என் மலர்
நீங்கள் தேடியது "குடிநீர் விநியோகம்"
- திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் 2வது குடிநீா்த் திட்டத்தின்கீழ் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
- இரண்டாவது குடிநீா்த் திட்டத்தில் குடிநீா் விநியோகம் தடைபடும் என தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.
திருப்பூர்:
திருப்பூா் மாநகரில் 2-வது குடிநீா்த் திட்டத்தின்கீழ் விநியோகிக்கப்படும் குடிநீா் விநியோகம் நாளை 30-ந்தேதி நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
இது குறித்து திருப்பூா் மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் 2வது குடிநீா்த் திட்டத்தின்கீழ் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2வது குடிநீா்த் திட்டத்தில் மேட்டுப்பாளையத்தில் உள்ள பிரதான குழாயில் மின்சார வாரியத்தின் மூலம் சனிக்கிழமை மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் இரண்டாவது குடிநீா்த் திட்டத்தில் குடிநீா் விநியோகம் தடைபடும் என தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.
திருப்பூா் மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்கு உள்பட்ட வாா்டு எண் 1, 13, 14, 3வது மண்டலத்துக்கு உள்பட்ட 44, 45, 50, 51, மற்றும் 4வது மண்டலத்துக்கு உள்பட்ட 52, 55 ஆகிய வாா்டுகளில் வரும் ஞாயிற்றுக்கிழமை குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. அதே வேளையில், வரும் திங்கள்கிழமைமுதல் மேற்கண்ட பகுதிகளில் தங்கு தடையின்றி குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தலைமைக் குடிநீா் நீரேற்று நிலையத்தில் மின் உந்துகள் பழுதடைந்துள்ளன.
- பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்து சிக்கனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
உடுமலை :
உடுமலை நகரில் நாளை 21,நாளை மறுநாள் 22 ஆகிய தேதிகளில் 2 நாள்கள் குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உடுமலை நகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,உடுமலை நகராட்சி திருமூா்த்தி நகா் தலைமைக் குடிநீா் நீரேற்று நிலையத்தில் மின் உந்துகள் பழுதடைந்துள்ளன. ஆகையால், புதிய மின் உந்துகள் பொறுத்தப்படுவதாலும், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாலும் உடுமலை நகரம் முழுவதும் 21, 22 ஆகிய தேதிகளில் குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படும். எனவே, பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்து சிக்கனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
- மீதம் உள்ள எண்ணேக்கொள் கூட்டு குடிநீர் திட்ட பணி விரைவில் முடிக்கப்படும் என்றார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்ததாளப்பள்ளி ஊராட்சி, கங்கலேரி ஊராட்சி மற்றும் வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியம் எண்ணேக்கொள் மற்றும் 122 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் முன்னிலையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
2022-23ம் நிதியாண்டில் வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த எண்ணேக்கொள் மற்றும் 122 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டப்பணிகள், ஊத்தங்கரை பேரூராட்சி மற்றும் 50 கிராமங்களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள், ஓசூர் ஒன்றியம் தேவேரிப்பள்ளி மற்றும் 23 கிராமங்களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள், நாகொண்டப்பள்ளி மற்றும் 27 கிராமங்களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள்,
கெலமங்கலம் ஒன்றியம் ராயக்கோட்ைட மற்றும் 28 கிராமங்களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள், பர்கூர் ஒன்றியம் சிகரலப்பள்ளி மற்றும் 143 கிராமங்களுக்கான கூட்டு குடிநீர் திட்டப்பணிகள், கிருஷ்ணகிரி ஒன்றியம் வெலகலஹள்ளி மற்றும் 39 கிராமங்களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் என மொத்தம் 2022-23ம் நிதியாண்டில் ரூ.122 கோடி மதிப்பில் 7 கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் எடுக்கப்பட்டு, 6 பணிகள் முடிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மீதம் உள்ள எண்ணேக்கொள் கூட்டு குடிநீர் திட்ட பணி விரைவில் முடிக்கப்படும் என்றார்.
தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) அலுவலர்களுடன் குடிநீர் திட்ட பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வந்தனாகார்க் உதவி பொறியாளர்கள் சாந்தி, கலைபிரியா, ரகோத்சிங், துணை நிலநீர் வல்லுநர்கள் கல்யாணராமன், ராதிகா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, வேடியப்பன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடந்தது.
- குடிநீர் இணைப்பு மற்றும் குடிநீர் விநியோகம் பற்றி எடுத்துக் கூறினார்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஓவரூர் கிராமத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் தலைமை வகித்து இன்றியமையாத தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த கேட்டு கொண்டார்.
முன்னதாக செயலாளர் சண்முகம் வரவேற்று பேசினார்.
இதில் ஊராட்சி துறை சார்பில், பணி மேற்பார்வையாளர் அமுதா கலந்து கொண்டு, குடிநீர் இணைப்பு மற்றும் குடிநீர் விநியோகம் பற்றி எடுத்துக் கூறினார்.
சுகாதார ஆய்வாளர் பழனியப்பன், நீரினால் பரவும் நோய்கள் பற்றியும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் பயன்படுத்த வேண்டிய அவசியம் பற்றி எடுத்துக் கூறினார்.
சுகாதார ஆய்வாளர் பாலசண்முகம், கிராம சுகாதார செவிலியர் கலைமணி ஆகியோர் சுகாதாரத் துறை அன்றாடம் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து எடுத்துரைத்தனர்.
அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டு சிறுதான்யம் பயன்படுத்த வேண்டும் என்று தலைப்பிட்டு பேசினார்.
துணைத் தலைவர் ரமேஷ், ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கிராம வளர்ச்சிக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார்கள்.
- ரூ.251 கோடி செலவில் புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
- 2 வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே நகர மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநகராட்சியில் 52 வார்டுகள் உள்ளது. தற்பொழுது மாநகராட்சியுடன் தெங்கம்புதூர், ஆளூர் பேரூராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது.
நகர மக்களுக்கு முக்கடல் அணையில் இருந்து தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. அணையில் போதுமான அளவு தண்ணீர் இல்லாததையடுத்து புதிய குடிநீர் திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. இதற்காக ரூ.251 கோடி செலவில் புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில் முக்கடல் அணை நீர்மட்டம் கோடை வெப்பத்தின் காரணமாக நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் சரிந்ததையடுத்து 2 வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே நகர மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக அல்லல்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி தண்ணீர் விநியோகம் செய்ய மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. நாகர்கோவில் நகர பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளை சீரமைத்து அதன் மூலமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் மாநகராட்சி மேயர் மகேஷ் நடவடிக்கை மேற்கொண்டதன் அடிப்படையில் பேச்சிப்பாறை அணையில் இருந்து தினமும் 50 கன அடி தண்ணீர் வருகிற 25-ந்தேதி முதல் குடிநீருக்காக திறக்கப்படுகிறது.
இந்த நிலையில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்கும் வகையில் லாரிகளில் ஒவ்வொரு பகுதியாக சென்று தண்ணீர் சப்ளை செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சி குடிநீர் லாரியில் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. வடசேரி சோழராஜா கோவில் தெரு பகுதியில் இன்று லாரிகளில் கொண்டு வந்து தண்ணீர் சப்ளை செய்யப்பட்டது. அந்த பகுதி மக்கள் காலி குடங்களுடன் காத்திருந்து தண்ணீரை பிடித்து சென்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், குடிநீருக்காக தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் மாநகராட்சி சார்பில் லாரியில் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் கோடை காலங்களில் இன்னும் பல கஷ்டங்கள்பட வேண்டி இருக்கும். கேன்களில் தண்ணீர் வாங்க ரூ.25 செலவு செய்ய வேண்டிய நிலையும் உள்ளது என்றனர்.
