என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "போலீஸ் சூப்பிரண்டு"
- ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து புரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள் என அறிவுரை வழங்கினர்.
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரனை பெட்டிசன் மேளாவுக்கு வந்த மக்கள் பாராட்டினர்.
ஊட்டி,
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி நீலகிரியில் உள்ள காவலர் சிறார் மன்றத்தில் பெட்டிசன் மேளா நடைபெற்றது.
இதில் பொதுமக்கள் அளித்த மனுக்களில் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் மனு மீதான மறுவிசாரணை நடத்தப்பட்டது.
பெட்டிசன் மேளாவில் நிலவையில் இருந்த குடும்ப பிரச்சினை, பண பரிமாற்ற பிரச்சனை மற்றும் இடப்பிரச்சினை தொடர்பாக உள்ள மனுக்கள் மீது மறு விசாரணை செய்து தீர்வு காண நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் நடவடிக்கை மேற்கொண்டார்.
மேலும் பெட்டிசன் மேளாவுக்கு வந்த கணவன், மனைவி 2 பேருக்கும் அறிவுரைகளை வழங்கி, அவர்களுக்கிடையேயோன பிரச்சினையும் தீர்த்து வைக்கப்பட்டது.இந்த பெட்டிசன் மேளாவில் நெகிழ்ச்சியான ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
குடும்ப பிரச்சினை காரணமாக அண்ணன், தம்பி ஆகியோர் வந்திருந்தனர். அவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், நாம் பிறப்பது ஒரு முறை, இறப்பது ஒரு முறை தான்.
வாழ்வது ஒரு முறை தான். நாம் இறந்தால் எதையும் கொண்டு போவது இல்லை. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. ஒருவ ருக்கொருவர் விட்டுக் கொடுத்து புரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள் என அறிவுரை வழங்கினர்.
அவரின் அறிவுரையை அடுத்து அண்ணன் தம்பி 2 பேரும் சேர்ந்து கொண்ட னர். வரும் போது தனித்தனியாக வந்தவர்கள், போகும் போது அண்ணன், தம்பி 2 பேரும் ஒரே காரில் ஏறி சென்றது அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தனது அன்பால் பொதுமக்களை அரவணைத்து அறிவுரைகளை கூறிய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரனை பெட்டிசன் மேளாவுக்கு வந்த மக்கள் பாராட்டினர்.
- ரேஷன் அரிசி கடத்தியவா் குண்டா் சட்டத்தில் கைதானார்.
- மதுரை மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் எச்சரிக்கை விடுத்து உள்ளாா்.
மதுரை
மதுரை மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்த சோலை மகன் முத்து என்ற கொரில்லா முத்து (வயது 45). இவா் மீது 40 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி கடத்தியதாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் கொரில்லா முத்து மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடுவதாக தகவல் வந்தது. எனவே அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகா் உத்தரவிட்டாா். இதன் அடிப்படையில் குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசார், கொரில்லா முத்துவை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து, மதுரை மத்தியச் சிறையில் அடைத்து உள்ளனர்.
மதுரை மண்டலத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படு வதாக வரும் புகாா்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் அரிசி மூட்டைகளை கிட்டங்களில் பதுக்கி வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று மதுரை மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் எச்சரிக்கை விடுத்து உள்ளாா்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்