search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 239589"

    • கல்லூரியின் தலைவர் வள்ளி பெருமாள் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
    • தேர்வுகளில் வெற்றி பெற்று உயர்ந்த பணிகளில் அமர வேண்டும் என அறவுறித்தினார்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, கிருஷ்ணா கல்வியியல் கல்லூரியின் விளையாட்டு விழா, ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவை கல்லூரியின் தாளாளர் சி.பெருமாள், கல்லூரியின் தலைவர் வள்ளி பெருமாள் ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

    பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் அறிவழகன் அனைவரையும் வரவேற்றார். கலை அறிவியல் கல்லூரி முதல்வர் ஆறுமுகம் தொடக்க உரையாற்றி ஆண்டறிக்கை படித்தார். விழாவில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தாளாளர் பேசும் போது கிராமப்புற மாணவர்கள் இன்று தகவல் தொழில் நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை பயன்படுத்தி நன்கு கல்வி கற்று, வளாக தேர்வில் தேர்வாகி வேலை வாய்ப்பை பெற வேண்டும் என்றார்.

    கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கு பேசும் போது ஒழுக்கம், அறம், நற்சிந்தனை, நன்னடத்தை, விளையாட்டு, விவசாயம் அனைத்தும் கல்வி தான். அதிலும் நாம் தேர்ச்சி பெற வேண்டும். இனத்தின் பண்பாடு, கலாசாரத்துடன் இணைந்தது தாய்மொழி. அது நமது உயிர், உணர்வாகும். மாணவ, மாணவிகள் கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கி போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று உயர்ந்த பணிகளில் அமர வேண்டும் என்றார். இதில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், பல்கலைக்கழக அளவில் சிறப்பு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கு பரிசுகளை வழங்கினார். மேலும் பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கினார். இதில் சிறப்பாக பணிபுரிந்த பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், அனைவருக்கும் சான்றிதழ்கள், நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள், நிர்வாக அலுவலர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வைமா கல்வி நிறுவனங்களின் 27-வது ஆண்டு விழா நடந்தது.
    • மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் வைமா கல்வி நிறுவனங்களான கேசா டி மிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வைமா வித்யாலயா, பிரசார்தா பாடசாலா, வைமா கிட்ஸ் பள்ளிகளின் 27-வது ஆண்டு விழா பி.எஸ். குமாரசாமி ராஜா நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்தது. நகர் மன்றத் தலைவி பவித்ரா ஷியாம், நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி ஆகியோர் கவுரவ விருந்தினர்களாகவும், சாத்தூர் சவுத் சைடு மெட்ரிக்குலேசன் பள்ளி நிறுவனர் சீனிவாசன், தங்கமயில் ஜுவல்லரி முதன்மை செயல் அதிகாரி விஸ்வநாராயன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்க செயலாளர் கவிஞர் லட்சுமி காந்தன் ஆகியோர் முக்கிய விருந்தினர்களாகவும் பங்கேற்றனர். லட்சுமி மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ராஜாகுணசீலன், லட்சுமி என்ஜினீயரிங் மேனேஜிங் டைரக்டர் ரவிசங்கர் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    வைமா கல்வி நிறுவனங்களின் நிறுவனர்-தலைவர் வைமாதிருப்பதி செல்வன் தலைமை தாங்கினார். மேனேஜிங் டிரஸ்டி அருணா திருப்பதி செல்வன் பேசினார். ஒருங்கிணைப்பாளர் முத்துமாரி வரவேற்றார். நிர்வாக ஒருங்கிணைப்பாளர் பானுப்பிரியா, வைமா வித்யாலயா பள்ளி முதல்வர் கற்பக லட்சுமி, பிரசார்தா பாடசாலா பள்ளி முதல்வர் செண்பககனி, வைமா கிட்ஸ் பள்ளியின் ஆசிரியை பாக்கியலட்சுமி ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். கேசா டி மிர் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் சித்ரா நன்றி கூறினார்.

    • அப்துல்கலாம் பப்ளிக் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

    பரமக்குடி

    பரமக்குடி புதுநகர் டாக்டர் அப்துல் கலாம் சி.பி.எஸ்.சி. பப்ளிக் பள்ளியில் 6-வது ஆண்டு விழா நடந்தது. பள்ளியின் சேர்மன் முகைதீன் முசாபர் அலி தலைமை தாங்கினார்.

