search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதலை"

    • காப்பாற்றிய முதலையை மீட்புக் குழுவினர் ஸ்கூட்டரில் அழைத்துச் செல்லும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
    • தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் சுமார் 20 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.

    குஜராத்தின் கட்ச் அருகே அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக குஜராத்தில் கடந்த சில நாட்களாகப் பலத்த மழை பெய்து வந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த கனமழைக்கு இதுவரை 30க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய சுமார் 1,200 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதைப்போலத் தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் சுமார் 20 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். விஸ்வமித்ரி உள்ளிட்ட 24 ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் கரைபுரண்டு வருகிறது.

     

    அஜ்வா அணை நிரம்பியதை அடுத்து ,அதிலிருந்து உபரி நீர் விஸ்வாமித்ரி ஆற்றில் திறந்து விடப்பட்ட நிலையில் அணையிலிருந்த 440 முதலைகளில் பெரும்பாலானவை அருகில் உள்ள வதோரா கரையோர பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதியில் புகுந்துள்ளது. மாடுகளை முதலைகள் இழுத்துச்சென்று விடுவதால் அப்பகுதியில் அச்சம் நிலவுகிறது. வெள்ளை நீர் வடிய வடிய இங்கு புகுந்த முதலைகளை வனத்துறை அதிகாரிகள் மீட்டு வருகின்றனர்.

    இதுவரை 40 க்கும் மேற்பட்ட முதலைகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் காப்பாற்றிய முதலையை மீட்புக் குழுவினர் ஸ்கூட்டரில் அழைத்துச் செல்லும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஷூட்டரில் பின்புறம் அமர்ந்துள்ள நபர் முதலையைக் கையில் வைத்திருக்க மற்றொரு நபர் சாலையில் பிரதான சாலையில் வண்டியை ஓட்டிச்  செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

    • ஆற்றின் கரையோரங்களில் வசிப்பவர்களுக்கு இது ஒரு பொதுவான நிகழ்வாக உள்ளது.
    • ஜூன் மாதம், நான்கு முதலைகள் மீட்கப்பட்டு மீண்டும் ஆற்றில் விடப்பட்டன.

    குஜராத் மாநிலம் வதோதராவில் பெய்துவரும் கனமழையைத் தொடர்ந்து விஸ்வாமித்ரி நதியில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் வெள்ளம் மட்டுமின்றி குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்த முதலைகளையும் எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர்.

    விஸ்வாமித்ரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், 10 முதல் 15 அடி நீளமுள்ள பல முதலைகள் சாலைகள், பூங்காக்கள், குடியிருப்புகள் மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில் வலம்வருகின்றன. கடந்த ஐந்து நாட்களில் 10 முதலைகளை மீட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    10 முதலைகளில் 2 முதலைகள் வனபகுதியில் விட்டதாகவும், 8 முதலைகள் பாதுகாப்பாக உள்ளதாகவும் ஆற்றின் நீர்மட்டம் குறையும் போது அவற்றை விடுவிப்போம் என்றும் அதிகாரி தெரிவித்துள்ளார்.




     மேலும் விஸ்வாமித்ரி ஆற்றில் 300 சதுப்புநில முதலைகள் வசிப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் ஆற்றின் நீர் மட்டம் அதன் அபாய கட்டமான 37 அடியிலிருந்து 12 அடியாக குறைந்து இன்று காலை 24 அடியாக இருந்தது.

    எவ்வாறாயினும், ஆற்றின் கரையோரங்களில் வசிப்பவர்களுக்கு இது ஒரு பொதுவான நிகழ்வாக உள்ளது. ஏனெனில் ஒவ்வொரு மழைக்காலத்திலும், முதலைகள் ஆற்றின் பாதுகாப்பான எல்லைகளை விட்டு வெளியேறி, வெள்ளம் நிறைந்த தெருக்களில், நகரின் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைகின்றன. ஜூன் மாதம், நான்கு முதலைகள் மீட்கப்பட்டு மீண்டும் ஆற்றில் விடப்பட்டன, ஜூலை மாதத்தில் அந்த எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது.

