என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தெருக்கூத்து நாடகம்"
- மகாபாரத விழாவில் அர்ஜுனன் தபசு என்ற தெருக்கூத்து நாடகம் நேற்று நடைபெற்றது.
- வரும் 7-ந் தேதி தீமிதி விழாவும், துரியன் படுகளம் தர்மர் பட்டாபிஷேகமும் நடைபெற உள்ளது.
மொரப்பூர்,
தருமபுரிமாவட்டம், காரிமங்கலம் வட்டம், இருமத்தூர் அருகே உள்ள வையம்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ தர்மராஜா திரவுபதி அம்மன் மகாபாரத விழா கடந்த ஏப்ரல் மாதம் 19 -ந்தேதி தொடங்கியது. இந்த விழா வருகிற 7-ந் தேதி வரை தொடர்ந்து நடைபெறும்.
இந்த மகாபாரத விழாவில் அர்ஜுனன் தபசு என்ற தெருக்கூத்து நாடகம் நேற்று நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து நேற்று மஞ்சள் நாட்டில் மாடு மடக்குதல்,இன்று கண்ணன் தோதும் மன்னன் வாழும் நாளை, அரவான் கடவுளையும், நாளை மறுநாள் சனிக்கிழமை கர்ணன் கண்ட கருட வாகன காட்சி ஆகிய நிகழ்ச்சிகளும் விழாவின் இறுதி நாளான 7-ந் தேதி தீமிதி விழாவும் துரியன் படுகளம் தர்மர் பட்டாபிஷேகமும் நடைபெற உள்ளது.
- மோத்தேபாளையம் கிராமத்தில் கொங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
- இரணிய நாடக சபா என்ற தெரு கூத்து கலைஞர்களை கொண்டு இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டது.
காரமடை:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள மோத்தேபாளையம் கிராமத்தில் கொங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதனை முன்னிட்டு இரணிய தெரு கூத்து நாடகம் நடைப்பெற்றது.
வாக்கனாங்கொம்பு இரணிய நாடக சபா என்ற தெரு கூத்து கலைஞர்களை கொண்டு இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டது. பண்டைய கால வரலாற்று ஆன்மிக சம்பவங்களான இரனியனை வதம் செய்யும் நிகழ்ச்சியே இந்த நாடகம். இதில் அசுரன் இரனிய கஷிபுவை, நரசிம்மர் வதம் செய்வது போன்று நடித்து காண்பிக்கப்பட்டது. இதனை மக்கள் இரவு முழுவதும் கண்விழித்து கண்டு ரசித்தனர்.
இதுகுறித்து இரணிய நாடக சபா சண்முகம் கூறியதாவது:-
63 ஆண்டுகளாக இந்த நாடக அரங்கேற்றத்தை எங்கள் முன்னோர்கள் நடத்தி வருகின்றனர். தற்போது நாங்கள் எடுத்து நடத்தி வருகிறோம். பண்டைய கால மக்களின் வாழ்வில் கோவில் திருவிழா என்றால் தெருக்கூத்து நாடகம் தான் நியாபகம் வரும். பல ஆன்மிக கதைகள் நாடகங்களாக மக்கள் முன்பு போடப்பட்டு அவர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
மோத்தேபாளையம் கொங்காளம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அசுரன் இரனிய கஷிபுவை, நரசிம்மர் வதம் செய்யும் நாடகம் நடத்தப்பட்டது. இந்த ஆன்மிக நாடகத்தில் உள்ளூரை சேர்ந்த வாலிபர்களே பங்கேற்று அனைத்து வேடங்களிலும் தங்களது திறமையை காட்டினர்.
தற்போது உள்ள சூழலில் கோவில் விழாக்களில் சினிமா ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை அனைவரையும் ஏற்பாடு செய்து வரும் நிலையில் பண்டைய கால நடைமுறைப்படி நம் தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வாக உள்ள தெருக்கூத்து நாடகங்களை கிராமத்தில் மீண்டும் கொண்டுவரும் முயற்சியில் இந்த கிராம மக்கள் இறங்கியுள்தை பாராட்டுகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்