    பரமக்குடி உதவி ஆட்சியர் அப்தாப் ரசூல், அறிவியல் விஞ்ஞானி இங்கர்சால் செல்லதுரை ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    பரமக்குடி முருகேசன் எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி முன்னிலை வகித்தனர். ஆண்டறிக்கையை முதல்வர் ஜேம்ஸ் ஜெயராஜ் வாசித்தார்.விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாக முதன்மை அலுவலர் ஜெயசுதா செய்திருந்தார்.

    கவுன்சிலர்கள் அப்துல் மாலிக், ஜீவரத்தினம், வாசன் பள்ளியின் தாளாளர் வாசன், புது நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ராஜவேலுச்சாமி, அரசு வழக்கறிஞர் கேசவன், தங்கம்மாள் ரஹீம் அறக்கட்டளை நிறுவனர் முகமது அலி ஜின்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

    • கோவிலின் 7-ம்ஆண்டு விழா நிகழ்ச்சி கடந்த 28ந் தேதி தீர்த்த கலச ஊர்வலத்துடன் தொடங்கியது.
    • சித்தி விநாயகருக்கு மூலமந்திரஹோமம், திரவியஹோமம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி சபரி நகரில் சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் 7-ம்ஆண்டு விழா நிகழ்ச்சி கடந்த 28ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தீர்த்த கலச ஊர்வலத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, கலச அபிஷேக பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன. அதைத் தொடர்ந்து நேற்று காலை சித்தி விநாயகருக்கு மூலமந்திரஹோமம், திரவியஹோமம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.பின்னர் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழா கமிட்டியினர் ஆண்டு விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சித்தி விநாயகரை வழிபட்டனர்.

    • அரசின் திருக்கல்யாண மண்டபத்தின் முதலாம் ஆண்டு விழா நடைபெற்றது.
    • கோமள மடத்தின் ஸ்ரீ தேசிகந்திரா சுவாமிகளும், தேனாடு சீமை பார் பத்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டம் கெங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட அவ்வூர் தூனேரி ஹட்டியில் செல்வவிநாயகர் திருக்கோவில் அருகில் அரசின் திருக்கல்யாண மண்டபத்தின் முதலாம் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் ஊர் பொதுச் செயலர் விசுவநாதன் வரவேற்று சிறப்புரை ஆற்றினார். மேலும் சிறப்பு அழைப்பாளராக கோமள மடத்தின் ஸ்ரீ தேசிகந்திரா சுவாமிகளும், தேனாடு சீமை பார் பத்தி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட வீர சைவ லிங்காயத்தர் சமுதாயத்தின் முன்னேற்ற சங்கத்தின் தலைவர், செயலர் மற்றும் பொருளாளர் குயின் சோலை, இட்டக்கல், அவ்வூர், ஹட்டியின் ஊர் தலைவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • சிறுவயதில் ஏழ்மை நிலையில் இருந்த இப்பள்ளியின் தாளாளர் எம்.வேடியப்பன் தனது அயராத உழைப்பாலும் உயர்ந்தவர்.
    • மாணவ, மாணவிகள் உங்களுடைய இலக்கை குறி வைத்து நீங்கள் வெற்றி பெற வேண்டும்

    மொரப்பூர்,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூர் ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.பி.எஸ்.சி. பள்ளி 10 -ம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு ஸ்ரீராம் கல்வி குழுமங்களின் நிறுவனர் எம்.வேடியப்பன் தலைமை வகித்தார்.

    ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் வே.சாந்தி வேடியப்பன் குத்து விளக்கு ஏற்றி வைத்து விழாவினை தொடங்கி வைத்தார். இவ்விழாவில் சின்னப்பகவுண்டர், கம்பைநல்லூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் மாசிலாமணி, கம்பை நல்லூர் பேரூராட்சி தலைவர் த.வடமலை முருகன், கம்பைநல்லூர் பேரூராட்சி துணைத்தலைவர் சா.மதியழகன், ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் தமிழ்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீராம் கல்வி குழுமங்களின் நிர்வாக இயக்குனர் த.பவானி தமிழ்மணி வரவேற்று பேசினார்.

