என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நகர்மன்றம்"
- சிவகங்கையை தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த நகர் மன்ற தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
- ஆண்டு வரி வருமானம் ரூ.9.94 கோடியாக உள்ளது.
சிவகங்கை
சிவகங்கையில் சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழுவினரிடம் சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரைஆனந்த் கோரிக்கை மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை நகரம், வரலாற்றுச்சிறப்பு மிக்க நகரமாகும். இந்த நகராட்சியில் 60ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஆண்டு வரி வருமானம் ரூ.9.94 கோடியாக உள்ளது. மாவட்ட தலைநகராக உள்ள சிவகங்கை நகராட்சி தரம் உயர்த்தப்படுவதற்கான அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ளது. எனவே சிவகங்கையை தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய வேண்டும்.
நகராட்சியில் கழிவு நீர் கால்வாய்கள் சேதமடைந்து உள்ளதால் மழைநீர் சாலையில் செல்கிறது. எனவே சுமார் 100 கி.மீ. நீளம் கால்வாய்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே 50 கி.மீட்டர் நீளத்திற்கு பாதாள சாக்கடை கழிவு நீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது விரிவாக்கப்பகுதிகளிலும் மேலும் 30 கி.மீட்டர் நீளத்திற்கு கழிவு நீர் குழாய்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகரின் மைப் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த தெப்பக்குளத்தை பராமரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி குப்பைகளை கொட்டி தரம் பிரிக்க சுமார் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகங்கை நகராட்சியை விரிவாக்கம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடையநல்லூர் நகராட்சி கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் தங்களது வார்டு குறைகள் குறித்து பேசினர். அதற்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் நகர்மன்றத்தின் சாதாரண கூட்டம் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ராஜையா, ஆணையாளர் ரவிச்சந்திரன், பொறியாளர் , சுகாதார அலுவலர் இளங்கோ, நகரமைப்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார், சுகாதார ஆய்வாளர் சக்திவேல், சிவா முன்னிலை வகித்தனர். தேர்தல் பிரிவு மாரியப்பன் தீர்மானங்களை வாசித்தார்.
கூட்டத்தில் கடையநல்லூர் நகராட்சி அட்டைகுளம் தெரு ஊரணிக்கு கீழ்புறம் உள்ள காலி இடத்தில் சுற்றுச்சுவர் அமைப்பது, தேரடி தெரு முதல் தெருவில் மழைநீர் வடிகால் மற்றும் பேவர் பிளாக் சாலை அமைப்பது,
பேட்டை மலம் பாட்டை ரோடு மயானத்தில் நவீன எரிவாயு தகன மேடை அமைப்பது, அட்டை குளம் ஊரணியை புணரமைத்து மேம்படுத்துவது, குமந்தாபுரம் கருப்பாநதி அணைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள கலைமான்நகர் குடியிருப்பு தெருக்களுக்கு பேவர் பிளாக் சாலை அமைத்தல், அணுகு சாலை அமைத்தல் , கருப்பாநதி அணை வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டுதல்,
மேலக்கடையநல்லூர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் மீத்திறன் வகுப்பறை, கழிவுநீர் மற்றும் கழிப்பறை கட்டுவது உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் ரேவதிபாலீஸ்வரன், பூங்கோதை தாஸ், சுபா ராஜேந்திரபிரசாத், தனலெட்சுமி, பாலசுப்பிரமணியன், அப்துல் வஹாப், வளர்மதி, மாலதி, சந்திரா, முருகன், முகையதீன் கனி, மீராள்பீவி, வேல்சங்கரி முத்துக்குமார், சங்கரநாராயணன், பாத்திமா பீவி, நிலோபர், பீரம்மாள், அக்பர்அலி, யாசர்கான், முகமது அலி, மகேஸ்வரி, துர்காதேவி, முகமது முகைதீன், ராமகிருஷ்ணன், சண்முகசுந்தரம், மாரி, முத்துலெட்சுமி, மாவடி க்கால் சுந்தரமகாலிங்கம், தங்கராஜ், செய்யதலி பாத்திமா பங்கேற்றனர்.
முன்னதாக கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் தங்களது வார்டு குறைகள் குறித்து பேசினர். அதற்கு நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் மற்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்