- குழாய் பாதை பராமரிப்பு பணிகள் மேற்க்கொள்ளப்பட உள்ளது.
- 28.4.2023 மற்றும் 29.4.2023 ஆகிய 2 நாட்கள் இரண்டாவது குடிநீர்திட்டத்தின் மூலம் மாநகருக்கு குடிநீர் வழங்குவது தடைபடும்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சி சார்பில் குடிநீர்விநியோகி க்கப்பட்டு வருகிறது. அதன்படி, குடிநீர் விநியோகம்செய்யப்படும் இரண்டாவது குடிநீர் திட்டம் மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினரால் குழாய் பாதை நீர்க்கசிவு சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்க்கொள்ளப்பட உள்ளதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளனர். இதனால் 28.4.2023 மற்றும் 29.4.2023 ஆகிய 2 நாட்கள் (வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை) இரண்டாவது குடிநீர்திட்டத்தின் மூலம் மாநகருக்கு குடிநீர் வழங்குவது தடைபடும் என தெரிவித்துள்ளனர்.
எனவே திருப்பூர் மாநகராட்சியில் வார்டு 51-56 மற்றும் மண்டலம் 4-க்குட்பட்ட வார்டு 55 மற்றும் 52 ஆகிய பகுதிகளில் 29.4.2023 மற்றும் 30.4.2023 ஆகிய 2 நாட்கள் (சனிக்கிழமை மற்றும்ஞாயிற்றுக்கிழமை) குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.மேலும் 1.5.2023 முதல் மேற்கண்ட பகுதிகளுக்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனதிருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.
- ஊராட்சி தலைவர்களுடனான கலந்தாய்வு கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு
- நீரினால் பரவும் நோய்களை தடுக்க குடிநீரில் குளோரின் கலப்பது அத்தியாவசியமாகிறது
நாகர்கோவில் :
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட கிராம ஊராட்சி தலை வர்களுடனான மாவட்ட அளவிலான கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது:-
தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சிப்பெறுப்பேற்ற 2 ஆண்டுகளில் தமிழ் நாட்டுக்குட்பட்ட அனைத்து தரப்பட்ட மக்களும் பயன்பெறும் வகையில் அவர்களுக்கென பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சித்திட்ட பணிகளை அறிமுகப்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட ஊராட்சி பகுதிகளிலுள்ள அனைத்து வீடுகளிலும் சுத்தமான குடிநீர் விநியோகம், தனிநபர் கழிப்பறை, ஒருமுறை பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்தல், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் வாயிலாக மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரித்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து பேசப்பட்டது.
மேலும் இணையதளம் மூலமாக அனைத்து வீடுகளிலும் வரி வசூல் செய்யும் பொருட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து விவரங்களும் 100 சதவீதம் இலக்கை எட்டப்பட்டதா என்பதை துறை அலுவலர்கள் உறுதிபடுத்திட வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீர் ஆதாரத்திற்கேற்ப, குடிநீர் விநியோகத்தை முறைபடுத்தி வழங்க வேண்டும்.
ஜல் ஜீவன் இயக்கம் மற்றும் பிற திட்டங்களின் கீழ் நீராதாரங்களை உருவாக்கி வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கிட நடவடிக்கை மேற்கொண்டு அனைத்து ஊராட்சிகளும் இல்லந்தோறும் குடிநீர் என்ற தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக அறிவித்திட நடவடிக்கை மேற்கொ ள்ளப்பட வேண்டும்.
தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தின் மூலம் வழங்கப்படும் குடிநீரின் அளவை கண்காணிக்க இவ்வாரியத்தின் மூலம் நீரேற்றம் செய்யப்படும் மேல்நிலை தொட்டிகள் அனைத்திலும் நீரோட்ட கருவி பொருத்தப்பட வேண்டும். பதிவேடுகளில் தினந்தோறும் வழங்கப்படும் நீரின் அளவு பதியப்பட வேண்டும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் வழங்கப்படும் குடிநீருக்கான கேட்புகளுக்கு இதனை சரிபார்த்து தொகை செலுத்தப்பட வேண்டும்.
