search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 238902"

    • பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள அம்மன் மற்றும் குலதெய்வ கோவில்களில் பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பாண்டமங்கலம் அருகே கோப்பணம் பாளையத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன், அரசாயி அம்மன், மாசாணி அம்மன் கோவில், பரமத்தியில் உள்ள அங்காளம்மன், பரமத்திவேலூரில் உள்ள மாரியம்மன், பழைய பை-பாஸ் ரோட்டில் உள்ள செல்லாண்டியம்மன், பேட்டையில் உள்ள புதுமாரியம்மன், பகவதி அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

    இதேபோல், நன்செய் இடையாறு, பாண்டமங்கலம், கொந்தளம், சேளூர், அ.குன்னத்தூர், அய்யம்பாளையம், ஆனங்கூர், வடகரையாத்தூர் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் மற்றும் குலதெய்வ கோவில் களில் உள்ள அம்மனுக்கு பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி யளித்தார். இதில் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அருள் பெற்றனர். 

    • 10-ம் ஆண்டு சிறப்பு வித்யா ஜெப யாக பூஜை நடத்தப்பட்டது.
    • மாணவ, மாணவிகளுக்கு தேர்வு எழுத பேனா, மற்றும் லட்சுமி ஹயக்ரீவர் படம் வழங்கப்பட்டது.
    • நாளை இரவு 8மணியில் இருந்து 9மணி வரை முதற்கால சிவ பூஜை நடக்கிறது.
    • நாளை மறுநாள் 19-ந் தேதி அதிகாலை 4மணியில் இருந்து 5 மணி வரை 4-ம் கால மகா பூஜை நடக்கிறது.

    ஊத்துக்குளி :

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள அய்யம்பாளையம் மாதேஸ்வர சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி சிறப்பு பூஜை நாளை 18-ந்தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.

    இதைெயாட்டி நாளை இரவு 8மணியில் இருந்து 9மணி வரை முதற்கால சிவ பூஜை நடக்கிறது. 10மணியில் இருந்து 11 மணி வரை 2-ம் கால ருத்ராபிஷேக பூஜை நடக்கிறது. நாளை மறுநாள் 19-ந்தேதி அதிகாலை 2மணியில் இருந்து 3மணி வரை 3-ம் கால சிவ பூஜை நடக்கிறது. அதிகாலை 4மணியில் இருந்து 5 மணி வரை 4-ம் கால மகா பூஜை நடக்கிறது.

    விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொள்ளும்படி அய்யம்பாளையம் ஊர் பொதுமக்கள் மற்றும் கதித்தமலை வனம் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

    • மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி திருக்கோவிலில், சஷ்டியை முன்னிட்டு சிறப்புபூஜை நடைபெற்றது.
    • சிறப்பு அலங்காரத்தில் முத்துக்குமாரசுவாமி அருள் பாலித்தார் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி திருக்கோவிலில், சஷ்டியை முன்னிட்டு சிறப்புபூஜை நடைபெற்றது. இதில் முத்துக்குமாரசுவாமிக்கு சந்தனம்,பால்,தயிர்,தேன், உள்ளிட்ட 16 வகை வாசனை திரவியங்களால், அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முத்துக்குமாரசுவாமி அருள் பாலித்தார் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

    • சனி பகவான் நேற்று மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்ந்தார்.
    • ஸ்ரீ சக்தி வாராஹி சித்தர் கோவிலில் சனி பகவானுக்கு சிறப்பு அர்ச்சனை, அபிஷேகம் நடைபெற்றது.

    விளாத்திகுளம்:

    திருக்கணித பஞ்சாங்கப்படி சனி பகவான் நேற்று மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்ந்தார். இதனால் சனி பகவான் வீற்றிருக்கும் அனைத்து கோவில்களிலும் சிறப்பு அபிஷேகங்களும் யாகங்களும் நடைபெற்றது.

    இந்நிலையில் விளாத்திகுளம் வேம்பார் சாலையில் உள்ள ஸ்ரீ சக்தி வாராஹி சித்தர் கோவிலில் நேற்று மாலை 6 மணி 4 நிமிடம் சனி பெயர்ச்சியை முன்னிட்டு சனி பகவானுக்கு சிறப்பு அர்ச்சனை, அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து எள் சாதம் போன்றவை படைக்கப்பட்டு சனி பெயர்ச்சி வரும் நாட்களில் அனைவருக்கும் நல்ல பலன்கள் கிடைக்க சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    • புற்றுக்கோவிலில் தைப் பொங்கல் சிறப்புப் பூஜை நடைபெற்றது.
    • பூஜையில் அம்மனுக்கு 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் புற்றுக்கோவிலில் தைப் பொங்கல் சிறப்புப் பூஜை நடைபெற்றது. இதனையொட்டி காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோடிசக்தி விநாயகர், வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகன், சங்கரலிங்க சுவாமி, சங்கரேஸ்வரி அம்மனுக்கு மஞ்சள், பால், தேன், விபுதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார். இவ்விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள், சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • புற்றுக்கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்புப் பூஜை நடைபெற்றது.
    • கோடி சக்தி விநாயகருக்கு 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்புப் பூஜை நடைபெற்றது. இதனையொட்டி கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபன கும்ப கலச பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மூலமந்திர ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் கோடி சக்தி விநாயகருக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. விநாயருக்கு கொழுக்கட்டை, சுண்டல் படைத்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார். இவ்விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள், சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை சொர்ணமலை திருச்செந்தூர் பாதயாத்திரை மற்றும் அன்னதான குழு, முருகன், பிரேமா ஆகியோர் செய்தனர்.

    • சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் கோவிலில் ஆருத்ரா தரிசன சிறப்பு பூஜை நடைப்பெற்றது.
    • நிகழ்ச்சியில் கோமாதாவிற்கு சிறப்பு பூஜை தீபாராதனை நடைப்பெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் கோவிலில் ஆருத்ரா தரிசன சிறப்பு பூஜை நடைப்பெற்றது. இதனையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு விநாயகர், முருகன், சங்கரலிங்க சுவாமி, சங்கரேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடைப்பெற்றது. தொடர்ந்து சிவன் சன்னதியில் நடராஜர் சிலை அலங்கரிக்கப்பட்டு கோமாதாவிற்கு சிறப்பு பூஜை தீபாராதனை ஒரே நேரத்தில் நடைப்பெற்றது. இதில் சுற்று வட்டார மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பூஜைகளை சுப்பிரமணிய ஐயர் செய்தார். முடிவில் பக்தர்களுக்கு களி பிரசாதமாக வழங்கப்பட்டது.

    • வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • சாமிக்கு சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகாவில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சாமிக்கு சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இதேபோல் பரமத்தி வேலூரில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவில், அனிச்சம்பா ளையத்தில் உள்ள பெரு மாள் கோவில், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள பெருமாள் கோவில், பரமத்தியில் உள்ள

    கோதண்டராம சுவாமி கோவில், வடகரை யாத்தூரில் உள்ள தேவி பூதேவி உடனுரை அஞ்சலென்ற பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதி களைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • சங்கரலிங்க சுவாமி, சங்கரேஸ்வரி அம்மனுக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    இதனையொட்டி காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோடிசக்தி விநாயகர், வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகன், சங்கரலிங்க சுவாமி, சங்கரேஸ்வரி அம்மனுக்கு மஞ்சள், பால், தேன், விபுதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யார் செய்தார்.

    இவ்விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    • மந்தித்தோப்பு துளசிங்க நகர் அம்மா பூமாதேவி ஆலய சித்தர் பீடத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெற்றது.
    • அனுமனுக்கு வெற்றிலை, துளசி, வடை மாலை சாற்றி சிறப்பு திபாராதனை நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் பிரசித்தி பெற்ற அம்மா பூமாதேவி ஆலய சித்தர் பீடத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவையொட்டி காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. காலை 7 மணிக்கு ஆஞ்சநேயர், அம்பாள், குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஞ்சள், மா பொடி திரவியம், பால், சந்தனம் உள்ளிட்ட 21 வகையான கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து ஆஞ்ச நேயர்க்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சோடனை தீபாராதனை நடைபெற்றது. லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வசுப்பி ரமணியன் மாரிஸ்வரன் பூஜைகளை செய்தனர். இதில் சுப்பாராஜ், சங்கரேஸ்வரி, மாரியப்பன், ஆறுமுகம், மகாராஜா மற்றும் விளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி, இசக்கிமுத்து, மாரித்தாய், செல்வராணி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அம்மா பூமாதேவி ஆலய குழுவினர் செய்திருந்தனர்.

    இதேபோல் கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி விழா சிறப்புப் பூஜையில் கணபதி பூஜை, கும்ப கலச பூஜை தீபாராதனை நடைப்பெற்றது. தொடர்ந்து அனுமனுக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகமும், வெற்றிலை, துளசி, வடை மாலை சாற்றி சிறப்பு திபாராதனையும் நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார். விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு இனிப்பு, வடை பிரசாதமாக வழங்கப்பட்டது.

    • அம்மன் மற்றும் குலதெய்வ கோவில்களில் மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.
    • மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டாரத்தில் உள்ள அம்மன் மற்றும் குலதெய்வ கோவில்களில் மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.

    பாண்டமங்கலம்‌ அருகே உள்ள கோப்பணம்பா ளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன், அர சாயி அம்மன், மாசாணி அம்மனுக்கு வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.அதேபோல் பரமத்தியில் உள்ள அங்காளம்மன், பரமத்திவேலூரில் உள்ள மாரியம்மன், பேட்டையில் உள்ள புதுமாரியம்மன்,‌‌ பகவதி அம்மன், கரூர் மெயின் ரோட்டில் உள்ள செல்லாண்டி யம்மன், நன்செய்இடை யாற்றில் உள்ள மாரியம்மன் மற்றும் ராஜா சுவாமி, பாண்ட மங்கலம் மாரி யம்மன், பகவதி அம்மன், கொந்தளம் மாரியம்மன், சேளூர் மாரியம்மன், அய்யம்பா ளையம் மாரியம்மன், பகவதி அம்மன், ஆனங்கூர் மாரியம்மன், பகவதி அம்மன், செல்லாண்டியம்மன், வட கரையாத்தூர் மாரியம்மன் கோவில் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதி களில் உள்ள கோவில்களில் மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு

    அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 

    ×