    விஸ்வாமித்ரி ஆற்றின் கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து முதலைகளை மீட்கும் பணி ஆண்டு முழுவதும் தொடரும். அதே வேளையில், மழைக்காலத்தில் அவற்றின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்று வன அதிகாரி தெரிவித்துள்ளார்.

    • ஆற்றில் நூற்றுக்கணக்கான முதலைகள் உள்ளன.
    • ஆற்றங்கரை பகுதிகளில் கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுக்கூடலூர், பழைய நல்லூர், அகர நல்லூர், வல்லம்படுகை, வேளக்குடி, வையூர், கண்டியாமேடு உள்ளிட்ட கிராம பகுதிகளை ஒட்டி கொள்ளிடம் ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் நூற்றுக்கணக்கான முதலைகள் உள்ளன.

    குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாகவே பழைய கொள்ளிடம் ஆற்றுக்கு குளிக்க செல்பவர்கள், கால் கழுவச் செல்பவர்களை, முதலைகள் கடித்து இழுத்து செல்கின்றன. இதனை தடுக்கும் வகையில் முதலை நடமாட்டம் உள்ள பகுதிகளில் கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றின் கரையில் உள்ள காட்டுக்கூடலூர் கிராம மக்களை பெரிய முதலை ஒன்று அச்சுறுத்தி வந்தது.

    இந்த நிலையில் ஆற்றின் கரையில் கால் கழுவ சிறுவன் சென்றான். அப்போது ஆற்றங் கரையில் பெரிய முதலை ஒன்று படுத்து கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவன் கூச்சலிட்டபடியே அலறி அடித்து ஓடினான்.

    தகவல் அறிந்த கிராம மக்கள் கொள்ளிடம் ஆற்றங்கரைக்கு வந்தனர். அங்கிருந்த சுமார் 400 கிலோ எடையும் 12 அடி நீளமும் கொண்ட முதலையின் கால்கள் மட்டும் வாயை கட்டினர். பின்னர் முதலையை தூக்கி மினி லாரியில் வைத்து எடுத்து சென்று வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    பொதுமக்கள் கொண்டு வந்து கொடுத்த முதலையை சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி நீர் தேக்கத்தில் வனத்துறையினர் பாதுகாப்பாக விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • மான்ஸ்டர் என்ற புனைப்பெயரில் அந்த வீடியோக்களை அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்துள்ளார்.
    • தற்போது ஆடம் செய்த குற்றங்களுக்காக ஆஸ்திரேலிய நீதிமன்றம் 249 வருடங்கள் சிறைதண்டனை வழங்கியுள்ளது.

    உலகம் முழுவதும் விதவிதமாக புதுப்புது வகையில் குற்றங்கள் அரங்கேறி வருகின்றன. இதில் பெரும்பாலானவை பாலியல் குற்றங்கள் ஆகும். அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் வினோதமான வகையில் குற்றங்களில் ஈடுப்பட்டு வந்துள்ளார். அதாவது 52வயதான விலங்கியல் நிபுணரும், முதலைகள் ஸ்பெஷலிஸ்டுமான ஆடம் பிரிட்டோன் என்பவர் நாய்களை அடித்து துன்புறுத்தி வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார்.

    இதனால் இதுவரை 39 நாய்கள் உயிரிழந்துள்ளன. நாய்களை வன்புணர்வு செய்வதை வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளார் ஆடம் பிரிட்டோன். இதுபோன்று விலங்குகளை துன்புறுத்தியதாக இவர் மீது 60 குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் இவையனைத்தையும் ஆடம் பிரிட்டோன் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

     

    விலங்குகளை பராமரிக்க முடியாமல் திணறும் உரிமையாளர்களிடமிருந்து அவற்றை வாங்கி இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார் ஆடம். பாரப்பிலியா paraphilia என்ற மன நோயினால் ஆடம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.இந்த நோய் உள்ளவர்கள் குழந்தைகள் மீதும் , உயிரற்ற பொருட்கள் மீதும் பாலியல் இச்சை கொண்டிருப்பர். ஆடம் ஒரு படி மேலாக விலங்குகள் மீது பாலியல் இச்சை கொண்டுள்ளார். விலங்குகளை வன்புறவு செய்வதை படம்பிடிக்கும்போது பல்வேறு கோணங்களில் பல சாதனைகளை பயன்படுத்தி படம்பிடித்துள்ளார்.