நீரினால் பரவும் நோய்களை தடுக்க குடிநீரில் குளோரின் கலப்பது அத்தியாவசியமாகிறது. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் குளோரி னேசன் செய்வதை எளிதாக்கும் பொருட்டு அனைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளிலும் குளோரின் கலப்பான பொருத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குடிநீரின் தரத்தினை சரிபார்க்கும் பொருட்டு பயிற்சி அளிக்க ப்பட்ட சுய உதவிக்குழு உறுப்பினர்களிடம் ஒப்படைத்து குடிநீரின் தரம் சரிபார்க்கப்பட்ட விவரங்கள் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டுமென்பதோடு, கன்னியாகுமரி மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்றும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் வருகை தந்துள்ள அனைத்து ஊராட்சி மன்றத்தலை வர்களும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் திட்ட இயக்குநர்கள் பாபு (ஊரக வளர்ச்சி முகமை), இலக்குவன் (மகளிர் திட்டம்), உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி உட்பட துறை அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- கலெக்டர் நடவடிக்கை
- குடிநீர் இணைப்பு வழங்கும் பணியின் மூலமாக சுமார் 720 நபர்களுக்கள் பயனடைய உள்ளனர்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த சுண்டம்பட்டி கிராமத்தில் குடிநீர் வழங்குவது தொடர்பாக கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இப்பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்க தொட்டிக்கு கடந்த 15 ஆண்டு காலமாக தண்ணீர் ஏற்றாத நிலையில் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து கலெக்டர் தண்ணீர் குழாய்களை இணைத்து பொது மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நீர் ஏற்றப்பட்டது. பணியை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் மற்றும் க.தேவராஜி எம்.எல்.ஏ. ஆகியோர் பார்வையிட்டனர்.
அதன் பிறகு பொது மக்கள் பயன்பாட்டிற்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் ஊராட்சி பாறையூர் கிராமத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.8.57 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 94 குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணி பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த குடிநீர் இணைப்பு வழங்கும் பணியின் மூலமாக சுமார் 720 நபர்களுக்கள் பயனடைய உள்ளனர்.
மேலும் பச்சூர் ஊராட்சி சுண்டம்பட்டியில் ரூ.8.97 லட்சம் மதிப்பீட்டில் 94 குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த குடிநீர் இணைப்பு வழங்கும் பணியின் மூலமாக சுமார் 860 நபர்களுக்கள் பயனடைய உள்ளனர்.
ஆய்வின் போது உதவி இயக்குனர் ஊராட்சிகள் விஜயகுமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர் சித்ரகலா, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- குழாய் பழுதடைந்து விட்டதால் பழுது சரிபார்க்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
- பொதுமக்கள் விநியோகிக்கப்பட்ட குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக்க கொள்ள வேண்டும்.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஈரோடு மாநகராட்சி சென்னிமலை சாலை மற்றும் ஈ.வி.என்.சாலை சந்திப்பில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிதாக சிறுபாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணியின் போது பிரதான குடிநீர் விநியோக குழாய் பழுதடைந்து விட்டதால் பழுது சரிபார்க்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் காரணமாக ஈரோடு மாநகராட்சி 3-ம் மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண் 51-ல் உள்ள இ.எம்.எம். மெயின் வீதி, இ.எம்.எம். வீதி, மணல்மேடு வீதி, சென்னிமலை சாலை,
4-ம் மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண் 52-ல் உள்ள ஈஸ்வரன் வீதி, கள்ளியங்காடு பகுதி, பட்டக்காரர் வீதி, தங்கபெருமாள் வீதி, ஜீவானந்தம் சாலை, புதுமை காலனி ஆகிய பகுதிகளில் இன்று (12-ந் தேதி), நாளை (13-ந் தேதி) 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்ட குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக்க கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- கீரைப்பட்டி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரி வித்தும் நடவடிக்கை இல்லை.
