search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இ-சேவை மையம்"

    • திண்டுக்கல் மாவட்ட இ-சேவை மைய உரிமையாளர்கள் நலசங்கம் கண்டனம்.
    • குறிப்பிட்ட பட காட்சிகளை நீக்க கோரிக்கை.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட இ-சேவை மைய உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்டத் தலைவர் தனராஜ் தலைமை வகித்து பேசும்போது.

    தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான இந்தியன் 2-திரைப்படத்தில் நடிகர் மனோபாலா நடிக்கும் ஒருசில காட்சிகளில் இ-சேவை மைய ஆபரேட்டர்கள் ரூ.300 கொடுத்தால் தான் ஆதார் தொடர்பான சேவைகள் செய்ய முடியும் என்று காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    இந்த காட்சிகள் மூலம் இ-சேவை மைய ஆபரேட்டர்களை பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனால் இ-சேவை மைய தொழில் மீதும், ஆபரேட்டர்கள் மீதும் பொதுமக்களுக்கு அதிருப்தி ஏற்படும் வகையில் காட்சிகள் இருப்பதால் குறிப்பிட்ட அந்த காட்சியை மட்டும் இந்தியன்-2 திரைப்படத்தில் இருந்து நீக்க தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, தகவல் தொழில் நுட்பதுறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கர் படக்குழுவினருக்கும், திண்டுக்கல் மாவட்ட இ-சேவை மைய உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் வேண்டுகோள் வைக்கிறோம்.

    தவறும் பட்சத்தில் திண்டுக்கல் மாவட்ட இ-சேவை மைய உரிமையாளர்கள் நலசங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ரஞ்சித், நவீன், மாவட்ட பொருளாளர் சுதாகர் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • உதவி மையங்களில் தினமும் கூட்டம் அலைமோதி வருகிறது.
    • இ- சேவை மைய ஊழியர்கள் பொது மக்களின் விண்ணப்பங்களை சரி பார்த்து மீண்டும் விண்ணப்பித்தனர்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் சுமார் 4 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் பெரும்பாலான நபர்களுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு உள்ளது.

    ஆனால் ஒரு சிலரது விண்ணப்பங்கள் நிராக ரிக்கப்பட்டது. அதற்கான தகவல் செல்போனில் குறுஞ்செய்தி மூலமாக அனுப்பப்பட்டு உள்ளது. இது தொடர்பாக உரிய ஆவணங்களை காண்பித்து மீண்டும் விண்ணப்பித்துக் கொள்ள அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

    கலைஞர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பான விவரங்கள் தெரிந்து கொள்ள நாகர் கோவில் கலெக்டர் அலு வலகம், பத்மநாபபுரம் சப்- கலெக்டர் அலுவலகம், நாகர்கோவில் ஆர்.டி.ஓ. அலுவலகம், அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, கிள்ளியூர், திருவட்டார் தாலுகா அலுவல கங்களில் உதவி மையமும் திறக்கப்பட்டு உள்ளது. இந்த உதவி மையங்களில் தினமும் கூட்டம் அலைமோதி வருகிறது.

    விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை பொது மக்கள் அறிந்து கொள்ள உதவி மையங்களில் குவிந்து வருகிறார்கள்.வருமான வரி கட்டுதல், கார் மற்றும் ஏற்கனவே அரசு உதவித்தொகை பெரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் கூட்டம் அலைமோதியது. இ- சேவை மையத்தில் மறு விண்ணப்பம் செலுத்து வதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இ- சேவை மைய ஊழியர்கள் பொது மக்களின் விண்ணப்பங்களை சரி பார்த்து மீண்டும் விண்ணப்பித்தனர்.

    விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை முறை யாக தெரிவித்த பின் னர் மறுபடியும் விண்ணப்பிக்கப்பட்டது. இதனால் இ- சேவை மையத்தில் பெண்கள் கூட்டம் இன்று அதிகமாக காணப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    • ஆதார் எண்ணை உள்ளீடு செய்து தங்களின் விண்ணப்பத்தின் நிலையினை தெரிந்து கொள்ளலாம்.
    • ரூ.1000-ஐ தங்களின் விருப்பப்படி வங்கியிலிருந்து எப்போது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம்.

