search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இ-சேவை மையம்"

    • பொதுமக்கள் இதனை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கீதாஜீவன் கேட்டுக் கொண்டார்.
    • கல்வி உதவித்தொகைகளை அமைச்சர் கீதாஜீவன் ஏழை எளிய மாணவ-மாணவிகளுக்கு வழங்கினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகரம் தெற்கு மண்டலம் 57-வது வார்டு எம்.சவேரியார்புரத்தில் இ-சேவை மையம் திறப்பு விழா நடைபெற்றது.

    விழாவில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு இ-சேவை மையத்தை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இ-சேவை மையத்தில் வழங்ககூடிய சேவைகள் குறித்து ஆய்வு செய்தார்.

    பொதுமக்கள் இதனை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அப்போது கேட்டுக் கொண்டார்.

    திறப்பு விழாவினை முன்னிட்டு ஸ்ரீ கணேஷ்நகர் பத்திரகாளி அம்மன் கோவில் தர்மகர்த்தா சுயம்பு நாடார், முள்ளக்காடு ஊராட்சி மன்றத் தலைவர் கோபிநாத் நிர்மல், உப்பு உற்பத்தியாளர் எல்.ஆர்.சிவாகர், சவேரியார்புரம் ஞானஜெகன்ஆகியோர் அளித்த கல்வி உதவித்தொகைகளை அமைச்சர் கீதாஜீவன் ஏழை எளிய மாணவ-மாணவிகளுக்கு வழங்கினார்.

    விழாவில் மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, காங்கிரஸ் கட்சி மாநில துணைத் தலைவர் சண்முகம், தூத்துக்குடி மாநகர தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர். ஆனந்தசேகரன், மாநகராட்சி கவுன்சிலர்கள் ஜெயலட்சுமி சுடலைமணி, சுயம்பு, ராஜதுரை, பச்சிராஜ் மற்றும் மாநகர அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • இடைத்தரகர்கள் பணம் பெற்றுக்கொண்டு டோக்கன் எடுத்து தருவதாக கூறி பொதுமக்களிடம் வசூல் செய்வதாக தகவல்
    • அதிகாலையில் இருந்தே ஆண்கள், பெண்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் என பலரும் காத்திருக்கின்றனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் இ சேவை மையம் இயங்கி வருகிறது. இந்த சேவை மையத்தில் பணிகள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் வருமான சான்றிதழ்' மற்றும் இருப்பிட சான்றிதழ் விரைவாக வாங்க முடியாத நிலை உள்ளது. அதிகாலையில் இருந்தே ஆண்கள் பெண்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் என பலரும் காத்திருக்கின்றனர்.

    இந்த இ சேவை மையத்தில் தற்பொழுது டோக்கன் என்ற முறையில் இடைத்தரகர்களும் பணம் பெற்றுக்கொண்டு டோக்கன் எடுத்து தருவதாக கூறி பொதுமக்களிடம் வசூல் செய்து வருவதாக தெரிகிறது.

    பொதுமக்களின் நலன் கருதி மிக விரைவாக இந்த ஆதார் சேவை மையத்தை செயல்படுத்த வேண்டுமென்று காட்டுமன்னார்கோவில் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×