search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 238902"

    • மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிசேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவிலில் மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இதில் காலபைரவருக்கு சந்தனம்,பால், தயிர், தேன், உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிசேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

    பக்தர்கள் தேய்பிறை அஷ்டமி விரதம் இருந்து கால பைரவரை தரிசித்தனர். 

    • குருவித்துறையில் திருமண பத்திரிகை வைத்து சிறப்பு பூஜை நடந்தது.
    • இதில் ஆர். பி.உதயகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    சோழவந்தான்

    எம்.ஜி.ஆர்.- ஜெயலலிதா பிறந்தநாள், அ.தி.மு.க. 51-வதுஆண்டு பொன்விழாவை முன்னிட்டு, அம்மா பேரவையின் சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் மகள் திருமணம் உட்பட 51 ஜோடிகளுக்கு திருமணம் வருகிற பிப்ரவரி 23-ந் தேதியன்று டி.குன்னத்தூரில் நடை பெறுகிறது.

    இதனை முன்னாள் முதல்-அமைச்சர், எடப்பாடி பழனிசாமி நடத்தி வைக்கிறார். இதற்கான திருமண அழைப்பிதழை மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில், ஜெனகை நாராயண பெருமாள் கோவில், குருவித்துறை சித்திரரத வல்லப பெருமாள் கோவிலில் வைத்து சாமி கும்பிட்டு, திருமணத்தில் பங்கேற்கும் மணமக்களுக்கும், அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் சட்ட மன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன், யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா, மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் சிவசுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் திருப்பதி, சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், பாலகிருஷ்ணன், பேரூர் கவுன்சிலர்கள், நெல்லை பாலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கோப்பணம்பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத அமாவா சையை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் தாலுகா கோப்பணம்பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத அமாவா சையை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணி அம்மன், அரசாயி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் வாழவந்தி அங்காளம்மன் கோவிலில் அமாவாசை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் பரமத்தியில் உள்ள அங்காளம்மன், பரமத்திவேலூரில் உள்ள மாரியம்மன், பேட்டையில் உள்ள புதுமாரியம்மன்,‌‌ செல்லாண்டி அம்மன், நன்செய்இடையாறில் உள்ள மாரியம்மன் மற்றும் ராஜா சுவாமி கோவில், பாண்டமங்கலம் மாரியம்மன் கோவில், பகவதி அம்மன் கோவில், கொந்தளம் மாரியம்மன் கோவில், சேளூர் மாரியம்மன் கோவில், அ.குன்னத்தூர் மாரியம்மன் கோவில், அய்யம்பாளையம் பகவதி அம்மன் கோவில், ஆனங்கூர் மாரியம்மன் கோவில், செல்லாண்டி அம்மன் கோவில், வடகரை யாத்தூர் மாரியம்மன் கோவில், பச்சையம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்கள் மற்றும் குல தெய்வ கோயில்களில் சிறப்பு அபிஷேகம், சிறப்பு

    அலங்காரம், மகா தீபாரா தனையும் நடைபெற்றது. இதில் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • பைரவருக்கு, தேங்காய் உருட்டி, மிளகு தீபம் ஏற்றி வழிபாடு
    • பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம்

    வந்தவாசி:

    வந்தவாசி ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் கால பைராஷ்டமி பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. பைரவர் அவதரித்த திருநாளான நேற்று பைராஷ்டமி பூஜையில் கலச ஹோமம் நடைபெற்று.

    புனித நீரால் ஸ்ரீ கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வட மாலை சாற்றி பஞ்சலோக ஸ்ரீ மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து ஸ்ரீ கால பைரவருக்கு, தேங்காய் உருட்டி, மிளகு தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர். இந்த சிறப்பு பூஜையில் வந்தவாசி சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்ரீ கால பைரவரை தரிசனம் செய்து சென்றனர்.

    • அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் சுயம்வர கலா பார்வதி கல்யாண சந்தான சவுபாக்கிய ஹோமம் நடைபெற்றது.
    • பூமாதேவி குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 21 வகையான கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் பிரசித்தி பெற்ற அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் சுயம்வர கலா பார்வதி கல்யாண சந்தான சவுபாக்கிய ஹோமம் நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்றது. 6.45 மணிக்கு கணபதி பூஜை சங்கல்பம் கும்ப பூஜையும், 7.45மணிக்கு சுயம்வர கலா பார்வதி கல்யாண சந்தான சவுபாக்கிய ஹோமம், தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 8.45 மணிக்கு அம்பாள் பூமாதேவி குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 21 வகையான மஞ்சள், மாபொடி, திரவியம், பால், அன்னாபிஷேகம், சந்தனம், கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சோடனை தீபாராதனை நடைபெற்றது. லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன் சங்கரன் குருக்கள் பூஜைகளை செய்தார்.