    கடலூர்:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆணையின்படி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் தகுதியுள்ள பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு ரூ.1000 அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டையிலுள்ள மகளிர்கள், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நிலை குறித்து தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உதவி மைய எண் 1100-ல் தொடர்பு கொண்டுதெரிந்து கொள்ளலாம். அனைத்து இ-சேவை மையங்களிலும் தங்களின் விண்ணப்பத்தின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். கலைஞர் மகளிர் உரிமை திட்ட இணைய முகவரியான kmut.tn.gov.in/login.html யில் பொதுமக்கள் உள்நுழைவு என்ற மெனுவை தேர்வு செய்து அதில் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து தங்களின் விண்ணப்பத்தின் நிலையினை தெரிந்து கொள்ளலாம்.

    மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகம், அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் இத்திட்டத்திற்கென பிரத்யேகமாக செயல்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமை திட்ட உதவி மையத்தினை அணுகி விண்ணப்ப த்தின் நிலையினை தெரிந்துகொள்ளலாம். மேலும், இது தொடர்பாக மேல்முறையீடு செய்ய விரும்பினால் குறுஞ்செய்தி பெறப்பட்ட 30 நாட்களுக்குள் அனைத்து இ-சேவை மையங்களிலும் கட்டணமின்றி வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். இ-சேவை மையத்தில் மேல்முறையீடு செய்வதற்கு எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. மேலும், வங்கிக் கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட தொகை ரூ.1000-ஐ தங்களின் விருப்பப்படி வங்கியிலிருந்து எப்போது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம். இந்த தொகை குறிப்பிட்ட நாட்களுக்குள் எடுத்துக் கொள்ளாவிடில் வங்கியிலிருந்து மீண்டும் எடுத்துக் கொள்வார்கள் என அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • சுவாமிமலையில் சட்டமன்ற உறுப்பினர் துணை அலுவலகத்தில் இ-சேவை மையம் திறக்கபட்டது.
    • மையத்தை பாபநாச சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா திறந்து வைத்தார்.

    சுவாமிமலை:

    கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சட்டமன்ற உறுப்பினர் துணை அலுவலகத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பின்படி இ-சேவை மையத்தை மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் பாபநாச சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் முத்துசெல்வம், சுவாமிமலை பெருந்தலைவர் வைஜெயந்தி சிவகுமார், திமுக பேரூர் செயலாளர் பாலசுப்பிர மணியன், திமுக நிர்வாகிகள் நெடுஞ்செழியன், கோபால், குணாளன், ஜெமினி, சிவதாஸ், பெரிய பள்ளிவாசல் ஜமாத்தார்கள் ஜாபர் அலி, சாலிக், யாசின், ஷாஜகான், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஹிபாயத்துல்லா, மாவட்ட செயலாளர் முகமது மைதீன், மாநில செயற்குழு உறுப்பினர் ரிபாஃய், மாவட்ட மகளிர் அணி பொருளாளர் ஷஃபானா ஃபுர்க்கான், மாவட்ட துணை செயலாளர் வீரமணி, பேரூர் தலைவர் ஃபுர்க்கான், பேரூர் செயலாளர் அசாருதீன், நிர்வாகிகள் இம்ரான், இக்பால், ஷாஜகான், ஷேக் அப்துல்லா, ஹாஜாமைதீன், முகமது அலி, பாபநாசம் ஜாகிர், அப்துல் ஹசன் ஹுசைன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் அலுவலகத்திலும் இ-சேவை மையம் தொடங்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்திருந்தார்.
    • விழாவில் நகராட்சி சேர்மன்கள் உமா மகேஸ்வரி சரவணன், விஜயா சவுந்திரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் அலுவலகத்திலும் இ-சேவை மையம் தொடங்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி சங்கரன்கோவிலில் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இ-சேவை மையம் தொடக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு இ-சேவை மையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட துணைச்செயலாளர்கள் புனிதா, ராஜதுரை, மனோகரன், ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை, கடற்கரை, சேர்மத்துரை, ராமச்சந்திரன், வெற்றிவிஜயன், மதிமாரிமுத்து, பூசை பாண்டியன், கிறிஸ்டோபர், நகர செயலாளர்கள் பிரகாஷ், அந்தோணிசாமி, நகராட்சி சேர்மன்கள் உமா மகேஸ்வரி சரவணன், விஜயா சவுந்திரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • படித்த, கணினி பயிற்சி பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
    • தடையற்ற இணையதள இணைப்பை உறுதி செய்ய வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திகு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் தனியார் இ-சேவை மையம் அமைக்க https://tnesevai.in.gov.in மற்றும் http://tnega.tn.gov.in. என்ற இணையதளங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.

