search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போட்டிகள்"

    • ஆண்டவர் செவிலியர் கல்லூரியில் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடைபெற உள்ளன.
    • 3 பிரிவுகளில் தனித்தனியே முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட உள்ளன.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே படைப்பர்றறலையும், பேச்சாற்றலையும் வளர்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் மாவட்ட நிலையில் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தி பரிசுத்தொகை, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி, நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு அடுத்த மாதம் (ஜூலை) 4-ந் தேதி காலை 9.15 மணிக்கு நாகை சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளியிலும், கல்லூரிகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு 5-ந் தேதி காலை 9.30 மணிக்கு நாகை அருகே பொரவச்சேரி ஆண்டவர் செவிலியர் கல்லூரியிலும் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடைபெற உள்ளன.

    கவிதை, கட்டுரை (ம) பேச்சு போட்டிக்கு 3 பிரிவுகளில் தனித்தனியே முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.7ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட உள்ளன.

    நாகை மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு நாகப்பட்டினம் முதன்மை கல்வி அலுவலகம் வழியாகவும், கல்லூரிகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு கல்லூரி மண்டல இணை இயக்குநர் வழியாகவும் சுற்றறிக்கை அனுப்ப பெற்றுள்ளது.

    தமிழ் ஆர்வமுள்ள மாணவர்கள் மேற்கூறியுள்ள போட்டிகளில் கலந்து கொண்டு பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாவட்ட ஊசு போட்டிகள் நடந்தது.
    • பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில், மாவட்ட ஊசு சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான போட்டிகள் நடந்தது. இதில்

    100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். தவுல் பாடம், சான்சு பாடம் போன்ற போட்டிகளில் சப்-ஜூனியர், ஜூனியர், யூத் சீனியர் போன்ற பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.

    இதற்கு சென்னை காளிங்கன், திருவண்ணாமலை பெரியசாமி, சிவகங்கை லதா நடுவராக பணியாற்றினர். இந்த போட்டியில் முதலிடத்தை பெற்ற வீரர்கள் ஜூலை மாதம் வந்தவாசியில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுகின்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    • முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன.
    • மதுரையை சேர்்ந்த மாணவ-மாணவிகள் பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.

    மதுரை

    மதுரையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக முதல்-அமைச்சர் பதக்க விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த விளையாட்டு போட்டியில் 1970-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இதில் 45 பரிசுகளில் மூன்றில் ஒரு பங்கு பரிசை இந்தியன் சிலம்பப்பள்ளி மாணவ-மாணவிகள் வென்றனர். இவர்கள் தங்கம், வெள்ளி, வெண்கல பரிசுகளை வென்று சாதனை படைத்தனர். கல்லூரி மாணவர் விஜய ராஜன் சுருள்வாள், ஒற்றைக் கம்பு விளையாட்டில் தங்கமும் வெள்ளி பதக்க மும், ஜெயக்குமார் அலங்காரவீச்சில் தங்கப்பதக்கம் வென்றார்.

    அஜீதா இரட்டைக் கம்பு விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்றார். பள்ளிகள் அளவில் நடந்த சிலம்பாட்ட போட்டியில் பாலமுருகன் வெள்ளி பதக்கத்தையும், ஜாலினி வெள்ளிப்பதக்கமும், பொது பிரிவில் மாணவி ஏஞ்சலின் ஜெனிபர் வெண்கல பதக்கங்களையும் வென்று சாதனை படைத்தார். இவர்களில் நான்கு பேர் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். பரிசு பெற்ற மாணவ மாணவிகளை தலைமை பயிற்சியாளர் மாமல்லன் எஸ்.எம்.மணி, பயிற்சியாளர் வடிவேல், சந்திரா, ஒருங்கி ணைப்பாளர் நிஜாமுதீன், பயிற்சியாளர்கள் கராத்தே கண்ணன், கனிராஜ் மற்றும் பெற்றோர்கள் பாராட்டி னர்.