    மான்ஸ்டர் என்ற புனைப்பெயரில் அந்த வீடியோக்களை அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்துள்ளார். தனது நாய் துன்புறுத்தப்படுவதை வீடியோவில் பார்த்த முன்னாள் உரிமையாளர் அளித்த புகாரை அடுத்து இந்த குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தற்போது ஆடம் செய்த குற்றங்களுக்காக ஆஸ்திரேலிய நீதிமன்றம் 249 வருடங்கள் சிறைதண்டனை வழங்கியுள்ளது.

    • சாலையில் பெரிய முதலையை ஒன்று உர்ந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • கனமழை காரணமாக சிவன் நதியில் இருந்து முதலை வெளியே வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மகாராஷ்டிராவிலும் கனமழை தொடர்கிறது. ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள சிப்லன் உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது.

    கனமழையை தொடர்ந்து, சாலையில் பெரிய முதலையை ஒன்று உர்ந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சாலையில் முதலை வருவதை பார்த்த மக்கள் பீதியடைந்தனர். கனமழைக்கிடையில் முதலை ஒன்று சாலையில் சகஜமாக வருவதை பார்த்த நபர் ஒருவர் அதனை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.

    காரில் அமர்ந்திருந்த நபர் ஒருவர் படம்பிடித்த வீடியோவில், சிப்லுன் சாலையில் பெரிய முதலை ஊர்ந்து செல்லும் காட்சி இடம்பெற்று இருந்தது. கனமழை காரணமாக சிவன் நதியில் இருந்து முதலை வெளியே வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இந்தியாவில் உள்ள மூன்று முதலை இனங்களில் ஒன்றான குவளை முதலைகளுக்கு பெயர் பெற்றது. கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள ஆறுகளின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. ரத்னகிரி மாவட்டத்தில் நாளை (ஜூலை 2) வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • வனத்துறையினர் அந்த முதலையை பத்திரமாக மீட்டு சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
    • வீடியோ காட்சிகளை பார்த்த பயனர்கள் நகைச்சுவையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஜாக்சன் வில்லி பகுதியில் 104 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று அவரது வீட்டிற்குள் முதலை ஒன்று புகுந்துள்ளது.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் போலீசாருக்கும், வன அலுவலருக்கும் தகவல் தெரிவித்தார். அங்கு சென்ற வனத்துறையினர் அந்த முதலையை பத்திரமாக மீட்டு சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

    'நாங்கள் அவரை கட்டமுடியாது' என்ற தலைப்பில் பகிரப்பட்ட வீடியோ காட்சிகளை பார்த்த பயனர்கள் நகைச்சுவையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • சாவித்ரி காது கேளாத வாய் பேச முடியாத தனது மகன் வினோத் குறித்து அவரது கணவருடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்
    • குழந்தையின் உடலை ஒரு முதலையின் தாடையில் இருந்து தீயணைப்பு துறையினர் மீட்டனர்

    கர்நாடகாவில் உத்தர கன்னடா பகுதியில் கணவருடன் ஏற்பட்ட சண்டையில் தனது 6 வயது மகனை முதலைகள் வசிக்கும் கால்வாயில் தூக்கி வீசி கொலை செய்த தாயை போலீஸ் கைது செய்துள்ளனர்.

    போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கால்வாயில் குழந்தையின் உடலை தீவிரமாக தேடினர். அப்போது குழந்தையின் உடலை ஒரு முதலையின் தாடையில் இருந்து அவர்கள் மீட்டனர். அப்போது குழந்தையின் வலது கையை கிட்டத்தட்ட முதலை விழுங்கியிருந்தது.

    சாவித்திரியின் கணவர் ரவிகுமார் கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் காது கேளாத வாய் பேச முடியாத மூத்த மகன் வினோத் தொடர்பாக இவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக தான் தனது மகனை சாவித்திரி கொலை செய்துள்ளார்.