    விண்ணப்பிக்க விரும்பும் மாற்றுத்திறனாளி ஆபரேட்டர்கள் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், கணினியில் நல்ல அறிவும் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழியை படிக்கவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

    இ-சேவை மைய கட்டிடம் 100 சதுர மீட்டருக்குள் இருக்கவும், மையத்தில் கணினி, பிரிண்டர், ஸ்கேனர் மற்றும் பயோமெட்ரிக் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் இருத்தல் அவசி யமாகும்.

    குறைந்தபட்சம் 2 mbps அலைவரிசையுடன் தொடர்ச்சியான மற்றும் தடையற்ற இணையதள இணைப்பை உறுதி செய்ய வேண்டும்.

    தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இடத்தில் இ-சேவை மையம் அமைக்க வேண்டும்.

    விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை வருவாய் பகிர்வு முறையின் விதிகளின்படி இயக்குதல் வேண்டும் என தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.

    தேர்வு செய்யப்பட்டு உரிமம் வழங்கப்படும் மாற்றுத்திறனாளி ஆபரேட்டர்களுக்கு அடையாள அட்டை எண் வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு இ-சேவை மையம் அமைக்க உரிமம் வழங்கப்படும்.

    படித்த கணினி பயிற்சி பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் தனியார் இ-சேவை மையம் வைத்து வருமானம் ஈட்டிக்கொள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆவின் பாலகம் அமைத்திட நிதி உதவியும் இலவச தையல் எந்திரமும் வழங்கப்பட்டு வருகிறது.
    • இணைய தளங்களில் வரும் 28-ந் தேதி வரை விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது -

    தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் வாயிலாக அவர்களின் வாழ்வா தாரத்தை மேம்படுத்தும் வகையில் மாற்றுத்திறனா ளிகள் சுயதொழில்புரிந்து முன்னேற்றம் அடைய மானியத்துடன் கூடிய வங்கி கடனும் மத்திய கூட்டுறவு வங்கியில் வட்டியில்லா கடனும் ஆவின் பாலகம் அமைத்திட நிதி உதவியும் இலவச தையல் எந்திரமும் வழங்கப்பட்டு வருகிறது. 

    தற்போது, வருவாய் கிராமத்திற்கு ஒரு தனியார் இ-சேவை மையம் அமைக்க அரசு உத்திரவி ட்டதை தொடர்ந்து, கிராம தொழில்முனைவோர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் ஆகியோர்களுக்கு முன்னுரிமை அளித்து உரிய உரிமம் பெற இணைய தளங்களில் வரும் 28-ந் தேதி வரை விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இ-சேவை அமைக்க விருப்பமுள்ள மற்றும் தகுதி உள்ள மாற்றுத்தி றனாளிகளுக்கு சுய வேலைவாய்ப்பு பெறுவ தற்கான மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கப்படும். இது தொடர்பான கூடுதல் தகவலுக்கு (விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்) மா வட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், கடலூர் அனுகலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

    • ஆப்ரேட்டர்களுக்கு ஐ.டி.எண் மற்றும் பயிற்சி அளிக்கப்படும்
    • கலெக்டர் அறிவிப்பு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவண்ணாமலை மாவட்டத்தில் வருவாய் கிராமங்கள் தோறும் தனியார் இ-சேவை மையம் அமைக்க மாற்றுத் திறனா ளிகள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு, மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் தனியார் இ-சேவை மையம் அமைக்க உரிமம் வழங்குகிறது.