    • 2024-ம் ஆண்டிற்கான சர்வதேச திறன் போட்டிகள் (வேல்ட் ஸ்கில்ஸ் காம்ப்ப டிஷன்ஸ் 2024) பிரான்ஸ் நாட்டில் உள்ள லியான் நகரில் நடைபெற உள்ளது.
    • டிஎன் ஸ்கில்ஸ்-2023 என்ற தேசிய அளவிலான திறன் போட்டிகள் 55 திறன் பிரிவுகளுக்கு நடைபெற உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2024-ம் ஆண்டிற்கான சர்வதேச திறன் போட்டிகள் (வேல்ட் ஸ்கில்ஸ் காம்ப்ப டிஷன்ஸ் 2024) பிரான்ஸ் நாட்டில் உள்ள லியான் நகரில் நடைபெற உள்ளது. இதற்கு முன்னோடியாக டிஎன் ஸ்கில்ஸ்-2023 என்ற தேசிய அளவிலான திறன் போட்டிகள் 55 திறன் பிரிவுகளுக்கு நடைபெற உள்ளது.

    இந்த போட்டியில் கலந்து கொள்ளுவதற்கான தகுதி வயது வரம்பு மட்டுமே ஆகும். 1.1.2002க்கு பின் பிறந்த வர்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம். இன்பர் மேஷன் நெட்வொர்க் கேபிளிங், மெக்கட்ரானிக்ஸ் போன்ற திறன் போட்டிகளில் பங்கேற்கும் போட்டியாளர் களின் வயது வரம்பு 25 வயதிற்கு மேல் இருக்க கூடாது.

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், மருத்துவம், மருத்துவம் சார்ந்த, என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல், பாலி டெக்னிக், ஐடிஐ பள்ளிகளில் படித்த மற்றும் படிக்கும் மாணவ மாணவிகளும், தொழில் நிறுவனங்களில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்த தொழிற்பழகுநர்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தகுதியான தனி நபர்களும் இப்போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்.

    திறன் போட்டியில் கலந்துகொள்ள விருப்ப முள்ள போட்டியாளர்கள் தங்களது விவரங்களை https://naanmudhalvan.tn.gov.in/tnskills/ என்ற வெப்சைட் மூலம் வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப் பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள திறன் பயிற்சி அவலக உதவி இயக்குநரை தொடர்பு கொண்டு விபரங்கள் அறியலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • வயதுவரம்பு 1.1.1999 அன்றும், அதற்கு பிறகும் பிறந்திருக்க வேண்டும்.
    • 5 முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பிரான்ஸில் உள்ள லியான் நகரில் செப்டம்பர் 2024-ம் ஆண்டு சர்வதேச திறன் போட்டி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள ஏதுவாக தொடக்க நிலையில் மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் நடத்தப்படு கிறது.

    இதில் பங்கேற்க naanmudhalvan.tn.gov.in/tnskills/ என்ற இணையதளத்தில் தகுதி வாய்ந்த விண்ணப்ப தாரர்கள் விண்ணப்பிக்க லாம். இதில் 55 தொழிற்பிரி வுகளில் தங்களது தனித்திறனை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற உள்ள இப்போட்டிக்கு விண்ணப் பிக்க வருகிற 30-ந் தேதி கடைசி நாளாகும்.

    இதற்கான வயதுவரம்பு 1.1.1999 அன்றும், அதற்கு பிறகும் பிறந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட சில தொழிற்பிரிவுகளுக்கு 1.1.2002 அன்றும், அதற்கு பிறகும் பிறந்தவர்கள் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

    இதற்கான கல்வித்தகுதி 5 முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள், பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்தவர்கள், படித்து கொண்டிருப்பவர்கள், தொழிற்பயிற்சி நிலையம், தொழில்நுட்ப கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரியில் படித்தவர்கள் மற்றும் படித்து கொண்டிருப்பவர்கள், தொழிற்சாலைகளில் பணியில் உள்ளவர்கள் என அனைவரும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். இதுதொடர்பான விவரங்களை இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

    மேலும் விபரங்களுக்கு நாகப்பட்டினம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநரிடம் நேரிலோ, அல்லது 04365-250126 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு போட்டிகள் நடக்கிறது.
    • உதவிஆணையர் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் தெரிந்து கொள்ளலாம்.