- ஆத்திரமடைந்த கிராம மக்கள் அரூர்-சித்தேரி சாலையில், தாதராவலசை என்னும் இடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரூர்,
தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள கீரைப்பட்டி ஊராட்சியில் தாதராவலசை மற்றும் புதூர் ஆகிய கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இந்த நிலையில், இங்குள்ள கிராமங்களில் கடந்த 6 மாதங்களாக போதுமான குடிநீர் விநியோகம் இல்லை.
இதனால், கிராம மக்கள் அருகில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்து குடிநீரை எடுத்து பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து கீரைப்பட்டி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரி வித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அரூர்-சித்தேரி சாலையில், தாதராவலசை என்னும் இடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த அரசு அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் பிரச்சனையை தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் அளித்த உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.
இந்த சாலை மறியல் காரணமாக அரூர் - சித்தேரி சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- நள்ளிரவு-அதிகாலை நேரத்தில் வினியோகிக்கப்படும் குடிநீர் வீணாகிறது.
- சுழற்சி முறையில் குடிநீரை விநியோகம் செய்ய வேண்டும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீருக்காக உள்ளாட்சிகள் லட்சக் கணக்கான ரூபாயை ஒவ்வொரு மாதமும் குடிநீர் வாரியத்திற்கு செலுத்து கிறது.
குடிநீர் எந்த நாளில் எந்த நேரத்தில் சம்பந்தப்பட்ட பகுதிக்கு வரும் என மக்களுக்கு தெரிவதில்லை. நள்ளிரவு, அதிகாலை என விநியோகம் செய்வதால் பலரும் குடிநீரை பிடிக்க முடியாமல் போகிறது. இது போன்ற முறையற்ற சப்ளையால் குழாய்களில் நல்லி இல்லாமல் குடிநீரானது வீணாகி சாக்கடையில் ஓடுகிறது.
பல பகுதிகளில் இது போன்று நடப்பது தொடர்கிறது. உள்ளாட்சிகள் குடிநீர் வரும் நாள், நேரம், எந்த பகுதியில் விநியோகம் என்பதை கூறுவதில்லை. நினைத்த நேரத்தில் குடிநீரை திறந்து விடுவதாலும் குடிநீர் வீணாகிறது.
இதை தவிர்க்க குடிநீர் வரும் நாள், நேரத்தை அறிவிக்க உள்ளாட்சிகள் முன் வரவேண்டும். இதை முறையாக கடைப்பி டித்தாலே குடிநீர் வீணா வதை தடுக்க முடியும்.குடிநீர் பற்றாக்குறைக்கும் தீர்வு கிடைக்கும்.
உள்ளாட்சி கள் அட்ட வணைப்படி சுழற்சி முறையில் குடிநீரை விநியோகம் செய்ய வேண்டும். பகல் பொழுதில் காலை, மாலை நேரத்தில் விநியோகம் செய்தால் அனைவருக்கும் பயனுள்ள தாக இருக்கும். இதை முறைப்படுத்த உள்ளாட்சி அமைப்பு களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்க வேண்டும் என்பது பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.
- பழைய மகாபலிபுரம் சாலையையொட்டிய சிலபகுதிகளில் ஏற்கனவே குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
- ராட்சத குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.
கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு புதியதாக குழாய்கள் மூலம் குடிநீர் வழங்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் செம்மஞ்சேரி யில் 51 ஆயிரம் பேருக்கு 2025- டிசம்பர் மாதத்துக்குள் குழாய் மூலம் குடிநீர் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நெம்மேலி கடல் நீரை குடி நீராக்கும் ஆலையில் இருந்து தண்ணீரை சுத்திகரிப்பு செய்து குழாய் மூலம் குடிநீர் வழங்கும் வசதிகள் செய்யப்பட உள்ளது.
