுதியில் பாதாள சாக்கடையில் இருந்து விஷவாயு பரவி வீடுகளில் இருந்த கழிவறைகளுக்கு சென்ற செந்தாமரை, காமாட்சி, செல்வராணி ஆகிய 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    3 பேர் பலியானதற்கு கண்டனம் தெரிவித்து நேரு எம்.எல்.ஏ. தலைமையில் சமூக அமைப்பினர் சட்ட சபை முன்பு இந்த பிரச்சினையில் கவனக்குறை வாக செயல் பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முதல்-அமைச்சரிடம் இது தொடர்பாக மனு அளித்தனர்.

    இந்த நிலையில் ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் தற்காலிக கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும், பாதாள சாக்கடை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று இரவு 9 மணியளவில் புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் கம்பன் நகர் சந்திப்பில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் திடீரென்று சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் செய்தனர்.

    இது பற்றிய தகவல் அறிந்த தொகுதி எம்.எல்.ஏ. சிவசங்கரன் அங்கு வந்து பொதுமக்களுடன் சேர்ந்து போராட்டத்தில் கலந்துகொண்டார். இந்த மறியல் போராட்டத்தால் அங்கு போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலையின் இரு புறமும் சுமார் 1 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன.

    தகவல் அறிந்தரெட்டியார் பாளையம் போலீசார் மற்றும் வருவாய்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று போராட் டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்தை நடத்தினர்.

    பாதாள சாக்கடை திட்டம் தேவை இல்லை

    அப்போது அவர்கள் இந்த பகுதியில் 300 குடும்பங்கள் உள்ளது. நாங்கள் உயிர்பயத்துடன் இருக்கிறோம். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் எங்க ளுக்கு தேவை இல்லை.

    பாதாள சாக்கடை திட்டம் எங்கள் பகுதிக்கு தேவை இல்லை. இதனை ரத்து செய்ய வேண்டும். தற்போது கழிவறையில் உள்ள பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் என்று கூறினர். அப்போது அதிகாரிகள் இது தொடர்பாக அரசிடம் பேசி நடவடிக்கை எடுப்ப தாக கூறினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த போராட்டம் காரணமாக இரவு 9 மணி முதல் 10.30 மணி வரை 1 ½ மணிநேரம் விழுப்புரம் புதுச்சேரி நெடுஞ்சாலையில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. * * * சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

    • பாதாள சாக்கடை கால்வாய் அடைப்பை சரி செய்ய கழிவுநீர் தொட்டி உள்ளே நெல்சன் இறங்கினார்.
    • ஒப்பந்ததாரர்களான மாதவரம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், வினீஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை சிறையில் அடைத்தனர்.

    கொளத்தூர்:

    மாதவரம் அடுத்த முத்து மாரியம்மன் கோவில் தெருவில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு இருந்தது. இதனை சரி செய்வதற்காக மாதனங்குப்பத்தில் தங்கி ஒப்பந்த ஊழியர்களாக வேலைபார்த்து வந்த தஞ்சாவூரை சேர்ந்த நெல்சன் (26) ரவிக்குமார் ஆகியோர் வந்தனர்.

    பாதாள சாக்கடை கால்வாய் அடைப்பை சரி செய்ய கழிவுநீர் தொட்டி உள்ளே நெல்சன் இறங்கினார். அங்கே திடீரென விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரவிக்குமார் கால்வாய் உள்ளே எட்டிப் பார்த்தபோது அவரையும் விஷவாயு தாக்கியது.

    அவரும் கால்வாயின் உள்ளே விழுந்தார். தகவல் அறிந்து மாதவரம் தீயணைப்பு அதிகாரி சரவணன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் விரைந்து வந்து மயங்கிய நிலையில் இருந்த இருவரையும் மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நெல்சன் இறந்தார். ரவிக்குமார் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மாதவரம் இன்ஸ்பெக்டர் காளிராஜ் வழக்கு பதிவு செய்து ஒப்பந்ததாரர்களான மாதவரம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், வினீஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை சிறையில் அடைத்தனர்.

    ×