    எனவே மாவட்டத்தை சேர்ந்த விருப்பம் உள்ள மாற்றுத் திறனாளிகள் https://tnesevai.tn.gov.in மற்றும் https://tnega.tn.gov.in ஆகிய இணையதங்களில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சியும், கணினி பயன்படுத்தவும், தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழி படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

    100 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இ-சேவை மைய கட்டி டத்தில் கணினி, பிரிண்டர், ஸ்கேனர் மற்றும் பயோ மெட்ரிக் கருவிகள் உபகரணங்கள் கட்டாயம் இருக்க வேண்டும். குறைந்த பட்சம் 2 எம்.பி.பி.எஸ். இ-சேவை மையம் அமையும் இடத்தில் அதிவேக அலைவரி சையுடன் தொடர்ச்சியான தடையற்ற இண்டர்நெட் இணைப்பு இருக்க வேண்டும்.

    தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இடத்தில் இ-சேவை மையம் அமையப்பெற வேண்டும்

    விண்ணப்பங்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாற்றுத் திறனாளி ஆப்ரேட்டர்களுக்கு ஐ.டி.எண் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டு இ-சேவை மையம் அமைக்க உரிமம் வழங்கப்படும்.

    மாவட்டத்தில் படித்த கணினி பயிற்சி பெற்றுள்ள மாற்றுத் திறனாளிகள் இ- சேவை மையம் அமைத்து தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் அதில் ெதரிவித்துள்ளார்.

    • ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம்
    • விண்ணப்ப கட்டணம் ரூ.3 ஆயிரம் மற்றும் நகர்புறத்திற்கான கட்டணம் ரூ.6 ஆயிரம்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட் டுள்ளது. இத்திட்டமானது படித்த இளைஞர்களையும், தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங் களை நிறுவி செயல்படுத்த இத்திட்டம் தொடங்கப் பட்டுள்ளது.

    இத்திட்டம் மூலம் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் 511 இ-சேவை மையங்கள் செயல்பட அனுமதி வழங் கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் நோக்கமானது, இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, இ-சேவை மையத்தில் மக்கள் காத்திருக்கும் நேரத்தை குறைத்து மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவையை வழங்குவதா கும்.

    இத்திட்டத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்திட (https://tnesevai.tn.gov.in/) (அல்லது) (https://.tnega.tn.gov.in/) என்ற இணைய முகவரியை பயன்படுத்தவும், விண்ணப்பதாரர்கள் ஜூன் 1 முதல் 30-ந்தேதி இரவு 8 மணி வரை விண்ணப்பிக்கலாம். கிராமப் புறங்களில் இ-சேவை மையம் செயல்படுத்துவதற்கான விண்ணப்பகட்டணம் ரூ.3 ஆயிரம் மற்றும் நகர்புறத்திற்கான கட்டணம் ரூ.6 ஆயிரம் ஆன்லைன் முறையில் செலுத்தப்பட வேண்டும்.விண்ணப்பதாரர் களுக்குரிய பயனர் எண் மற்றும் கடவுச்சொல் விண்ணப்பத்தில் கொடுக் கப்பட்டுள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங் கப்படும்.

    மேலும், அருகிலுள்ள இ-சேவை மையங்களின் தகவல்களை முகவரி ஆண்ட்ராய்டு மொபைல் செயலியைப் பயன்படுத்திக் காணலாம் அல்லது https://.tnega.tn.gov.in இணையதளத்தில் காணலாம்.

    இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தனியார் இ-சேவை மையம் அமைக்க மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கபடும் என கலெக்டர் கற்பகம் அறிவித்தார்
    • மாற்றுத்திறனாளிகள் https://tnesevai.tn.gov.in மற்றும் https://tnega.tn.gov.in ஆகிய இணைய தளங்களில் வருகிற 30-ம் தேதிக்குள் விண்ணப்பிவும்

    பெரம்பலூர்:

    பெரம்பலூ மாவட்ட கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் வருவாய் கிராமங்கள் தோறும் தனியார் இ-சேவை மையங்கள் அமைக்க உரிமம் வழங்குவதில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு, மாற்றுத்திறனாளிகள் முன்னுரிமை அடிப்படையில் விண்ணப்பிக்கலாம். எனவே மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் https://tnesevai.tn.gov.in மற்றும் https://tnega.tn.gov.in ஆகிய இணைய தளங்களில் வருகிற 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பதாரர்கள் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சியும், கணினி பயன்படுத்தவும், தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழி படிக்கவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். 100 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இ-சேவை மைய கட்டிடத்தில் கணினி பிரிண்டர், ஸ்கேனர் மற்றும் பயோமெட்ரிக் கருவிகள் கட்டாயம் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 எம்.பி.பி.எஸ் அதிவேக அலைவரிசையுடன் தொடர்ச்சியான, தடையற்ற இன்டர்நெட் இணைப்பு இருக்க வேண்டும். தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இடத்தில் இ-சேவை மையம் இருக்க வேண்டும்.

    தேர்வு செய்யப்படும் மாற்றுத்திறனாளி ஆப்ரேட்டர்களுக்கு ஐ.டி எண் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டு இ-சேவை மையம் அமைக்க உரிமம் வழங்கப்படும். எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் படித்த, கணினி பயிற்சி பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் இ-சேவை மையம் அமைத்து வருமானம் ஈட்டி பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கலெக்டர் தகவல்
    • 30-ந் தேதி கடைசி நாள்

    ராணிப்பேட்டை:

    தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின், தலைமை செயல் அலுவலரால் "அனைவருக்கும் இ-சேவை" மையம் திட்டத்தின் கீழ் இ-சேவை மையங்களை அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி இந்த திட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ஆர்வமுள்ள மற்றும் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    விண்ணப்பங்களை இணையவழி முறையில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். இந்த திட்டத்தைப் பற்றி கூடுதல் தகவல் பெறவும், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் கீழ்கண்ட "https://tnesevai.tn.gov.in (அல்லது) https://tnega.tn.gov.in" என்ற இணைய முகவரிகளை பயன்படுத்திக்கொள்ளவும் விண்ணப்பங்களை வருகிற 30-ந் தேதி வரை காலை 11.30 முதல் மாலை 6 மணி வரை பதிவு செய்துக்கொள்ளலாம்.

    கிராமப்புறங்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.3ஆயிரம்/- மற்றும் நகர்ப்புறத்திற்கு ரூ.6 ஆயிரம்/- செலுத்த வேண்டும். மேலும் அருகிலுள்ள இ-சேவை மைங்களின் தகவல்களை "முகவரி ஆண்ட்ராய்டு மொபைல் செயலியைப் பயன்படுத்திக் காணலாம் அல்லது https://tnega.tn.gov.in இணையதளத்தின் மூலம் காணலாம்.

    இந்த திட்டத்தில் தகுதியான மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் பயனடைய வேண்டும்

    என கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • பெயர் திருத்தம், ஆதார் கார்டு மாற்றுவது உள்ளிட்டவைகளுக்காக இசேவை மையத்திற்கு அதிக அளவில் வருகின்றனர்.
    • பெற்றோர்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர்.

    அவினாசி :

    அவினாசி தாலூகா அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இ சேவை மையம் உள்ளது.பெயர் திருத்தம் ,ஆதார் கார்டு பெறுதல், போன் நம்பர் மாற்றுவது உள்ளிட்டவைகளுக்காக பொதுமக்கள் இசேவை மையத்திற்கு அதிக அளவில் வருகின்றனர்.

    அவ்வாறு வருபவர்களிடம் அலுவலர்கள் இங்கு சர்வர் ரிப்பேராகிவிட்டது ,ஒன்றும் செய்ய முடியாது, இன்னும் 2 நாட்களுக்கு பிறகு வாருங்கள் என்றும், அப்படி அவசரம் என்றால் தாலுகா அலுவலகத்திற்கு வெளியே உள்ள ஒரு குறிப்பிட்ட ஜெராக்ஸ் கடை பெயரை சொல்லி அங்கு சென்று எடுத்துக்கொள்ளுங்கள் என்று அலைக்கழிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கோடைவிடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நிலையில் அதிகாரிகளின் இந்த செயலால் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர்.

    ×