    இவ்விழாவில் விஜய் டி.வி.யின் நீயா, நானா புகழ் சி.கோபிநாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    சிறுவயதில் ஏழ்மை நிலையில் இருந்த இப்பள்ளியின் தாளாளர் எம்.வேடியப்பன் தனது அயராத உழைப்பாலும், நேர்மையாலும், எளிமையான நட்பாலும் இன்றைக்கு மாநில அளவில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைக்கும் இப்பள்ளியை உருவாக்கி உள்ளார்.

    பள்ளி வாழ்க்கை தான் மாணவ, மாணவிகளின் மறக்க முடியாத நாட்க ளாகும். பள்ளி நிர்வாகம், ஆசிரிய, ஆசிரியர்கள், நண்பர்கள் என அனைவரும் நீண்ட காலம் மனதில் இருப்பார்கள். எனவே உங்களுடைய இலக்கை குறி வைத்து நீங்கள் வெற்றி பெற வேண்டும் என இந்த நேரத்தில் நான் உங்களை வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இவ்விழாவில் காரிமங்கலம் பேரூராட்சி தலைவரும், பி.சி.ஆர். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளருமான பி.சி.ஆர்.மனோகரன், தருமபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாக அலுவலரும், எஸ்.எஸ்.எஸ். நகை கடை அதிபருமான சி.சக்திவேல், திருவண்ணாமலை சீனிவாசன்,சேலம் அசோக்குமார்,காஞ்சிபுரம் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

    இதனை தொடர்ந்து பள்ளி முதல்வர்கள் சாரதி மகாலிங்கம், ஜான் இருதயராஜ், வெற்றிவேல் ஆகியோர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.பி.எஸ்.சி. பள்ளிகளின் முன்னேற்ற அறிக்கையினை வாசித்தார்கள்.

    முடிவில் ஸ்ரீ ராம் கல்வி குழுமங்களின் நிர்வாக இயக்குநர் ஆர். சன்மதி ராஜாராம் நன்றி கூறினார்.

    • தேவஸ்தான ப்பள்ளி அரசு ஆரம்பப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
    • பொதுமக்கள் பள்ளிக்கு தேவையான சீர்வரிசைகள் கொண்டு வந்து வழங்கினர்.

    சூளகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா தேவஸ்தான ப்பள்ளி அரசு ஆரம்பப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.

    இந்ந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் கிரிஜா, ஒசூர் கல்வி மாவட்ட அலுவலர் முனிராஜ், உத்தனப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிகாந், சூளகிரி வட்டார கல்வி அலுவலர்கள் மகேஷ், ஜார்ஜ், வட்டார வளமைய மேற்பார்வையாளர் வெங்கடேஷன், ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் ஆசிரியர்கள் செல்வம், சதீஷ், கற்பகம், ஜான்ஸிராணி, புனிதா, உமாமகேஷ்வரி, ஜெயந்தி, சுபா ராணி, கற்பகம், அசோக், மகேஷ்வரி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியின் போது பொதுமக்கள் பள்ளிக்கு தேவையான சீர்வரிசைகள் கொண்டு வந்து வழங்கினர். இதை பார்த்த ஒசூர் மாவட்ட கல்வி அலுவலர் முனிராஜ் மாவட்டத்தில் முதல் முதலில் சீர்வரிசை நிகழ்ச்சி வியக்கதக்கது என்றும் கலை நிகழ்சியும் பாராட்ட தக்கது என பாராட்டினார்.

    • மாணவர்களின் திறனை மேம்படுத்துதல், கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
    • ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரம்யாகுமார் முன்னிலை வகித்தார்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட பச்சையப்பன் கொட்டாய் கிராமம். இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு 20-க்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

    இந்த நிலையில் அரசு பள்ளியின் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த தனியார் பள்ளிக்கு நிகரான பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்துதல், கலை நிகழ்ச்சிகள் நடத்துதல் போன்ற பணிகளை பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் ஆண்டு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வந்த பாகல்அள்ளி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரம்யாகுமார் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் 15-க்கு மேற்பட்ட பாடல்கள் மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளி மாணவர்கள் செல்போன் பற்றிய நன்மை,தீமைகள் குறித்து எடுத்துக் கூறினார்.

