search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் விழா"

    • கோவில் கொடைவிழாவில் நடந்த இந்த கொலை சம்பவத்தால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
    • முக்கிய கொலையாளிகளான விபின், ராஜ்குமார், வருண்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கக்கன் நகரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன்கள் மகேஷ்வரன்(வயது 41), மதியழகன் (39), மதிராஜா (40). இவர்கள் டிரைவர்களாக வேலை பார்த்து வந்தனர். இதில் மதியழகன், மதிராஜா ஆகியோருக்கு தலா 3 மகள்கள் உள்ளனர்.

    நேற்று கக்கன் நகர் அருகே ஓடைக்கரையில் சுடலைமாட சுவாமி கோவில் கொடை விழா நடைபெற்றது. இதில் முருகன் தனது மகன்கள் மற்றும் குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். நேற்று நள்ளிரவில் கோவிலில் கரகாட்ட நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது சாமிக்கு பூஜை நடைபெற்றதால் கரகாட்ட நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் முருகன் குடும்பத்தினருக்கும், கக்கன் நகரை சேர்ந்த முருகேஷ்வரியின் குடும்பத்தினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    இந்த வாக்குவாதம் முற்றியதில் முருகேஷ்வரியின் மகன்கள் உள்பட சிலர் சேர்ந்து முருகனின் மகன்களான மதியழகன், மதிராஜா ஆகியோரை ஆடுகளை பலியிடுவதற்காக கொண்டு வந்திருந்த கத்தியால் சரமாரி குத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே 2 பேரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர். மேலும் இதனை தடுக்க வந்த மகேஷ்வரனுக்கும் கத்தி குத்து விழுந்தது.

    கைது செய்யப்பட்ட ராஜ்குமார், வருண்குமார், விபின்.

    கைது செய்யப்பட்ட ராஜ்குமார், வருண்குமார், விபின்.

    பின்னர் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திசையன்விளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) சுந்தரவதனம் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

    தொடர்ந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மகேஷ்வரனை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொலை செய்யப்பட்ட 2 பேர் உடலும் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    தடயவியல் நிபுணர் ஆனந்தி சம்பவ இடத்தில் தடயங்கள் சேகரித்தார். கோவில் கொடைவிழாவில் நடந்த இந்த கொலை சம்பவத்தால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த இரட்டைக்கொலை சம்பவம் தொடர்பாக திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அதில் கோவில் கொடை விழாவில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. அதுகுறித்த விபரம் வருமாறு:-

    முருகன் குடும்பத்தினர் வசிக்கும் அதே தெருவில் முருகேஷ்வரியின் குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர். முருகேஷ்வரியின் மகன்களான வருண்குமார்(27), ராஜ்குமார்(28), விபின்(27) ஆகியோரும் அந்த தெருவிலேயே வசித்து வருகின்றனர். இவர்கள் 3 பேருக்கும் மது குடிக்கும் பழக்கமும் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று நள்ளிரவில் கோவில் கொடைவிழாவையொட்டி 3 பேரும் போதையில் அங்கு வந்துள்ளனர்.

    அப்போது கரகாட்ட நிகழ்ச்சியின்போது முருகனின் 3 மகன்களுக்கும், முருகேஷ்வரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனே போதையில் இருந்த முருகேஷ்வரியின் மகன்கள் 3 பேரும் சேர்ந்து பதிலுக்கு தட்டிக்கேட்டு தகராறில் ஈடுபட்டபோது இந்த கொலை சம்பவம் நடந்தது விசாரணையில் தெரியவந்தது.

    இந்த கொலை சம்பவம் தொடர்பாக 2 பெண்கள் உள்பட 8 பேர் மீது பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றம் சாட்டினர். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே முக்கிய கொலையாளிகளான விபின், ராஜ்குமார், வருண்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதில் தொடர்புடைய மேலும் 5 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    • கோவில் வளாகத்தில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர்.
    • பட்டாசு வெடிப்பதை வேடிக்கை பார்த்த சிறுவர்கள் தீக்காயமடைந்தனர்.

    மயிலம்:

    மயிலம் அருகே செண்டூர் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு கர்ண மோட்சம் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது, அதற்காக கோவில் வளாகத்தில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர்.

    இதில் அங்கிருந்த அவுட்டு மற்றும் சரவெடிகள் மீது எதிர்பாரத விதமாக தீப்பொறி விழுந்தது. இதனால் அங்கு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு வெடிப்பதை வேடிக்கை பார்த்த சிறுவர்கள் தீக்காயமடைந்தனர்.