துரைப்பாக்கம், செம்மஞ்சேரி, நீலாங்கரை, கொட்டிவாக்கம் உள்ளிட்ட பகுதி பொதுமக்களுக்கு 2 ஆண்டுகளில் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் பணிகளில் சென்னை குடிநீர் வாரியம் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.
ராஜீவ்காந்தி சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையையொட்டிய சிலபகுதிகளில் ஏற்கனவே குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் செம்மஞ்சேரி மற்றும் நீலாங்கரை பகுதிகளில் 2025-ம் ஆண்டு இறுதிக்குள் குழாய் குடிநீர் வழங்கப்பட உள்ளது. பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் பல பகுதிகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கொட்டிவாக்கத்தில் ஏற்கனவே உள்ள பழைய குழாய்களை மாற்றி சீரமைக்கும் பணிகள் பல்வேறு கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளன.
சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் கொட்டி வாக்கத்தில் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணியை தொடங்கி உள்ளது.
குழாய் குடிநீர் வழங்கும் திட்டம் மூலம் 2026-ல் ஒரு நாளைக்கு 5.3 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. செம்மஞ்சேரி பகுதிக்கு 2025- டிசம்பரில் ரூ.46 கோடி செலவில் விரிவான குழாய் குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது. சுமார் 51 ஆயிரம் மக்களுக்கு ஒரு நாளைக்கு 7.9 மில்லியன் லிட்டர் குடிதண்ணீர் வழங்கப்பட உள்ளது.
இதற்காக ராட்சத பெரிய பைப்லைன்கள் பதிக்கப்பட உள்ளது. துரைப்பாக்கம், பெருங்குடி உள்ளிட்ட ஐ.டி. சாலை பகுதிகளில் 500 மி.மீ. சுற்றளவு கொண்ட ராட்சத குடி குழாய்கள் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக சாலையோர பகுதிகளில் தற்போது ராட்சத குடிநீர் குழாய்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
பழைய மகாபலிபுரம் சாலை, கிழக்கு கரைச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இப்பகுதிகளில் தற்போது ஐ.டி. கம்பெனிகள் ஏராளம் பெருகி உள்ளன. இப்பகுதியின் மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் வசதிகளை தமிழக அரசு செய்து தர வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தோம்.
அதன் அடிப்படையில் தற்போது நெம்மேலி கடல்நீரை குடி நீராக்கும் திட்டத்தின் கீழ் கடல் தண்ணீரை சுத்தி கரித்து குழாய் மூலம் இப்பகுதி மக்களுக்கு வழங்குவதற்கான பணிகள் தற்போது தொடங்கி உள்ளது பெரும் மகிழ்ச்சியை தருகிறது.
இந்த பணிகள் விரைவாக செயல் படுத்தப்பட்டு பொது மக்கள் அனைவருக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களின் நீண்ட நாள் கனவு குழாய் குடிநீர் திட்டம் மூலம் விரைவில் இப்பகுதிக்கு குடி தண்ணீர் கிடைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என ஆவலுடன் எதிர் பார்த்து வருகிறோம்.
இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ஐ.டி. கம்பெனிகள் நிறைந்துள்ள பழைய மகாபலிபுரம் சாலை, மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் வாழும் மக்களின் குடிநீர் தேவைக்காக சென்னை குடிநீர் வாரியம் சிறப்பு திட்டங்களை செய்து வருகிறது.
நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் தண்ணீரை சுத்திகரித்து இப்பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் குடிதண்ணீரை வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக ராட்சத குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் இப்பகுதி மக்களுக்கு குழாய்கள் மூலம் குடிதண்ணீர் வழங்கப்படும்.
இந்த தண்ணீர் இப்பகுதி மக்களுக்கு போதுமானதாக இருக்கும். இப்பகுதி மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய குடிநீர் வாரியம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.