    விருதுநகர்

    வள்ளலாரின் முப்பெரும் விழாவினை முன்னிட்டு மதுரை இந்து சமய அறநிலை யத்துறை இணை ஆணையர் மண்டலம் சார்பில் ஜூலை 2-ந் தேதி வள்ளலாரின் முப்பெரும் விழா அருப்புக்கோட்டை சொக்கநாதர் திருக்கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

    ்இதற்கு முன்னோடியாக விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளும் வள்ளலாரின் வாழ்க்கை மற்றும் பாடல்கள் குறித்து பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, பாடல் போட்டி, ஓவியம் வரைதல் ஆகிய போட்டிகள் விருதுநகர் கே.வி.எஸ். வித்தியாசாலை மேல்நிலைப்பள்ளியில் வருகிற 20-ந் தேதி காலை 9 மணி அளவில் நடைபெற உள்ளது.

    இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவ- மாணவிகளுக்கு ஜூலை 2-ந் தேதி நடைபெறும் வள்ளலார் முப்பெரும் விழாவின் போது பரிசுகள் வழங்கப்படும். இதுபற்றிய கூடுதல் விவரங்களை விருதுநகர் இந்து சமய அறநிலையத்துறை உதவிஆணையர் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் தெரிந்து கொள்ளலாம்.

    இந்த தகவலை விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • ரங்கோலி போட்டி மன்னார்குடியில் நடைபெற்றது.
    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்ச கத்தின் கீழ் இயங்கும் திருவாரூர் மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் ஜி-20 கல்விப் பணிக்குழு வின் பொதுமக்கள் பங்கேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதன் ஒருபகுதியாக ரங்கோலி போட்டி மன்னார்குடியில் மக்கள் கல்வி நிறுவன தலைவர் கௌசல்யா தலைமையில் நடைபெற்றது.

    திருவாரூர் மக்கள் கல்வி நிறுவன இயக்குநர் பாலகணேஷ் முன்னிலை வகித்தார்.

    மகாதேவபட்டினம் ஒன்றிய குழு உறுப்பினர் பாரதி மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்க ளுக்கு பரிசு வழங்கி பாராட்டி னார்.

    நிகழ்ச்சியில் அலு வலர்கள் திருலோகச்சந்தர் , கனகதுர்க்கா , மனோஜ் , பயிற்றுனர்கள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் குழுவிற்கு போட்டிகள் நடைபெற்றன.
    • வெற்றி பெற்ற 25 மகளிர் சுயஉதவிகுழு உறுப்பினர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் மகளிர் திட்ட நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவி குழுவிற்கு கவிதை கட்டுரை ஓவிய போட்டிகள் நடைபெற்றன.

    இதையடுத்து பரிசளிக்கும் விழா மகளிர் திட்ட இயக்குனர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மகளிர் குழு ஒருங்கிணைப்பாளர் செல்லம்மாள் வரவேற்றார்.

    நிர்வாக கணக்கு திட்ட உதவிஅலுவலர் முருகேசன், உதவித்திட்ட அலுவலர் சரவணன் மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட மகளிர் குழுவினர் கலந்து கொண்டனர்.

    போட்டியில் வெற்றி பெற்ற 25 மகளிர் சுயஉதவிகுழு உறுப்பினர்களுக்கு தலைமை திட்ட இயக்குனர் முருகேசன் பரிசுகள் வழங்கினார்.

    • கோடை கால நிகழ்ச்சிகள் மே 2-ந் தேதி முதல் மே 30-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • நேற்று நடந்த முகாமில் மொத்தம் 110 போ் கலந்து கொண்டனர்.

    குன்னூர்,

    நீலகிரி மாவட்டம் குன்னூா் வெலிங்டன் ராணுவ முகாமில் குழந்தைகளுக்கான 10 நாள் கோடை கால சாகச முகாம் நடந்தது.

    இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்றனர். ஆண்டுதோறும் வெலிங்டன் ராணுவ முகாம் சாா்பில் கோடைக்கால நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    அதுபோல இந்த ஆண்டிற்கான கோடை கால நிகழ்ச்சிகள் மே 2-ந் தேதி முதல் மே 30-ந் தேதி வரை நடைபெறுகிறது. நேற்று நடந்த முகாமில் மொத்தம் 110 போ் கலந்து கொண்டனர்.

    இதில் குதிரை சவாரி, ஏா் ரைபிள் மற்றும் பிஸ்டல் ஷூட்டிங், ட்ரெக்கிங், படகு சவாரி, உடற்பயிற்சி என பல்வேறு சாகச போட்டிகள் நடந்தது. மேலும், நாய்களை கையாளுதல், காயம்பட்ட விலங்குகளை பராமரித்தல் மற்றும் முதியோா் இல்லத்தில் ஒரு நாள் முழுவதும் சேவையில் ஈடுபடுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரக்கன்று நடும் நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடை பெற்றன.

    குழந்தைகளை பொறுப்புள்ள குடிமகனாக மாற்றும் வகையில் சாகச உணா்வையும், சமூக விழிப்புணா்வையும் ஏற்படுத்த இந்த முகாம் நடத்தப்படுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.

    • ரெட்கிராஸ் மாணவர்களுக்கு தனித்திறன் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது.
    • ஆட்டோ டிரைவர்களுக்கு ரெட்கிராஸ் சுகாதார பெட்டகம் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    உலக ரெட்கிராஸ் தினத்தில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி தஞ்சாவூர் மாவட்ட கிளைக்கு கடந்த ஆண்டு பல்வேறு வகையில் உதவிகள் புரிந்த பாரத ஸ்டேட் வங்கி, சிட்டி யூனியன் வங்கி, ஐசிஐசிஐ பவுண்டேஷன், ஆர்கிடெக் அருண் பாலாஜி, துணை இயக்குனர் சுகாதாரம் டாக்டர் நமச்சிவாயம், பேரிடர் வட்டாட்சியர் ராஜேஸ்வரி, மாவட்ட குருதி பரிமாற்று அலுவலர் டாக்டர் வேல்முருகன், மத்திய மருந்து ஆய்வாளர் கவியரசன், முதல் நிலை மருந்து ஆய்வாளர் சுபத்ரா, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்தி ரன், இன்ஸ்பெக்டர் சந்திரா, மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்த் ஆகியோருக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பொன்னாடை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.

    முன்னதாக இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி வளாகத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்)டாக்டர் சுகபுத்ரா, ரெட்கிராஸ் கொடியினை ஏற்றி வைத்து, ரெட்கிராஸ் இயக்கத்தை தோற்றுவித்த ஜீன்ஹென்றிடூனாந் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.

    தொடர்ந்து ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ரெட்கிராஸ் சுகாதார பெட்டகத்தினை வழங்கினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரத்ததான முகாமினை தொடங்கி வைத்தார்.

    உலக ரெட்கிராஸ் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஜூனியர் ரெட்கிராஸ் மாணவர்களுக்கு தனித் திறன் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது.

    குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் யூத் ரெட்கிராஸ் மாணவர்களிடம் ரெட்கிராஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மேலும் ரெட்கிராஸ் வளாகத்தில் பொதுமக்களுக்கு நீர் மோரும், அரசு ராசாமிராசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் இசிஆர்சி மையத்தில் பராமரிப்பில் உள்ள மனநலம் குன்றிய நபர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்வில் ரெட்கிராஸ் உறுப்பினர்கள் டாக்டர். ராதிகா மைக்கேல், டாக்டர். சிங்காரவேலு, டாக்டர். தமிழரசன், ஜெயக்குமார், அரிஸ்டோ வீரா, ஸ்டாலின் பாபு, கோவி மோகன், முனைவர் பிரகதீஷ், ஜான்ஸ்டீபன், செல்வராணி, பயோகேர் முத்துக்குமார், இரத்த வங்கி மருத்துவர் டாக்டர் ராஜ்குமார், ரெட்கிராஸ் பணியாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக ரெட்கிராஸ் துணை சேர்மன் பொறியாளர். முத்துக்குமார் வரவேற்றார். பொருளாளர் சேக் நாசர் நன்றி கூறினார்.