    அங்கிருந்தவர்கள் தீக்காயமடைந்த சக்திவேல் மகன்கள் கவியழகன் (வயது 7), தமிழழகன் (5) சுப்பிரமணியன் மகன் கவுஷிக் (7), காளி மகன் அன்பு (10), சிவமூர்த்தி மகன் உதயா (7), எடையப்பட்டு நாடக ஆசிரியர் சீனுவாசன் (47) ஆகியோரை மீட்டு திண்டிவனம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதில் சிறுவன் உதயாவை மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    • ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த கறிவிருந்து நிகழ்ச்சியில் பெண்களுக்கு கண்டிப்பாக அனுமதியில்லை.
    • முன்னதாக பக்தர்கள் மனமுருகி வேண்டி மாசாணம் சுவாமியை தரிசனம் செய்து திருவருள் பெற்று சென்றனர்.

    திருச்சுழி:

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள மறையூர் கிராமத்தில் ஆண்டாண்டு காலமாக மிகவும் பிரசித்தி பெற்ற. மாசாணம் சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் வைகாசி மாத திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருடமும் வைகாசி வளர்பிறையில் மறையூர் மாசாணம் சுவாமி கோவில் வைகாசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

    கிருதுமால் ஆற்றங்கரையில் அமைந்து அருள் பாலிக்கும் மாசாணம் சுவாமி கோவில் ஆலயத்தில் பூஜை நேற்றிரவு வெகு விமர்சையாக நடைபெற்றது. மேலும் கோவிலில் நள்ளிரவில் நடைபெறும் கப்பரை பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது. மாசாணம் சுவாமியை நினைத்து மனமுருகி வேண்டினால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

    இந்த திருவிழாவில் கலந்து கொள்ளவும், தரிசனம் செய்யவும் பெண்களுக்கு அனுமதியில்லை. மறையூர் மந்தையம்மன் கோவிலில் புறப்பட்ட மாசாணம் சுவாமி, அரியசாமி மற்றும் வீரபத்திர சுவாமி பூசாரிகள் மாசாணம் சுவாமி கோவிலை வந்தடைவர். அங்கு சுவாமியின் உத்தரவை பெற்ற பின்பு அங்குள்ள அம்மி கல்லில் மஞ்சளை வைத்து சத்தம் எழுப்பும் வகையில் அதனை தட்டி கலயத்தில் வைத்து சுவாமி உத்தரவிற்கு பிறகு பீடமாக காட்சியளிக்கும் மாசாணம் கோவில் ஆலயத்தை வந்தடைவர். அதன் பின்னர் சுவாமிக்கு பொங்கல் வைத்து பல்வேறு சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்ற நிலையில் பக்தர்கள் நேர்த்தி கடனாக செலுத்திய சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆடுகள், சேவல்கள் மற்றும் கோழிகளை பலியிட்டு உணவாக சமைக்கப்பட்டு இன்று அதிகாலை முதல் கோவில் வளாகத்தில் மாபெரும் கறிவிருந்து அன்னதானம் நடைபெற்றது.

    இந்த கறிவிருந்து அன்னதான நிகழ்ச்சியானது காலை 5 மணிக்கு தொடங்கி சூரிய உதயத்திற்கு முன்பாகவே நிறைவடைவது மிகவும் சிறப்பு. ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த கறிவிருந்து நிகழ்ச்சியில் பெண்களுக்கு கண்டிப்பாக அனுமதியில்லை.

    அதுமட்டுமின்றி அன்னதானம் முடிந்து மீதமுள்ள சாதம், எஞ்சிய கறி எதையும் கோவில் எல்லையை அடுத்து எடுத்து செல்ல அனுமதியில்லை.இந்த நிலையில் மீதமிருந்த உணவுகளை பெரிய பள்ளத்தில் போட்டு புதைக்கும் நிகழ்ச்சி வினோதமானது.

    இந்த திருவிழாவில் சென்னை, மதுரை, விருதுநகர், சிவகங்கை, கோவை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் வசித்து வரும் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் தரையில் அமர்ந்து கறிவிருந்து அன்னதான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பசியாறினர்.

    முன்னதாக பக்தர்கள் மனமுருகி வேண்டி மாசாணம் சுவாமியை தரிசனம் செய்து திருவருள் பெற்று சென்றனர்.

