என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "61 முறை"
- ரத்ததான முகாமில் 5 பெண்கள் உள்பட 55 பேர் ரத்ததானம் செய்தனர்.
- 61-வது முறையாக ரத்ததானம் வழங்கிய முகமது தம்பி என்பவர் பாராட்டி கவுரவிக்கப்பட்டார்.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனை வளா கத்தில் மக்கள் உரிமை நிலை நாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
திருச்செந்தூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கியுடன் இணைந்து நடந்த இந்த முகாமில் சிங்கப்பூரை சேர்ந்த டாக்டர் புகாரி ஷாஜகான் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.
முகாமில் 5 பெண்கள் உள்பட 55 பேர் ரத்ததானம் செய்தனர். திருச்செந்தூர் அரசு மருத்துவமனை டாக்டர் சசிகலா குழுவினர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். ரத்ததானம் செய்த அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மேலும் 61-வது முறையாக ரத்ததானம் வழங்கிய காயல்பட்டினம் அப்பாபள்ளி தெருவை சேர்ந்த முகமது தம்பி என்பவர் பாராட்டி கவுரவிக்கப்பட்டார். அவருக்கான சான்றிதழை டாக்டர் புகாரி வழங்கினார்.
முகாமிற்கான ஏற்பாடு களை மெகா அமைப்பின் நிர்வாகிகள் புகாரி, மெகா நூஹு, ஹாரூன் ரசீது, சாலிஹ், முத்து இஸ்மாயில், ஹாமித் ரிபாய், முஜாஹித் அலி, ஜபருல்லா, அப்துல் ஹமீது உள்பட பலர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்