    இதில் ஜோதிடர்கள் சண்முகக்குமார், திருமேனி, பாக்கியராஜ், சுப்பாராஜ், சங்கரேஸ்வரி, மாரியப்பன், ஆறுமுகம், ஜெயராம்குமார், மகேந்திரன், மாரிஸ்வரன் விளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி இசக்கிமுத்து, மாரித்தாய், செல்வராணி மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அம்மா பூமாதேவி ஆலய குழுவினர் செய்தனர்.

    • பரமேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அதேபோல் பாண்ட மங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசிவிஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், வேலூர் எல்லையம்மன் மற்றும் வல்லப விநாயகர் கோவில், பிலிக்கல் பாளையம் அருகே கரட்டூர் விஜயகிரி பழனியாண்டவர் கோவில், வடகரையாத்தூர் ஈஸ்வரன், ஜேடர்பாளையம் ஈஸ்வரன் உள்ளிட்ட பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில்களில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அலங்காரமும், சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • ஆயுத பூஜையை முன்னிட்டு வழிபாடு
    • கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே சாலை நகர் பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் திரளான மக்கள் தனது இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ஆயுத பூஜை போட்டனர்.

    நவராத்திரி விழாவின் கடைசி நாளாக ஆயுதபூஜையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்று வீடுகளிலும், கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். தொழில் நிறுவனங்களிலும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. பூஜையின்போது கொண்டைக்கடலை, அவல் பொரி உள்ளிட்டவைகளை படைத்து வழிபடுவது வழக்கம்

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சாலை நகர் பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் திரளான பொதுமக்கள் தங்களது இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து ஆயுத பூஜை போட்டனர்.

    மேலும் காலை முதல் முனீஸ்வரன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தன.

    மேலும் திருப்பத்தூர் மாவட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களுடைய வாகனங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து கோயில் பூசாரியால் ஆயுத பூஜை போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • விஜயதசமியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது
    • மங்கள ஆரத்தி நடைபெற்றது.



    அரியலூர்

    விஜயதசமியையொட்டி தா.பழூர் விஸ்வநாதர் கோவிலில் விஸ்வநாதர்-விசாலாட்சி அம்மன், வள்ளி, தேவசேனா சமேத வில்லேந்தி வேலவர் ஆகிய தெய்வங்களுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விஜயதசமி அன்று அம்மன் துர்க்கை கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார். தா.பழூர் விஸ்வநாதர் கோவிலில் முருகப்பெருமான் வில் ஏந்திய கோலத்தில் காட்சி தருவதால் இக்கோவிலில் மட்டும் அம்மனுக்கு பதிலாக வில் ஏந்திய வேலவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதையடுத்து வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியருக்கு வில்லேந்திய வேலவர் அலங்காரம் செய்யப்பட்டது. மங்கள ஆரத்தி நடைபெற்றது. பின்னர் புதிதாக செய்யப்பட்ட சிவப்பு குதிரை வாகனத்தில் வில்லேந்திய வேலவர் போர்க்கோலம் தரித்து எழுந்தருளி காட்சி தந்தார். பல்வேறு பதிகங்கள் பாடி பக்தர்கள் ஆராதனை செய்தனர். மங்கல இசை முழங்க வேதபாராயணம் செய்யப்பட்டு பிரகார பிரதட்சனம் நடைபெற்றது. தொடர்ந்து ராஜ வீதிகளில் முருகப்பெருமானின் வீதி உலாவந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். கிழக்கு வீதியில் ஆஞ்சநேயர் கோவில் அருகே முருகப்பெருமான் அசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. முருகப்பெருமானின் கையில் இருந்த வில்லை பெற்று கோவில் அர்ச்சகர் செந்தில் 8 திசைகளிலும் அம்பு எய்து அசுரனை வதம் செய்த காட்சி நடத்தப்பட்டது. பின்னர் வீதி உலா நடைபெற்றது. வீடுகள் தோறும் பக்தர்கள் தீபாராதனை செய்தனர். தொடர்ந்து கோவிலில் விடையாற்றி உற்சவம் நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதுபோல் நாயகனைபிரியாள் மரகதவல்லி தாயார் உடனுறை மார்க்க சகாயேஸ்வரர் கோவிலில் விஜயதசமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மரகதவல்லி தாயாருக்கு வாராகி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டன. பின்னர் சுவாமி-அம்பாளுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