    • தன்னலம் கருதாது பலனைக் தரும் தன்மை பெற்றது காமதேனு.
    • வாகனங்களுக்குரிய இந்த சிறப்புகள் அனைத்தும் திருவண்ணாமலையில் இருந்தே தோன்றியதாக கூறுகிறார்கள்.

    தன்னலம் கருதாது பலனைக் தரும் தன்மை பெற்றது காமதேனு.

    இறைவியும் தன்னலமின்றிப் பக்தர்களுக்கு அருளும் தன்மை பெற்றுள்ளதால் காமதேனு வாகனம் பயன்படுத்தப்படுகின்றது.

    தீபத் திருவிழாவின் மூன்றாம் நாள் ஸ்ரீ அண்ணாமலையார் சிம்ம வாகனத்தில் வருவதன் உட்பொருள் தற்பெருமையும்,

    சினத்தையும், அகங்காரத்தையும் அடக்கி தன்னடக்கம், சாந்தம், பணிவு, அன்பு, பக்தி முதலிய

    நற்குணங்களைக் கொள்வோர் அருள்மிகு ஸ்ரீ அருணாசலேசுவரர் திருவருளுக்குப் பாத்திரமாவார்கள் என்பதே ஆகும்.

    ஸ்ரீ பராசக்தி அம்பிகை அன்ன வாகனத்தில் வருவது, அன்னபட்சி பாலுடன் கலந்த நீரை நீக்கிப் பாலை மட்டும்

    பருகுவது போல் தீய செயல்களை நீக்கி நற்செயல்களைப் புரிந்து நல்லவற்றையே சிந்தித்து வரும்

    புண்ணிய சீலர்களுக்கு எங்கும் நிறைந்திருக்கும் பராபரியின் (ஸ்ரீ அன்னை பராசக்தி) திருவருள்

    உடனிருந்து துணைபுரியும் என்பதனை உணர்த்த ஸ்ரீஅம்மன் (ஸ்ரீ உண்ணாமலை அம்மன்) அன்ன வாகனத்தின்

    மேல் எழுந்தருளிப் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றாள்.

    வாகனங்களுக்குரிய இந்த சிறப்புகள் அனைத்தும் திருவண்ணாமலை தலத்தில் இருந்தே தோன்றியதாக சொல்கிறார்கள்.

    அது போல நவராத்திரி உருவான சிறப்பும் திருவண்ணாமலை தலத்துக்கே உண்டு.

    • ராவணன் இறைவனை வணங்கித்தன் குற்றங்களை உணர்ந்து செருக்கடங்கினான்.
    • அந்த நிலையினை உணர்த்துவதாக திருக்கயிலாய வாகனம் அமைகின்றது.

    ராவணன் இறைவனை வணங்கித்தன் குற்றங்களை உணர்ந்து செருக்கடங்கினான்.

    அந்த நிலையினை உணர்த்துவதாக திருக்கயிலாய வாகனம் அமைகின்றது.

    நான் எனது என்னும் செருக்குகளை அகற்றி இறைவனை அடையும் உயரிய சிந்தனையை

    ராவணனுடன் கூடிய திருக்கயிலாய வாகனம் விளக்குகின்றது.

    • அதிகார நந்தியார் மீது எழுந்தருளும் அண்ணாமலையார் மூர்த்தி விருத்தக்கிரம சங்கரமூர்த்திகளாகும்.
    • ஐந்தாவது மூர்த்தியான சண்டிகேஸ்வரர் புலி வாகனத்தில் அமர்ந்து வந்து துணை நிற்கின்றார்.

    இறைவன் அழிக்கும் தொழிலை மேற்கொள்ளும் சங்கார மூர்த்தியாய் இருக்கின்ற நிலையினையும்,

    செய்த பாவங்களுக்கு ஏற்ப மரணத்தை வழங்கும் நிலையினையும் குறிப்பாய் உணர்த்தும் தன்மை உடையதாக

    அதிகார நந்தியும் பூதவாகனமும் விளங்குகின்றன.

    அதிகார நந்தியார் மீது எழுந்தருளும் அண்ணாமலையார் மூர்த்தி விருத்தக்கிரம சங்கரமூர்த்திகளாகும்.

    (விருத்தக்கிரம மூர்த்தி என்பது ஐந்தொழில் செய்யும் இறைவன் ஒன்றாக இணைந்து ஓர் உருவில் காட்சி தருவது ஆகும்).