    • தண்டலைச்சேரி அரசு கலை அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா நடைப்பெற்றது.
    • கல்லூரி படிப்பு என்பது நமது வாழ்க்கையின் ஆதாரம், எதிர்காலத்தை நிர்ணயிக்க கூடியது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி தண்டலைச்சேரி அரசு கலை அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் அங்கம்மாள் தலைமை வகித்தார்.

    மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தமயந்தி முன்னிலை வகித்தார்.

    பேராசிரியர் திலகர் வரவேற்றார்.

    தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக அயல்நாட்டு தமிழ் கல்வித் துறை பேராசிரியர் வெற்றிச்செல்வன் கருத்துரையாற்றினார். நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன், பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார், ஜேஸீஸ் தலைவர் செந்தில், வழக்கறிஞர் அரசு தாயுமானவன் ஆகியோர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.

    சிறப்பு அழைப்பாளராக மாரிமுத்து எம்.எல்.ஏ. கலந்துக்கொண்டு பேசு கையில், மாணவ பருவம் என்பது மகிழ்ச்சியானது மட்டுமல்ல பொறுப்பு மிகுந்ததாகும்.

    கல்லூரி படிப்பு என்பது நமது வாழ்க்கையின் ஆதாரம், எதிர்காலத்தை நிர்ணயிக்க கூடியது. அரசு வேலைக்கு செல்ல வேண்டுமென்றால் போட்டி தேர்வு எழுதவேண்டும்.

    அதற்கான மனநிலையை இப்போதே ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.

    அதற்காக தயார் நிலையில் நாம் இருக்க வேண்டும்.

    இக்கல்லூரி மேம்பாட்டி ற்காக அரசு மூலம் பல திட்டங்களை செயல்படுத்த முயற்சி எடுத்து வருகிறோம்.

    இக்கல்லூரியை சிறப்பு வாய்ந்ததாக மாற்ற அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்றார்.

    இதையடுத்து கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் தனியார் கம்பெனிகளில் தேர்வு செய்யப்பட்டதற்கான நியமன உத்தரவை வழங்கி னார்கள்.

    மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், பேராசிரியர் அலெக்ஸாண்டர் மற்றும் பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

    பேராசிரியர் யோக பிரகாசம் நன்றி கூறினார்.

    பேராசிரியர் பன்னீர்செல்வம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    • ஆண்டு தோறும் மாவட்ட, மாநில அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
    • மாணவ, மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வருகிற 24-ந் தேதி நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற உள்ளது.

    நாமக்கல்:

    பள்ளி, கல்லூரி மாண வர்களிடையே பேச்சாற்ற லையும், படைப்பாற்ற லையும் வளர்க்கும் நோக்கத்தில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் மாவட்ட, மாநில அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    அதன்படி, நாமக்கல் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2022 - 2023-ம் ஆண்டுக்கான, மாவட்ட அளவில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வருகிற 24-ந் தேதி நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற உள்ளது.

    இப்போட்டிகளில், நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் போட்டிக்கு ஒருவர் வீதம் 3 மாணவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களை அந்தந்த கல்லூரி முதல்வரே தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும்.

    இப்போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.7 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.5 ஆயிரம் வீதம் வழங்கப்படும். போட்டிக ளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ மாணவி கள், அந்தந்த கல்லூரி முதல்வரிடமிருந்து உரிய படிவத்தை பெற்று நிறைவு செய்து போட்டி தொடங்கும் முன்பு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் வழங்குதல் வேண்டும். மேலும் விவ ரங்களுக்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலு வலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அலுவல கத்தை தொடர்பு கொள்ள லாம் என்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளார்.

    ×