search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குற்ற புலனாய்வு"

    • 2 பேரிடம் செல்போன்-பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • முத்துக்குமார் கரிமேடு குற்ற புலனாய்வு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.

    மதுரை

    ராமநாதபுரம் மாவட்டம், மேல ஆயக்குடி, முக்குலத்தோர் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 51). இவர் நேற்று நள்ளிரவு ஆரப்பாளையம் ஏ.ஏ. ரோடு கண் ஆஸ்பத்திரி அருகே நடந்து சென்றார்.

    அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கும்பல், கத்தி முனையில் செல்போனை பறித்து சென்றது. இது தொடர்பாக முத்துக்குமார் கரிமேடு குற்ற புலனாய்வு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செல்லூர் முதலியார் தெருவை சேர்ந்தவர் பவுன்ராஜ் (வயது 40). இவர் நேற்று வைகை வடகரை, தரைப்பாலம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 4 பேர் கும்பல், கத்தி முனையில் 970 ரூபாயை பறித்து சென்றது.

    இந்த 2 சம்பவங்கள் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மேற்கண்ட சம்பவங்களில் ஈடுபட்டது கீழத்தோப்பு சிவா ( 25), தத்தனேரி, பாரதி நகர் ராமலிங்கம் மகன் மீன் முள் முத்துப்பாண்டி (22), உசிலம்பட்டி கருமாத்தூர் விவேக் என்ற கூழ் பானை (25), சின்ன வாகைக்குளம் அன்பு என தெரியவந்தது. இதில் அன்புவை தவிர மற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய ஒருவரை தேடி வருகின்றனர். 

    ×