    எங்கும் நிறைந்திருக்கும் ஸ்ரீ அன்னை பராசக்தி திருவருள் உடனிருந்து துணைபுரியும் என்பதனை உணர்த்த

    ஸ்ரீ உண்ணாமலை அம்மன் அன்ன வாகனத்தின் மேல் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    ஐந்தாவது மூர்த்தியான சண்டிகேஸ்வரர் புலி வாகனத்தில் அமர்ந்து வந்து துணை நிற்கின்றார்.

    அருள்தரும் உண்ணாமுலை உடனாகிய அண்ணாமலையார் குதிரை வாகனத்தில் ஏறி வீதி உலா வருகிறார்.

    அருள்தரும் உண்ணாமுலை உடனாகிய அண்ணாமலையார் (ஸ்ரீ பெரியநாயகம்) குதிரை வாகனத்தில் ஏறி வீதி உலா வருகிறார்.

    அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு கால்களையும் ஞான காண்டம், கரும கண்டம் என்னும் காதுகளையும்,

    பரஞானம், அபரஞானம் என்னும் கண்களையும் விதிவிலக்கு என்ற முகத்தையும் வாலையும்.,

    ஆகமங்கள் என்னும் அணிகளையும், மந்திரங்களாகிய சதங்கை, கிண்கிணி, மாலை சிலம்பு என்பவைகளையும்

    பிரணவமாகிய கடிவாளத்தையும், அறுவகைப் புறச்சமயங்களாகிய போர் செய்யும் சேனைகளை வேருடன்

    அழித்ததற்கேற்ற வெற்றியையும், பிரமனது முகங்களாகிய இலாயத்தையும் அண்ட கோடிகளாகிய

    குதிரையின் மேல் ஏறி சிவபிரான் போர் வீரராகத் தொணடர்களுடைய பாசக் கயிறு இற்று வீழும்படி

    எழுந்தருளி வருகிறார் என்ற உண்மையைக் குதிரை வாகனக் காட்சி நமக்கு உணர்த்துகிறது.

    • யானை வல்லமை பொருந்தியது.
    • அது அனைத்து மனமலங்களை மாயைகளை அறுக்கக்கூடியது.

    யானை வல்லமை பொருந்தியது.

    மதம் கொண்ட யானை கண்ணில் தென்படும் அனைத்தையும் அழித்து ஒழிக்கும் தன்மை பெற்றது.

    இறைவனால் தரப்படும் பரஞானம் யானையைப் போன்றது.

    அது அனைத்து மனமலங்களை மாயைகளை அறுக்கக்கூடியது.

    எனவே, பரஞானம் யானையாக உருவகம் செய்யப்படுகிறது.

    பரஞானத்தை அருள்பவன் இறைவன் என்னும் தத்துவத்தை விளக்கவே விழா நாட்களில் யானை வாகனம் பயன்படுத்தப்படுகின்றது.

    • லிங்கத்தின் வடிவம் அண்டத்தின் வடிவமாகும்.
    • இறைவன் அண்டத்தைப் படைத்ததோடு மட்டுமன்றி எல்லாப் பொருள்களிலும் நீக்கமற நிறைந்துள்ளார்.

    லிங்கத்தின் வடிவம் அண்டத்தின் வடிவமாகும்.

    இறைவன் அண்டத்தைப் படைத்ததோடு மட்டுமன்றி எல்லாப் பொருள்களிலும் நீக்கமற நிறைந்து நிற்கிறார்.

    அந்த மூலாதாரத்தை, மூலமுதற்பொருள் தத்துவத்தை நிலை நிறுத்துவது

    லிங்கார வட்டச் சொரூபப் பிரபை வாகனமாகும்.

    • நாக வாகனம் மனிதனின் மூலாதார சக்தியான குண்டலினி சக்தியைக் குறிப்பதாகும்.
    • குண்டலினி சக்தியின் விரிவு மற்றும் ஒடுக்கங்கள் உலகத் தோற்றத்தையும் ஒடுக்கத்தையும் எடுத்துரைக்கின்றன.

    நாக வாகனம் மனிதனின் மூலாதார சக்தியான குண்டலினி சக்தியைக் குறிப்பதாகும்.

    குண்டலினி சக்தியின் விரிவு மற்றும் ஒடுக்கங்கள் உலகத் தோற்றத்தையும் ஒடுக்கத்தையும் எடுத்துரைக்கின்றன.