    இந்த கொலை தொடர்பாக சாவித்ரியிடம் போலீஸ் விசாரணை நடத்தினர். அப்போது, எனது கணவர் தொடர்ந்து என்னை கேலி செய்தார், காது கேளாத, வாய் பேச முடியாத தனது மகனை கொலை செய்து விடுமாறு என்னிடம் கூறினார். என் மகன் எவ்வளவு சித்திரவதைகளை தான் தங்குவான். இந்நிலையில், கடந்த மே 4 அன்றும் இதே போல் எனக்கும் என் கணவருக்கும் சண்டை நடந்தது. அதனால் என் மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் தூக்கி வீசினேன். என் மகனின் மரணத்துக்கு என் கணவரே காரணம் என்று சாவித்திரி காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

    அதன் பின்னர் அவரது கணவர் ரவிக்குமாரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து, இருவரும் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.

    • நாய் குரைத்ததும் வாசலுக்கு வந்த நடாலியா வெளியே முதலை நிற்பதைப் பார்த்து அதிர்ந்து போனார்.
    • நாய்க்கு பயந்து முதலை சென்றுவிட்டதால் நிம்மதி பெருமூச்சுவிட்டார்.

    வீட்டிற்குள் நுழைய முயன்ற முதலையை நாய் குரைத்து விரட்டும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிறது.

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நாடாலியா ரோஜாஸ் என்பவரின் பண்ணைவீடு ஒரு குளத்தை ஒட்டி உள்ளது. அதில் இருந்து வெளியேறிய முதலை ஒன்று அவரது வீட்டின் முற்றத்திற்கு வந்தது. கண்ணாடி கதவுக்கு வெளியே நின்றபடி பார்த்துக் கொண்டிருந்த முதலையை வீட்டில் வளர்த்த நாய் கவனித்தது. உடனே அது பயங்கரமாக குரைக்கத் தொடங்கியதால் முதலை மிரண்டுபோய் குளத்தை நோக்கி ஓடி மறைந்தது. நாய் குரைத்ததும் வாசலுக்கு வந்த நடாலியா வெளியே முதலை நிற்பதைப் பார்த்து அதிர்ந்து போனார். நாய்க்கு பயந்து முதலை சென்றுவிட்டதால் நிம்மதி பெருமூச்சுவிட்டார்.

    வீட்டில் இருந்த கேமராவில் பதிவான இந்த காட்சிகளை அவர் இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் வெளியிட்டார். வீடியோ வைரலானது. பல லட்சம் பேர் பார்வையிட்டு உள்ளனர். 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

    "நாய் குரைத்ததால் முதலை ஓடியிருக்கலாம், ஆனால் நாய்க்காகத்தான் முதலை உங்கள் வீட்டிற்கு வந்தது" என்று ஒருவர் கருத்து பதிவிட்டு இருந்தார். மேலும் பலர் நாயின் தைரியத்தை பாராட்டி பதிவிட்டு இருந்தனர்.

    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
    • ஒரு விலங்கு ஏன் நரமாமிசத்தை தேடுகிறது? என்று ஒரு பயனர் கேள்வி எழுப்பி உள்ளார்.

    வன விலங்குகள் வேட்டை தொடர்பாக சமூக வலைதளங்களில் ஏராளமான வீடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது. அவற்றில் சில வீடியோக்கள் ரசனையாகவும், சில வீடியோக்கள் அதிர்ச்சியாகவும் இருக்கும். அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் முதலை வேட்டை தொடர்பான வீடியோ இணைய பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    அதில், ஒரு ஓடையில் பெரிய முதலை மெதுவாக தண்ணீரில் மிதந்து செல்கிறது. அப்போது அங்கு ஒரு சிறிய முதலை செல்வதையும், திடீரென பெரிய முதலை அந்த குட்டி முதலையை பிடித்து உண்ணும் காட்சிகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. இணையத்தில் வைரலாகி 35 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்துள்ள இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    ஒரு விலங்கு ஏன் நரமாமிசத்தை தேடுகிறது? என்று ஒரு பயனர் கேள்வி எழுப்பி உள்ளார். மற்றொரு பயனர், இதை பார்க்கும் போது பயமாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார். இதுபோன்று பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.