    • திருப்பதி கோவிலில் இருந்து செய்யப்பட்டு பென்றஹள்ளி கிராமத்திற்கு எடுத்து வரப்பட்டது.
    • ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியம் அரசம்பட்டி ஊராட்சி பென்றஹள்ளி கிராமத்திற்கு பெரியசாமி ஆலய மூலவர் சிலை திருப்பதி கோவிலில் இருந்து செய்யப்பட்டு பென்றஹள்ளி கிராமத்திற்கு எடுத்து வரப்பட்டது.

    இதைதொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் சிவலிங்கம் தலைமையில் மேல தாளத்துடன் பட்டாசு வெடித்து ஊர்வலமாக வந்து பென்றஹள்ளி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சிவலிங்கம் வீட்டு முன்பு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் குட்டால்( எ) பெரியண்ணன். தர்மகர்த்தா ராமலிங்கம், நிர்வாகிகள் சங்கர், மற்றொரு சங்கர், வையம்பட்டி முனுசாமி, பில்ல கொட்டாய் மாது, செல்வம், பெரியசாமி, வனத்தூர் முனுசாமி, பள்ளத்தூர் செல்வம், வையம்பட்டி சரவணன், ரஜினி மற்றும் பூசாரிகள் பெரியசாமி, அர்ஜுனன், வேலன், வெங்கட்ராமன், சபரி, மாரியப்பன் உள்பட ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

    • வள்ளலார் வணங்கி வழிபட்ட பழமையான விநாயகர் கோவில் இடிக்கப்பட்டது.
    • சாலை விரிவாக்கபணிக்காக இந்தக் கோவிலை இடிக்கும் பணி இன்று காலை தொடங்கியது.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே அமைந்துள்ளது கண்டரக்கோட்டை கிராமம். இங்கு சென்னை சாலையில்பழமையான விநாயகர் கோவில்உள்ளது. இக் கோவில் வள்ளலார் வணங்கி வழிபட்ட சிறப்பு பெற்றது. சாலை விரிவாக்கபணிக்காக இந்தக் கோவிலை இடிக்கும் பணி இன்று காலை தொடங்கியது. முன்னதாக கோவில் அலுவலர்கள், கோவில் நிர்வாகிகள், கிராம மக்கள் அங்கு சிறப்பு பூஜை நடத்தி அங்கிருந்த விக்கிரகங்களை வேறு இடத்துக்கு கொண்டு சென்று வழிபாடு செய்தனர்.

    • சென்னிமலை முருகன் கோவிலில் ஆவணி பவுர்ணமியையொட்டி ஆவணி அவிட்டம் விழா கொண்டாடப்பட்டது.
    • விழாவில் முருகப்பெருமான் மூலவர், உற்சவர், விநாயகர், காசி விஸ்வநாதர் சாமிகளுக்கு பூணூல் அணிவிக்கப்பட்டது.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் ஆவணி பவுர்ணமியையொட்டி ஆவணி அவிட்டம் விழா கொண்டாடப்பட்டது. விழாைவயொட்டி முருக பெருமானு க்கு பால், தயிர், இளநீர், பன்னீர் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    விழாவில் முருகப்பெரு மான் மூலவர், உற்சவர், விநாயகர், காசி விஸ்வநாதர் சாமிகளுக்கு பூணூல் அணிவிக்கப்பட்டது. முன்தாக சிறப்பு அபிேஷக பூஜைகள் நடந்தது.

    விழாவில் சென்னிமலை, காங்கயம், வெள்ளோடு, ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சென்னிமலை முருகன் கோவில் சிவாச்சாரியர்கள் சென்னிமலை டவுன் கைலாசநாதர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தி பூணூல் மாற்றி அணி வித்தனர்.

    • தண்டாயுதபாணி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • ஆவணி மாத சஷ்டியையொட்டி நடந்தது

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மேல ராஜ வீதியிலுள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஆவணிமாத சஷ்டியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி தண்டாயுதபாணி சுவாமிக்கும், விநாயகருக்கும் பாலாபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலையில் தண்டாயுதபாணி சுவாமி சந்தனக்காப்பு மலர் அலங்காரத்திலும், விநாயகர் வெள்ளிக்கவச அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×