    குண்டலினி சக்தியானது புருவ மத்தியான சுழுமுமுனையில் இருந்து ஞானம் பெறத் துணை நிற்கும்

    சுழுமுனையை மறைத்துக் கொண்டிருக்கின்றது.

    எனவே சுழுமுனையிலே நிலை கொண்டிருக்கும் ஞானசக்தியானது இறைவனது

    கருணையாலேயே வாய்க்கப் பெற வேண்டும் என்னும் தத்துவத்தை நாகவாகனம் உணர்த்துகிறது.

    • இறைவன் விழாக் காலங்களில் பல்லக்கில் எழுந்தருளும் காட்சி ‘திரோபவக் கோலம்‘ எனப்படுகிறது.
    • தேர்த் திருவிழா இந்துக்களுக்கு ஒரு முக்கியமான திருவிழா ஆகும்.

    இறைவன் விழாக் காலங்களில் பல்லக்கில் எழுந்தருளும் காட்சி 'திரோபவக் கோலம்' எனப்படுகிறது.

    திரோபவம் என்றால் மறைத்தல் என்று பொருள்.

    உயிர்கள் பூமியில் வாழ்கின்ற காலத்தில் அறிந்தோ அறியாமலோ வினைகளை செய்கின்றன.

    இவ்வாறாகப் பிறவி தோறும் அவை செய்த நன்மை தீமைகளின் அடிப்படையில் இறைவன் அருள்புரிகின்றான்.

    மறைப்பு நிலையாக இருந்து இறைவன் அடைவதற்கு அரியவன் என்னும் தத்துவத்தை பல்லக்கு வாகனம் உணர்த்துகின்றது.

    தேர்த் திருவிழா இந்துக்களுக்கு ஒரு முக்கியமான திருவிழா ஆகும்.

    தேரோட்டம் ஏன் திருவிழாக்களில் நடைபெறுகின்றது என்பதனை அறிந்து கொள்ள வேண்டும்.

    இத் திருவிழாவின்போது தேவர்கள் அனைவரும் ஒன்றுகூடி மக்களுக்கு ஆசீர் வழங்க இறைவனின் திருவருள் எனக் கூறலாம்.

    தேர்த் திருவிழா பார்க்கும் ஒவ்வொருவர் மனத்திலும் ஏழுவகைப் பிறப்பையும் மாய மல குணம்

    ஏழும் நீக்கப் பெறுவதில் உட்கருத்தே ஏழாம் திருவிழாவாகும்.

    மேலும் எந்தத் திருக்கோவிலிலும் இல்லாத பஞ்ச மூர்த்திகளின் திருத்தேரோட்டம் ஒரே நாளில்

    நடைபெறுவது இத்திருத்திலத்திற்கு சிறப்பாகும்.

    முப்புரம் ஆணவம், கன்மம், மாயை மூன்று அசுரர்கள் - தாருதாக்கன், கமலாக்கன், வித்யூன்மா,

    மூவகை ஆன்மாக்கள்- விஞ்ஞானாகலர், பிரனாயகலர், சகலர்.

    பரம்பொருளாகிய சிவபெருமானே ஆன்மாக்கட்கு மும்மல பந்த வாதனைகளை நீக்கி

    பேரானந்தப் பெருவாழ்வளிப்பவர் என்ற உட்பொருளைத் தேர்திருவிழா விளக்குகிறது.

    • இடபம் (காளை) தியாகத்தின் வடிவமாகும்.
    • இக்காட்சி கைலாயத்தில் இறைவனைக் காணும் காட்சியாகும்.

    இடபம் (காளை) தியாகத்தின் வடிவமாகும்.

    மனிதன் தன்னலமற்றவனாக, பொது நலம் உடையவனாக வாழ வேண்டும்

    என்னும் தத்துவத்தை உணர்த்துவதாக இடப வாகனம் அமைந்திருக்கின்றது.

    ரிஷப வாகனம் பல மெய்ப்பொருள்களைக் கொண்டது.

    ரிஷபத்தின் தத்துவம் மெய்ஞ்ஞானம் உடைய அனைவரும் இறைவனின் திருப்பாதங்களை அடைய வழி வகுக்கும் வாகனமாகும்.

    ரிஷபத்தின் உருவத்தில் அமைந்திருக்கும் ஒவ்வொரு அவயமும் ஒவ்வொரு தத்துவத்தை விளக்குவதாகும்.

    இக்காட்சி கைலாயத்தில் இறைவனைக் காணும் காட்சியாகும்.

    ×