    • கொழுமம், குமரலிங்கம், சாமராயப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
    • முதலைகளை பாா்த்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றனா்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் மூலம் நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீா் வசதி பெற்று வருகின்றன.

    குடிநீா் மற்றும் பாசன தேவைகளுக்காக அணையில் இருந்து அமராவதி ஆற்றில் தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. இதில் அமராவதி அணையில் இருந்து வெளியேறிய சில முதலைகள் கரையோரத்தில் நடமாடி வருவதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனா். மேலும் உடுமலையை அடுத்துள்ள கொழுமம் கிராமத்தில் உள்ள சோதனைச்சாவடி அருகே பெரிய முதலை சாலையில் ஊா்ந்து சென்றுள்ளது. இதனைப்பார்த்த இளைஞர்கள் செல்போன் மூலம் வீடியோ எடுத்து சமூகவலை தளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

    அதனைப்பார்த்த கொழுமம், குமரலிங்கம், சாமராயப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

    இதுகுறித்து வனத் துறையினா் கூறியதாவது:- அமராவதி அணையில் ஏராளமான முதலைகள் உள்ளன. வழக்கமாக பாசனத்துக்காக தண்ணீா் திறந்து விடும்போது அணையில் உள்ள முதலை கள் பிரதான ஷட்டா் வழியாக அமராவதி ஆற்றில் சென்று விடும் நிலை ஏற்பட்டு வருகிறது. பொது மக்கள் யாரும் அச்சம் அடைய வேண்டாம்.

    முதலைகளை பாா்த்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றனா்.

    • விவசாய நிலத்தில் கிடப்பதால் முதலையை எளிதில் பிடித்து விடலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
    • பில்லூர் அணையில் தற்போது நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    சிறுமுகை அருகே உள்ள மொக்கைமேடு பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன்(45) என்பவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வாழை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். இன்று காலை அவர் வழக்கம் போல தனது விவசாய நிலத்தை பார்வையிடுவதற்காக சென்றார்.

    அப்போது வாழைமரங்களுக்கு இடையே மரம் போன்ற ஒன்று மாறுபட்ட கலரில் தென்பட்டுள்ளது. உற்றுப் பார்த்தபோது அது சுமார் 12 அடி நீளமுள்ள ராட்சத முதலை என்பது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ்குமாருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து சென்ற வனச்சரகர் மனோஜ்குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று முதலையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். விவசாய நிலத்தில் கிடப்பதால் முதலையை எளிதில் பிடித்து விடலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையில் தற்போது நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது. இதனால் பவானி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டு உள்ளது. வற்றாத ஜீவநதியான பவானி ஆறு வற்றி ஓடை போல் காட்சியளிக்கிறது. ஆறு மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் இல்லாததால் அங்கு இருந்து முதலை வெளியேறி வாழைத்தோட்டத்தில் புகுந்து இருக்கலாம் என வனத்துறையினர் கூறினர்.

    • வீட்டில் சுமார் 8 அடி நீளமுள்ள 110 கிலோ எடையுள்ள முதலை ஒன்று இன்று காலை புகுந்தது.
    • வனக்காப்பாளர்கள் அன்புமணி, ஞானசேகர் அலமேலு மற்றும் வன ஊழியர் புஷ்பராஜ் ஆகியோர் விரைந்து சென்றனர்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள நாஞ்சலூர் கிராமத்தில் உள்ள அப்துல்ரசித் வீட்டில் சுமார் 8 அடி நீளமுள்ள 110 கிலோ எடையுள்ள முதலை ஒன்று இன்று காலை புகுந்தது.

    இத்தகவலின் படி சிதம்பரம் பிரிவு வனவர் பிரபு தலைமையில் வனக்காப்பாளர்கள் அன்புமணி, ஞானசேகர் அலமேலு மற்றும் வன ஊழியர் புஷ்பராஜ் ஆகியோர் விரைந்து சென்றனர்.

    அங்கிருந்த முதலையை பத்திரமாக பிடித்து வக்கிரமாரி ஏரியில் விட்டனர்.

    ×