    • இல்லம் தேடி கல்வி மையங்கள் சார்பில் ஆண்டு விழா நடைபெற்றது.
    • விழாவில் மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் 7 மற்றும் 10-வது வார்டுகளை சேர்ந்த இல்லம் தேடி கல்வி மையங்கள் சார்பில் ஆண்டு விழா வட்டார ஒருங்கிணைப்பாளர் சப்திகா டொமிலா தலைமையில் நடைபெற்றது.நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியை அன்பாய் செல்வம் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு விருந்தினர்களாக அறிவொளி இயக்க முன்னாள் மையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் மகா பால்துரை, ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், வக்கீல் வேணுகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இவ்விழாவில் இல்லம் தேடி கல்வி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் தனித் திறன்களில் மேன்மை பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன .

    விழாவில் சாத்தான் குளம் தூய இருதய மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் நேசமலர், பூங்கொடி, ஆண்ட்ரூஸ், இப்ராஹிம் நடுநிலைப்பள்ளி ஆசிரியை கீதா, ஸ்டீபன்ஸ் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை வேதராணி மற்றும் தலைமை ஆசிரியர் சாந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மைய தன்னார்வலர் கிருபைமேரி கிருஸ்டிபாய் வரவேற்றார். முடிவில் ராகப் பிரியா நன்றி கூறினார்.

    • பொதுத்தேர்வில் நல்ல தேர்ச்சி பெற காரணமாக இருந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
    • பள்ளியின் மாணவர் மன்றத்துடன் இணைந்து பள்ளியின் கலை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நித்யா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் 12-ம் ஆண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    பள்ளியின் கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஷியாமளா ரமேஷ்பாபு மற்றும் கவிஞர் பா.விஜய் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மாணவர்களின் பல்சுவைக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கிய மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும், பொதுத்தேர்வில் நல்ல தேர்ச்சி பெற காரணமாக இருந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    ஏ.வி.பி.கல்வி குழுமங்களின் தாளாளர் கார்த்திகேயன்அருள்ஜோதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏ.வி.பி.கல்வி குழுமங்களின் பொருளாளர் லதா கார்த்திகேயன் வரவேற்றார். பள்ளி முதல்வர் பிரமோதினி ஆண்டறிக்கை வாசித்தார். காலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் சியாமளா ரமேஷ்பாபு குழந்தை வளர்ப்பு ஒரு கலை என்னும்தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

    மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திரைப்பட பாடல் ஆசிரியர் கவிஞர் பா. விஜய் வருங்கால சமூகத்தின் சிற்பியாக இருக்கும் குழந்தை களைக்கொண்டாடுவோம் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். முடிவில் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் மோகனா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் மாணவர் மன்றத்துடன் இணைந்து பள்ளியின் கலை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நித்யா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். 

    • முத்தையாபுரம் கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடை பெற்றது.
    • கலெக்டர் செந்தில்ராஜ் மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தையாபுரம் கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 32-வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடை பெற்றது.

    நிகழ்ச்சியில் பள்ளி செயலர் ஜீவன்ஜேக்கப் வரவேற்று பேசினார். பள்ளி முதல்வர் சித்ரா ஆண்டறிக்கை வாசித்தார். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி, சென்ற ஆண்டு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி, தலைமை உரையாற்றினார்.

    பள்ளி தாளாளரும், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் அறிவுரை வழங்கினார். பள்ளி துணை முதல்வர் டேவிட் நன்றி கூறினார். கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    • அரசு பள்ளி ஆண்டு விழாவில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
    • விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தொகுதி சுந்தரராஜபுரம் ஊராட்சியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் தனுஷ்குமார் எம்.பி., தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினனர். தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பேசும்போது, கணபதி சுந்தர நாச்சியார்புரம், முத்துச்சாமியாபுரம் ஊராட்சி காமராஜர் நகர் மற்றும் கோதை நாச்சியார்புரம் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்படுள்ளது என்றார். விழாவில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மாவட்ட அலுவலர் வித்யா, தலைமை ஆசிரியர் சாந்தி, மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி, ஒன்றிய துணை செயலாளர் மலர்மன்னன், கிளை செயலாளர்கள் கருணாகரன், பாலமுருகன், கனகராஜ், மாடசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×