என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திருவண்ணாமலை மாணவி"
- நடப்பு ஆண்டுக்கான விருதுக்கு 122 நாடுகளைச் சேர்ந்த 3,851 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், 50 பேர் இறுதிப் போட்டியாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- 50 இறுதிப்போட்டியாளர்களில் தமிழக மாணவி உள்பட இந்தியாவைச் சேர்ந்த 5 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
உலக அளவில் கற்றல் மூலமாக சமூகத்துக்கு பயனுள்ள கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ள தலைசிறந்த மாணவர் ஒருவரை தேர்வு செய்து ரூ.82 லட்சம் பரிசுத்தொகையுடன் கூடிய இந்த விருதை பிரிட்டனைச் சேர்ந்த செக்.ஓ.ஆர்ஜி. அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது.
நடப்பு ஆண்டுக்கான விருதுக்கு 122 நாடுகளைச் சேர்ந்த 3,851 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், 50 பேர் இறுதிப் போட்டியாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த 50 மாணவர்களில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்படும்.
இந்த 50 இறுதிப்போட்டியாளர்களில் தமிழக மாணவி உள்பட இந்தியாவைச் சேர்ந்த 5 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். திருவண்ணாமலை எஸ்.கே.பி. வனிதா சர்வதேச பள்ளி மாணவி வினிஷா உமா சங்கர் (16), பஞ்சாப் மாநிலம் லூதியானா சத்பால் மிட்டல் பள்ளி மாணவி நம்யா ஜோஷி (16), குஜராத் மாநிலம் காந்தி நகர் குஜராத் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி சங்க மருத்துவக் கல்லூரி மாணவர் கிளாட்சன் வகேலா (25), ராஜஸ்தான் மாநிலம் கோட்டா ஸ்ரீ பதம்பத் சிங்கானியா பள்ளி மாணவர் பத்மாக்ஷ் கண்டேல்வால் (17), பஞ்சாப் மாநிலம் மொகாலி சண்டீகர் பொறியியல் கல்லூரி மாணவர் ரவீந்தர் பிஷ்னோய் (20, ஆகியோர் இறுதிப்போட்டியாளர்களாக இடம் பிடித்து அசத்தியுள்ளனர்.
தனது 12-வது வயது முதல் அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டி வரும் தமிழக மாணவியான வினிஷா உமாசங்கர் சூரிய சக்தியில் இயங்கும் இஸ்திரி வண்டி, மின்சாரத்தை வெகுவாக மிச்சப்படுத்தும் ஸ்மார்ட் மின்விசிறி உள்ளிட்டவைகளை கண்டு பிடித்துள்ளார். பல அறிவியல் கண்டுபிடிப்பு போட்டிகளில் பங்கேற்று சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான விருதுகளை பெற்றுள்ளார். தேர்வு செய்யப்பட்டுள்ள 50 பேரில் இருந்து 10 இறுதிப் போட்டியாளர்கள் அடுத்த மாதம் தேர்வு செய்யப்படுவர். இந்த 10 பேரில் இருந்து இறுதி வெற்றியாளர் ஆண்டின் இறுதியில் அறிவிக்கப்படுவார்.
- 10-ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
- இதில் மாணவி 4 மாதம் கர்ப்பமானார். முருகன் மாணவியை ரெட்டியார்பாளையத்தில் உள்ள காந்தி என்ற பெண்ணிடம் அழைத்து சென்று மாத்திரைகள் கொடுத்து கருக்கலைப்பு செய்ய முயன்றுள்ளார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடி அருகில் உள்ள மலையனூர் செக்கடி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 27).
இவர் அப்பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதில் மாணவி 4 மாதம் கர்ப்பமானார். முருகன் மாணவியை ரெட்டியார்பாளையத்தில் உள்ள காந்தி (65) என்ற பெண்ணிடம் அழைத்து சென்று மாத்திரைகள் கொடுத்து கருக்கலைப்பு செய்ய முயன்றுள்ளார்.
இதற்கு பிரபு என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார். கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட மாணவி திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் தானிப்பாடி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப் பதிவு செய்து முருகன், பிரபு ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். கருக்கலைப்பு மாத்திரை கொடுத்த காந்தியை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் தலைமறைவான காந்தியின் வீட்டில் மருத்துவ அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை செய்ததில் வீட்டில் ஏராளமான ஆங்கில மருந்து, மாத்திரைகள், ஊசி போன்றவை இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு அதனை பறிமுதல் செய்தனர்.
காந்தி 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு தன்னை டாக்டர் என்றும், பிரபல மருத்துவமனையில் வேலை பார்த்ததாகவும் அறிமுகப்படுத்திக்கொண்டு தானிப்பாடி பகுதியில் பலருக்கு இதுபோன்ற சிகிச்சைகளை அளித்து வந்தது தெரியவந்துள்ளது.
அதை தொடர்ந்து தலைமறைவாக இருந்த போலி பெண் டாக்டர் காந்தியை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்